Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கோத்தபாயாவின் கொட்டம்

Featured Replies

கோத்தபாயாவின் கொட்டம்.

எல்லோரும் பீ.பீ.சீ யில் காட் டோக் பாருங்கோ.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

<_< எத்தினை மணிக்கு

எண்டதை போடாம??ஃ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

<_< எத்தினை மணிக்கு

எண்டதை போடாம??ஃ

http://www.bbc.co.uk/programmes/b00sr2r0

Tonight London Time at 23.30 again but you can view on this link

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தா தப்பிறதிற்கு உளறுறான்.. அழுகிறான்.. பாருங்கள்..

http://news.bbc.co.uk/1/hi/programmes/hardtalk/8725899.stm

Edited by nedukkalapoovan

கோத்தபாயாவின் கொட்டம்.

எல்லோரும் பீ.பீ.சீ யில் காட் டோக் பாருங்கோ.

தோற்றுப்போன உங்களுக்கே அதுவும் புலம்பெயர் நாடுகளில் இருந்துகொண்டு எவ்வளவோ கொட்டம் இருக்கும் என்றால்... வெற்றி கொண்ட, தனது சொந்த நாட்டில் இருக்கும் கோத்தபாயாவுக்கு எவ்வளவு கொட்டம் இருக்கும். சிங்களவனை முட்டாள் என்று காலம் காலமாக கூறி வந்தோம். ஆனால் நாங்கள்தான் அவனைவிட பல மடங்கு முட்டாள்கள் என்று இன்றும்கூட யதார்த்த நிலமையை ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலையில் இருக்கின்றோம். இப்போது சிங்களவன் எம்மைவிட அதிக காடைத்தனம் கொண்டவன் என்பதை சர்வதேசத்தில் நிரூபிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளோம். நம்மவர்கள் எப்படிப்பட்ட காடைத்தனம் கொண்டவர்கள் என்பதை ஆங்கில வலைத்தளங்களில் பின்னூட்டல் எழுதுகின்ற வேற்று இனத்தவர்கள் கூறுகின்றார்கள். அதையும் பாருங்கள். <_<:lol: :lol: :lol: :lol: :wub:

  • கருத்துக்கள உறவுகள்

தோற்றுப்போன உங்களுக்கே அதுவும் புலம்பெயர் நாடுகளில் இருந்துகொண்டு எவ்வளவோ கொட்டம் இருக்கும் என்றால்... வெற்றி கொண்ட, தனது சொந்த நாட்டில் இருக்கும் கோத்தபாயாவுக்கு எவ்வளவு கொட்டம் இருக்கும். சிங்களவனை முட்டாள் என்று காலம் காலமாக கூறி வந்தோம். ஆனால் நாங்கள்தான் அவனைவிட பல மடங்கு முட்டாள்கள் என்று இன்றும்கூட யதார்த்த நிலமையை ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலையில் இருக்கின்றோம். இப்போது சிங்களவன் எம்மைவிட அதிக காடைத்தனம் கொண்டவன் என்பதை சர்வதேசத்தில் நிரூபிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளோம். நம்மவர்கள் எப்படிப்பட்ட காடைத்தனம் கொண்டவர்கள் என்பதை ஆங்கில வலைத்தளங்களில் பின்னூட்டல் எழுதுகின்ற வேற்று இனத்தவர்கள் கூறுகின்றார்கள். அதையும் பாருங்கள். <_<:lol: :lol: :lol: :lol: :wub:

மச்சான் உங்களின் கருத்தை என்னால் முற்றாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சிங்களவனுக்கு சர்வதேச ரீயில் சார்ப்புப் பிரச்சாரம் செய்ய பல நாடுகள் இருக்கின்றன. அமெரிக்கா உட்பட பல நாடுகள் ஆயுத பலத்தை பிரயோகித்து மனிதப் படுகொலைகளை செய்து ஜனநாயகம் நிலைநாட்டுகின்ற அதேவேளை தமது உரிமைக்காக ஆயுதம் கொண்டு போராடும் மக்களை பயங்கரவாதிகளாகச் சித்தரித்து அவர்கள் மீதும் தமது பலப் பிரயோகத்தை செய்து வெற்றி விழாக்கள் கொண்டாடி வருகின்றன. இதை முதலில் நீங்கள் வீரத்தின் வடிவமாகவா பார்க்கிறீர்கள்..??!

