Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"என் கடைசி காலத்தில் என் ஊரிலேயே நான் வாழ வேண்டும்" - தமிழ் நாட்டில் இருக்கும் ஒர் ஈழ அகதியின் ஆதங்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"என் கடைசி காலத்தில் என் ஊரிலேயே நான் வாழ வேண்டும்" - தமிழ் நாட்டில் இருக்கும் ஒர் ஈழ அகதியின் ஆதங்கம்

[ புதன்கிழமை, 17 மார்ச் 2010, 10:52 GMT ] [ தி.வண்ணமதி ]

‘நான் வீட்டுக்குப் போக வேண்டும்’ என நிசா என்னிடம் கூறினாள்.

சிறிலங்காவின் 26 வருடகால இனப் போரின் போது நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவின் தமிழ்நாட்டில் சிதறிக்கிடக்கும் 100,000 ஈழத் தமிழ் அகதிகளுள் இவளும் ஒருத்தி.

2008ம் ஆண்டு நிசா வவுனியாவிலிருந்து புறப்பட்ட போது அவளது அகதிப் பயணம் ஆரம்பமானது. உள்நாட்டிலேயே அவள் இரண்டு முறை இடம்பெயர்ந்திருந்தாள்.

“போர் இடம்பெற்றுக்கொண்டிருந்த காலமது. எனது பிள்ளை, எனது கணவன் மற்றும் எனக்கு என்ன நடக்குமோ என நான் அஞ்சினேன்” என என்னிடம் விபரிக்கிறாள் நிசா.

இவளது நெருங்கிய உறவுகள் இன்னமும் வவுனியாவிலேயே வாழ்ந்து வருகிறார்கள். “அங்கு அமைதி நிலவுவதாகவும், இனி எந்தப் பிரச்சினையும் வந்துவிடாது என்றும் வவுனியாவிலிருக்கும் எனது பொற்றோர்கள் கூறுகிறார்கள்” என நிசா தொடர்ந்து கூறினாள்.

ஊரில் இருந்த போது விவசாயத்தில் ஈடுபட்டு வந்த நிசாவினது கணவன் இங்கு தமிழ்நாட்டில் வண்ணப்பூச்சுத் தொழில் செய்கிறார்.

“தொழில் நிமித்தமாக வெளியிடங்களுக்குச் செல்லும் எனது கணவர் வாரத்தில் ஒரு முறை தான் வீட்டுக்கு வர முடிகின்றது.” இந்திய அரசாங்கத்தினால் நிர்வகிக்கப்படும் முகாம் ஒன்றிலேயே நிசா தனது பிள்ளையுடன் வசித்துவருகிறார்.

போரென்று வந்து விட்டால் பொது மக்களுக்கு இழப்புக்கள் இருக்கத் தான் செய்கிறது.

கணவன், சகோதர சகோதரிகள், மாமான், மச்சான் என ஆயிரக்கணக்கான பொது மக்கள் சிறிலங்காவில் இடம்பெற்ற போரிலும் இறந்து போனார்கள்.

புஸ்பாவினைப் பொறுத்தவரையில் அவள் தனது தந்தையை இழந்து நிற்கிறாள். “சிறிலங்காவிற்கு என்னால் திரும்பப் போக முடியாது” எனக் கண்கள் குளமாகிக் கண்ணீர் வழிந்தோட என்னிடம் கூறுகிறாள்.

“அந்தத் துயரச் சம்பவத்தை நான் நினைத்துப் பார்கிறேன்” என வழிந்தோடிய கண்ணீரைத் துடைத்தவாறு தொடர்கிறாள்.

ஓர் இரவு புஸ்பாவினது கிராமத்திலிருந்து 25 ஆண்கள் அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள். வீதியினருகே உயிரற்ற உடல்களாகவும் ஏனையோர் மோசமாகக் காயமடைந்த நிலையிலும் வீசி எறியப்பட்டிருந்தார்கள். இந்தச் சம்பவத்தின் போது இறந்தவர்களுள் புஸ்பாவினது தந்தையும் ஒருவர்.

சிறிலங்காவின் வடக்குக் பகுதியிலுள்ள முகாமொன்றில் புஸ்பாவினது சகோதரன் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறான். “நான் இந்தியாவிற்கு வருவதற்கு முன்னர் எனது சகோதரனப் பார்ப்பதற்குச் சென்றேன். நடுவே கம்பி வேலியால் பிரிக்கப்பட்டு இருந்தமையினால் என்னால் அவனுடன் அதிகம் பேசமுடியவில்லை.” புஸ்பா 2009ம் ஆண்டு படகு மூலம் இந்தியாவிற்கு வந்திருந்தார்.

