Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஈழத்தமிழர்களின் கோரிக்கையை ஏற்றது மலேசியா

Featured Replies

ஈழத்தமிழர்களின் கோரிக்கையை ஏற்றது மலேசியா

மலேசியாவில் உண்ணாவிரதம் இருந்த ஈழத்தமிழர்களை காப்பாற்ற பல்வேறு உலக தமிழ் அமைப்புகளுக்கும், நக்கீரன் மூலமாக கோரிக்கை விடுக்கப்பட்டது. பினாங்கு துணை முதல்வர் ராமசாமி, ஐ.நா.வின் அகதிகளுக்கான அதிகாரிகளை சந்தித்து, ஈழத்தமிழர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி வந்தார். உள்துறை அமைச்சகத்திடமும் அந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வந்தார்.

அதேபோல மாற்று செயல் அணி அமைப்பைச் சேர்ந்த கலைவாணர் முகாமில் உண்ணாவிரதம் இருந்து வந்த ஈழத்தமிழர்களை நேரில் சந்திக்க பலமுறை முயற்சித்தும், அனுமதி மறுக்கப்பட்டது. அதன்பிறகு திங்கள்கிழமை மலேசிய பிரதமர் அலுவலகத்துக்கு முகாமில் உள்ள ஈழத்தமிழர்களின் அவல நிலைகளை பேக்ஸ் மூலமாக செய்திகளாக அனுப்பினார். தொடர்ந்து மலேசிய ஆணையர் டத்தோ அப்துல் ரகுமானை சந்தித்து, ஈழத்தமிழர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும்படி வலியுறுத்தினார்.

இதன்பிறகு மலேசிய பிரதமரின் அந்தரங்க செயலாளரை சந்தித்து, ஈழத்தமிழர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி 8 நாட்களாக உண்ணாவிரதம் இருக்கிறார்கள். அவர்களின் உயிர்களையும் காக்க வேண்டும் என்ற கோரிக்கையை மனுவாக முன் வைத்தார்.

அதன்பிறகு கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படும் என்று பிரதமரின் அந்தரங்கச் செயலாளரின் உத்தரவின் பேரில் உண்ணாவிரதத்தை கைவிடச் செய்தார். பிரதமர் அலுவலகத்தில் இருந்து கலைவாணர் நக்கீரன் செய்தியாளரிடம் கூறும்போது,

மலேசியா ஆணையர் டத்தோ அப்துல் ரகுமானை சந்தித்து, கோரிக்கையை எழுப்பி, அது ஓரளவு சரியாகும் நிலையில், ஐ.நா.வின் அகதிகளுக்கான அதிகாரிகள், முகாமில் உள்ள ஈழத்தமிழர்கள் புலிகளின் இயக்கத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று தவறான செய்திகளை அரசுக்கு தெரியப்படுத்தி விட்டனர்.

இதனால் ஈழத்தமிழர்களின் கோரிக்கை ஏற்கப்படாமல் இருந்தது. இப்போது நாங்கள் உண்மை நிலையை மலேசியா ஆணையர் அப்துல் ரகுமானுக்கும், பிரதமர் அலுவலகத்துக்கும் பேக்ஸ் மூலமாக அனுப்பி இருந்தோம். அதன்பிறகு செவ்வாய்கிழமை காலை 11.30 மணி முதல் 1 மணி வரை பிரதமரின் அந்தரங்க செயலாளரை சந்தித்து, உண்மை நிலையை விளக்கி கூறினோம். முதல் கட்டமாக 75 ஈழத்தமிழர்களை நாடு கடத்தும் முயற்சி கைவிடப்பட்டது. அடுத்து இதே மலேசியாவில் அவர்கள் இருக்கும் வரை அகதிகளுக்கான அனைத்து உதவிகளையும் கொடுத்து தங்க வைக்க வேண்டும் என்று கூறினோம். அதையும் ஏற்றுக்கொண்டார்கள்.

இதனிடையே நார்வே, கனடா நாட்டின் தூதர்களிடம் தொடர்பு கொண்டு 75 பேரையும் அகதிகளாக ஏற்றுக்கொள்ளும் படி கேட்டுக்கொண்டோம். அவர்களும் வரும் வியாழன் அன்று இதுகுறித்து முடிவு தெரிவிப்பதாக கூறியுள்ளனர். நாளை முதல் 75 ஈழத்தமிழர்களின் கோரிக்கையை நிறைவேற்றும்படி கையெழுத்து இயக்கம் தொடங்க உள்ளோம் என்று தெரிவித்தார்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=33149

அஹிம்சை போராட்டத்தின் வலிமை இப்பவும் ரொம்ப பலம் வாய்ந்தது என்பதை அறிந்து கொண்டேன்

  • கருத்துக்கள உறவுகள்

உண்ணாவிரத்ததை கைவிடவைக்கும் சூழ்ச்சி இல்லாத வரை அகிம்சை போராட்டம் மலேசியாவில் இத்தருணத்தில் மட்டும் வெற்றி பெற்றதாக தான் எடுக்கலாம்.

அஹிம்சை போராட்டத்தின் வலிமை இப்பவும் ரொம்ப பலம் வாய்ந்தது என்பதை அறிந்து கொண்டேன்

அகிம்சையோ ஆயுதமோ எதிரியைப்பொறுத்துதான் வெற்றி-தோல்வி தீர்மானிக்கப்படும். திலீபன் மகாத்மா காந்திகாலத்தில் போராடியிருந்தாலும் வென்றிருக்கமுடியாது. அகிம்சை இந்தியாவின் ஆயுதமாகலாம.; ஆனால் இந்தியாவுக்கு எதிரான ஆயுதமாக ஒருபோதும் இருக்கக்கூடாது. அவர்கள் அகிம்சையை மதிக்கத் தெரியாதவர்கள்

Edited by Subiththiran

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.