Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென்னிந்திய ஊடகங்களின் திடீர் கரிசனை

Featured Replies

நீங்கள் தொடர்ச்சியாக தெனிந்திய ஊடகங்களை வாசிப்பவராயின், திடீரென்று இவர்கள் எமக்கு ஆதரவு போல் இப்ப எழுதுறாங்கள் என்பதைக் கவனித்து இருப்பீர்கள். எனக்கு என்னவோ "ரா" எங்களை திரும்ப முட்டாள் ஆக்க முயற்சிக்கிறாங்கள் போல இருக்கு.

நீங்கள் இது பற்றி என்ன நினைக்கிறீங்கள்?

எம்மக்களுக்கு அநியாயம் மிக அளவில் செய்தது இந்தியாதான் என்பது என் அபிப்பிராயம். சிங்களவங்கள் கூட இந்த "naa1kaLu88u " சற்று குறைவாகத்தான் அநியாயம் செய்தாங்கள்.

Edited by karuval

சிங்களவனுக்கு இலங்கை முழுவதும் சிங்கள மயமாக்க வேண்டும் என்ற கொள்கை.......

இந்தியாகாரனுக்கு சிறிலன்காவை தன்னுடைய மாநில மாக்க வேன்டும் என்ற கொள்கை.....

இதில நாங்கள் விரும்பியதை.................எப்படி ????????????

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள ரத்னா யாருக்கு? கடும் போட்டி - கள நிலவரம்

கடும்போட்டி நிலவுகிறது இந்த முறை, தினமலர், தினமணி, துக்ளக், இந்தியா டுடே இவைகளுக்கிடையே.

வழக்கம் போல் இந்த ஆண்டுக்கான சிங்களரத்னா விருதுகள் அறிவிக்கப்படவிருக்கின்றன. சிங்கள அரசுக்கு சிறந்த சேவை செய்வோருக்குக் கொடுக்கப்படும் இவ்விருதில் தமிழ்நாட்டுப் பத்திரிக்-(அல்ல) கைகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கென சிறப்புப் பிரிவு இருப்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

அந்த அடிப்படையில்விருதுக்குத் தகுதியானோர் பட்டியலில் எண்ணற்றோர் இடம்பெற்று இருந்தாலும், இறுதிப் பட்டியலில் மிக முக்கியமானவர்-களுக்கிடையே கடும்போட்டி நிலவுகிறது.

முன்பு பிரபாகரன் சுற்றிவளைப்பு என்றெல்லாம் அட்டைப் படத்தில் செய்திபோட்டு, போட்டிக்குத் தன்னைத் தகுதிப்படுத்திக் கொண்டாலும் இந்தியா எஸ்டர்டே பத்திரிகையால் இறுதிப் பட்டியலுக்குள் நுழைய முடியவில்லை என்று எமது கொழும்(ப்)பு நிருபர் தெரிவிக்கிறார். இதே போல் சில்கி, சீனியர் பகடன் உள்ளிட்ட பத்திரிகைகளும் தொடக்கப் பட்டியலில் இருந்தாலும், போட்டியின் கடுமையினால் தொடர்ந்து முன்னேற முடியவில்லை.

தினமலம்: நீண்ட காலமாகவே இப்பணியைத் திறம்பட ஆற்றிவரும் இப்பத்திரிக்கை தனித்தன்மை வாய்ந்தது. பிரபாகரன் இறந்து விட்டார்; இதோ கருமாதி; இன்று காரியம் என்று செய்தி வெளியிட்டு தனது உணர்வைக் காட்டிய பெருமை இப்பத்திரிகைக்கு உண்டு. ஒருமுறை மட்டுமல்ல; இறந்துவிட்டார் என்று தான் வெளியிட்ட செய்திக்கு மறுப்போ, மன்னிப்போ தெரிவிக்காமல், தன்னால் சாகடிக்கப்பட்ட பின்பு மீண்டும் ஒருமுறை பிரபாகரன் இறந்துவிட்டதாகச் செய்தி வெளியிட்ட சிறப்புக்குரியது. தொடர்ந்து தமிழ் இளிச்சவாயர்களிடம் சந்துமணி, பொந்துமணி என்ற பெயர்களில் தமிழின எதிர்ப்புணர்வை ஊட்டி அரிய செயல் செய்துவரும் பாரம்பரியமிக்க பத்திரிகை ஆகும். சிங்கள ஆதரவு என்றில்லாமல் இருப்பினும், தமிழ் எதிர்ப்பு என்ற உணர்வில் ஒன்றியுள்ள இப்பத்திரிகை இவ்விருதுப்பட்டியலில் கடும் போட்டியைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திணபிணி: ஆங்கிலம் மற்றும் தமிழில் வெளிவரும் இந்தக் குழுமத்தின் பத்திரிகைகள் வெளியிடும் கருத்துக்கணிப்பில் சில சமயம் உண்மை வெளிப்பட்டு சிங்கள அரசுக்கு சங்கடம் ஏற்பட்டாலும், இதன் உள்ளக் கருத்தை கட்டுரைகளிலும், தலையங்கங்களிலும் காணலாம்.