“எங்களது கிராமத்தில் 100 வரையிலான குடும்பங்கள் வாழ்ந்து வந்தன. ஆனால் தற்போது இரண்டு குடும்பங்கள் மாத்திரமே அங்கிருக்கின்றன. இந்த நிலையில் அங்கு திரும்பிச் செல்வதற்கு என்னால் முடியாது” என்கிறார் புஸ்பா.

அவளது கண்களிலிருந்து மறுபடியும் கண்ணீர் வழிந்தோடுகிறது.

வடக்குப் பகுதிக்குச் செல்வதற்கு ஏதுவாக சிறிலங்காவிற்கான நுழைவு அனுமதியை [Visa] பெறுவதற்கு என்னால் முடியவில்லை. இலங்கையினது இன மோதல்கள் தொடர்பான, போரின் காரணமாக இடம்பெயர்ந்தவர்கள் மீது ஏற்பட்டிருக்கும் பாதிப்புக்கள் பற்றிய எனது தனிப்பட்ட பார்வை இது தான்.

இவ்வாறு எழுதியுள்ளார், புதுடெல்லியை தளமாக கொண்டியங்கும், ஐரோப்பிய ஒன்றியத்தின் மனிதார்ந்த திணைக்கள [European Commission Humanitarian department - ECHO] பணியாளர் Malini Morzaria. இவர் பாகிஸ்தான், சிறிலங்கா, பங்களாதேஷ், இந்தியா, ஈரான், நேபாள், பூட்டான், மாலைதீவு ஆகிய நாடுகளுக்கு பொறுப்பாளராக உள்ளார்.

புதினப்பலகை-க்காக தி.வண்ணமதி தமிழாக்கம் செய்த அந்த விவரணத்தில் Malini Morzaria மேலும் எழுதியுள்ளதாவது:

கடந்த வருடம் முடிவுக்கு வந்த சிறிலங்காவின் இன மோதல்களின் விளைவாக 300,000 பொதுமக்கள் இடம்பெயர்ந்திருந்தார்கள்.

நாட்டினது வடக்குப் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் முகாம்களில் இன்னமும் இடம்பெயர்ந்தவர்கள் தங்கவைக்கப்பட்டு இருக்கிறார்கள். தற்போது தான் அந்த மக்கள் தத்தமது சொந்த இடங்களில் மீள்குடியேற அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்தியாவின் தமிழ்நாடு விசாலமான நிலப்பரப்பினைக் கொண்டது. மலைகளையும் புல்வெளிகளையும் தென்னந் தோப்புக்களையும் வயல் நிலங்களையும் தாண்டி நாம் பயணம் செய்தோம்.

தமிழ்நாட்டில் ஈழ அகதிகள் தங்கவைக்கப்பட்டிருக்கும் முகாம்களுக்கு இடையிலான தூரம் மிகவும் அதிகம். ஒரு முகாமிலிருந்து இன்னொரு முகாமிற்குப் பயணிப்பதற்கு பல மணிநேரத்தினைச் செலவிடவேண்டியிருந்தது.

படகுகள் மூலம் தமிழ்நாட்டுக் கரையினை வந்துசேர்ந்த ஈழ அகதிகளது பயணப் பாதையினை என்னால் அறிந்துகொள்ள முடிந்தது. பெரும்பாலும் இரவில் படகுகளில் வரும் அகதிகள் ராமேஸ்வரத்தினை அண்டியுள்ள ராமர் அணைப் பகுதியின் மணல் திட்டுக்களிலேயே இறக்கி விடப்படுகிறார்கள்.

புராணக் கதைகளில் இந்தியாவிற்கும் சிறிலங்காவிற்கும் இடையில் மக்கள் நடந்தே பயணித்திருக்கிறார்கள் என நான் அறிந்திருக்கிறேன். குறித்த ஒரு பகுதியில் சிறிலங்காவிற்கும் இந்தியாவின் தமிழ்நாட்டுக்கும் இடையிலான தூரம் வெறும் ஏழு கிலோ மீற்றர்களே.

இவ்வாறாகப் புதிதாக வரும் தமிழ் அகதிகள் பெரிய பார ஊர்திகளில் ஏற்றப்பட்டு காவற்துறை நிலையத்திற்குக் கொண்டுவரப்படுகிறார்கள். பின்னர் அங்கிருந்து இடைத்தங்கல் முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்படுகிறார்கள்.

