Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இனப்பிரச்சினைக்கான பேச்சுவார்த்தை என்பது இந்தியாவின் தேவைக்காக மட்டும் அடிக்கடி பேசும் விடயமாகவுள்ளது ‐ ஹக்கீம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இனப்பிரச்சினைக்கான பேச்சுவார்த்தை என்பது இந்தியாவின் தேவைக்காக மட்டும் அடிக்கடி பேசும் விடயமாகவுள்ளது ‐ ஹக்கீம்

26 July 10 01:41 am (BST)

முஸ்லிம் அரசியலில் மிகப் பெரிய சந்தேகங்கள் இருக்கின்றன. புலிகள் முழுமையாக அழிக்கப்பட்டாயிற்று. இனிமேல் தனித் தரப்பு என்ற கோசத்திற்கு இடம் கிடையாது. இனப்பிரச்சினைக்கான பேச்சுவார்த்தை என்பது இந்தியாவின் தேவைக்காக மட்டும் அடிக்கடி பேசும் விடயமாகவுள்ளது. இங்கிருந்து இந்தியாவிற்கு படையெடுத்துச் சென்று பேசினாலும் இங்கு பழைய குருடி கதவைத் திறவடி என்ற கதையாகவே இருக்கின்றது என பாராளுமன்ற உறுப்பினரும் முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான் ரவூப் ஹக்கீம் கல்முனையில் நடை பெற்ற கூட்டமொன்றில் பேசுகையில் தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், எமக்குத் தனியான நிர்வாக அலகை இன்றைய அரசியல் சூழ்நிலையில் பெற்றுக் கொள்ள முடியுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அங்கும் இங்குமாக எமது விவசாயக் காணிகளையும் இழந்துள்ளோம். புலிகளின் தோல்வியின் பின் வடக்கு கிழக்கிலே 40 ஆயிரம் ஏக்கர் முஸ்லிம்களின் காணி பெற்றுக் கொடுக்கப்படும் என இந்த அரசாங்கம் கூறியது.

ஆனால் இன்று எமக்கு ஏற்கெனவே இருந்த காணிகளையே பாதுகாக்க முடியாததாக நிலைமை உள்ளது. ஆரம்பத்திலே கரங்கோவில், மூதூர், கிண்ணியா என ஆரம்பித்து இன்று எல்லா இடங்களிலும் எமக்கு காணிப்பிரச்சினைகள் உள்ளன. எங்களின் காணிகளைப் பெற்றுக் கொள்வது என்பது சிக்கலான விடயமாகவுள்ளது. அரசாங்கத்தில் உள்ள சில சக்திகள் எமது விடயத்தில் கடும் போக்கை கொண்டிருப்பது தென்படுகின்றது

இந்தப் பிரச்சினைகளை முஸ்லிம் காங்கிரஸ் தான் பார்க்க வேண்டும் எனச் சொல்லுகின்றார்கள். அரசாங்கத்தின் தரப்பிலே உள்ளவர்களுக்கு இவை பற்றி பிரச்சினையில்லை. நாம் அரசாங்கத்தின் உள்ளே போனால் நாம் தான் இப்பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்பார்கள்.

கடந்த பொதுத் தேர்தலில் பல கட்சிகளின் வீக்கம் வற்றியுள்ளது. ஜே.வி.பி. யை பார்த்தால் 38 ஆக இருந்த ஆசனங்கள் ஏழாகக் குறைந்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 21 ஆக இருந்தது 14 ஆகக் குறைந்துள்ளது. முஸ்லிம் காங்கிரஸிற்கு 10 ஆக இருந்தது 8 ஆக குறைந்துள்ளது. இந்த அரசாங்கத்திற்கு வீக்கம்தான் என்றாலும் அதுவும் வற்றும் காலம் வந்து விடும்.

இப்போதைய நிலையில் எங்களைப் பொறுத்தவரை தேர்தல் முறையில் ஏற்படவிருக்கும் மாற்றம், நிர்வாக முறைகளில் ஏற்படவிருக்கும் மாற்றங்கள் என்பன முக்கியமாகக் கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் ஆகும் என்றார் .

அரசியல் சாசனத் திருத்தங்கள் தொடர்பில் அரசாங்கம் ஏதேனும் யோசனைத் திட்டங்களை முன்வைக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் கட்சிகளுக்கு இடையில் பொதுவான இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள சர்வகட்சிப் பேரவை அறிக்கையை ஒர் ஆரம்ப அறிக்கையாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/tamil_news1.php?nid=27693&cat=1

ஒற்றுமை வேண்டும் வேளை இது

நாட்டின் அரசமைப்பைத் திருத்தும் விவகா ரத்தில் இனநெருக்கடிக்குத் தீர்வு காண்பது குறித்து உரிய முக்கியத்துவம் கொடுக்கப் படுவதாக இல்லை. ஆட்சிமுறையில் மாற்றம், அதாவது நிறைவேற்று ஜனாதிபதி முறைக்குப் பதிலாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமர் பதவியைக் கொண்டுவருதல் மற்றும் அரசமைப்புச் சட்டத்தின் 17ஆவது திருத் தத்தை மாற்றி அமைத்தல், தேர்தல் சட்டத் தைத் திருத்துதல், உள்ளூராட்சி மன்றங்களின் உருவாக் கத்தில் மாற்றம் கொண்டு வருதல் போன்ற இரண்டாந்தர விடயங்கள் குறித்துப் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியுடன் பேச்சு நடத்தி இணக்கம் காண்பதிலேயே அரசு ஆர்வமாக விரைந்து செயற்பட்டு வருகிறது.

