Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழினப் படுகொலைக்கு காரணமானவர்கள் சர்வதேச நீதிமன்றத்தின் மூலம் தண்டிக்கப்பட வேண்டும் ‐ அசின் இனி தமிழ் படங்களில் நடிக்க முடியாது‐

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினப் படுகொலைக்கு காரணமானவர்கள் சர்வதேச நீதிமன்றத்தின் மூலம் தண்டிக்கப்பட வேண்டும் ‐ அசின் இனி தமிழ் படங்களில் நடிக்க முடியாது‐

25 July 10 12:35 pm (BST)

இலங்கையில் தமிழ் இன படுகொலைக்கு காரணமானவர்களை சர்வதேச நீதிமன்றத்தின் மூலம் தகுந்த நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்க வேண்டும்.என்றும் இலங்கை சென்ற அசின் இனி தமிழ் படங்களில் நடிக்க முடியாது என்றும் நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற பட்டது

ராதாரவி பேசியதாவது:‐ இலங்கைக்கு நடிகர்‐ நடிகைகள் செல்லக்கூடாது என்று திரைப்பட சங்கங்கள் முடிவு செய்து அறிவித்துள்ளன. அதை மீறி அசின் இலங்கை சென்றிருக்கிறார். அவர் கேரளாவை சேர்ந்தவர். எல்லோருக்கும் இன உணர்வு வேண்டும். அசின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டது. ஆனால் அதை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று சங்கத்தின் தலைவர் சரத்குமார் கேட்டுக் கொண்டார். அதற்காக அசின் இதுவரை சரத்குமாரிடம் தொடர்பு கொண்டு ஒரு நன்றி கூட தெரிவிக்கவில்லை.

இலங்கை சென்றதற்காக அசின் நடிகர் சங்கத்தில் நேரில் ஆஜராகி வருத்தம் தெரிவித்து கடிதம் கொடுக்க வேண்டும். அப்போது தான் அவர் மீதான நடவடிக்கை மறு பரிசெலனை செய்ய முடியும் இல்லா விட்டால் தமிழ் நடிகர்கள் இனி மேல் அசினுடன் நடிக்க மாட்டார்கள் தமிழ் தயாரிப்பாளர்கள் அவரை வைத்து படம் எடுக்க மாட்டார்கள். இனிமேல் இலங்கைக்கு நடிகர்‐நடிகைகள் யார் செல்வதாக இருந்தாலும் நடிகர் சங்கத்தில் சொல்லி விட்டுத்தான் செல்ல வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

சத்யராஜ் பேசிய தாவது:‐ அசின் இலங்கை சென்றது மட்டுமின்றி ராஜபக்சே மனைவியுடன் சேர்ந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார். அதை பார்த்த போது ரத்தம் கொதித்தது. ரத்தக் கண்ணீர் வடிந்தது. இலங்கை என்பது ரத்த பூமி. அங்கு நடிகர்‐நடிகைகள் செல்லக் கூடாது. நடிகர் கருணாஸ் இலங்கையில் முருகன் கோவிலுக்கு செல்ல முடிவு செய்திருப்பதாக கூறியுள்ளார். கருணாசை நான் கேட்டுக் கொள்கிறேன். தயவு செய்து நீங்கள் இலங்கை செல்ல வேண்டாம். அங்கு தனித்தமிழ் ஈழம் மலர்ந்த பிறகு நீங்கள் போகலாம். நானும் வருகிறேன். நான் ஒரு நாத்திகனாக இருந்தாலும் தமிழ் ஈழநாடு உருவான பிறகு அங்குள்ள கோவிலுக்கு செல்ல தயாராக இருக்கிறேன்.

இலங்கை சென்று தான் சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்க வேண்டாம் அப்படி ஒரு நிலை வந்தால் உயிரையே விடலாம்.

நம் தமிழர் இயக்கத்தினர் நடிகர் கருணாஸ் இலங்கை செல்ல கூடாது என்று கொலை மிரட்டல் விடுத்தது உள்ளதாக புகர் கொடுத்து உள்ளார் . எனக்கு அவர்களை பற்றி தெரியும் அவர்கள் கொலை மிரட்டல் விடுக்க வில்லை உணர்வு உள்ள தமிழர்கள் உங்களுக்கு விடுத்தது உள்ள வேண்டுகோள எனவே இலங்கை செல்வதை கருணாஸ் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று சத்யராஜ் கேட்டு கொண்டார்.

பொதுக் குழுவில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:‐

* இலங்கையில் தமிழ் இன படுகொலைக்கு காரணமானவர்களை சர்வதேச நீதிமன்றத்தின் மூலம் தகுந்த நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்க வேண்டும்.

* இலங்கையில் நடை பெற்ற அனைத்து நிகழ்வு களையும் நாம் அறிவோம். தற்போது அங்குள்ள நம் தமிழர்களின் நிலையையும் அறிவோம். அவர்களின் பிரச்சினைகள் தீர மறு வாழ்வு திட்டத்திற்கு நம்மா லான உதவிகளை மனப்பூர் வமாகவும்இ பொருள் ரீதியாகவும் செய்து வருகிறோம்.

ஆயினும் சமீப காலமாக நம் கலைஞர்கள் தொழில் ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் இலங்கை செல்வதை தனிப்பட்ட ஒரு சிலர் விமர்சிப்பதும் பத்திரிகை வாயிலாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று குரல் கொடுப்பதையும் தனிப்பட்ட முறையில் மிரட்டுவதையும் நடிகர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.