இடைத்தங்கல் முகாம்களில் ஒரு சில நாட்கள் தங்கியிருக்கும் இவர்கள் தொடர்பான தகவல்களைப் புலனாய்வு அதிகாரிகள் திரட்டுகிறார்கள். ஈற்றில் அவர்கள் நிரந்தர முகாம்களுக்கு அனுப்பப்படுகிறார்கள்.

தற்போது தான் இந்த அகதிகள் நம்பிக்கையுடன் இருப்பதாகவும் ‘இருள் சூழ்ந்த தங்களது வாழ்வில் அவர்கள் தற்போது தான் நம்பிக்கை ஒளியினைப் பெற்றிருப்பதாகவும்’ தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டிருக்கும் ஈழ அகதிகளுக்கான இந்த முகாம்களுக்குக் கடந்த சில வருடங்களாகச் சென்று வரும் எனது நண்பர்கள் சிலர் கூறுகிறார்கள்.

‘சிறிலங்காவில் வாழும் தமிழர்களில் பொரும்பான்மையானோர் - இப்போது, தங்கள் வாழ்க்கையினை மீளக் கட்டியெழுப்புவத்கே விரும்புகிறார்கள்” என அண்மையில் சிறிலங்காவிற்குச் சென்று திரும்பிய ஊடக நண்பி ஒருவர் என்னிடம் தெரிவித்தார்.

சிறிலங்காவின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் சுயாட்சி கோரி பெரும்பான்மைச் சிங்களவர்களுடன் போராடி வந்த தமிழ்ச் சிறுபான்மையினருக்கு மூன்று தசாப்த காலப் போரின் பின்னரும் எதுவும் கிடைத்துவிடவில்லை என அந்த ஊடக நண்பி கூறினார்.

“எந்தத் தொடக்கப் புள்ளியில் சிறுபான்மைத் தமிழர்கள் போராட்டத்தை ஆரம்பித்தார்களோ அந்தப் புள்ளிக்கே அவர்கள் திரும்பவும் வந்துவிட்டார்கள்" என்றார் அவர்.

போரில் ஈடுபட்டிருந்த அரச படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சிக்கி, யுத்தத்தின் பலிக்கடாக்கள் ஆக்கப்பட்ட பொது மக்களது சகப்பான கடந்த கால நினைவுகள் மிகவும் கோரமானவை.

சிறிலங்காவில் தற்போது நிலவும் - எளிதில் உடையக் கூடிய - அமைதி நிலையினைக் கூர்ந்து அவதானித்து வரும் தமிழ்நாட்டில் வசித்து வரும் ஈழ அகதிகளைப் பொறுத்தவரையில் அகதிகளாக தமிழ்நாட்டிலேயே தங்கியிருப்பதா அல்லது தங்களது வீடுகளுக்கு திரும்பிச் செல்வதா என்பது ஒவ்வொரு குடும்பங்களதும் தேர்வாகவே இருக்கிறது.

20 வருடங்களுக்கும் மேலாக அகதியாக இந்தியாவிலேயே தங்கியிருக்கும் போடி என்ற தமிழ் விதவை, “எனது பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் இலங்கைக்குத் திரும்பிச் செல்லுவதற்கு விரும்பவில்லை. அவர்களைப் பொறுத்தவரையில் இந்தியா தான் அவர்களது இல்லம்” எனக் கூறுகிறார்.

“எனது இறுதி நாட்களை இலங்கையில் கழிக்கவே நான் விரும்புகிறேன். ஆனால், எனது பிள்ளைகளையும் பேரக் குழந்தைகளையும் தமிழ்நாட்டில் விட்டுவிட்டு தனியே என்றாலும் செல்வவே விரும்புகிறேன்” என்றார் அந்த விதவை.

* படங்கள்: நன்றி - Malini Morzaria

** இந்த கட்டுரையை மீள் பிரசுரம் செய்பவர்கள் - இது புதினப்பலகை இணையத் தளத்திற்காக தி. வண்ணமதி-யினால் தமிழாக்கம் செய்யப்பட்டது என்று குறிப்பிட்டுப் பிரசுரிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.

http://www.puthinappalakai.com/view.php?20100317100714

தமிழ்நாட்டில் இருக்கும் அகதிகள் மட்டுமல்ல, உள்நாட்டில் இடம்பெயர்ந்திருக்கும் அகதித் தமிழர்களும் தமது சொந்த இடங்களிலேயே வாழ விரும்புகிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.