Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வலி தெரியாக் காயங்கள்

Featured Replies

kpiriyan wrote:

கதையில யார் வசிப்பினம்? அந்த வரிய வாசிக்கேக்க புரியவேண்டாம்? :wink: சரி சரி.. .எண்டாலும் நல்லா ஜோக் அடிக்கிறிங்கள்...

:mrgreen: :mrgreen: :lol::lol: :lol: :lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol:

  • Replies 120
  • Views 14.6k
  • Created
  • Last Reply

ம்ம்ம் அண்ணா தொடருங்கள்

வாழ்த்துக்கள்

ஆனால் பொறுமை இல்லாமல் இருக்கு அண்ணா விரைவில்

  • தொடங்கியவர்

வலி தெரியாக்காயங்கள் பாகம் 8

வேணிக்கு அடிக்கடி சண்ணைப் பார்க்க ஆவலாக இருக்கும். ஆனால் சண் பல்கலைக்கழக புகுமுகவகுப்பு மாணவன் என்பதால் அவன் அப்பா கடிதம் போட்டு இருந்தார். முடிந்தால் ஓர் அறை எடுத்து, திருநெல்வேலியில் தங்கும் படியும்இ அதனால் நாளாந்தம் 4 மணி நேரம்போக்குவரத்தை குறைத்து கூட படிப்பில் கவனம் செலுத்தலாம் என்று அவனுக்கும் அது சரியாகவே பட்டது

வேணியிடம் சொன்னபோது அவள் முகம் வாடி விட்டது "என்னங்கோ நீங்க போனால் அம்மா தனிய தானே உங்கள் தங்கையும் சின்ன பிள்ளை உதவிக்கு நாங்கள் இருந்தாலும் இரவில் ஒரு துணை வேணும் தானே உங்கள் அப்பா இங்கே இடம்மாற்றம் பெற்று வந்ததும் பிறகு தனிய போவது பற்றி யோசிக்கலாம்" என்று சொன்ன வேணியை அன்புடன் பார்த்த சண் "உண்மை தான் வேணி இதை நான் யோசிக்கவே இல்லை நன்றி" என்று கதைத்து கொண்டு இருக்கும் போது அங்கே வந்த சண் அம்மா கேட்டா" என்ன கனக்க யோசிக்கிறீங்கள் "இல்லையம்மா அப்பா கடிதம் போட்டவர் தானே அது தான் வேணிக்கு சொன்னேன் வேணி என்னை தனிய போகவேண்டாம் அப்பா வந்தவுடன் போகலாம் என்று சொல்லுறா நீங்கள் தனியவாம் என்று அபிப்பிராயப்படுரா எனக்கும் அது சரியா படுது நீங்க என்னம்மா சொல்லுறீங்கள்?" சண் என்று கேட்டபோது பக்கத்தில் நின்ற வேணியை அன்பாக தலையை தடவிய படி சண் அம்மா சொன்னா "நன்றி பிள்ளை நானும் அப்படி தான் யோசித்தேன் தனிய ஒரு ஆண்துனை இல்லாமல் இருப்பது சிரமம் தானே சண் நீயும் யோசித்து முடிவு எடு உனக்கு படிப்புக்கு இடைஞ்சல் இல்லாமல் இருக்கவெணும் தானே?" என்று அம்மா சொன்னபோது "இல்லையம்மா மூன்றாம் வருடம் தான் கனக்க படிக்கவேணும் அதோடை மருத்துவப்பயிற்சி க்கு பெரியாஸ்பத்திரியில் பிறாக்ரீஸ் க்கு போகவேணும் அப்போ தான் தனிய தங்கவேணும் அப்போ யோசிப்போம்" என்று சண் சொன்னபோது வேணிக்கு ஆறுதலாக ஒரு நிம்மதி வந்தது அதோடை வேணி சொன்னாள் "எனக்கும் சந்தேகம் வந்தால் உங்களிடம் கேட்கலாம் தானே? என்று சொன்ன வேணியின் தலையில் அன்பாக குட்டினான். சண் "நல்ல புத்திசாலி என்று உங்கள் விலங்கியல் ஆசிரியர் சொன்னார் அன்று என்னுடன் பஸ்ஸில் கூட வந்தவர் வேணி அப்போ தான் சொன்னார் உங்களுக்கும் என்றன்ஸ் கிடைக்குமாம் " என்ற போது அவனுக்கு தன்னில் இருக்கும் அக்கறையை நினைத்து பெருமையாக இருந்தது வேணிக்கு.

