Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நாங்கள் உங்களுக்கு உதவிற மாதிரி நீங்களும் தமிழருக்கு உதவுங்களேன் - இந்திய இராணுவத் தளபதி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வடக்கு, கிழக்கில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் தமது வாழ்வை துரிதமாக மீளக்கட்டியெழுப்புவதற்கு சிங்களவர்கள் மிகப்பரந்த மனதுடன் உதவ வேண்டும் என்று இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் விஜய்குமார் சிங் தெரிவித்துள்ளார்.

இன்று சிறிலங்காவுக்கான ஐந்து நாள் பயணத்தை மேற்கொள்ளவுள்ள ஜெனரல் விஜய்குமார் சிங் புதுடெல்லியில் அளித்த செவ்வி ஒன்றிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “போர் நடைபெற்ற காலங்களில் இருந்த எல்லாப் பகையுணர்வையும் காயங்களையும் சிறிலங்காவைச் சேர்ந்த அனைவரும் இப்போது புதைத்து விட வேண்டும் என்று நினைக்கிறேன். தமிழ்ச் சகோதரர்கள் போரினால் இழந்து போன வாழ்வை மீளக்கட்டியெழுப்புவதற்கு சிங்களவர்கள் மிகவும் பரந்த மனதுடன் உதவ வேண்டும். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் எதிர்காலம் மிகவும் நல்லதாக உள்ளது. எனது பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்துவதை மட்டும் நோக்கமாகக் கொண்டதல்ல. ஏற்கனவே இருநாட்டு பாதுகாப்புப் படைகளுக்கும் இடையில் நெருக்கமான உறவு இருந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் வடக்கு,கிழக்கு மாகாணங்களில் எத்தகைய கட்டமைப்பு உள்ளது என்பது பற்றியும் பார்க்க வேண்டியுள்ளது. எத்தகைய பாதுகாப்பு உறவு பேணப்படவுள்ளது என்பது பற்றி இருநாட்டு அரசியல் தலைவர்களும் தான் தீர்மானிப்பர்“ என்றும் அவர்மேலும் தெரிவித்துள்ளார். இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் விஜய்குமார் சிங் இரண்டு வருடங்கள் சிறிலங்காவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் இந்திய அமைதிப்படையில் பணியாற்றியவர். திருகோணமலையில் கப்பல் மூலம் ஒரு மேஜர் தர அதிகாரியாக வந்து இறங்கிய அவர், புலிகளுக்கு எதிராக வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட படை நடவடிக்கைகளில் பங்கெடுத்தவர்.

இவர் சிறிலங்காவில் இருந்து திரும்பிச் சென்றபோது லெப்.கேணல் தரத்துக்கு பதவி உயர்வு பெற்றிருந்தார். சிறிலங்காவில் பணியாற்றிய காலத்தில் கற்றுக்கொண்ட சில சிங்களச் சொற்களை அவர் இப்போதும் நினைவில் வைத்திருக்கிறார். இந்தச் செவ்வியின் போது அவர் சிங்களச் சொற்களையும் அவற்றின் அர்த்தத்தையும் செய்தியாளருக்குக் கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.http://www.tharavu.com/

  • கருத்துக்கள உறவுகள்

.

“போர் நடைபெற்ற காலங்களில் இருந்த எல்லாப் பகையுணர்வையும் காயங்களையும் சிறிலங்காவைச் சேர்ந்த அனைவரும் இப்போது புதைத்து விட வேண்டும் என்று நினைக்கிறேன். தமிழ்ச் சகோதரர்கள் போரினால் இழந்து போன வாழ்வை மீளக்கட்டியெழுப்புவதற்கு சிங்களவர்கள் மிகவும் பரந்த மனதுடன் உதவ வேண்டும்.

சரியா கேக்கல.... வால்யூம் பிளீஸ்....

டிஸ்கி:

ஐக்கிய இலங்கைக்குள் அரசியல் தீர்வு..... என இன்னும் 50 வருடங்களுக்கு குரல்... வற்றாமல் குரல் குடுக்க ...அனைவரும் சாப்பிட வேண்டியது .. சுத்தமானதாகவும் சுகாதாரமாகவும் செய்யப்பட்ட... திருநெல்வேலி அல்வா!! திருநெல்வேலி அல்வா!!

Tirunelveli+Halwa+(24).JPG

215.gif

  • கருத்துக்கள உறவுகள்
:o:D :D

.

சரியா கேக்கல.... வால்யூம் பிளீஸ்....

டிஸ்கி:

ஐக்கிய இலங்கைக்குள் அரசியல் தீர்வு..... என இன்னும் 50 வருடங்களுக்கு குரல்... வற்றாமல் குரல் குடுக்க ...அனைவரும் சாப்பிட வேண்டியது .. சுத்தமானதாகவும் சுகாதாரமாகவும் செய்யப்பட்ட... திருநெல்வேலி அல்வா!! திருநெல்வேலி அல்வா!!

