Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ரணில் விக்கிரமசிங்க குழுவினர் இன்று யாழ்.நகர் வருகின்றனர்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரணில் விக்கிரமசிங்க குழுவினர் இன்று யாழ்.நகர் வருகின்றனர்:வீரசிங்கம் மண்டபத்தில் கூட்டம்!

March 19thranil300.jpg

யாழ்.தேர்தல் மாவட்டத்தில் ஐ. தே.கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரி தேர்தல் பிரசாரம் செய்யும் பொருட்டு அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று யாழ்ப்பாணம் வருகின்றார்.கட்சியின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, பொருளாளர் டி.எம். சுவாமிநாதன், ரணிலின் துணைவியார் மைத்ரி விக்கிரமசிங்க ஆகியோர் சகிதம் வரும் ரணில், பிற்பகல் இரண்டு மணிக்கு வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறும் பிரசாரக்கூட்டத்தில் உரையாற்றுவார்.

யாழ்.பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக கூட்டம் நடைபெறும் மண்டபத்துக்கு ரணில் குழுவினர் அழைத்துச் செல்லப்படவிருக்கின்றனர்.

படுகொலை செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மகேஸ்வரன் அணியினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தப் பொதுக்கூட்டத்தில் மதத் தலைவர்கள், வர்த்தக சமூகத்தினர், சனசமூக நிலையங்களின் பிரதிநிதிகள், கடற்றொழில், தென்னை, பனைவள அபிவிருத்தி விவசாயக் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசங் களின் பிரதிநிதிகள், அரச தனியார் ஊழியர் சங்கப்பிரதிநிதிகள், பல் கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஒன்றியப் பிரதிநிதிகள், வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர், தனியார் போக்குவரத்துச் சங்க பிரதிநிதிகள், தேசநலன் விரும்பிகள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.

http://www.neruppu.com/?p=20420#more-20420

அதென்ன மகேஸ்வரன் அணி. யாழ் மக்கள் ஜக்கிய தேசிய கட்சிக்கு வோட்டு போட்டு வென்றால் தமிழனுக்கு எதிராக செய்த சதிகளை ஏற்ற்றுக்கொண்டதாக முடியும்.

இவன் தான் சகுனியாக இருந்து எல்லாரையும் பிரித்து. எங்களை பலவீனப்படுத்தி போர் மூலம் அழிக்க வழிவகுத்தவன்.

இம்முறை யாழ் மக்கள் வோட்டு போடமாட்டார்கள்.

மகேஸ்வரன் வென்றது அந்த நேரத்தில் போராளிகளின் அனுசரனை இருந்தது.

அடுத்த தேர்தலில் போராளிகளீன் அனுசரனை கிடைக்காதபடியால் தான் கொழும்பில் போட்டி இட்டார்.

இம்முறை சோனியா காந்தி எடுப்பில் யாழ்மக்களை ஏமாற்றும் மகேஸ்வரன் மனைவிக்கு தகுந்த பாடம் கொடுக்கனும்.

2005 ம் ஆண்டின் தமிழர்களின் ஆதரவை பெற வேண்டிய தலைவர் வாறார்... போன முறை புலிகள் கெடுத்து போட்டினம் இந்த முறை வரவேற்பு பட்டையை கிளப்ப வேணும்...

Edited by தயா

அதென்ன மகேஸ்வரன் அணி. யாழ் மக்கள் ஜக்கிய தேசிய கட்சிக்கு வோட்டு போட்டு வென்றால் தமிழனுக்கு எதிராக செய்த சதிகளை ஏற்ற்றுக்கொண்டதாக முடியும்.

இவன் தான் சகுனியாக இருந்து எல்லாரையும் பிரித்து. எங்களை பலவீனப்படுத்தி போர் மூலம் அழிக்க வழிவகுத்தவன்.

இம்முறை யாழ் மக்கள் வோட்டு போடமாட்டார்கள்.