அப்போதான் வேணி பக்கத்தில் நின்ற சண் அம்மாவிடம் சொன்னாள் " அம்மா சொன்னவா உங்களை 8ஆம் திகதி வீட்டை வரட்டாம் எல்லோரையும் வர சொல்ல சொன்னா" என்ற போது "என்னபிள்ளை விசேஷமோ? சும்மா தான்வரசொன்னா என்று வேணி சொல்ல அதை கேட்டு சிரித்த சண் " அம்மா அண்டைக்கு தான் இந்த வால் பிறந்த நாள் என்று சொல்லிச் சிரித்தான் அப்போ கேட்டாள் வேணி "எப்படி தெரியும் என் பிறந்த நாள் என்று அப்போ சண் உங்கள் அம்மாவிடம் கேட்டேன் சொன்னாங்க வேணி ம்ம் நல்ல தான் என்னை பற்றி எல்லாரிட்டையும் விசாரித்து திரியுறீங்கள் என்று சொன்ன வேணியின் கன்னம் நாணத்தால் மெல்ல சிவந்தது.

-தொடரும்-

  • தொடங்கியவர்

அன்று வேணியின் பிறந்த நாள். மாலைநேரம் அழகாக தன்னை அலங்கரித்து எப்போ சண் குடும்ப்ம் வருவினம் கேக் வெட்டலாம் என்று ஆவலோடு பதட்டமும் கலந்து இருந்தது வேணிக்கு.

முதல் முதலாக சாறி கட்டியதை சண் பார்க்க போவதை நினைத்து மனம் ஏதோ அவளுக்குள் நாணமாக இருந்தது. அம்மா கேட்டா "என்ன பிள்ளை அடிக்கடி கண்னாடிக்கு முன்னாலை நிக்கிறாய். அதெல்லாம் வடிவாதான் இருக்கு ஏன் ஒருக்கா கோவிலுக்கு போயிருக்கலாம்தானே?" என்று அம்மா சொல்லவும்: சண் அம்மா குரல் கேட்கவும் சரியாக இருந்தது. மனது முயல் குட்டி போல் துடிக்க வாங்கோ என்று வரவேற்றார் அப்பா மெல்ல வெளியே எட்டி பார்த்த வேணிக்கு அங்கே சண் இல்லாதது ஏமாற்றமாக இருந்தது. அப்போ வேணியை கண்ட சண் அம்மா "யாரது? புது பொம்பிளை அங்கே வாறது" என்று ஆச்சரியத்துடன் "பிள்ளை வேணி நல்ல அம்சமாக இருக்கிறீங்க" என்று கன்னத்தில் முத்தமிட்டபடியே பிறந்த நாள் வாழ்த்து சொன்னா

பின்னாலே வந்த சண் தங்கையிடம் ரகசியமாய் கேட்டாள் வேணி "எங்கே உங்கள் அண்ணா? என்று அவருக்கும் சமைத்து விட்டோம் " தெரியாது இப்போ தான் வெளியே போனவர் வருவார் என்று சொல்லி விட்டு விளையாட ஓடிவிட்டா சண் தங்கை.

கொஞ்ச நேரத்தில் படலை கிறீச்சிட்டது எட்டிப்பார்த்த போது கையில் அர்ச்சனை பொருட்களுடன் சண் வந்து கொண்டு இருந்தார். வந்தவன் குரல் கொடுத்து வேணியை கூப்பிட்டபோது, அதற்காகவே காத்து இருந்த வேணி "ஓம் வாறேன்" என்று கூறியவாறே மான் குட்டி போல துள்ளி ஓடி அருகில் வந்த போது தன் கண்ணையே தன்னால் நம்ப்ப முடியாமல் நின்று விட்ட சண் தன்னை சுதாகரித்து கொன்டவனாய் " கடவுளே இப்பதான் அம்மன் கோவிலுக்கு போனேன் அந்த அம்மன் இங்கேயும் வந்தது போல் இருக்கு வேணி. சாரிக்கு நீங்க அற்புதமாக இருக்கிறீங்க இந்தாங்கோ பிரசாதம் உங்கள் பேரிலை அர்ச்சனை செய்தேன் நெற்றியில் வையுங்கோ வேணி" என்று பிரசாத தட்டை அவளிடம் கொடுத்தான்.