பெரும் மனிதப் பேரழிவுகளை செய்த அமெரிக்காவையோ பிரிட்டனையோ ரஷ்சியாவையோ இஸ்ரேலையோ சீனாவையோ தண்டிக்க இந்த உலகில் யாரும் இல்லை. ஆனால் விடுதலைப்புலிகள் போன்ற ஒரு சிறு போராளி அமைப்பை தண்டிக்க இந்த உலகமே திரண்டதன் பின்னணியை ஏன் நீங்கள் ஆராய்கிறீர்கள் இல்லை..???! ஒரு இனம்.. இவர்களின் இராஜதந்திர நகர்வுகளிற்கு வெளியில் நின்று விடுதலை பெறுவதை இவர்கள் விரும்பவில்லை. அதை தங்கள் கொள்கைத் தோல்வியாக நோக்குகின்றனர். தாம் விரும்பும் இடங்களில் 800 பேரைக் கொன்றால் கூட அதை மனிதப் பேரவலமாக சித்தரிக்கும் இவர்களே ஈராக்கில் ஆப்கனில் இலங்கையில் ஆயிரக்கணக்கில் கொன்று குவித்து ஜனநாயகம் நிலைநாட்டி வருகின்றனர். இந்த அநீதியை உங்களால் தடுக்க முடியுமா..??! இல்லை என்றால் ஏன் இந்த உலகால் இதனை தடுக்க முடியவில்லை.. அதற்கு விடை தேடுவது அவசியம். இந்த உலகில் நீதி நியாயம் என்பது பலவீனத்தின் கைகளிலும் அநியாயம் என்பது பலமானவர்களின் உபாயமாகவும் இருக்கும் நிலையில்.. விடுதலைப்புலிகள் என்ன யாரும் எதனையும் செய்து விடமுடியாது.

இதே விடுதலைப்புலிகள் நாலு ஏவுகணைகளோடு சில அணுகுண்டுகளோடு இருந்திருந்தால் ஒருவேளை அழிவுகளை தவிர்த்திருக்கலாம். ஏன் அவர்களை நாம் அவ்வாறான ஒரு நிலைக்கு துரிதமாக நகர்த்தி வரவில்லை.. அது யார் தவறு..??!

மேற்குலகம் செய்யும் பயங்கரவாதப் பிரச்சாரத்தை தான் அங்குள்ள மக்கள் நம்புகின்றனர். அதே மக்கள் ஆப்கனிலும் ஈராக்கிலும் கொல்லப்படும் தமது பிள்ளைகள் ஏன் எதற்கு அழிக்கப்படுகின்றனர் என்ற கேள்வியை கேட்காமலும் இருக்க பார்த்துக்கொள்ளப்படுகின்றனர்..??! ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்படும் தலிபான்கள் உண்மையில் பயங்கரவாதிகள் அல்லவாம். பாகிஸ்தான் மக்கள் அவர்களை மிகவும் மதிக்கின்றனர். காரணம் அவர்கள் நீதியை நிலைநாட்டுவதில் பாரபட்சம் பார்ப்பதில்லையாம். அதுமட்டுமன்றி மக்களிடம் ஒழுக்கக் கட்டுப்பாடுகளை விரும்பும் அவர்கள் கடுமையாக நடந்து கொள்ளும் சில சந்தர்ப்பங்களை மேற்குலகம் தனது பிரச்சார தேவைகளுக்காக பயங்கரவாதமாக சித்தரித்து வருகிறதாம். இதையே தான் அமெரிக்கா ஆண்டாண்டு காலமாக செய்து வருகிறது..! இதனில் இருந்து உங்களால் எப்படி வெற்றிகரமாக வெளி வந்து இந்த உலகிற்கு உண்மைகளை உள்ள படி சொல்ல முடியுமோ அன்று.. ஆங்கிலப் பின்னூட்டங்களிலும் நீதி தொனிக்க வாய்ப்பிருக்கும்..??!

