Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிள் இல்லாவிடில் கெளரவச் குறைச்சல்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி மோகன்! <_<

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் மோட்டாள் சைக்கிள் வைச்சிருக்கிறது தப்பா.. மோட்டார் சைக்கிளை வியாபார நோக்கத்திற்காக.. பாவிப்பது தவறா..??! மோட்டார் சைக்கிள் கெளரவப் பொருளாக்கப்படுவது குறித்து கருத்துப் பரிமாறப்பட்டாலும்.. யாழ்ப்பாணம் நாளை கார்களால் நிரம்பி வழிவது கூட தவறாகப் பார்க்கப்படும் நிலை வளர்வது சரியல்ல.

யாழ்ப்பாணம் உட்பட தமிழீழத்தில் 35 வருடப் போர் எமது மக்களுக்கு பல தசாப்தங்கள் பிந்திய வாழ்க்கையையே வளர்ந்த நாடுகளோடு மற்றும் தென்னிலங்கை வாழ்க்கையோடு ஒப்பிடும் போது அளித்து வந்துள்ளது.

இப்போ அதில் இருந்து படிப்படியாக மாற்றங்கள் வரும் போது அது இவர்களுக்கு புதிதாக தென்படுவதால் செய்தி ஆகிறதோ என்று படுகிறது.

வியாபாரத்துக்கு மோட்டார் வாகனங்களைப் பாவிப்பதில் உள்ள தவறு என்ன..??! போத்தல் பித்தளை வியாபாரம் செய்பவர் கட்டாயம் சைக்கிளில் தான் போக வேண்டுமா..??! ஏன் அவரும் காலத்திற்கு ஏற்ப வியாபாரப் போட்டிச் சூழலை சமாளிக்க வாகனங்களை பயன்படுத்தக் கூடாது.

யாழ்ப்பாணம் உட்பட தமிழீழத்தின் பகுதிகளின் கட்டுமானம் உட்பட அனைத்துத் துறைகளும் மேற்குலக நாடுகளுக்கு அல்லது சிங்கப்பூர் மலேசியா போன்ற வளர்ச்சியடைந்த ஆசிய நாடுகளுக்கு நிகராக கட்டி எழுப்பப்பட வேண்டும். அதன் போது மக்களின் வாழ்க்கைத் தரமும் உயர்ந்து சென்று கொண்டே தான் இருக்க வேண்டும்.

மேற்குலகில் உள்ள கார்களோடு ஒப்பிடும் போது யாழ்ப்பாணம் மோட்டார் சைக்கிளில் பிந்தங்கி நிற்கிறது என்றுதான் நோக்க வேண்டி உள்ளது.

ஆனால் யாழ்ப்பாணம் தனது சொந்த பொருண்மிய வளத்தைப் பயன்படுத்தி இந்த முன்னேற்றத்தை எட்டுமாக இருந்தால் நிச்சயமாக அதை வரவேற்கவே வேண்டும். அதைவிடுத்து இந்திய சீன சிங்களக் கம்பனிகளுக்கு காசு சேர்க்கும் மையமாக அது இருந்து புலம்பெயர் மக்களிடம் உள்ள பணத்தை அறவிடும் மையமாக இருப்பதே ஆபத்தானதாகும். அதைத் தவிர.. மோட்டார் சைக்கிளில் யுனிக்கு போறது அவை அவையிட தனிப்பட்ட விருப்பம். புலம்பெயர் நாடுகளில் பக்கத்தில் உள்ள கடைக்கும் கார் எடுத்துக் கொண்டு போகினம். அதோடு ஒப்பிடும் போது மோட்டார் சைக்கிள் சூழலுக்கு தரும் பாதிப்பு குறைவு எனலாம்.

எதுஎப்படியோ... யாழ்ப்பாணம் உட்பட போரால் பாதிக்கப்பட்டுள்ள தமிழீழத்தின் வளங்களும்.. பொருண்மியமும் அந்நியரால் திட்டமிட்டு திருடப் பட்டுக் கொண்டிருப்பது தெரியாமல்.. மக்கள் சுரண்டப்பட்டுக் கொண்டு இருப்பது தெரியாமல்.. சுக போகத்தை இரவல் எடுக்கும் புத்தியை தமிழ் மக்கள் கைவிட்டு.. தமது பொருண்மியத்தை தாமே தீர்மானிக்கும் நிலைக்கு முன்னேறி வர வேண்டும். அதுதான் முக்கியம்.