அவளும் குங்குமத்தை நெற்றியில் வைத்தபோது சண் கேட்டான் "ஏன் விபூதி தானே முதல் வைக்கவேணும்" என்று "ம்ம்" என்று விட்டு வேணி கேட்டாள் "எப்படி தெரியும் என் நட்சத்திரம் சொல்லுங்கோ" என்று "ம்ம் உங்கள் அம்மா தான் சொன்னா" என்ற போது அவன் அன்பும் அவளை நினைத்து அவள் நல்ல இருக்கவேணும் என்று கோவிலுக்கு போய் வந்த அவனை பாசத்துடன் பார்த்தபடி "வாங்கோ இண்டைக்கு என்கையால் தான் சாப்பிட வேணும் என்று சொல்லி விட்டு கேக் வெட்ட ஆயத்தமானார்கள் எல்லோரும்.

கேக் ஊட்டிய போது சன் மட்டும் கேக்கை கையில் வெட்டி கொடுத்தான் ஊட்டவில்லை அது அவளுக்கு ஏமாற்றம் தான். அவனின் அந்த குணம் பிடித்து இருந்தது வாஞ்சையை செயலில் காட்டும் அவனது இயல்பு, ஒரு நல்ல அன்பான மற்றவரை மதிக்க தெரிந்தவன் என்று அவள் மதிப்பில் சண் உயர்ந்து நின்றான்.

-தொடரும்-

அண்ணா கதை உண்மையில் நன்றாகப் போகின்றது வாழ்ததுக்கள் ஆனால் முடிவைப்பார்த்தால் பெரும் சோகமாக அமையும் போல இருக்கு

கதை நன்றாயிக்கிறது...தயவு செய்து முடிவை சோகமாக முடிக்காதீர்கள்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரமா முடிவு எப்படி இருந்தால் என்ன? அவரின் கற்பனைக்கு

எழுதட்டும். :lol:

கதை நன்றாக இருக்கு இந்திரஜித் அண்ணா...தொடருங்கள் :P

ஒரு தலைப்பின் கீழே எல்லா பாகத்தையும் போட்டால் நல்லாயிருக்கும் ... ஒவ்வொரு பாகமா போடுறதால் எல்லா பாகத்தையும் தேடி தேடி வாசிக்க வேண்டியிருக்கு ... தப்பா சொன்னால் மன்னித்துக் கொள்ளுங்க ... மனதில் பட்டதை சொன்னன்... :roll: :lol:

  • தொடங்கியவர்

கடவுளே எனக்கு தலை சுற்றுகிறது கதையின் போக்கை மாற்றி எழுதவா இல்லை சீக்கிரமாக முடிக்கவா?சோகம் வேண்டாம் என்கிறார்கள். எனக்கோ 15 மணி நேர வேலையில் குழுப்பமாக இருக்குடா சாமீஈஈஈஈஈ

  • தொடங்கியவர்

உண்மையில் அபிப்பிராயம் சொல்லும் அனைத்து உள்ளங்களுக்கும் திருத்தி எழுதி எனக்கு உதவி பண்னும் உள்ளங்களுக்கும் நண்றிகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்திரஜித் நல்லாத்தான் கொண்டுபோறியள். நெடுக சோகமா?? அப்புறம் இந்திரஜித் என்றாலே சோககீதம் என்று முடித்துவிடுவார்கள். மாறி மாறி முடிவுகளை வைத்தால் தான் வாசர்களிற்கு. சற்று மாறுதல் கிடைக்கும். :P

டமிழ்.......... இந்திரஜீத் வாழ்க்கேலை நடந்த . நடக்கிற உண்மை சம்பவங்களின் வைத்துத்தான் கதையை எழுதிக் கொண்ட போகிறார் இனி மாத்தி மாத்தி எழுதச் சொன்ன எப்பிடி நிகழ்ச்சிகளை தேடுவது அவரின் சோகம் எமக்கொரு பாடமாக இருக்கட்டுமன் சரி நீங்க சந்தோஷமா ஒரு கதை எழுதுங்கோவன் வாசிக்க நாங்க ரெடி.........

