Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமன்னா போற்றி!

tamanna.jpg

தூத்துக்குடி ‘மக்காக்கள்’ தொடங்கிய தமன்னா ரசிகர் மன்றம்!

இடம்: கோடம்பாக்கம் கோபாலகிருஷ்ண சாஸ்திரிகள் வீடு

(வாசலில் தமன்னா ரசிகர்கள்)

சாஸ்திரிகள்: வாங்கோ! வாங்கோ! யாரு நீங்கெல்லாம்?

த.ரசிகர்: நாங்கெல்லாம் தூத்துக்குடி தங்கத்தாரகை தமன்னா ரசிகர் மன்றத்துலேருந்து வந்திருக்கோம் சாமி!

சாஸ்திரிகள்: பேஷ்! பேஷ்! உட்காருங்கோ! காப்பி சாப்பிடறேளா? என்னது? பஸ் ஸ்டாண்டுலேயே டாஸ்மாக்குலே சிரமப்பரிகாரம் பண்ணிண்டு வந்திருக்கேள் போலிருக்கே?

த.ரசிகர்: ஹி..ஹி! ஆமாம் சாமி! அதாவது எங்க தலைவிக்கு ஒரு கோவில் கட்டப்போறோம். தமன்னாலயம்னு பேரு! அதுக்கு நீங்க தான் கும்பாபிஷேகம் பண்ணி வைக்கணும் சாமி!

சாஸ்திரிகள்: அதுக்கென்ன, திவ்யமா, ஆனந்தமா, அமர்க்களமா, அமோகமாப் பண்ணிட்டாப் போச்சு!

த.ரசிகர்: அதுலே பாருங்க சாமி! மதுரையிலே குஷ்புவுக்குக் கோவில் கட்டினாங்க! அதுக்கப்புறம் குஷ்புவுக்கு மார்க்கெட் போயிருச்சு. தேவையில்லாம இந்தியாவுலே டென்னிஸ் கோர்ட், பேட்மிண்டன் கோர்ட் தவிர இருக்கிற எல்லா கோர்ட்டும் ஏறி இறங்கினாங்க!

சாஸ்திரிகள்: ஆமாமாம்!

த.ரசிகர்: அப்புறம் திருநெல்வேலியிலே நமீதாவுக்குக் கோவில் கட்டினாங்க! அவங்க மார்க்கெட்டும் அவுட்டாயிருச்சு! கோவில் திருப்பணியும் பாதியிலேயே நின்னுருச்சு! ரெண்டு வருஷமாகப்போகுது, இன்னும் கும்பாபிசேகம் கூட ஆகலை! இருந்த ஒரு உண்டியலையும் யாரோ திருடிட்டாங்களாம்.

சாஸ்திரிகள்: அவா ப்ராப்தம் அவ்வளவு தான்!

த.ரசிகர்: எங்க தமன்னாலயம் அப்படி ஆயிடக்கூடாது சாமீ! அதுனாலே எல்லாத்தையும் முறைப்படி செய்யணும். அதுனாலே தான் உங்க கிட்டே வந்திருக்கோம். தட்சணை எவ்வளவு வேண்ணாலும் தர்றோம் சாமி!

சாஸ்திரிகள்: அதுக்கென்ன? எல்லாத்தையும் சாஸ்திரோக்தமாப் பண்ணிட்டாப் போச்சு! எதுக்கும் தமன்னாவோட ஜாதகம் இருந்தாக் கொடுங்கோ! இல்லேன்னா அவாளோட பொறந்தநாளாவது சொல்லுங்கோ!

த.ரசிகர்: 21 டிசம்பர் 1989

சாஸ்திரிகள்: அப்படீன்னா, தனுர் ராசி! இந்த வருஷம் சக்கைப்போடு போடுவாளே!

த.ரசிகர்: ஆமாம் சாமி! ரிலீஸ் ஆன எல்லா படமும் சூப்பர் ஹிட்!

சாஸ்திரிகள்: இருக்காதா பின்னே? எங்காத்துக்காரிக்கும் தனுர் ராசிதான்! பின்னு பின்னுன்னு பின்னறாளோன்னோ?

த.ரசிகர்: வரும்போதே கேட்டோம்! ’ஐயோ அம்மா’ன்னு கூவிக்கிட்டிருந்தீங்க! சரி சாமி! முதல்லே திருப்பணியை எப்படி ஆரம்பிக்கலாமுன்னு சொல்லுங்கோ!

சாஸ்திரிகள்: நான் சொல்றேனேன்னு தப்பா நினைக்காதேள்! என்னதான் கும்பாபிஷேகம் நான் பண்ணினாலும், கொஞ்சம் நம்ம தமிழ்ப்பண்பாடு கலந்து பண்ணுங்கோ! இல்லேன்னா, சுயமரியாதை பேசறவா கோவிலுக்கு வரமாட்டா!

த.ரசிகர்: அதுவும் சரிதான்! எங்க தமன்னாலயத்துலே எந்த ஏற்றத்தாழ்வும் இருக்கக்கூடாது சாமீ! அப்படியிருந்தா தலைவியோட அருள் கிடைக்காது.

