Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செம்மொழி செம்மொழி நம் தமிழ் மொழியாம் வாழிய வாழியவே வாழிய வாழியவே வாழிய வாழியவே!

Featured Replies

http://sensongs.com/UNDG/Tamil/Tamil Semmozhi Manadu Anthem - AR Rahman/Tamil Semmozhi Manadu Anthem - AR Rahman.mp3

பாடல்: ரஹ்மான் | கலைஞர் | செம்மொழி

+++

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் -

பிறந்த பின்னர், யாதும் ஊரே, யாவரும் கேளிர்!

உண்பது நாழி உடுப்பது இரண்டே

உறைவிடம் என்பது ஒன்றேயென

உரைத்து வாழ்ந்தோம் -

உழைத்து வாழ்வோம்!

தீதும் நன்றும் பிறர் தர வாரா எனும்

நன் மொழியே நம் பொன் மொழியாம்!

போரைப் புறம் தள்ளி

பொருளைப் பொதுவாக்கவே

அமைதி வழி காட்டும்

அன்பு மொழி

அய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம்!

ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே

உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்

ஓல்காப் புகழ் தொல்காப்பியமும்

ஒப்பற்ற குறள் கூறும் உயர் பண்பாடு

ஒலிக்கின்ற சிலம்பும், மேகலையும்

சிந்தாமணியுடனே வளையாபதி குண்டலகேசியும்

செம்மொழியான நம் தமிழ் மொழியாம்!

அகமென்றும் புறமென்றும் வாழ்வை

அழகாக வகுத்தளித்து

ஆதி அந்தமிலாது இருக்கின்ற இனியமொழி -

ஓதி வளரும் உயிரான உலக மொழி -

நம்மொழி நம் மொழி - அதுவே

செம்மொழி - செம்மொழி - நம் தமிழ் மொழியாம்!

வாழிய வாழியவே வாழிய வாழியவே வாழிய வாழியவே!

  • 1 month later...

http://sensongs.com/UNDG/Tamil/Tamil Semmozhi Manadu Anthem - AR Rahman/Tamil Semmozhi Manadu Anthem - AR Rahman.mp3

இன்று மீண்டும் இப்போது இந்தப்பாடலை கேட்டுப்பார்த்தன், மிக நன்றாய் இருக்கிது. தவில், நாதஸ்வரம், மிருதங்கம் வாத்தியங்கள் இசைக்கப்படுகின்ற பகுதி வசீகரமாய் உள்ளது.

Edited by மச்சான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருனாநிதி என்ற களங்கத்தை நீக்கி பார்தாள் எம் மொழி உலகின் உன்னத மொழியே இந்த நாயாள் இந்த பிறப்பெ சுமையாகிவிட்டது

Edited by kanneer

  • கருத்துக்கள உறவுகள்

ரொம்ப ரொம்ப அழகு! நன்றி! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

மொழி அழகு

கவி வரி அழகு

இசை அழகு

எடுத்து வந்த நடை அழகு

ஏனோ இன்னும் எம் மனங்களில் மட்டும் அழுக்கு?

கருனாநிதி என்ற களங்கத்தை நீக்கி பார்தாள் எம் மொழி உலகின் உன்னத மொழியே இந்த நாயாள் இந்த பிறப்பெ சுமையாகிவிட்டது

இந்த கரு நாயோட பாட்டுக்கு பதில் பாட்டு

இறப்பொக்கும் எல்லா உயிரும்

இறந்த பின்னர்

ஏது ஊரே.ஏ…ஏ…ஏ

யாவரும் சவங்கள்

உண்பது வரிசை

உடுப்பது கிழிசல்

உறைவிடமெங்கே முள்வேலி

செத்துப் பிழைத்தோ…தோ…தோம்

பிழைத்தும் சாவோம்…வோ…வோ…வோம்

தீதும் சூதும்

பிறர் தர வாழு எனும்

நன்மொழியே நம் பொன்மொழியாம்

அ..அ..ஆ…ஆ..ஆ…

சிறு குழந்தை முதல்

பேரிளம் பெண்களும் வரையிலே

உடம்பினை புணர்ந்து

கூறுபோடும்

விகாரைகள், மகா வம்சங்கள்

முள்வேலிக்குள் நீளும் கைகள்

ஒலிக்கின்ற அழுகுரலும்,வதைகளும்,

பசிக்கின்ற வயிறுகளும்,

மறைக்கின்ற அறிக்கைகளும்ம்ம்ம்ம்

அ..அ..ஆ…ஆ..ஆ…

செம்மொழியான தமிழ்மொழியாம்

செம்மொழியான தமிழ்மொழியாம்

அ..அ..ஆ…ஆ..ஆ…

செம்மொழியான தமிழ்மொழியாம்

செம்மொழியான தமிழ்மொழியாம்

செம்மொழி. செம்மொழி

தமிழ்மொழி தமிழ்மொழி அ..அ..ஆ…ஆ..ஆ…

குட்டிமணி முதல்

முத்துக்குமார் வரை

செத்துப் போனவர்

எத்தனையோ எத்தனையோ

ஓ…ஓ…ஓ…ஓ

ஓ…ஓ…ஓ…ஓ

இரண்டு லட்சம் பேர்

குருதியில் சிவந்த மொழி

எங்கள் மொழி தமிழ் மொழியாம்

செம்மொழியான

தமிழ் மொழியாம்ம்ம்ம்ம்ம்

அ..அ..ஆ…ஆ..ஆ…

கரு நாய் தன பாட்டில போரை புறம் தள்ளி பொருளை போதுவாக்கவே அப்படின்னு சொல்லிருக்கும் ஆனா நிசத்தில பொருள தன வம்சத்திற்கு மட்டும் சேர்த்துகிட்டு மத்தவங்கள அழிக்க துணை போகுது இதுக்கு எல்லாம் எப்ப முடிவு காலம் தான் தெரியல

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த செம்மொழிமாநாடு..........

எதிர்வீட்டில் இழவு நடக்கும் போது பக்கத்து வீட்டுக்காரன் வாணவேடிக்கையுடன் கொண்டாட்டம் செய்வதுபோலுள்ளது.

என்னவொன்று??????????

மகிந்த செய்த கொண்டாட்டங்களை விட கலைஞர் குடும்பம் கொஞ்சம் வித்தியாசமாக செய்கின்றார்கள்.அவ்வளவுதான்

இந்த செம்மொழிமாநாட்டை சென்றமாதம் நடாத்தியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

கவிமழையிலும் பாராட்டுமழையிலும் கலைஞர் கோமா நிலைக்கு போகாவிட்டால் அவர் குடும்பத்திற்கு சந்தோசம்.

  • கருத்துக்கள உறவுகள்

செம்மொழி மாநாட்டுப் பாடல் மக்களின் விருப்பிக்கிணங்க மாற்றப்பட்டுள்ளது?? :o:rolleyes:

kirrukan said...

செம்மொழி பேசியவன்

செங்குறுதி சிந்தி

செத்து மடியும் போது

செயலற்றிருந்த

செம்மொழிஅறிஞர்கள் இன்று

செம்மொழிக்கு மலர்

செய்து மகிழ்கிறனர்

நன்றி கிறுக்கன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.