இந்திரஜித் கதையை நன்றாக நகர்த்துகிறீர்கள் தொடருங்கள், சிலரிற்கு வாழ்க்கை துன்பமாய் இருக்கும் சிலரிற்கு அது சுகமாய் இன்பமாய் இருக்கும் அதற்கு நாம் என்ன செய்வது, அது அவரவரைப் பொறுத்தது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டமிழ்.......... இந்திரஜீத் வாழ்க்கேலை நடந்த . நடக்கிற உண்மை சம்பவங்களின் வைத்துத்தான் கதையை எழுதிக் கொண்ட போகிறார் இனி மாத்தி மாத்தி எழுதச் சொன்ன எப்பிடி நிகழ்ச்சிகளை தேடுவது அவரின் சோகம் எமக்கொரு பாடமாக இருக்கட்டுமன் சரி நீங்க சந்தோஷமா ஒரு கதை எழுதுங்கோவன் வாசிக்க நாங்க ரெடி.........

நடக்கிறதை அப்படியே எழுதினால் சமூகத்தில சோகம் தான் மிஞ்சும் என்றியளா..?? அப்ப சரி முகம்ஸ்.. நான் சொன்னதற்கு காரணம். தொடராக சோகக்கதைகளை கொடுத்தால் இந்திரஜித் என்றாலே சோக கிதம் அப்படி என்று வந்திடும் அதுக்காகத்தான் சொன்னேன். :P (நாங்க கதை எழுதாமலா??)

நடக்கிறதை அப்படியே எழுதினால் சமூகத்தில சோகம் தான் மிஞ்சும் என்றியளா..?? அப்ப சரி முகம்ஸ்.. நான் சொன்னதற்கு காரணம். தொடராக சோகக்கதைகளை கொடுத்தால் இந்திரஜித் என்றாலே சோக கிதம் அப்படி என்று வந்திடும் அதுக்காகத்தான் சொன்னேன். :P (நாங்க கதை எழுதாமலா??)

அக்கா இதென்ன கேள்வி தாராளமாக எழுதுங்களேன். உங்கள் கதையை ஆவலாக எதிர்பார்க்கின்றோம்.

கடவுளே எனக்கு தலை சுற்றுகிறது கதையின் போக்கை மாற்றி எழுதவா இல்லை சீக்கிரமாக முடிக்கவா?சோகம் வேண்டாம் என்கிறார்கள். எனக்கோ 15 மணி நேர வேலையில் குழுப்பமாக இருக்குடா சாமீஈஈஈஈஈ

அண்ணா குழப்பம் வேண்டாம் எப்படி நீங்கள் முதலில் யோசித்தீங்களோ அப்படியே கதையை நகர்த்திச் செல்லுங்கள்

கதை நன்றாக போகின்றது, தொடர்ந்து எழுதுங்களை இந்திரஜித். மற்றய பாகங்களையும் வாசிக்க காத்திருக்கின்றோம். முதல் தொடரை போல் அவசரப்பட்டு திடீரென்று நிறுத்தி விடாதீர்கள். நீங்கள் எழுத நினைத்திருக்கும் அனைத்தையும் எழுதுங்கள்.