சாஸ்திரிகள்: உங்க தமன்னா எங்கே பொறந்தாங்க?

த.ரசிகர்: ஆஸ்பத்திரியிலே....!

சாஸ்திரிகள்: அதைக்கேட்கலேங்காணும்! எந்த ஊருலே பொறந்தான்னு கேட்கறேன்!

த.ரசிகர்: ஓ! அதுவா! மும்பையிலே பொறந்தாங்கோ!

சாஸ்திரிகள்: பேஷ்! பேஷ்! அதான் மகாலட்சுமி கடாட்சம் பரிபூரணமா இருக்கு! நீங்க என்ன பண்ணறேள், தமன்னாவோட சிலைக்கு தேவையான கல்லை பம்பாயிலேருந்து எடுத்துண்டு வாங்கோ!

த.ரசிகர்: பம்பாயிலே மலையிருக்கா சாமீ?

சாஸ்திரிகள்: என்ன அப்படிக் கேட்டுட்டேள்? மலபார் ஹில், அன்டாப் ஹில்னு ஏகப்பட்ட ஹில் இருக்கு பம்பாயிலே! அங்கேருந்து கல்லைப் பேத்து எடுத்துண்டு வந்து அந்தக் கல்லிலே தமன்னாவுக்கு சிலை பண்ணுங்கோ!

த.ரசிகர்: இதை மாதிரி யாரோ ஒரு தமிழ் மன்னர் பரங்கிமலையிலேருந்து கல்லெடுத்துட்டு வந்து மணிமேகலைக்குக் கோவில் கட்டினதா பூகோளத்துலே படிச்சிருக்கேனே?

சாஸ்திரிகள்: பகவானே! கஷ்டம்! கஷ்டம்!! அது பரங்கிமலை இல்லை, இமயமலை! மணிமேகலைக்கு இல்லை, கண்ணகிக்கு! நீர் படிச்சது பூகோளம் இல்லேங்காணும், சரித்திரம்!

த.ரசிகர்: ஏதோ ஒண்ணு! இப்போ அதுவா முக்கியம்? சரி சாமி! நீங்க சொல்லுறா மாதிரியே பம்பாயிலேருந்து கல்லைப் பேத்து எடுத்து, எங்க தலை மேலேயே வச்சிக்கிட்டு அங்கிருந்து தூத்துக்குடி வரைக்கும் பொடிநடையா வந்து சேர்ந்திடறோம்.

சாஸ்திரிகள்: அதெல்லாம் எதுக்கு? ரயில்லே வர வேண்டியது தானே?

த.ரசிகர்: சம்மர் சீஸன் சாமி! டிக்கெட் கிடைக்காது! அப்புறம் எங்க தலைவி சிலைக்கு பெரிசா கல் தேவைப்படாது. தலையிலே வச்சிட்டு வர்றது ஒண்ணும் பெரிய கஷ்டமில்லே!

சாஸ்திரிகள்: சும்மாச்சொல்லப்படாது! உங்க பக்திக்கு முன்னாலே ஆழ்வார்களும் நாயன்மார்களும் ஒண்ணுமேயில்லை போங்கோ!

த.ரசிகர்: இன்னும் முழுசா நான் சொல்லவே இல்லை சாமி! எங்க தமன்னா கோவிலிலே விபூதி,குங்குமம் கொடுக்க மாட்டோம். எங்க தங்கத்தாரகை படத்தைப் பார்த்தவங்க மீதியிருக்கிற பாதி டிக்கெட்டை ஒரு தனி உண்டியலிலே போடுவாங்க! நாங்க ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பெரிசா யாகம் பண்ணி, அதுலே அந்த டிக்கெட்டையெல்லாம் போட்டு பொசுக்கி, அந்த சாம்பலைத் தான் திருநீறாக் கொடுக்கப்போறோம்!

சாஸ்திரிகள்: பேஷ்! பேஷ்!!

த.ரசிகர்: அது மட்டுமா? விசேஷ பூஜையெல்லாம் கூட முடிவு பண்ணிட்டோம். கேடிபூஜை, அயன்பூஜை,காதல்பூஜை,பையா பூஜைன்னு ஒவ்வொரு நாளும் தலைவிக்கு விதவிதமா அலங்காரம் பண்ணுவோம்.

சாஸ்திரிகள்: பிரமாதம்! உற்சவம் உண்டா?

த.ரசிகர்: அது இல்லாமலா? தலைவி பொறந்த நாளை ஒவ்வொரு டிசம்பர் 21-ம் தேதியும் தமன்னோற்சவமுன்னு கொண்டாடுவோம். எல்லாருக்கும் சமோசாவும், முள்ளங்கிப் பரோட்டாவும் பிரசாதமாக் கொடுப்போம்.

சாஸ்திரிகள்: என்னது? சமோசாவா?

த.ரசிகர்: ஆமாம் சாமீ! எங்க தலைவி பஞ்சாபியில்லையா? அதான் பிரசாதமா சமோசாவும் முள்ளங்கிப் பரோட்டாவும்....!

