Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர்குற்ற நாடுகளின் பட்டியலில் சிறிலங்காவையும் சேர்த்தது பிரித்தானியா!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போர்குற்ற நாடுகளின் பட்டியலில் சிறிலங்காவையும் சேர்த்தது பிரித்தானியா!

இடுகையிட்டது VANNI ONLINE வெள்ளி, 19 மார்ச், 2010

british-flag-640.jpg

பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய நாடுகளின் காரியாலயத்தினால் வெளியிடப்பட்டுள்ள வருடாந்த மனித உரிமைகளுக்கான அறிக்கையில் போர்க் குற்றங்கள் மற்றும் அடிப்படை மனித உரிமைகளை மீறும் நாடுகளின் பட்டியலில் சிறிலங்காவும் இடம்பெற்றுள்ளது.

போர்க் குற்றங்கள், கருத்துச் சுதந்திர மறுப்பு மற்றும் அடிப்படை மனித உரிமைகளுக்கான மறுப்பு போன்ற மனித உரிமைகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் சிறிலங்கா அரசு ஈடுபட்டுள்ளதாக இவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபான்டினால் இம்மாதம் 17ஆம் திகதி வெளியிடப்பட்ட இவ்வறிக்கையில், போர்க் குற்றங்கள் மற்றும் அடிப்படை மனித உரிமைகளை மீறும் நாடுகளின் பட்டியிலில் இவ்வருடம் சிறிலங்கா மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் அடிப்படை மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கு சிறிலங்கா அரசு மேற்கொள்ள வேண்டிய உடனடி நடவடிக்கைகள் குறித்தும் இவ்வறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் முடக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் மற்றும் சிறிலங்காவின் அமைச்சரான கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு ஆதரவானவர்கள் ஆயுதங்களுடன் நடமாடி வருவது குறித்தும் இவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேபோன்று, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் மற்றும் சில ஆயுதக் குழுக்கள் போரின் போது இடம்பெயர்ந்த மக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களில் ஆயுதங்களுடன் நடமாடி வருவதாக தகவல்கள் தெரிவிப்பதாகவும் இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும் ஆயுதங்களை வைத்திருப்பதாகவும், தமக்கு எதிரான கொள்கை உடையவர்களை அக்கட்சி அச்சுறுத்தி வருவதாகவும் தெரிய வருகின்றது என இவ்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

2009ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் இந்த ஆயுதக் குழுக்களிடமிருந்து ஆயுதங்களைக் களைவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கபட்ட போதிலும், அதற்கான சான்றுகள் எதுவும் இல்லை என இவ்வறிக்கை மேலும் தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் Robin Cook இனால் 1997ஆம் ஆண்டு முதன் முதல் மனித உரிமைகளுக்கான அறிக்கை வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

http://www.vannionline.com/2010/03/blog-post_4809.html

காத்திரமான நடவடிக்கைகள் தொடர்ச்சியாக எடுக்கப்படுகிறது. கொஞ்சமாவது தாயகத் தமிழர்களை கரைசேர்ப்பதற்கு இல்லாவிட்டாலும், அவர்களின் சகஜவாழ்விற்கு வழிவகுக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி.

ஒவ்வொரு முன்னேற்றப் படிக்கும் அதற்குரிய கால அவகாசத்தை நாம் வழங்க வேண்டும்.

நல்ல அறிகுறி..

இதனூடே பிருத்தானியா என்ன செய்ய நினைக்கோதோ தெரியாது... ஆனால் நாம் இதை முறையாகப் பயன்படுத்தினால்

சிறிலங்காவுக்கு எதிராக காய் நகர்த்தலாம்... பிருத்தாநியாவும் இதில் இருந்து விலகாமல் பார்க்கவேண்டும்.

சமாதான உடன்படிக்கை கைச்சாத்தாகும்போது உள்ளக மற்றும் வெளியாக சூழல் எங்களுக்கு சாதகமாக இருந்தது. பின்னர் படிப்படியாக இந்தியாவின் உதவியுடன் சிங்களம் சூழலைத் தலைகீளாக்கியது. இதை மீண்டும் இடம்பெறாமல் தடுக்க பித்தானியா விளக்கமுடியாத இடத்துக்கு வரும் மட்டும் நாகங்கள் காய்களை நகர்த்த வேண்டும்.

பிருத்தானிய வாழ் உறவுகளின் செயர்ரிரனுக்கு பாராட்டுக்கள்.

பௌத்த சிங்களவர், அவன் வால்கள் = பொய்யர், தமிழன் உழைத்துச் சேர்த்த சொத்துக்களை – நிலங்களை - ... - .... பறித்து வாழும் கேவலமானவர்கள், தமிழின விரோதிகள், தமிழின கொலைகாரர்கள், பயங்கரவாதிகள், ஏமாற்றிகள், சிங்களவர் வந்தேறு குடிகள், ..... ……

போர்குற்ற நாடுகளின் பட்டியலில் சிறிலங்காவையும் சேர்த்தது பிரித்தானியா!

ஐரோப்பிய யூனியனும் சிங்கள அரசை போர்க்குற்றவாளியாக பிரகடனப் படுத்த, புலம் பெயர் தமிழர்கள் காத்திரமான நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

சீனா சிறிலங்காவிற்குள் நுழைவதைத் தடுக்கும் மேற்கு நாடுகளின் ஆரம்ப நடவடிக்கை இதனை எமக்கச் சார்பானதாக நாம் மாற்ற வேண்டும்.பிரித்தானியாவில் தேர்தல்கள் வரப்போகின்றன.ஐரோப்பிய ஒன்றியத் தேர்தலிலும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்திலும் தமிழ் மக்கள் காட்டிய ஆர்வம் பிரித்தானியாவின் அரசியல் கட்சிகளுக்கு தமிழ் மக்கள் கவனிக்கப்பட வேண்டியவர்கள் என்ற நிலையை உருவாக்கி இருக்கிறது.பிரித்தானியாவை மேலும் உசுப்பேத்தி கொழும்புடன் ஆன முரண்பாட்டை தணிய விடாமல் பார்க்க வேண்டும்.நேற்று இன்னும் 2 வருடங்களில் பாலஸ்தீனத் தனியரசு உருவாகவேண்டும் என்று முக்கியமான தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டதை கவனத்தில் எடுக்க வேண்டும்.(வைக்கல் பட்டடை நாய் இந்தியாவைச் சமாளிக்கிறது முக்கியமான வேலை.)ஆனால் இந்த நேரம் பார்த்து கூட்டமைப்பின் தமிழீழம் தேவையில்லை சேர்ந்து வாழ்வோம் என்று உதவி செய்ய நினைக்கிற(தங்கள் நலனுக்காக) உலக நாடுகளையும் வெறுப்பேத்திற செயல் விரும்பத் தக்கதல்ல.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.