Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நந்திக்கடலை சீனாவுக்கு வழங்குகிறது சிறிலங்கா

Featured Replies

முல்லைத்தீவின் நந்திக்கடலை சீன நிறுவனம் ஒன்றிடம் மீள்வளர்ப்புத் திட்டத்துக்காக ஒப்படைப்பதற்கு சிறிலங்கா அரசு தயாராகி வருகிறது.

விடுதலைப் புலிகள் இயக்கம் இறுதியாகத் தோற்கடிக்கப்பட்ட நந்திக்கடல் பகுதியில் மீள்வளர்ப்பு மற்றும் மீள்பிடித்திட்டம் ஒன்றில் முதலீடு செய்வதற்கு சீன நிறுவனம் ஒன்று விருப்பம் தெரிவித்துள்ளதாக கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

சீனர்களால் அதிகம் விரும்பி உண்ணப்படும் சீபாஸ் எனப்படும் மீன் இனத்தை நந்திக்கடலில் வளர்க்கவும் அவற்றை பிடித்து ஏற்றுமதி செய்வதற்குமான உரிமைiயை வழங்குமாறு சீன நிறுவனம் ஒன்று சிறலங்கா அரசை அணுகியுள்ளது.

“அவர்கள் எம்முடன் இது பற்றிப் பேச்சு நடத்தினர். விரைவில் தமது திட்ட வரைபுகளுடன் இங்கு வருவார்கள்.

சீபாஸ் மீன் இனம் சீனாவில் பிரபலமானது. நாமும் இங்கு ஏற்றுமதி செய்யக் கூடிய வேறு மீன் இனங்களை வளர்ப்பது குறித்துத் திட்டமிட்டுள்ளோம்.” என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் பொதுமக்கள் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்டு வருகின்ற போதும் அங்கு பாரம்பரியமாக மீன்பிடித் தொழிலை செய்து வந்த எவருக்கும் படைத்தரப்பு மீன்பிடிக்க அனுமதி வழங்கவில்லை.

இந்தநிலையில் சிறிலங்கா அரசு நந்திக்கடல் பகுதியை சீன நிறுவனத்திடம் ஒப்படைத்தால் அங்கு மீன்பிடித்தொழில் செய்து வந்த ஏராளமான குடும்பங்கள் பாதிக்கப்படும் நிலை உருவாகும்.

http://www.puthinappalakai.com/view.php?20100614101309

கேட்க நாதியற்ற தமிழினத்தை நிரந்தர அடிமையாக்க சிங்களவன் சகல வழிகளையும் பாவிக்கின்றான்.

தட்டிக்கேட்கவேண்டிய நாமோ எமக்குள் குத்தி முறிஞ்சு கொண்டிருக்கிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

முதலில நாளொரு கூட்டமும் பொழுதொரு தேர்தலுமாக புலம்பெயர் தேசங்களில் பிரிந்து நின்று காசுபணம் சொகுசு வாழ்கை சம்பாதிக்க நினைக்கும் கூட்டத்தினை விளக்குமாறில .... தோச்சு அடிக்கவேண்டும். எனக்கு இப்ப நினைச்சாலும் வேதனையாக இருக்கின்றது முள்ளிவாய்கால் கொடூரம் நடந்துகொண்டிரந்தபோது நான் வாழகின்ற நாட்டில் நடைபெற்ற கவனவீர்ப்பில் பொதுமக்களுக்குக் கொடுக்கப்படும் துண்டுப்பிரசுரத்தில் செய்திமூலம் லங்கசிறி இணையத்தளம் எனப்போட்ட கனவான்கள்தான் இப்போது போரவை புரட்சி எனும் பெயரில் தேர்தலுகள் நடாத்துகிறார்கள். மற்றது தமிழீழத் தேசியத்தலைவரால் ஈழத்தின் தேசிய சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்ட கார்த்திகைப் பூவினை தேர்த்தல் சின்னமாக நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதிநிதிகள் தேர்வுத் தேர்தலில் பாவித்த கனவான்களை என்ன செய்யறது. இவர்கள் எல்லாரும் புலத்தில் கபளீகரம் செய்யப்படும் தமிழர் வளங்களை பாதுகாக்க ஒற்றுமையாகச் செயற்படுவார்கள் என்பது கிழவி சாமத்தியப்பட்டகதைதான்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியனுக்கும் சீனனுக்கும் சிண்டுமுடிஞ்சு விட சிங்களவனுக்கு கிடைச்ச தளம் தமிழீழம்..!

அழகிய திட்டம். தமிழர் பிரதேசம் மட்டுமல்ல, சிங்களப் பிரதேசமும் சீனனுக்குத்தான். அப்பே இந்தியாவிற்கு ஜூஜூபி. :rolleyes::o

சீனாவுக்கும் இலங்கைக்குமிடையில் 67 புரிந்துனர்வு உடன்படிக்கைகள் நேற்றுக் கைச்சாத்திடப்பட்டுள்ளன:-இந்தியா கவலையில். :rolleyes::o:blink:

http://seithy.com/breifNews.php?newsID=29327&category=TamilNews

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவுக்கும் இலங்கைக்குமிடையில் 67 புரிந்துனர்வு உடன்படிக்கைகள் நேற்றுக் கைச்சாத்திடப்பட்டுள்ளன:-இந்தியா கவலையில்

இன்னும் 60 ஒப்பந்தங்களை இந்தியாவுடன் செய்து கொண்டால் எல்லாம் சரியாகிவிடும்.

வாத்தியார்

.........................

அழகிய திட்டம். தமிழர் பிரதேசம் மட்டுமல்ல, சிங்களப் பிரதேசமும் சீனனுக்குத்தான். அப்பே இந்தியாவிற்கு ஜூஜூபி. :lol::lol:

அப்பே சிறிலங்காவே சீனாவுக்கு அடிமைதான் ..சீனா ,இந்தியா போன்ற நாடுகள் தங்களது மக்களின் மனித உரிமைகளை மீறுபவர்கள் இவர்களுக்கு வால் பிடித்தால் என்ன நடக்கும் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.