Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வரதராஜா பெருமாளுக்கு வடமாகாண ஆளுநர் பதவி ?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை தலைவர் பிரபாகன் தலைமையிலான விடுதலைப்புலிகள் அமைப்பினால் தமிழனின் உரிமை போராட்டத்தை எந்த வழியிலும் வெண்றெடுக்க முடியாமல் போவிட்டது. எனவே அதன் பின் உள்ள டக்ளஸ் என்றாலும் சரி அல்லது வரதர் என்றாலும் சரி தமிழனின் உரிமையை வெண்றெடுப்பார்களா என்று பார்ப்போம். தமிழர்களுக்காக அவர்களும் அன்று போராட புறப்பட்டு பின் அதிலிருந்து ஓரம் கட்டபட்டு பின் இன்றும் அதே கோசத்தோடு திரும்பவும் வந்திருக்கின்றனர் எனவே அவர்களுக்கு நாம் ஒரு சந்தர்ப்பத்தை கொடுத்து பார்ப்போம்.

இதுவரை தலைவர் பிரபாகரன் தலைமையிலான விடுதலைப்புலிகள் அமைப்பை அதன் தமிழர் தாயகம்.. தமிழ் தேசியம் சார்ந்த கொள்கை ரீதியில் கூட அங்கீகரிக்காமல் அதன் செயற்பாடுகள் அனைத்தையும் எதிரிகளுக்கு (சிங்கள மற்றும் இந்திய வல்லாதிக்க) காட்டிக் கொடுத்து தலைவரின் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போட்டு தமிழ் மக்களின் உயிர் கொண்டு நடத்தப்பட்ட போராட்டத்தையே மழுங்கடிக்க கங்கணம் கட்டி நின்றவர்கள் தான் இந்த டக்கிளசும்.. வரதராஜப் பெருமாளும்.. இன்னும் பலரும்.

இவர் எப்போதுதான் தமிழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் தங்களின் தெளிவான நிலைப்பாட்டை கொள்கையை முன்வைத்திருக்கிறார்கள். என்றுமே இல்லை. கள நிலைமைக்கு ஏற்ப எதிரிப்படைகளோடு அவர்களின் ஆயுதப் பங்களிப்போடு மக்கள் முன் அடாவடித்தனம் செய்து கொண்டு எதிரியின் சன நாயக விருப்புக்கு ஒரு மாயைத் தோற்றத்தை தமிழ் மக்களிடம் கட்டி வளர்த்து அதனை எதிரி சர்வதேசத்திற்கு காட்டி பிழைக்க அவனிடம் சலுகை பெற்று வாழ்வது... இவர்களின் ஆயுத - அரசியல் கொள்கை ஆகும்.

இப்படிப்பட்டவர்கள் தமிழ் மக்களுக்கு விடுதலை வாங்கிக் கொடுப்பார்கள் என்பதை எப்படி எதிர்பார்க்கலாம். ஏலவே 1987 களில் இருந்து இவர்களுக்கு வழங்கிய சந்தர்ப்பத்தை இவர்கள் தமிழ் மக்களுக்கு எதிராக பயன்படுத்திய அனுபவங்களில் இருந்து இதைத் தெளிவாக உணர்ந்து கொள்ள முடியும்.

தேசிய தலைவர் பிரபாகரன் தனது கொள்கையில் நிலைப்பாட்டில் இருந்து என்றும் மாறியவரும் அல்ல. எதிரிகளின் நலனிற்காக மக்களின் உரிமைகளை விட்டுக்கொடுத்தவரும் அல்ல. அவர் தனது கொள்கையில் உறுதியாக இருந்த போது அதை அடைவதில்.. இந்த நாதாரிகளையும் எதிரிகளாகச் சந்திக்க வேண்டிய சந்தர்ப்பத்தையே இவர்கள் அவருக்கு ஏற்படுத்தி இருந்தனர்.

1990 களிலும் 1997/8 இலும் 2000-2 இலும் தலைவர் பகிரங்கமாக பொதுமன்னிப்பளித்து இவர்களை எல்லாம் ஒருங்கிணைந்து போராட அழைத்த போதும் இவர்கள் அவரின் பேச்சுக்கு மக்களின் தேவைக்கு உரிமை நிலைநாட்டலுக்கு ஒத்துழைக்க மறுத்தததுடன் தலைவரின் முயற்சிகளை குழிதோண்டிப் புதைக்க மக்களின் முயற்சிகளை முற்றாக சீரழிக்க எதிரிகளுக்கு துணை போனார்கள்.