எங்களது கலையுலகை சேர்ந்தவர்கள் தொழில் ரீதியாகவும், வர்த்தக ரீதியாக வும், தனிப்பட்ட முறையிலோ இலங்கை செல்லலாமா, வேண்டாமா என்கிற முடிவை கலையுலகை சார்ந்த அனைத்து அமைப்புகள் கொண்ட கூட்டு கலந்தாய்வு குழுவே முடிவெடுக்கும். நடிகர் சங்க உறுப்பினர்கள் அதன் முடிவுக்கு கட்டுப்பட்டு செயல்படுவார்கள்.

* திரைப்படங்களில் பணிபுரியும் எங்கள் உறுப்பினர்கள் பெரும் தொழிலாளர்களை திரைப்படத்தின் வர்த்தகத்தில் ஏற்படும் லாப நஷ்டங்களுக்கு நடிகர்கள் பொறுப்பல்ல. திரைப்பட வர்த்தகத்தை சார்ந்தவர்கள் லாப நஷ்டங்களுக்கு எங்கள் உறுப்பினர்களை பொறுப்பாக்க முடியாது. அவர்களிடம் நஷ்டஈடு கேட்க முடியாது.

* திரைப்பட வர்த்தக சபை, தயாரிப்பாளர் சங்கம் ஆகிய அமைப்புகளுடன் நடிகர் சங்கம் போட்டுள்ள ஒப்பந்தத்தின்படி நடிகர் சங்கத்தில் உறுப்பினரான பிறகே தமிழ் திரைப் படங்களில் நடிக்க முடியும். உறுப்பினர்கள் ஆகாத நடிகர்கள் ஆகஸ்டு 15‐ந்தேதிக்குள் உறுப்பிர்கள் ஆக வேண்டும். இல்லையெனில் உறுப்பினர் அல்லாத கலை ஞர்களுடன் நமது உறுப் பினர்கள் பணி புரிய மாட்டார்கள்.

* இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு புனர் வாழ்வு பணிகள் தாமதமாக நடக்கிறது. அவதிப்படும் எங்கள் சகோதரஇ சகோதரியான இலங்கை தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்க துரித நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளை பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

* நடிகர்கள், தொழி லாளர்களுக்காக நல வாரியம் அமைக்கப்படும் என்று அறிவித்து நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு வீடுகட்டிக் கொள்ள நிலம் ஒதுக்க கொள்கை அளவில் அரசாணை வழங்கிய முதல்‐ அமைச்சர் கருணாநிதிக்கு பொதுக்குழு பாராட்டும்இ வாழ்த்தும் தெரிவித்து கொள்கிறது.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

http://globaltamilnews.net/tamil_news1.php?nid=27675&cat=1

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவனிடம் காசுக்காக பிசினாய் ஒட்டியவளும்...சிங்கள ரத்தம் ஓடுபவளும் அவளுடன் ஒட்டி உறவாடுபவ்னும் சேர்ந்து நடித்த நாடகம்தான் இது...இந்தக்கூட்டத்துக்கு 50 சத நாடக cட் விலைபோவதே சிரமம்..மற்ற நடிகர்களை குளப்பி அவர்கள் வாயில் மண் போடுவதே திட்டம்...இதை மற்ற்வர் உணர்ந்து செயற்பட்டால் சரி....புலம்பெயர் தமிழர் சோணயர் அல்ல் என்பதை ராதிகா சரத்குமார் சூரியா போன்றவர்களுக்கு சொல்ல விரும்புகிறோம்...

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவனிடம் காசுக்காக பிசினாய் ஒட்டியவளும்...சிங்கள ரத்தம் ஓடுபவளும் அவளுடன் ஒட்டி உறவாடுபவ்னும் சேர்ந்து நடித்த நாடகம்தான் இது...இந்தக்கூட்டத்துக்கு 50 சத நாடக cட் விலைபோவதே சிரமம்..மற்ற நடிகர்களை குளப்பி அவர்கள் வாயில் மண் போடுவதே திட்டம்...இதை மற்ற்வர் உணர்ந்து செயற்பட்டால் சரி....புலம்பெயர் தமிழர் சோணயர் அல்ல் என்பதை ராதிகா சரத்குமார் சூரியா போன்றவர்களுக்கு சொல்ல விரும்புகிறோம்...

புலம்பெயர்ந்த தமிழர்கள் பலரை வைத்து கருத்துச் சொன்னால் ஏமாற்றம் அடைவீர்கள். சிங்களதேசத்து பொருட்களை புறக்கணியுங்கள் என்று சொல்லிப் போட்டு சிறிலங்கன் எயர்லைன்சில் பிரயாணம் செய்கிறார்கள். அவர்களது வீட்டில் இருப்பது சிறிலங்கன் டில்மா தேநீர், நெக்டோ. தமிழினப்படுகொலைக்கு துணை செய்த காங்கிரசு அரசின் கூட்டணியில் இருக்கும் திமுக அரசின் தொலைக்காட்சிகளான சன், கலைஞர் தொலைக்காட்சிகளில் 2009 இன அழிப்பு நடைபெற்றபோது தமிழர்களின் அவலங்கள் புறக்கணிக்கப்பட்டு சிங்களத்தின் பொய்யான செய்திகள் தான் வந்தது. ஆனால் இத்தொலைக்காட்சிகளை இன்னும் புலம் பெயர்ந்த நாடுகளில் இருக்கும் ஈழத்தமிழர்களில் பலர் காசு கொடுத்துப் பார்க்கிறார்கள். இந்த சூடு சுறணையற்ற தமிழர்களை வைத்துக் கொண்டு கருத்து எழுதினால் நாங்கள் ஏமாற்றப்படுவோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.