அதுமட்டுமன்றி தமிழீழத்தின் சூற்றுப்புறச் சூழல் மீதான் தாக்கங்கள் அவற்றை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது.. மற்றும் திருடப்படும் முருகைக்கற் பாறைகளால் யாழ் குடா நாடு சந்திக்கக் கூடிய இயற்கை நெருக்கடிகள்... காற்று மாசு.. அதன் கட்டுப்பாடு.. இப்படி இன்னோரென்ன பிரச்சனைகளையும் யாழ்ப்பாண கல்விச் சமூகம் (குறிப்பாக யாழ்பல்கலைக்கழகம் கண்காணிக்க வேண்டும். அதற்கேற்ப ஆய்வுகளைச் செய்து பரிந்துரைகளை செய்ய வேண்டும்.. அதைவிடுத்து வெட்டிக்கு சான்றிதழ் வழங்கும் மையமாக யாழ் பல்கலைக்கழகம் எனியும் செயற்படக் கூடாது.) மற்றும் இதர சம்பந்தப்பட்ட சமூகங்கள் கவனத்தில் எடுத்து ஒருங்கிணைத்து செயற்பட்டு தீர்வுகளை பரிந்துறைகளை செயற்திட்டங்களை மக்களுக்கும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கும் வழங்க வேண்டும்.

Edited by nedukkalapoovan

ஊரில் இருக்கும் பெரும்பாலானோருக்கு பணத்தின் அருமை தெரிவதில்லை, வெளிநாடுகளிலிருந்து பிள்ளைகள், உறவினர்கள் எப்படி கஷ்டப் பட்டு சம்பாதிக்கிறார்கள் என்றும் புரிந்தது கொள்ள விருப்பப் படுவதும் இல்லை. ஒரு sms அல்லது ஒரு phone call அதுவும் காலங்காத்தால நாலு மணிக்கு வரும். :wub: அரை குறை நித்திரத் தூக்கத்தில 'ஓம்' என்று சொல்லி போட்டு விடிஞ்சாப் பிறகு கனவில யாரோ காசு கேட்டது மாதிரி இருக்கே என்று யோசிக்க தான் உண்மை தெரியும் :huh: யாரைச் சொல்லி நோகிறது?? <_<

இணைப்புக்கு நன்றி மோகன் அண்ணா.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கருத்துப் பகிர்வை இணைத்தமைக்கு மோகன் அண்ணாவுக்கு மிகவும் நன்றிகள்.

பெரும் பாலும் இப்படியான கருத்துப் பகர்வு நிகழ்வுகளுக்கோ மற்றும் சில அரசியல் சார்ந்த விடயங்களுக்கோ எனது கருத்தை முன் வைப்பதில்லை...காரணம் என் கருத்துக்களை மட்டுமார் வெட்டி விட்டால் நான் நேரம் எடுத்து எழுதியதை வெட்டி விட்டார்களே என்று கவலைப் படவேண்டி வரும் எண்டு விட்டு தான் சின்ன,சின்ன விமர்சனங்களோடு நிறுத்திக் கொள்வேன்..ஆனால் இன்றைய இந்த கருத்துப் பகிர்வின் தலைப்பு என்னை எழுத வைத்துள்ளது..

யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கில் இல்லாது விட்டால் கொளரவக் குறைச்சல். :huh:

உண்மை தான் இது இன்று நேற்று புளக்கத்துக்கு வந்த விடயம் இல்லை..இற்றைக்கு 3,4 ஆண்டுகளுக்கு முன்னமே யாழில் அனேகமானவரின் வீடுகளில் மோட்டார் வண்டியும்,கைத் தொலைபேசியும் இல்லாத வீடுகளே இல்லை எண்டு சொல்லலாம்.அதற்கு எல்லாம் வளி சமைத்துக் கொடுப்பவர்கள் வெளி நாடுகளில் இருக்கும் டபிள்,றிபிள் வேலை செய்து தங்கள் இரத்தத்தை பணமாய் அனுப்புவர்கள் தான்..அதற்கும் மேலாய் அரசாங்க உதவி பெறும் வயதானவர்கள்.எங்கள் நாடு முன்னேறத் தான் வேண்டும்,மக்கள் முன்றேத்த தான் வேண்டு.ஆனால் தங்கள் சுய உளைப்பில் எதையும் பூர்த்தி செய்யாமல்..அங்கு வாழும் அனேகமானவர்களின் சுய உளைப்புக்கள் வங்கயில் பத்திரமாக வைப்பில் இடப்பட்டு இருக்கும்.சகோதரங்கள் அனுப்புவார்கள்,மாமி அனுப்புவா,வயதான அப்பம்மா அனுப்புவா.. எண்டே ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு தேவைகளை சொல்லி,சொல்லியே பணம் கறக்கும் வேலையும் அங்கு நடக்கிறது..இப்படியானவர்களினாலயே எத்தனை ஆண்கள், பெண்கள் புலம் பெயர்ந்த நாட்டில் தங்கள் குடும்ப சந்தோசத்தை இளந்திருக்கிறார்கள்,குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்கிறார்கள்.ஏன் திருமண வயது கடந்தும் தங்களுக்கு எண்டு ஒரு வாழ்க்கைத் துணையைக் கூடு தேடிக் கொள்ளாமல் எத்தனை பேர் இருக்கிறார்கள்..? <_<