மக்கள் நியாயத்தை அறியவிடாமல் தடை செய்து வைத்துக் கொண்டு அநியாயத்தை மட்டும் அவர்களுக்கு காட்டிக் கொண்டிருந்தால்.. தலிபான்களை பயங்கரவாதிகள் என்று சொல்ல அதை ஏற்கும் நிலையில் நாம் இருப்பது போல்.. எம்மையும் அதே சக்திகள் பயங்கரவாதிகளாக சித்தரிக்க நாம் குமுறிக் கொண்டு மற்றவர்களும் உண்மையை தேடாமல் சொல்வதை நம்பி எழுதும் அல்லது எண்ணும் நிலையில்.. அதை ஏற்க முடியாமல்.. பொறுத்துக் கொள்ள முடியாது நாம் தவிக்கிறோம்.

இது அடிப்படையில் இந்த உலகில் உள்ள பலமான சக்திகளின் பிரச்சார ஆக்கிரமிப்பின் விளைவே அன்றி.. அதுவே உண்மையல்ல. ஆங்கில தளங்களின் பின்னூட்டங்கள் உண்மையின் மடியில் இருந்து எழுந்தவையல்ல. பிரச்சாரத்தின் வலிமையால் உண்மைகளாக சித்தரிக்கப்படும் பொய்களில் இருந்து பிறந்தவை. உண்மைக்கும் பின்னூட்டல்களுக்கும் இடையில் உள்ள இடைவெளியை என்று நாம் நிரப்புகிறோமோ அன்று நாமும் நெல்சன் மண்டேலா போல்.. மேற்குலகால் சிலை வைக்கப்படும் நிலைக்கு உயர்த்தப்படுவோம்... என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

வெறுமனவே எம்மை நாமளே மட்டம் தட்டிக் கொண்டிருப்பதிலும் பயனில்லை..! தெளிவான திட்டங்களும் இலக்குகளும் செயல்களுமே இன்றைய களத்தில் சவால்களை எதிர்கொள்ள எமக்கு அவசியம். பின்னூட்டல்கள் மக்களுக்கு போய் சேரும் உண்மையின் தன்மையோடு நாளை மாறி நிற்க வேண்டுமாயின் நாம் அவர்களை நோக்கி உண்மைகளை உண்மையாகக் காட்ட வேண்டும். அதைச் செய்வோம்.

Edited by nedukkalapoovan

நெடுக்காலபோவான்..

நான் உங்களின்.. கருத்துகளை தொடர்ந்து வாசித்து வருகிறேன். சொல்ல போனால்.. ஒரு ரசிகன் ஆகி விட்டேன்..நீங்கள் சொல்வது எல்லாம் மறுக்க முடியாத யதார்தங்கள்...

தொடர்க உங்களது. பணி.

குழந்தை...

  • தொடங்கியவர்

சும்மா வாயால் மேடை போடுவது தமிழனுக்கு கை வந்த கலை.இங்கு பச்சை புள்ளிகாகவே சிலர் கொட்டித்தீர்க்கின்றார்கள்.

"உலகமே திரண்டு அடித்தது"இது எங்கள நாமே திருப்தி படுத்த சொல்லிக் கொள்வது.மற்றவனை உசுப்பேற்றி கடைசியில் என்ன நடந்தது என எல்லோருக்கும் தெரியும்.தமிழ் நாட்டு அரசியல் இனி செய்யாதீர்கள்.அதுக்குத்தான் நெடுமாறனும்,சீமானும் இருக்கினம் .