நாட்டின் முக்கிய பிரச்சினைகளில் உடனடி யாக முதன்மைத்துவம் வழங்கி ஆராயப்பட வேண்டிய முதலாம் தர விவகாரமான இனப்பிரச் சினையை ஓரங்கட்டும் போக்கில், அரசு நடந்து கொள்கிறது. இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண் பதற்கு முதலிடம் கொடுக்க வேண்டும் என்பதில் பிரதான எதிர்க் கட்சியும் அக்கறை காட்டுவதாக இல்லை!

மொத்தத்தில் தமிழ், முஸ்லிம் மக்களின் நலன்களைப் பேணுவதில், இரண்டு பிரதான பெரும்பான்மைக் கட்சிகளும் கூட்டுச்சேர்ந்து அதனைப் பின்தள்ளி விடுமோ என்ற சந்தேகம் வலுத்து வருகிறது. ஆகையால், தமிழ், முஸ்லிம் மக்களின் முதன்மையான அரசியல் கட்சிகளாக விளங்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸும் இது தொடர்பில் ஒன்று கூடி ஆராய வேண்டியது கட்டாயமாகிறது.

இது விடயத்தில், தாமதத்தைத் தவிர்த்து இரண்டு கட்சிகளும் மிக விரைவில் கூடி ஆராய வேண்டும்.

அரசமைப்புச் சட்டத்தில் மாற்றம், திருத்தம் என்று இரண்டு பிரதான கட்சிகளின் தலைவர் களும் பல விடயங்களில் தாம் மட்டும் கூடி ஆராய்ந்து முற்றுமுழுதாகச் சிறுபான்மை இனங்களின் பிரதிநிதிகளை ஓரங்கட்டியது போன்று

இனப்பிரச்சினை விவகாரத்திலும் பெரும் பான்மை இனத்துக்கு மட்டுமே சார்பான ஒரு தீர்வுக்கு இணங்கி, இரு தரப்பினருக்கும் உள்ள நாடாளுமன்ற வலுக்களை ஒன்று சேர்த்து அதீத பலமாக்கி அதனை நிறைவேற் றிவிடும் ஆபத்து நிறையவே உண்டு.

ஆகையால், தமிழ், முஸ்லிம் மக்கள் தமக் கிடையே உள்ள சிறுசிறு பேதங்களை ஒதுக்கி விட்டு, இப்போது ஓரணியில் செயற்பட வேண்டியது அவசரமும், அவசியமும், கட்டா யமும் ஆகிறது.

இரண்டு இனங்களினதும் எதிர்காலம், அரசியல் சுபீட்சம் என்பன பாதிப்புறாமல் இருக்க அவை ஒன்றுபட்டாக வேண்டிய கட்டாயம் எப்போதும் இல்லாததைவிட இப்போது மிகமிக அவசியமாகி உள்ளது. மொழியால் ஒன்றுபட்ட இருசாராரும் தமக்கிடையே உள்ள சிறுசிறு பேதங்கள் வேற்றுமைகளைப் புரிந்துணர்வுடன் நீக்கி ஓர் அணி திரள வேண்டிய வேளை இது.

தந்தை செல்வா காலத்தில் இரண்டு இனங் களுக்கும் இடையே நிலவிய ஒற்றுமை யையும் புரிந்துணர்வையும் இப்போதுள்ள தலைவர்கள் மீள்விக்க வேண்டும். இரு சாராரிடமும் உள்ள கருத்து வேறுபாடுகள், நீக்கப் பட்டு இணைந்து செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகி உள்ளது. பெரும் பான்மை இனத்தலைவர்கள் இரண்டு சிறு பான்மை சமூகங்கள் மீதும் சவாரி செய்யாது தடுப்பதற்காக, சகோதரத்துவ உணர்வுடன் கருமம் ஆற்றவேண்டிய வேளை இது.

இதனை ஊன்றி உணர்ந்து, உய்த்தறிந்து தமிழ், முஸ்லிம் தலைவர்கள் செயற்பட வேண்டும். எமக்கிடையே உள்ள பிணக்கு களை மேலெழுத்தி எமக்குரிய அரசியல் உரிமை களைப் பெரும்பான்மையினர் நசுக்கவோ, கசக் கவோ இடம் தராமல் இருப்பதிலேயே எங்கள் வருங்காலச் சந்ததியினரின் வாழ்வும் நலமும் தங்கியிருக்கின்றன. இதனை இரு சிறுபான்மை இனங்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் தலைவர்கள் உணர வேண்டுகிறோம்.

http://www.uthayan.com/Welcome/afull.php?id=489&L=T&1280137543

என்ன இது இப்ப கொஞ்ச நாளா எல்லாறும் உண்மை சொல்லீனம், முதலில் ப.சிதம்பரம்,பாரதிராஜா இப்ப இவர் :lol::lol::D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.