இங்கே இன்னுமொரு விடயத்தையும் சொல்ல விரும்பிறன்..தன்னிச்சையாக சம்பாதித்தித்து சீவியத்தை நடத்தும் ஒரு தொளிளாளிக்கு கண்டிப்பாக மோட்டார் வண்டியோ இல்லை கைத்தொலை பேசியோ அவசியமானது தான்.அப்படியானவர்களுக்கு கண்டிபாக யாரும் உதவி செய்யத் தான் வேண்டும்.ஆனால் வெளிநாட்டுப் பணத்தில் நடப்புக் காட்டிக் கொண்டு திரிபவர்களுக்கோ..இல்லை தாங்கள் ஒருவரை விரும்பி விட்டு..அவர் 25 லட்சம் தந்தால் தான் திருமணம் செய்வாராம் எண்டு பொய் பிரச்சாரம் செய்து பணம் கேட்பவர்களுக்கு உதவ வேண்டுமா..?இல்லை அவர்கள் பணம் தரச்சொல்லி மிரட்டுகிறார்கள்,இவர்கள் பணம் தரச்சொல்லி மிரட்டுகிறார்கள் எண்டு பொய்க்கு மேல் பொய்யை சொல்லி,சொல்லி பணம் கேட்பவர்களுக்கு உதவ வெண்டுமா?இப்படி நிறையவே நமது தாய் நாட்டில் வெளி நாட்டு பணத்தில் சுகம் அனுபவிப்பவர்களைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.. :wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மோட்டார் சைக்கிள் வைத்து இருப்பதில் என்ன கெளரவம் வந்து விட போகிறது, இங்கே மூன்று நிமிடத்துக்கு ஒரு பஸ் இருக்கிறது, ஜந்து நிமிடத்துக்கு ஒரு மின்சார ரயில் இருக்கிறது, இவ்வளவு இருந்தும் நீங்கள் வேலைக்கு காரில்தான் போவீர்கள், அங்கே சந்தைக்கு போக, படசாலை போக எவ்வளவு நேரம் காத்து இருக்கவேண்டும், வாறபஸ்சில் இடம்கிடைக்காவிட்டால் பிந்திப்போய் வாத்திமாரிட்டை பேச்சு வாங்கியது உங்களது நினைவில் இல்லையா? இங்கே காரில்லாத வீடு இல்லை, மோட்டர் சைக்கிள் காரனுக்கு நக்கல், நடந்து போன காலத்தில் சைக்கிளில போகிறவைவையை பாத்து அவற்ற எடுப்பை பார் என்று விடுப்பு சொன்ன கூட்டம். விரைவில் மாறாது, அங்கிருக்கும் போது விமானத்தில் போவது ஒரு கனவு, இங்கு விமானத்தில் பத்து மணித்தியாலம் குந்தி இருப்பது எரிச்சல், விமானம் என்பது ஒரு போக்கு வரத்து வாகனம் மட்டுமே, அது போல மோட்டார் சைக்கிளும் ஒரு போக்கு வரத்து வகனம் மட்டுமே. ஊசியை சட்டையை குத்த மட்டும் பயன் படுத்துங்கள் அதை விடுத்து பல்லை குத்த முறபட்டால் முரசு புண்ணாகிவிம், அதை அதை அந்த பொருட்களாக பார்க்க பழகுங்கள், மின்சார ரயில் வர எம் சனம் இன்னமும் எவ்வளவு காலம் காத்திருக்க வோண்டுமோ தெரியாது அதற்குள் அவர்கள் ஆயுளும் முடிந்து விடும், கிடைப்பதை அனுபவிக்க விடுங்கள் அவர்களும் மனிதர்கள்தானே.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை நாணயப்படி ஒரு லட்சம் ரூபா கொடுத்து ஒரு ஆடு வாங்கி வெட்டி வேள்வி என்ற பெயரில் மக்களை முட்டளாக்கும் மனிதர்கள் வாழும் யாழ்ப்பாணத்தில் மோட்டார் வண்டி வேண்டும் என்று கேட்ட அந்த மாணவி பரவாயில்லை.

மக்களை முட்டாளாக்கி உயிர்ப்பலி கொடுக்கும் நாகரீகமற்ற மனிதர்கள் இங்கு கண்டிக்கப்பட வேண்டியவர்கள்.

வாத்தியார்

.............................

இலங்கை நாணயப்படி ஒரு லட்சம் ரூபா கொடுத்து ஒரு ஆடு வாங்கி வெட்டி வேள்வி என்ற பெயரில் மக்களை முட்டளாக்கும் மனிதர்கள் வாழும் யாழ்ப்பாணத்தில் மோட்டார் வண்டி வேண்டும் என்று கேட்ட அந்த மாணவி பரவாயில்லை.

மக்களை முட்டாளாக்கி உயிர்ப்பலி கொடுக்கும் நாகரீகமற்ற மனிதர்கள் இங்கு கண்டிக்கப்பட வேண்டியவர்கள்.

வாத்தியார்

.............................

ஒரு ஆடு ஒரு லட்சமா? :lol::lol: சீதனமா 10 ஆடுகள் குடுக்கலாம் போல இருக்கே அங்கு உள்ளவர்களுக்கு :D:lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.