Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் காங்கிரஸை துஷ்பிரயோகம் செய்துவிட்டார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Featured Replies

சம்பந்த விசுவாசிகள் எதோ தாங்கள் தமிழர்களது விடிவிற்காக உழைப்பதாக சொல்லிக்கொண்டும் கயெந்திரனுக்கு எதிர்ப்பிரச்சாரம் செய்து வருவது மட்டுமல்லாமல் மற்றவர்களை கயெந்திரனுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்வது போல் குற்றம் சாட்டி தாங்கள் நடுநிலையாக எழுதுவதாக முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கின்றார்கள்

அய்யா

நாகங்கள் என்றும் சம்பந்தரென்ன எந்த அரசியல் கட்சிக்கும் விசுவாசிகள் இல்லை.

ஆனால் என்று கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதோ என்றில இருந்து எங்களால் முடிந்தளவு அவர்களின் அரசியல் பலத்தை அதிகரிக்கவே செய்தோம். என்று கூட்டமைப்பு உடைந்து போனதோ அன்றில் இருந்து நான் இரண்டு தரப்பையும் தான் பொறுப்பு சுமத்துகிறேன்.

அதிலும் என்று ஒருதரப்பு இன்னொரு தரப்பின் மீது குறை கூற வெளிக்கிட்டு தங்களையும் தாள்த்தியதோ அன்றில் இருந்து அவர்களுக்கான மிச்சமிருந்த மரியாதையும் போய்விட்டது.

இன்று இரண்டு தரப்பும் ஏதோ யாரோடோ பேசி தீர்வைப் பெர்ருத்தருவார்கலாம். இதை நாங்கள் நம்பவேண்டுமாம்.

ஆளுக்காள் ஒரு தீர்வை வைத்து பிரச்சாரம் செய்கிறார்கள். இதில் எதுவும் நடைமுறைப்படுத்தப் படபோரதில்லை.

இது அவர்களுக்குத் தெரியாதா?

இருந்தும் அவர்கள் பிரிந்து நின்று மக்களை மடையர்களாக்கத்தான் நினைக்கிறார்கள். ஒன்றாக நின்று சாதிக்க முடியாததை பிரிந்து நின்று சாதிக்க அவர்களால் முடியுமென்று அளக்கிறார்கள். அப்படி அவர்களால் எதுவும் செய்ய முடிந்தால் அது நிச்சயம் அவர்கள் கூறும் ஒரு சுயாட்ச்சித்தீரவாக இருக்கமாட்டாது. இதுக்கு இன்று அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் மமதையில் இருக்கும் சிங்களம் இடம்கொடாது.

அதுக்காக உங்களை சிங்களத்திடம் போய் பிச்சை கேட்க சொல்லவில்லை.. முதலில் நீங்கள் ஒன்று படுங்கள் பின்னர் மிச்சத்தைப் பற்றி யோசிக்கலாம். ஒற்றுமையின் பலத்தின் தேவைகருதித்தான் இவர்களை இணைத்தது.

இப்போ பிரிந்து நின்று பத்து வருட அரசியலில் இன்னும் ஒரு பத்துவருடங்கள் பின்னுக்குப் போயுள்ளோம்.

இன்னும் ஒரு பத்து வருடங்களின் பின்னர் திரும்ப தேசியம் பேசி எல்லாரையும் இணையுங்கோ.. அதுக்குள்ளே இப்பவே அரை உயிரில் ஊசலாடும் உறவுகள் முழுக்க அழிந்த பின்னர் பிரதேசவாதத்தையும் பிரிவினையையும் வைத்து பூசை செய்யுங்கள்.

எவன் செத்தாலென்ன உங்களுக்குத் தேவை யாராவது ஒருத்தரை முன்னிறுத்தி இன்னொருத்தரை குறைத்து காலத்தை ஓட்டுவது தானே? ஓட்டுங்கள்.

சூறாவளி

ஆனால் என்று கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதோ என்றில இருந்து எங்களால் முடிந்தளவு அவர்களின் அரசியல் பலத்தை அதிகரிக்கவே செய்தோம். என்று கூட்டமைப்பு உடைந்து போனதோ

கூட்டமைப்பு என்பது சம்பந்தரின் தனிப்பட்ட சொத்து இல்லை அது பலரால் உருவாக்கப்பட்டது கயேந்திரன் அணியை விலத்தும் போது கூட்டமைப்பில் கூடி ஆராய்ந்து பொதுவாக்கெடுப்பு எடுத்து சம்பந்தர் விலத்தவில்லை சம்பந்த மூவெந்தர்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்பான தான் தோன்றித்தனமாகவே அது நடைபெற்றது

சம்பந்தர் என்ன செய்தாலும் சரி என்று மற்றவர்கள் அனில் ஏறவிட்ட நாய் போல் இருக்கவேண்டும் என்று சொல்கின்றார்கள் சம்பந்தருக்கு ஆலவட்டம் பிடிப்பவர்கள்

ஆனந்த சங்கரி கூட்டணியின் தலவர் பதவியை எப்படி கூட்டமைப்பு உருவான போது பயன் படுத்தினாரோ அப்படியே சம்பந்தர் இப்போது பயன் படுத்தியுள்ளார் அவ்வளவே <_<

ஆனால் இந்த இலங்கை தேர்தலில் எதுவுமே சாதிக்க முடியாது என்பது எல்லோருக்கும் தெரியும் அப்படியிருந்தும் முட்டிமோதுவது தான் எனக்கு புரியவில்லை

:lol:தமிழ் அரசியல்வாதிகளால் சாதிக்க முடியும் என்றால் நாம் இத்தனைவருடம் போராடியிருக்கவே தேவையில்லை