சாஸ்திரிகள்: விசேஷம் தான் போங்கோ! சரி, பஞ்சாங்கத்தைப் பார்த்துட்டு கும்பாபிஷேகத்துக்கு ஒரு நல்ல நாள் முடிவு பண்ணி தகவல் அனுப்பறேன். உங்க அட்ரஸ், செல்போன் நம்பரெல்லாம் கொடுத்திட்டுப்போங்கோ!

த.ரசிகர்: சரி சாமீ! இந்தாங்க எங்களோட தட்சணை!

சாஸ்திரிகள்: என்னது, பெரிய மூட்டையான்னா இருக்கு?

த.ரசிகர்: அதொண்ணுமில்லே சாமி! எங்க கிட்டே காசு இல்லை! அதுனாலே எல்லாரும் அவனவன் போட்டிருக்கிற வாட்சு எல்லாத்தையும் கழட்டி மூட்டையாக் கட்டிக் கொண்டு வந்திருக்கோம். இதையெல்லாம் வித்தா நல்ல தொகை தேறும்!

சாஸ்திரிகள்: அட கஷ்டமே!

த.ரசிகர்: நீங்க ஃபீல் பண்ணாதீங்க சாமி! பட்டினி கிடந்து செத்தாலும் சரி, தலைவிக்கு கோவில் கட்டியே தீருவோம்.

சாஸ்திரிகள்: பண்ணுங்கோ பண்ணுங்கோ! இந்தச் சாக்குலே நானும் திருச்செந்தூர் முருகனையும் தரிசனம் பண்ணலாம். எட்டயாபுரம் போயி பாரதி வீட்டையும் பார்த்த மாதிரி இருக்கும்.

த.ரசிகர்: சாமீ! பாரதி பெங்களூருலே செட்டில் ஆயிட்டாங்க!

சாஸ்திரிகள்: என்னது?

த.ரசிகர்: 'அம்முவாகிய நான்' படத்துலே நடிச்ச பாரதி தானே? அவங்க கல்யாணம் பண்ணிக்கிட்டு பெங்களூரிலே செட்டில் ஆயிட்டாங்க! ஒரே படத்தோட நிறுத்திட்டாங்க, இல்லாட்டி அவங்களுக்குத் தான் முதல்லே கோவில் கட்டுறதா இருந்தோம்.

சாஸ்திரிகள்: கிரஹசாரம்! நான் சொன்னது மகாகவி சுப்ரமணிய பாரதி! அவர் தூத்துக்குடி பக்கத்துலே எட்டயாபுரத்துலே தானே பொறந்தார்?

த.ரசிகர்: ஓ! அவரா? சாரி சாமி! நான் பூகோளத்துலே ரொம்ப வீக்!

சாஸ்திரிகள்: அது பூகோளம் இல்லை! சரித்திரம்!!

த.ரசிகர்: ஏதோ ஒண்ணு, அதுவா முக்கியம்? சரி சாமீ! கிளம்பறேன்! தலைக்கு மேலே வேலையிருக்கு! தலைவிக்குக் கோவில் மட்டும் கட்டி முடிச்சா தூத்துக்குடியிலேருந்து திருச்செந்தூருக்கு தலைகீழா நடந்து வர்றதா வேண்டிக்கிட்டிருக்கேன். வரட்டுமா?

சாஸ்திரிகள்: ஓ! பேஷா போயிட்டு வாங்கோ!

(தமன்னா ரசிகர்கள் கலைகிறார்கள். சாஸ்திரியின் மனைவி மாமி வருகிறார்)

மாமி: ஏன்னா, அவாதான் அச்சுப்பிச்சுன்னு ஏதோ உளர்றான்னா, நீங்களும் நாள் குறிச்சுக் கொடுக்கறேன்னு சொல்றேளே?

சாஸ்திரிகள்: நீ சித்த சும்மாயிரு! நான் கும்பாபிஷேகம் பண்ண மாட்டேன்னு சொன்னா அவா யாராவது அரசியல் தலைவரை வச்சுண்டு சுயமரியாதை குடமுழுக்குன்னு பண்ணுவா! நம்மளைத் திட்டுவா! அதுக்கு நாமளே பண்ணிடலாமோன்னோ? உள்ளே போயி பஞ்சாங்கத்தை எடுத்துண்டு வா!

(மாமி உள்ளே போகிறாள். மீண்டும் வாசலில் யாரோ....!)

குரல்: சாமீ!

சாஸ்திரிகள்: யாரு? உள்ளே வாங்கோ!

வந்தவர்: வணக்கம் சாமீ! என் பேர் சேட்டைக்காரன்! அகில உலக ஸ்ரேயா ரசிகர் மன்றத்திலேருந்து வர்றேன்.

நன்றி: தோழர் சேட்டைக்காரன்...

  • கருத்துக்கள உறவுகள்

தமன்னா சிறந்ததொரு நடிகை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமன்னா சிறந்ததொரு நடிகை.

அரிய தகவலை தந்த தமிழீழ தோழர் ரதிக்கு நன்றிகள் பல....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.