இந்திரஜித்

கதை உண்மைக்கதையென்றால் அதில் எவ்வித மாற்றமும் செய்ய வேண்டாம். அதனை அப்படியே தாருங்கள். நீங்கள் சொந்தமாக உங்கள் கற்பனைக்கேற்றவாறு எழுதும்போது அதில் மாற்றம் செய்வதில் தவறில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ரமா முடிவு எப்படி இருந்தால் என்ன? அவரின் கற்பனைக்கு

எழுதட்டும். :lol:

இதே பாருடா. நம்ம ராவணன் அண்ணா கூட கதையை ரெம்ப ரசிக்கின்றார். :wink: :P

கதை நன்றாக போகுது....முடிவு நீங்கள் முதல் நினைத்தவாறே அமையட்டும்.... காத்திருப்போம் :wink:

  • தொடங்கியவர்

இப்படி அன்பான நண்பர்களையும் விமர்சனங்களையும் பார்க்கும் போது நிஜமாவே புல்லரிக்கிறது உங்களால் நம்பமுடியுமோ தெரியாது தொடர்ந்து 3 நாட்கள் ஓய்வே இல்லாதபோதும் அதிகாலை எழுந்து கதை எழுதி விட்டு போனேன் 15 மணி நேரம் நின்றபடியே வேலை செய்து விட்டும் கதை எழுதுவது இப்படி பட்ட அன்பும்ரசிகதன்மைக்கும் தான் இப்படி ரசிக்கும் உள்ளங்களை அறிமுகப்படுத்திய யாழ் இணையத்துக்கும் என் அருமை நண்பிக்கும் என் தாழ்மையான நன்றிகள் இந்த கதை நிறைவு பெற்றதும்.சந்தோசமான கதை ஆரம்பிப்பேன்

  • தொடங்கியவர்

வலி தெரியாக்காயங்கள் பாகம் 9

பிறந்த நாள் சந்தோஸமாக முடிந்தது ஆனால் வேணிக்கு தான் நிம்மதி இல்லை எப்போ போட்டோக்கள் வரும் தனக்கு பக்கத்தில் சண் நிற்கும் படம் வரும் வரை அவள் பட்ட அவஸ்தை இருக்கே அம்மாடியோ சந்தோசமான அவஸ்தை தான்.

அவளுடன் கூடபடிக்கும் நண்பிக்கும் இப்போ வேணியின் புதிய போக்கு பிடிபடவில்லை அவளிடன் ஜாடை மாடையாக கேட்டும் பார்த்தாள். வேணியோ பிடி கொடுக்கவில்லை. ஒரு நாள் அகப்பட்டுக் கொண்டாள் அவளறியாமலே அவள் பாடசாலை பையினுள் சண் கொடுத்த நோட்ஸ் கொப்பி இருந்தது அதை பார்த்த நண்பி கொஞ்சம் புரிந்து கொண்டாள். "ஓ ஓ இப்ப தான் தெரியுது நீ எப்படி நல்லா படிப்பதும் கொஞ்சம் குழப்பமாக கதைப்பதும் காரணம் எல்லாம் இவர் தானோ நல்லது தாயே...கவனமடி கொழும்பான் எதாவது செய்து விட்டு கொழும்புக்கு போனால் என்னசெய்வாய்?பார்த்து பழகுடி" என்று நண்பி சொன்ன போது "சும்மா எல்லோரையும் போல் சண் பற்றி தப்பாக கதைக்காதே எவ்வளவு நல்லவர் தெரியுமா?" என்று வேணி சொன்ன போது. சிரித்தபடியே "ம்ம் இப்போ சொன்னது உண்மைதான் உனக்கு இனி அவர் தானே உனக்கு வாத்தியார் அவரிடமே படி ஓ சொல்ல மறந்து விட்டேன் உனக்ககா ஊரில் இருக்கும் பொடியங்களுக்கு அடித்து விபரம் கேள்விபட்டேன் நல்ல அக்கறை தான் உன்னில்" என்று சிரித்த போது வேணியின் முகம் குங்குமமாய் சிவந்து விட்டது.அவளின் ஆசையில் ஒரு நாள் குழப்பம் வந்தது சண் அப்பா வடிவில்