வட்டுக்கோட்டையும் நா.க.அரசும் தேவையில்லை

  • தொடங்கியவர்

இதற்கு மேலும் நடிக்க முற்படாதீர்கள் இறைவன் நீங்கள் சம்பந்தருக்கு பல்லக்கு தூக்குகின்றீர்கள் அதை நேரடியாகவே சொல்லுங்கள் தலையைச் சுற்றி சுற்றி மிண்டும் மீண்டும் மூக்கைத் தான் தொடுகின்றீர்கள்

இன்றைய யதார்த்த நிலையில் கூட்மைப்புத்தான் சந்தர்ப்பவாத அரசியலுக்குச் சிறந்த கட்சி. இது என்னுடையகருத்து. இந்தக் கருத்தை முன்வைத்துத்தான் என்னுடைய வாதம். துமிழ்த் தேசிய முன்னணியினர் இதற்குப் பொருத்தமானவர்கள் அல்ல. இப்போது தமிழரின் நிலை ஆரம்பப் புள்ளியில்தான் இருக்கிறது. கூட்டமைப்பில் சம்பந்தர் தோல்வியுற்று தோல்வியுற்று, கஜேந்திரன் அணியினர் வெற்றிபெற்றாலும் அவர்களை நான் ஆதரிப்பேன். சம்பந்தருக்கான கோஷம் உங்களை உங்களைப் பாதிக்கத் தேவையில்லை. கஜேந்திரனுக்கான கோஷம் என்னைப் பாதிக்கத் தேவையில்லை. இவைகள் எம்மிடையேயுள்ள கருத்துப் பரிமாற்றங்கள்தான்.

இதனால் தான் கீதாஞ்சலி யையும் இணைத்தீர்களா ? அப்படியானால் புளட் கருணா பிள்ளையானை ஏன் விட்டு விட்டீர்கள் ?

உண்மையிலே கயேந்திரன் முண்ணனி இங்கு மறைக்கப்பட்டு வந்ததால் தான் நான் இணைக்க ஆரம்பித்தேன் மோகன் முதல் நிழலி [நிர்வாகம் ] வரை சம்பந்தர் தரப்புச் செய்திகளை மட்டுமே இணைத்திருந்தார்கள் இணைத்தும் வருகின்றார்கள்

ஓரிரண்டு நேயர்களைத் தவிர சம்பந்த விசுவாசிகள் மட்டுமே கருத்தும் எழுதி வருகின்றார்கள்

கருணா, பிள்ளையான் கருத்துக்களும் நிறையவே வருகின்றன. கவனிக்கவில்லையா? கீதாஞ்சலியும் ஒரு வேட்பாளர்தான். அவரும் என்ன சொல்கிறார்கள் என்றுதான் கேட்போமே. உங்களுக்குத் தெரியுமா? இலங்கைப் பாராளுமன்ற அரசியலில் தமிழ் அரசியல்வாதிகளினால் தமிழருக்குக் கிடைத்த நன்மைகளைவிட ( சலுகைகள் ) இப்படிப்பட்டவர்களால்தான் தமிழர்கள் நன்மையடைந்திருக்கிறார்கள். அதனைப் பட்டியலிட்டே கூறலாம்.

சம்பந்த விசுவாசிகள் எதோ தாங்கள் தமிழர்களது விடிவிற்காக உழைப்பதாக சொல்லிக்கொண்டும் கயெந்திரனுக்கு எதிர்ப்பிரச்சாரம் செய்து வருவது மட்டுமல்லாமல் மற்றவர்களை கயெந்திரனுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்வது போல் குற்றம் சாட்டி தாங்கள் நடுநிலையாக எழுதுவதாக முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கின்றார்கள்

இவர்கள் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் முடிவு மக்களிடம் தான்

இதிலென்ன குற்றச்சாட்டு உண்டு? நீங்களும் கஜேந்திரனுக்காகத்தானே எழுதுகிறீர்கள் என்பதை இங்கு ஒப்புக் கொள்கின்றீர்கள். சம்பந்தர் அணியினர் வென்றால் அவர்களுக்கும் ஆதரவைத் தெரிவிப்பேன் என்று முடிவெடுத்துவிட்டால் போயிற்று. இது வெறும் அரசியல். இதனால் எது கிடைக்கும் என்பதைச் சொல்ல முடியாது. சூழ்நிலையை வைத்துத்தான் கருத்துகளும். எனக்குப் புரிந்தவரை இதுதான். ஒரு வேளை கஜேந்திரன் அணியினரும் இந்தியாவுடன் கைகோர்க்கலாம். அப்போது பூசணிக்காயைப் புதைக்கவே முடியாது.

ஆகவே செருப்பு என்றால் ‘பாட்டா” சக்லேட் என்றால் ‘கன்டோஸ்” போன் என்றால் ‘டயலக்” இப்படியே பழமை வியாதியில் ஊறியிருக்கும் எம் சனத்தின் மனம் மாறாமல் இருந்தால்

அரசியல் என்றால் ‘சம்பந்த கூட்டமைப்பு’ என்பதை மட்டுமே அறியும் வாய்ப்பு உள்ளது.

பழமை வியாதி என்ற பலவீனத்தின் வழியே அரசியல் பிரவேசம் செய்ய உள்ளோருக்கு மக்கள் தகுந்த பாடம் கொடுக்க வேண்டும்.

அரசியலில் புகுந்துவிடும் அவர்கள் நாளை தமது கையில் தலைமையை எடுப்பதற்கும் இவ் பழைமை வியாதியே காரணமாக இருக்கும்.

Edited by tamilsvoice

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.