Tirunelveli+Halwa+(24).JPG

215.gif

... இதற்கு வேறொரு தலைப்பு செய்திக்கு ... விசுகு எழுதிய கருத்தொன்று ... இங்கும் .....

இங்கு நான் எழுதுவதை சிலர் விமர்சிக்கக்கூடும்

ஆனால்

எனது பார்வை வேறானது

இறுதியாக நடந்த பரந்து பட்ட பத்திரிகையாளர் மாநாட்டிலே தலைவர் சொன்னது அல்லது கேட்டுக்கொண்டது

பழையவற்றை மறப்போம்

புதிய உறவுகளை தொடர்வோம் என்று.

அது இன்று பலவாறு சென்று

இழப்புக்களுக்கு தமிழினம் சென்ற பின்

அவரது அந்த கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது என்று தமிழினம் எடுத்துக்கொண்டு

10 வருடங்கள் பின் தள்ளப்பட்டிருந்தாலும்

தலைவர் விட்ட இடத்திலிருந்து

அடுத்த கட்டத்தை ராஜதந்திரமாக நகர்த்துவதே சாலச்சிறந்தது

இல்லையெனில் தலைவரின் அந்த கோரிக்கையையும் கேலி செய்து அவரது அடுத்த கட்டத்தையும் நாம்புரிந்து கொள்ளவில்லை என்று எனக்கு தோன்றுகிறது

வீண் வீராப்புகளை நிறுத்தி தமிழரது போராட்டம் அடுத்தகட்டத்துக்கு நகர என்ன வழி என்று சிந்தித்தால்

நிருபராவின் காய் நகர்த்துதலுக்குள் நாம் எம்மை ஒரு படி நிமிர்த்திவிடலாம் என்றுதான் எனக்கு படுகிறது.

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

... இதற்கு வேறொரு தலைப்பு செய்திக்கு ... விசுகு எழுதிய கருத்தொன்று ... இங்கும் .....

அதான் நிருப்பம ராவு அக்கா சொல்லிடாங்கல்ல தோழர் நெல்லையன் ... ராஜபக்சே அரசின் நிவாரண பணிகள் மிகவும் திருப்தி அளிக்குது என்று ...

இந்திய டுடேவில் பேட்டி வந்துள்ளதே.... அரசியல் தீர்வு குறித்து ராஜபக்சேவினை பார்த்து பேசவில்லையாம்.... கண்களால் ராஜபகசேவினை பார்த்து தெரிந்துகொண்டாரம் இவர் நல்ல தீர்வினை அளிப்பார் என்று... இது ஏதோ தலைவன் தலிவி காதல் விடு தூது போல தெரிகிறது... அடங்கொய்யாலா நான் கூட கண்களால் தீர்வு வரும் என்று இப்பத்தான் எனக்கு தெரியும்...

நீங்க அந்த இந்தியன் போன்றே தீஞ்சு போன ரிக்கார்டை மறுபடி மறுபடி திருப்பி போடுகிறீர்கள் என தெரியவில்லை.... காசுமீர் சிக்கலெல்லாம் தீரும் வரைக்கும் இந்தியனை நம்பினால் இந்த சிக்கல் தீர வழியில்லை... ஒம்போதுகளின் தேசதிற்கு வக்காலத்து வாங்க அவர்களால் அடிபட்ட ஒம்பெத்த்ட்டு பேர் என்பதுதான் வியப்பிலும் வியப்பு..

சொந்தகாலில் நிற்க சொன்னால் இந்தியன் கால் தான் வேண்டுமாம்.... முள்ளிவாய்கால் காட்டிய இந்தியன்..... இனி கிள்ளி வாய்க்காலுக்கு தூபம் போடுவான்...

ஆம் கடந்தமுறை இந்தியில் போட்ட பாட்டு தங்களுக்கு புரிந்திருக்காது... இந்த முறை தெளிவாக தமிழில்....

http://www.youtube.com/watch?v=0y3lPepO7Tk

பேசாம இந்தியனா மாறிட்டா தோழர் நெல்லையன் பண்டிட்டு கோஸ்டிகள் போன்று மாதம் 2000 கிடைக்கும்... அத்தோடு இதர சலுகைகளும் கிடைக்கும்

:lol::wub::lol::D

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

டிஸ்கி:

அத்தோடு ஈழத்தமிழர்கள் எங்களுடைய வம்சாவளியினர்..... இந்த சிக்கலை நாங்கள் தான் கவனிப்பம்.... என்று தொடர்ந்து பொந்தியா.... உலக நாடுகளுக்கு காது குத்துவது தோழர்களுக்கு பலருக்கு தெரிந்திருக்கும்... :lol:

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.