மகேஸ்வரன் வென்றது அந்த நேரத்தில் போராளிகளின் அனுசரனை இருந்தது.

அடுத்த தேர்தலில் போராளிகளீன் அனுசரனை கிடைக்காதபடியால் தான் கொழும்பில் போட்டி இட்டார்.

இம்முறை சோனியா காந்தி எடுப்பில் யாழ்மக்களை ஏமாற்றும் மகேஸ்வரன் மனைவிக்கு தகுந்த பாடம் கொடுக்கனும்.

இப்படியெல்லாம் எழுதாதீர்கள் நேசன். பதவிகளுக்காகவும் தமது இருப்பிற்காகவும் தமிழன் பிரிந்துபோவதற்குத் தயாராக இருக்கும்வரை, ரணிலைக் குறைசொல்லிப் பயனில்லை.

உங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கிடைக்கும் ரணில்

எதிர்வரும் புதுவருடத்தின் பின்னர் எமது ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கமே ஆட்சியில் இருக்கும். அதன் பின்னர் உங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கிடைக்கும். நீங்கள் சுதந்திரமாக நடமாடுவதற்கு எமது ஆட்சியின்போது ஆவன செய்வோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

“வடக்கில் இராணுவத்தினர் மட்டுமே ஆயுதம் ஏந்தியிருக்க அனுமதிக்கப்படுவார்கள். அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக மாற்றப்பட்டுள்ள மக்கள் குடியிருப்புகளிலிருந்து அவை அகற்றப்படும்.

யுத்தகாலத்தில் காணாமல்போன, கடத்தப்பட்டோர் தொடர்பில் முழுமையான விசாரணைகளை நடத்துவதற்கும் நாம் திட்டம் வகுத்துள்ளோம்” என அவர் அங்கு மேலும் தெரிவித்தார்

http://www.alaikal.com/

  • கருத்துக்கள உறவுகள்
:rolleyes: பதவிக்காகவும், புகழுக்காகவும் மட்டுமேதான் தமிழன் பறிபோனானா?? இந்திய விசுவாசம் எம்மை எதுவரை கொண்டுவந்திருக்கு?? முள்ளிவாய்க்காலில் வைத்து கழுத்தறுக்க வாள்கொடுத்து உதவிய அதே இந்தியனைத்தானே நாங்கள் இன்னும் நேச சக்தியாக, தோழமை நாடாகப் பார்க்கிறோம். அவர்கள் சொலவ்தைத்தானே எமது தாரக மந்திரமாக ஏற்றுக்கொள்கிறோம்??!!! இதில் யாரை நொந்து என்ன செய்ய??

இவர்கள் எல்லோரிடமும் (ரனில்,பிரேமதாசா,சந்திரிக்கா.மகிந்தா)ஒருவர் டீல் போட்டார் அது "டீல் ஒர் நோடீல்" போல பேராசையால் முடிவில் "0" வுடன் முடிந்துவிட்டது.இடையில் வந்த ஒரு 50 லட்சத்தையாவது எடுத்திருக்கலாம்.ஆசை ஆரை விட்டது.

இதை நடாத்தும் "காவி மன்டேல்" சாயி பாபா தலையுடன் இருந்த ஒரு கொமேடியன்.

  • கருத்துக்கள உறவுகள்
:rolleyes: நக்கிப்பிழைப்பதென்று வாழ்பவனுக்கு டீல்- நோ டீல் எல்லாமே ஒன்றுதான்.
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மண்ணெண்ணை விலைய குறைப்பமெண்டு ஒரு சொல்லு சொல்லியிருக்கலாம் , நிறையப்பேர் மாறியிருப்பினம். நீங்கள் சொல்லாததால ஆளையாள் விழுத்தியாவது ஒரு சீற் குடுக்கிறதா முடிவெடுத்திருக்கினமாம். :D

Edited by Mathivathanang

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.