Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இம்மானுவேல் அடிகளாரைக் குறிவைக்கும் சிறீலங்கா அரசு

Featured Replies

இம்மானுவேல் அடிகளாரைக் குறிவைக்கும் சிறீலங்கா அரசு!

By: admin

உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை இம்மானுவேல் அடிகளார் இனவிரோதத்தைப் பரப்புரை செய்யும் ஒருவர் என்று, சிறீலங்கா அரசாங்கத்தின் ஆலோசகர்களில் ஒருவரான பேராசிரியர் றோஹான் குணரட்ண குற்றம் சுமத்தியுள்ளார்.

இது குறித்து இந்திய ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டிருக்கும் பேராசிரியர் றோஹான் குணரட்ண, அருட்தந்தை இம்மானுவேல் அடிகளாரின் தலைமையிலான உலகத் தமிழர் பேரவை தமிழீழ விடுதலைப் புலிகளின் மறுஅவதாரம் என்று தெரிவித்துள்ளார்.

இம்மானுவேல் அடிகளார் இனவிரோதத்தைப் பரப்புரை செய்யும் ஒருவர் என்றும், எனினும் நாடுகடந்த அரசாங்கத்தை அமைக்க முற்படும் வி.உருத்திரகுமாரன் அப்படிப்பட்டவர் அல்ல என்றும், பேராசிரியர் றோஹான் குணரட்ண குறிப்பிட்டுள்ளார்.

அரசியலை நன்கு உணர்ந்துகொண்ட ஒருவராக உருத்திரகுமாரன் விளங்குவதாகவும், அவருடன் பேசி சிறீலங்கா அரசாங்கம் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்றும், விரைவில் தமிழீழக் கோரிக்கையைக் கைவிட்டு சிறீலங்கா அரசாங்கத்துடன் அவர் பேசுவார் என்று தான் நம்புவதாகவும், பேராசிரியர் றோஹான் குணரட்ண நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

நாடுகடந்த அரசாங்கத்துடன் பேசுவதற்கு தாங்கள் தயாராக இருப்பதாக இன்று சிறீலங்கா ஊடகத்துறை அமைச்சர் ஹெகெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.pathivu.com/?p=327

இம்மானுவேல் அடிகளார் இனவிரோதத்தைப் பரப்புரை செய்யும் ஒருவர் என்றும், எனினும் நாடுகடந்த அரசாங்கத்தை அமைக்க முற்படும் வி.உருத்திரகுமாரன் அப்படிப்பட்டவர் அல்ல என்றும், பேராசிரியர் றோஹான் குணரட்ண குறிப்பிட்டுள்ளார்.

அரசியலை நன்கு உணர்ந்துகொண்ட ஒருவராக உருத்திரகுமாரன் விளங்குவதாகவும், அவருடன் பேசி சிறீலங்கா அரசாங்கம் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்றும், விரைவில் தமிழீழக் கோரிக்கையைக் கைவிட்டு சிறீலங்கா அரசாங்கத்துடன் அவர் பேசுவார் என்று தான் நம்புவதாகவும், பேராசிரியர் றோஹான் குணரட்ண நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

http://www.pathivu.com/?p=327

வாவ்வ்வ்வ்வ்... எங்கே இப்படியான செய்தி வருமென்று காத்திருந்த "பதிவு" சார் புலம் பெயர் அமைப்பு விற்பனர்களுக்கு ... காய்த்திருந்த மாட்டுக்கு கம்பு கிடைத்த ..... சந்தோஷம்!!!

சிங்களவனே புரளிகளை கிளப்புவான், இந்த புலம் பெயர்ந்த அமைப்பின் புத்திஜீவிகள் தலையில் பிடித்து ஆடுவார்கள்!!!

Lanka cautions EU on Tigers

http://www.dailymirror.lk/index.php/news/3739-lanka-cautions-eu-on-tigers.html

இதோ "TGTE" ஐயும் புலிச்சாயம் பூசி பயங்கரவாத முத்திரிகை குத்த சிங்களவன் பாடுபடத் தொடங்கிவிட்டான் ..... நீங்கள் ஏன் பாடுபடுவான், நாங்களே உதுக்குள்ளும் உள்ளட்டு உதை பயங்கரவாத முத்திரியை குத்துகிறோம் என்ற இருமுனைப் போட்டியில் தமிழீழ விடுதலைப்புலிகளின் சர்வதேச அமைப்பினர்! ..... சாபம்!

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்கழத்தில உத்தியோகபூர்வமா துரோகி பட்டம் குடுத்ததை ஸ்ரீலங்கா அரசு படிக்கேல்ல போலயிருக்கு. :rolleyes:

  • தொடங்கியவர்

யாழ்கழத்தில உத்தியோகபூர்வமா துரோகி பட்டம் குடுத்ததை ஸ்ரீலங்கா அரசு படிக்கேல்ல போலயிருக்கு. :)

எங்கட களத்திலை ரோசக்காறர் கனக்க பேர் இருக்கினம்... உமக்கு பதில் எழுதினால் உடனை தூக்கி விடுகிறார்கள்...