ஒரு வார விடுமுறையில் அவர் வந்து இருந்தபோது ஒரு நாள் வேணி அவர் வந்தது தெரியாமல் உரிமையுடம் "அன்ரி" என்று அழைத்தபடியே சண் வீட்டுக்குள் போனபோது புதிதாக ஒருவர் கண்ணாடியுடன் அவளையே கூர்ந்து பார்த்தபடி "யாரம்மா நீ?" என்று கேட்டார். அவர் சண் வயது வந்தால் இப்படி தான் இருப்பான் என்று நினைத்த போது வேணிக்கு சிரிப்பு வந்து விட்டது. இருந்தாலும் மரியாதையுடன் "நாங்கள் பக்கத்து வீடு அன்ரியிட்டை வந்தேன் நீங்கள் சண் அப்பா தானே சுகமா இருக்கிறிங்களோ?" என்று கேட்டா வேணியிடம் "ஓம் பிள்ளை சண் எப்படி" என்று கேட்டார் சண் அப்பா சண் பேரை சொன்னதுமே வேணியில் ஒரு மாற்றம் அது சண் அப்பாவுக்கு புரிந்து விட்டது. "சரி பிள்ளை சண் அம்மா உள்ளே தான் இருக்கிறா போங்கோ உள்ளே" என்று சொன்னார்

-தொடரும்-

இந்திரஐித் கதை அருமையாக இருக்கின்றது தொடர்ந்து எழுதுங்கள்.... எதிர்பார்க்கின்றோம்.

போகின்ற போக்கில் சோக முடிவு தான் வரும்போல் உள்ளது... :cry: :cry:

  • தொடங்கியவர்

வலி தெரியாக்காயங்கள் பாகம் 10

சமையலறைக்குள் சென்ற வேணி சண் அம்மாவுக்கு உதவிகள் செய்துகொடுத்தா அப்போது அங்கே வந்த சண் அப்பா "ஓ நல்ல கை உதவியா தான் இந்த பிள்ளை இருக்கிறா" என்று சொல்லிச் சிரித்தபோது சண் அம்மா சொன்னா "ஓமப்பா கோவிலுக்கு கடைக்கு எல்லாம் இவ இல்லா விட்டால் சரியான கஸ்ரம். வேணியின் அப்பா தான் சந்தைக்கும் எல்லா இடத்துக்கும் போகும் போது எங்கள் எல்லாரையும் நினைத்து வாங்கி கொண்டு வருவார்" என்று சொல்லிகொண்டே போனா.

ம்ம்... என்று அவர் சொல்லிக் கொண்டு இருக்கும் போது, அங்கே வந்த சண் "அப்பா அம்மாவை பார்த்திங்களே சம்பளமில்லாமல் ஒரு ஆள் இருக்கு" என்று சொல்லி விகல்பம் இல்லாமல் சிரித்தான் அப்போ சண் அப்பா கேட்டார்.

"சண் உங்கள் மாமியும் மகளும் யூ.கே இல் இருந்து அடுத்த மாதம் வருகினமாம் நீ யூனிவசிற்றிக்கு மெடிசின் கிடைத்து போகிறாய் என்று சொன்னான் அவைக்கும் நல்ல சந்தோசமா இருக்கினம் யூனிவசிற்றி படிப்பு முடிய உன்னை யூகே வரட்டம் மேற்கொண்டு அங்கே படிக்கலாம் என்று மாமியும் சொன்னா உன் யோசனை என்ன?" என்று அப்பா கேட்டார்.

சண் அம்மா சிரித்து கொண்டே கேட்டா "என்னப்பா ஆச்சரியமா கிடக்கு உங்கட தங்கச்சி எங்களிலை பாசமாகிவிட்டா என்னவாம் சொன்னா என்று கேட்டா இல்லையப்ப சண் இல் மேகலாவுக்கு விருப்பமாம் என்று தான் தங்கச்சி சொன்னவா அது தான் சண்ணை பார்க்கவருகினம்" என்று சொல்லிவிட்டு கூர்மையாக வேணியை பார்த்தபடி இருந்தார் சண் அப்பா.

திடுமென்று எழும்பிய வேணி " நான் வீட்டை போறேன்" என்று சொல்லி விட்டு கண்கள் குளமாக கண்னை துடைக்க கூட தோன்றாமல் வெளிக்கிட்டாள் "ஏன் வேணி போறீங்கள்" என்று கேட்ட சண் இடம் பதில் சொல்லhமல் போனாள் அந்த மனமுடைந்த பேதை.

