Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்களின் 3 கார்கள் எரிப்பு:தொடரும் இனவெறி தாக்குதல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்களின் 3 கார்கள் எரிப்பு:தொடரும் இனவெறி தாக்குதல்

வியாழக்கிழமை, ஜூலை 15, 2010, 11:29[iST]

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்களுக்கு சொந்தமான 3 கார்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தாக்கப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தாக்கப்பட்டனர், கொலை செய்யப்பட்டனர் என்பது போன்ற செய்தி செய்தித் தாள்களில் அடிக்கடி வருகின்றது.

இந்நிலையில் அடிலெய்டு நகரில் உள்ள குடியிருப்புப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இந்திய மாணவர்களின் 3 கார்களுக்கு ஆஸ்திரேலிய இளைஞர்கள் தீ வைத்துள்ளனர்.

இது குறித்து இந்திய மாணவர் யாசிப் முல்தானி கூறியதாவது:

நேற்று அதிகாலையில் நாங்கள் தங்கியிருக்கும் குடியிருப்புப் பகுதிக்கு சுமார் 15 ஆஸ்திரேலிய இளைஞர்கள் பைக்குகளில் வந்தனர். அவர்கள் எங்கள் 3 கார்களை அடையாளம் கண்டுகொண்டு அடித்து நொறுக்கிவிட்டு, கார்களின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி தீ வைத்து விட்டுச் சென்றனர்.

எங்களின் தங்குமிடம் மற்றும் வாகனங்களை தெரிந்து கொண்டு வேண்டுமென்றே தான் தீ வைத்துள்ளனர்.

இது மட்டுமின்றி எங்களுக்கு வரும் கடிதங்களை திருடுவதும், இனவெறி வாசகங்கள் மற்றும் படங்களை வீட்டு வெளிச்சுவரில் வரைவதும் என எங்களுக்கு பல தொல்லைகளை கொடுத்து வருகின்றனர் என்று அவர் கூறினார்.

கடந்த 3 மாதங்களில் இந்திய மாணவர்களின் 12 வாகனங்கள் தாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்ஸ்தமிழ்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியர்களினால் காப்புறுதிக்காக நடாத்திய பல சம்பவங்களில் இதுவும் இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்களின் கார்கள் எரிப்பு

மெல்போர்ன், ஜூலை 14: ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்களின் 3 கார்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் இனவெறித் தாக்குதலுக்கு உள்ளாவது தொடர்கதையாகி வருகிறது. ஒவ்வொரு நாளும் வெவ்வேறு முறையில் ஆஸ்திரேலிய இளைஞர்களால் இந்திய மாணவர்கள் தாக்கப்படுவது, துன்புறுத்தப்படுவது போன்ற கொடுமைகளுக்கு உள்ளாகின்றனர்.

இந்நிலையில் அடிலெய்டு நகரில் புதன்கிழமை அதிகாலையில் இந்திய மாணவர்களுக்குச் சொந்தமான 3 கார்களை ஆஸ்திரேலிய இளைஞர்கள் தீ வைத்து எரித்துள்ளனர்.

இது குறித்து இந்திய மாணவர் யாசிப் முல்தானி கூறியது: அதிகாலை நேரத்தில் எங்கள் குடியிருப்புப் பகுதிக்கு பைக்குகளில் வந்த சுமார் 15 ஆஸ்திரேலிய இளைஞர்கள், எங்களது மூன்று கார்களை அடித்து நொறுக்கினர். பின்னர் பெட்ரோல் குண்டுகளை வீசி கார்களுக்குத் தீ வைத்து விட்டுச் சென்றனர்.

நாங்கள் எங்கு தங்கியிருக்கிறோம், எங்களது வாகனங்கள் எவை என்பதை அறிந்து திட்டமிட்டு எங்கள் கார்களை மட்டும் எரித்துள்ளனர்.

எங்களுக்கு வரும் கடிதங்களை வீட்டுவாசலில் உள்ள பெட்டியில் இருந்து திருடிச் செல்வது, இனவெறி வாசகங்கள், படங்களை வீட்டு வெளிச்சுவரில் வரைவது என எங்களுக்கு பல விதங்களில் தொல்லை கொடுத்து வருகின்றனர் என்றார் அவர். கடந்த 3 மாதங்களில் இந்திய மாணவர்களில் 12 வாகனங்கள் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=World&artid=272281&SectionID=131&MainSectionID=131&SEO=&Title=ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்களின் கார்கள் எரிப்பு

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மகிழுந்துகளை இந்தியர்கள் விற்கப்பாத்திருப்பார்கள். ஒருவரும் வாங்காததினால் தாங்களே எறித்து விட்டு வெள்ளைக்காரர்கள் எறிந்ததாக சொல்லி காப்புறுதிப்பணத்துக்காக நாடகம் ஆடினாலும் ஆடியிருப்பார்கள். அவுஸ்திரெலியாவில் நடைபெற்ற இந்திய மாணவர்களின் தாக்குதல்களில் பல அவர்களுக்கு இடையே உள்ள கள்ளத்தொடர்பு, காப்புறுதிப்பண மோசடி என்பவற்றுக்காக நடாத்தப்படும் நாடங்களும் அடிபிடிகளும் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

:lol: கறுப்பி,

நீங்கள் அவுஸ்த்திரேலியா என்றால் என்னவென்றே தெரியாத மக்கள் வாழும் இந்தியாபோன்ற நாடுகளின் ஊடகங்களை மேற்கோள்காட்டி இங்கே இணைக்கிறீர்கள். இங்கு நடக்கும் இந்தியக் கொலைகள், வாகன எரிப்புச் சம்பவங்களில் 99 வீதமானவை இந்தியர்களாளேயே நடைபெறுகின்றன. தற்போதும் பலர் சிறையில் இருக்கின்றனர். ஆனால் உண்மை திரிக்கப்பட்டு இந்தியாவிலே பத்திரிக்கைச் செய்தியாக வரும்போது அவுஸ்த்திரேலியர்கள்தான் இதைச் செய்தார்கள் என்று புலம்பப்படுகிறது. அதை நீங்களும் இணைக்கிறீர்கள்.

உருவ அமைப்பில் எமக்கும் இந்தியர்களுக்கும் அவ்வளவு வேறுபாடு கிடையாது. ஆனால் இந்த 20 வருட காலப்பகுதியில் ஒரு தமிழராவது அவுஸ்த்திரேலியர்களால் தாக்கப்பட்டதாக செய்தியில்லை. ஆனால் இந்தியர்கள் மட்டும் ஒவ்வொரு தாக்கப்படுகிறார்களா?? அது எப்படி?? கேட்பவன் கே...என்றால் எருமைமாடும் ஏரோப்ளேன் ஓட்டுமாம் !!!

நான் கேள்விப்பட்ட பழைய செய்தி. ஒரு இந்திய நபர் தன் காருக்கே தீ மூட்டி விட்டு "insurance " காசை எடுக்க முயற்சித்தார். அது சந்தேகம் இன்றி நிரூபிக்கப்பட்டது.

அப்படி இங்கு இனவெறி என்றால் இந்தியாவிற்கே திரும்பிப போவதுதானே? இந்தியர்களில் தமிழர் தவிர யாவரும் மோசமானவர்களே !

Edited by கறுவல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.