திக்முக் மற்றும் திருவாளர் சீ: தன்னியல்பாகவே திக்முக்கில் வெளிவரும் செய்திகள் சிங்கள அரசுக்கு ஆதரவாக உள்ளதோ இல்லையோ தமிழருக்கு எதிராகவே இருக்கும். நடுச்சென்டர் பத்திரிகை என்று பெயரெடுத்திருக்கும் இதன் ஆசிரியர் திருவாளர் சீ அவர்களுக்கும் தனிப்பட்ட முறையில் விருதுதர நிறைய பரிந்துரைகள் வந்திருக்கின்றன. இதுபற்றி அவரிடம் கருத்துக் கேட்டபோது, தொண்டையைச் செருமி மைக்-கின் சென்சிட்டிவிட்டியைப் பதம் பார்த்த அவர் தெரிவித்ததாவது: எனக்கு விருது கிடைக்க வேண்டும் என்பதற்காக நான் இவ்வாறு எழுதுவதாக யாராவது நினைத்தால் அதற்கு நான் பொறுப்பாக முடியாது. ஏனெனில் எந்த விருதுக்கும், பதவிக்கும் நான் எப்போதும் ஆசைப்பட்டது கிடையாது. நான் அவ்வாறு எழுதுவதாலேயே எனக்கு விருது கிடைக்கும் என்று யாரும் எண்ணிவிட முடியாது. நான் எவ்வாறு எழுதினாலும் அவ்வாறு எழுதுவதை மாற்றமுடியாது. எந்த விருது கிடைத்தாலும், அதற்காக நான் அவ்வாறு எழுத முடியாது. உண்மையில் நான் எனக்குத் தோன்றிய உண்மைகளையே எழுதுகிறேன். எனக்குத் தோன்றியவையெல்லாம் உண்மையாக இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது என்ற போதும் அவை உண்மை என்பதை மக்கள் நம்புகிறார்கள். எனவே அந்த உண்மைகளை நான் எவ்வாறு எழுதினாலும், அவ்வாறு அதை எழுது-வதற்கு யாரும்...... இவ்வாறு அவர் மண்டையைத் தடவியபடி பேசிக் கொண்டிருக்கும் போதே பாதியில் மைக்கைப் பிடுங்கிக் கொண்டு வந்து விட்ட நிருபர் இச்செய்தியை எவ்வாறு எழுதுவது என்ற குழப்பத்தில் இருப்பதாகத் தெரிகிறது. ஏற்கெனவே எண்ணற்ற அமைச்சர்கள் வைத்திருக்கும் சிங்கள அதிபர், திருவாளர் சீ அவர்களின் இந்தக் கருத்தைப் புரிந்து-கொண்டு பரிந்துரைக்க புதிய அமைச்சர் ஒருவரை நியமிக்கலாம் என்ற கருத்தில் இருப்பதாகத் தெரிகிறது.

தனிநபர் விருதுகள்: தனிநபருக்கான விருதுப்-பட்டியலில் நீண்டகாலமாக க்யூவில் நிற்கும் ஊரோடு, உளறுவாயன்; தகரபாலு ஆகியோரை முந்திக்-கொண்டு பூனசேகரன் தனது நாவன்மையால் முன்னணியில் நிற்கிறார். கொடுத்த காசுக்கு மேல கூவுறாண்டா ங்கொய்யா என்று ஒரு கருத்து சிங்கள அரசிடம் நிலவினாலும் புதுக்கத்தி வேகமாய்ச் ..... செயலாற்றும் என்ற கருத்தையொட்டி இவருக்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இவருக்கும் போட்டியாக இப்பட்டியலில் வழியை அடைத்து நிற்கும் ஆர்ப்பாட்ட தி.மு.க.வின் தலைமை, தனக்கு விருது கிடைக்காவிட்டால் சிங்கள அரசை எதிர்த்து விருது நகரில் பிரம்மாண்ட ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருப்-பதாக வந்த செய்தியினாலும், தனிநபர் உளவாளி-யான பணந்தா கட்சியின் தலைவரும், ஒரே தொண்டருமாகிய சூனாசாமி தனக்கு விருது கிடைக்காவிட்டால், வேகா மண்டல வெளிகிரகவா-சிகளுக்கும் ராஜபக்க்ஷேவுக்கும் உள்ள ராஜீய உறவு-களை வெளிப்படுத்தும் ஆதாரம் கிடைத்துள்ளதாக அளிக்கவுள்ள அதிரடி அறிக்கையாலும் நெருக்கடி எழுந்துள்ளது.

தினமுரண்: பத்திரிகைகள் பிரிவில் புதிதாக சிங்கள ஆதரவு நிலை எடுத்திருந்தாலும், பத்திரிகை, தொலைக்காட்சி எனப் பல தளங்களிலும் சிங்கள அரசுச் செய்திகளை ரூபவாஹிணிக்கு நிகராக வெளியிட்டு வருவதாலும் தினமுரண் குழுமத்துக்கு வாய்ப்புகள் சூரிய பிரகாசமாக உள்ளன. ஆனாலும், இந்த ஆதரவுக்குரல் விரைவில் சிங்களத்தில் ஒரு சேனல் ஆரம்பிக்க போடப்படும் அடித்தளமோ என்ற அச்சம் உள்ளூர நிலவுவதாகத் தெரிகிறது. ஆனாலும் முன்னாள் சிங்கள ரத்னாவான கிண்டுபாம் அவர்களின் பரிந்துரை இவர்களுக்கு விருது கிடைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.

நன்றி : - பவானந்தி்

சோர்ஸ்: உண்மைஆன்லைன்

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

தினமுரண் தினபிணி, திக்முக் ச்சீ, தினமலம் நல்ல கற்பனை வளம் :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.