  • தொடங்கியவர்

சண் அப்பாவுக்கு இருந்த கொஞ்ச சந்தேகமும் போய்விட்டது வேணியின் மனம் அவருக்கு தெரிந்துவிட்டது அவர் சண்ணிடம் சொன்னார்.

"தம்பி யாரிடமும் எப்போதும் மனகஸ்ரம் கொடுக்காமல் பழகவேணும். நான் சொன்னது புரிந்து இருக்கும் தானே அந்தபிள்ளைக்கு நான் சொன்னது பிடிக்கவில்லை போல் இருக்கு. அப்போ சண் அம்மா சொன்னா "ஏனப்பா சண் இஞ்ச படிச்சு இங்கேயே டொக்ரரா இருந்தால் நல்லம் தானே ஏன் வேறை நாட்டுக்கு அலைவான் எங்களுக்கும் மகள் கலியாணம் கட்டி போனால் யாரப்பாபா இருக்கினம் தம்பி இல்லாமல் விசர் எல்லே பிடிக்கும் நீங்களும் வேறை ஊரிலை ஏன் இந்த வீட்டை கட்டினீங்கள் பிள்ளைகளுக்கு தானே பிறகு யூகே எண்டு சொன்னால் என்ன கதை" என்று அம்மா கோபமாக அப்பாவுடன் கதைத்தா

அவர்களுக்கு இடையில் கதைத்த சண் "எனக்கு வேறை நாடு போக விருப்பமில்லை.இங்கேயே வேலை செய்யப்போறன் இன்னும் 5 வருடங்கள் இருக்குத்தானே அப்போ யோசிப்போம் சும்மா ஏன் சண்டை பிடிப்பான்" என்று சண் அந்த பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைத்தான் சண்.

அப்பா இருக்கும்வரை வேணிக்கு சண் வீட்டுபக்கமே போகபö பிடிக்கவில்லை ஆனால், சண் அப்பாவே அவளை தேடி வீட்டுக்கு வந்தபோது, அவளால் மறுக்கமுடியவில்லை. சண் அப்பாவும் வேணி அப்பாவும் நல்ல நண்பர்கள் ஆகிவிட்டார்கள் அவர் திரும்பி கொழும்புக்கு போக முதல் வேணியின் வீட்டில் இரவு உணவுக்கு அழைத்து இருந்தார்கள்.

அந்த இரவு உணவின் போது போது சண்ணும் வந்து இருந்தான். சாப்பிடும் போது "சாப்பாடு நல்ல இருக்கு" என்று பாராட்டிய போது வேணி அம்மா சொன்னா "இன்டைக்கு நான் சமைக்கவே இல்லை எல்ணாம் வேணிதான் என்னை சமையலறைகுள் போகவே விடவில்லை. தம்பி உப்பு உறைப்பு எல்லாம் சரியா இருக்கோ என்று வேணி அம்மா கேட்டபோது சண் அப்பா கேட்டார் "வீடு எல்லாம் பூக்கன்று வைத்தது யார்.." என்று வேணி அப்பா சொன்னார் பிள்ளை தான் எங்களுக்கு கைவைக்க முடியாது அவவின் அரசு தான் இங்கே என்று சிரிக்க சண் அம்மாவும் "எங்கட பூந்தோட்டமும் வேணி உதவி தான்" என்று சொல்ல சண் சொன்னான் "ஓம் வேணியில்லாமல் எனக்கு இத்தனை அறிவு வராது அவவுக்கு நல்ல கைராசி" என்று சிலாகித்து பேசினான்.

நன்றி சொல்லிவிட்டு வேணியின் அப்பா போகும் போது வேணியிடம் "பிள்ளை எனக்கும் கொஞ்சம் புரியும் யோசிக்கவேண்டாம் கடவுள் எழுதினதுபடி நடக்கும் என்று கண்ணை சிமிட்டிய படியே சொன்ன போது, தன் மனம் அவருக்கு புரிந்து விட்டது என்று வெட்கமாகி விட்டது வேணிக்கு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.