இனியாவது நிஜ உலகிற்கு வாங்கோ.ஆயுதங்களை மவுனித்தாகாக சப்பை கட்டு கட்டுகின்றோம்.சிங்களவனிடம் தோற்று சரணடைந்தோம் இது தான் உண்மை.தெரிந்த உண்மையே சொல்லாமல் இனியும் வெட்டுவம் கொத்துவம்,பிரட்டுவம் என்று கொண்டு நின்றால் உங்கட பாசையில் உலகமே திரண்டு "காபேஜுக்குள்" அடித்துவிடும்.

மச்சான் நிதர்சனமாக எழுதிவருகின்றார்.கோத்தபாயாவின் கொட்டம் கொஞ்சம் டூ மச்.எம்மவரின் கொட்டம் அது ஒரு காலமும் அடங்காது.

"அடங்கா தமிழா எழுந்து வாடா" அப்படி போடு அரிவாளை என்றானாம்.

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா வாயால் மேடை போடுவது தமிழனுக்கு கை வந்த கலை.இங்கு பச்சை புள்ளிகாகவே சிலர் கொட்டித்தீர்க்கின்றார்கள்.

"உலகமே திரண்டு அடித்தது"இது எங்கள நாமே திருப்தி படுத்த சொல்லிக் கொள்வது.மற்றவனை உசுப்பேற்றி கடைசியில் என்ன நடந்தது என எல்லோருக்கும் தெரியும்.தமிழ் நாட்டு அரசியல் இனி செய்யாதீர்கள்.அதுக்குத்தான் நெடுமாறனும்,சீமானும் இருக்கினம் .

இனியாவது நிஜ உலகிற்கு வாங்கோ.ஆயுதங்களை மவுனித்தாகாக சப்பை கட்டு கட்டுகின்றோம்.சிங்களவனிடம் தோற்று சரணடைந்தோம் இது தான் உண்மை.தெரிந்த உண்மையே சொல்லாமல் இனியும் வெட்டுவம் கொத்துவம்,பிரட்டுவம் என்று கொண்டு நின்றால் உங்கட பாசையில் உலகமே திரண்டு "காபேஜுக்குள்" அடித்துவிடும்.

மச்சான் நிதர்சனமாக எழுதிவருகின்றார்.கோத்தபாயாவின் கொட்டம் கொஞ்சம் டூ மச்.எம்மவரின் கொட்டம் அது ஒரு காலமும் அடங்காது.

"அடங்கா தமிழா எழுந்து வாடா" அப்படி போடு அரிவாளை என்றானாம்.

முதலில் உங்களை தெளிவுபடுத்திப் போட்டு தமிழர்களை விமர்சிப்பதும் போட்டுத்தாக்குவதும் நன்று.

போராட்ட ஆரம்ப காலத்திலேயே ஊரைவிட்டு ஓடிவந்த உங்களுக்கு தாயகம்.. போராட்டத்தின் வலி.. அர்ப்பணிப்பு விளக்க வாய்ப்பில்லை..! உங்களைப் பொறுத்தவரை இது பொழுதுபோக்கு. கோத்தா கொட்டமடிச்சாலும் உங்களுக்கு சந்தோசம்.. டக்கிளஸ் குனிஞ்சு குத்தினாலும் உங்களுக்கு திருப்தி.. புலி செத்து அழிஞ்சாலும் உங்களுக்கு கவலை இல்லை. இப்படிப்பட்ட ஜென்மங்கள் பலவற்றை எமது இனத்துக்கு சில பெற்றோர்கள் அளித்திருப்பதுதான் வேதனை..!

தானும் வாழாதுகள் மற்றவனையும் வாழ விடாதுகள். தான் கெட்ட வழியில் எல்லோரும் கெட வேண்டும் என்று நினைக்கும் பேர்வழிகளோடு.. கருத்துப் பகிர்ந்து பயனில்லை..! <_<

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.