வேறையார் இணையவன் எண்டவர்தான்... அவருக்கு பிடிச்ச மாதிரி எல்லாம் எழுத ஏலாது... ஆகவே இண்டக்கு உமக்குதான் வெற்றி... :)

சிறிலங்கா அரசின் நடவடிக்கைகள் புறந் தள்ள முடியாதவை. சிறிலங்கா அரசுடன் உருத்திரகுமார் பேசுவது வேறுவிடயம். இவ்வாறு சொல்வதன் மூலம், அவர்மீதுள்ள மக்களின் நம்பகத் தன்மையைச் சீர்குலைக்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறிலங்கா அரசின் நடவடிக்கைகள் புறந் தள்ள முடியாதவை. சிறிலங்கா அரசுடன் உருத்திரகுமார் பேசுவது வேறுவிடயம். இவ்வாறு சொல்வதன் மூலம், அவர்மீதுள்ள மக்களின் நம்பகத் தன்மையைச் சீர்குலைக்கலாம்.

வட்டுக்கோட்டை பிரகடனத்தார் என்ன குறைவே! அவையும் போய் காலில விழுந்தவைதானே!!

தமிழீழம் ஒரு வியாபாரம் ... இப்ப என்ன எப்பவும் இவர்களுக்கு வியாபாரம்.

உள்ளுக்க விட்டு அடிக்கிறன் உறுட்டி அடிக்கிறன் பிரட்டி அடிக்கிறன் எண்டு இவளவு சனத்த பலிகுடுத்தது தங்கட வியாராத்த தக்க வைக்கத்தானே.

இனிமேல் 87 தீர்வு வந்தாலே பெரிய விசயம். :)

வட்டுக்கோட்டை பிரகடனத்தார் என்ன குறைவே! அவையும் போய் காலில விழுந்தவைதானே!!

தமிழீழம் ஒரு வியாபாரம் ... இப்ப என்ன எப்பவும் இவர்களுக்கு வியாபாரம்.

உள்ளுக்க விட்டு அடிக்கிறன் உறுட்டி அடிக்கிறன் பிரட்டி அடிக்கிறன் எண்டு இவளவு சனத்த பலிகுடுத்தது தங்கட வியாராத்த தக்க வைக்கத்தானே.

இனிமேல் 87 தீர்வு வந்தாலே பெரிய விசயம். :)

எல்லா விடயங்களையும் வியாபாரமாகப் பார்க்க முடியாது. அடக்கப்பட்ட ஓரினம் எந்த வழியிலாவது மீண்டு வரவேண்டும் என்பதுதான் எல்லோரது விருப்பம். தடம்மாறிப் போகின்றவர்கள், என்றைக்கம் வெளிப்பட்டு அந்நியப்படுகின்றார்கள். அது வெளிப்படையாகவே தெரிகிறது.

தமிழரது இப்போதைய தேவையென்பது, ஏதோவொரு இலக்கைக் கொண்டிருந்தாலும் அதை அடையப்படும் ஒரு வழியாகத்தான் நாடு கடந்த அரசை நோக்க வேண்டும். 83 இல் தூக்கப்பட்ட ஆயுதம் இலக்கை அடையும் வழியாகத்தான் பார்க்கப்பட வேண்டும். அதே ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டதும் அதே இலக்கை அடையும் வழியொன்றைத் தோற்றுவிக்கத்தான்.

நீங்கள் எழுதியிருக்கும் கருத்தும் புறந்தள்ள முடியாதது. போராட்ட காலங்களில் அவ்வாறான சம்பவங்கள் நடைபெற்றிருந்தன. காட்டிக் கொடுப்புகள், துரோகத்தனங்கள், எதிரிகளோடிணைந்த செயற்பாடுகள் போன்றவை விற்றுப்பிழைத்து வியாபாரமாக்கும் சம்பவமாகத்தான் இடம்பெற்றன. அதனால்தான் எமது இனம் இன்று சின்னாபின்னப்பட்டு கதியிழந்து நிற்கிறது.

தமிழர்களே தமிழரை எதிர்க்கும் தன்மை மறையவேண்டும். அல்லது நீங்கள் குறிப்பிட்ட வியாபாரத்தைக் கொண்ட வியாபாரிகள் என்றைக்கும் தோன்றி, தமிழீழத்தை மட்டுமல்ல, தமிழரின் அவல வாழ்வையும் வியாபாரமாகக் கொள்வார்கள்.

இம்மானுவேல் அடிகளாரைக் குறிவைக்கும் சிறீலங்கா அரசு!

அரசியலை நன்கு உணர்ந்துகொண்ட ஒருவராக உருத்திரகுமாரன் விளங்குவதாகவும், அவருடன் பேசி சிறீலங்கா அரசாங்கம் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்றும், விரைவில் தமிழீழக் கோரிக்கையைக் கைவிட்டு சிறீலங்கா அரசாங்கத்துடன் அவர் பேசுவார் என்று தான் நம்புவதாகவும், பேராசிரியர் றோஹான் குணரட்ண நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

நாடுகடந்த அரசாங்கத்துடன் பேசுவதற்கு தாங்கள் தயாராக இருப்பதாக இன்று சிறீலங்கா ஊடகத்துறை அமைச்சர் ஹெகெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிங்கள இனப் படுகொலையாளர்கள் தமது போர்க்குற்றம் வெளிவருவதை தடுக்க நாடகமாடுகிறார்கள்.

சிங்கள நயவஞ்சகர்களின் அழைப்பு, கட்டுக்கதைகளை அவிழ்த்துவிடுதல், போன்றன உலகை ஏமாற்றும் தந்திரம்.

இவர்களின் சதிக்கு துணை போகக் கூடாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.