இவர்களிடம் போய் இப்போ மக்களுக்கு காத்திரமான தீர்வை பெற்றுத் தாருங்கள் என்று எப்படி எதிர்பார்ப்பது.

இப்போது கூட இந்திய சிங்கள எதிரிகளின் ஏஜெண்டுகளாகவே இவர்கள் மக்கள் முன் சிங்களப் படைகளின் ஆயுத முனைப் பாதுகாப்பு அளிக்கப்பட்டு நிறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

இவர்கள் போகும் இடம் எங்கும் சிவில் உடை தரித்த சிங்கள உளவாளிகள், படை அதிகாரிகள்.. மற்றும் ஒட்டுக்குழு ஆயுத தாரிகள் அணிவகுத்துச் செல்கின்றனர். டக்கிளஸ் தேவானந்தாவிற்கு சிங்கள அரசு அளிக்கும் ஏஜெண்ட் சலுகை என்பது அதன் செல்வாக்கை தமிழ் மக்கள் மத்தியில் நிலைநிறுத்தவே அன்றி தமிழ் மக்களின் பிரதிநிதியாக டக்கிளஸ் தேவானந்தாவை ஏற்றுக் கொண்டல்ல.

சிங்கள அரசு தனக்கான உறுதியான பிரதிநிதிகளை தமிழ் மக்களிடம் இருந்து வளர்த்தெடுக்கும் நிலை முற்றுப் பெற்ற பின் டக்கிளஸ் தேவானந்தா என்ற இந்த ஏஜெண்ட் காணாமல் போகடிப்படுவார். அதேபோல் தான் வரதராஜப் பெருமாள் என்று பலரும்.

இந்த ஏஜெண்டுகள் இன்று சிங்கள அதிகார பீட அரசியல் கட்சிகளுக்கும் தமிழ் மக்களுக்கிடையேயும் நிலவும் இடைவெளியை நிரப்பி வாழ்க்கையை ஓட்ட அனுமதிக்கப்பட்டிருகின்றனரே தவிர இவர்களால் தமிழ் மக்களுக்கு ஒரு புல்லுக்கட்டை தானும் சொந்தமாக பெற்றுத்தர முடியாது.

எனவே இவர்களுக்கு சந்தர்ப்பம் அளித்து தமிழ் மக்கள் தங்களை வீணடித்துக் கொள்வதிலும் வேறு சர்வதேச ரீதியிலான அரசியல் இராஜதந்திர நகர்வுகளை மேற்கொண்டு சிங்கள இந்திய ஆளும் வர்க்கங்களுக்கு சவால் விடும் வகைக்கு ஒரு சூழலை உருவாக்குவதே இன்றைய அவசியமும் தேவையும் ஆகும்.

எஜமான அருவருடி ஏஜெண்டு அரசியலிற்கான அஸ்தமனமும் புலிகளின் அழிவோடு நெருங்கிக் கொண்டிருப்பதை அறிந்துதான் இந்த ஏஜெண்டுகள் இப்போ.. அவசரவசரமாக மக்கள் முன் மக்கள் பிரதிநிதிகள் போன்று போலி முகமும் காட்டி எஜமானர்களிடம் நிரந்தர இடம் வாங்க முனைப்புக் காட்டுகின்றனர். இவர்களின் இந்த ஜால்ரா அரசியலை எல்லாம் தமிழ் மக்கள் ஏலவே கண்டுவிட்டார்கள். போதும் இந்த எலும்பு பொறுக்கிகளின் ஊளைகளும் தொந்தரவுகளும் வேட்டையாடல்களும். இவர்கள் தமிழ் மக்களை விட்டு ஒழிந்துபோனாலே போதும். அரைவாசிப் பிரச்சனை முடிவிற்கு வந்துவிடும்.

தேசிய தலைவரின் முயற்சிகள்.. போராட்டம் வெற்றி பெறாமல் போனதிற்கும்.. இந்த நாதாரிகள் ஒரு காரணம் என்பதை மக்கள் ஒரு போதும் மறக்கமாட்டார்கள்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

வீணைச் சின்னத்தையே காப்பாற்ற முடியாதவர்கள்தான் தமிழருக்கு உரிமை வாங்கித் தருவார்களாக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வரதராஜா பெருமாளுக்கு வடமாகாண ஆளுநர் பதவி ?

உந்தாள் கேக்கவுமில்ல.....குடுக்கவுமில்ல. ஏன் இவளவு பில்டப்? :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.