Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகளின் முன்னாள் இராணுவப் பேச்சாளர் இளந்திரையனின் மனைவி, மட்டு புலனாய்வுப் பொறுப்பாளருடைய மனைவி உட்படப் பலர் சாட்சியம்:

Featured Replies

அரசாங்கம் எதிர்பார்த்திருக்காத வகையில் கற்றுக் கொண்ட பாடங்கள் தொடர்பான ஆணைக்குழு முன்னிலையில் பலர் பகிரங்கமாகச் சாட்சி சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.

மனித உரிமை நிறுவனங்கள், ஊடக அமைப்புக்கள், ஜனநாயக அமைப்புக்கள் தொடர் ஒடுக்குமுறைக்காளாகி வாய் திறக்க அஞ்சியுள்ள சூழ்நிலையில், அதுவும் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைத் தக்க வைத்துக் கொண்டுள்ள இன்றைய சூழ்நிலையில் அரசாங்கத்திற்கெதிராக எவரும் வாய்திறக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையே இவ்விசாரணையை அரசாங்கம் தொடங்க ஒரு காரணமாக இருந்தது.

ஆனால், அரசாங்கத்தின் இந்த எதிர்பார்ப்பிற்கு மாறாக வவுனியாவில் நடைபெற்ற விசாரணையின் போது திருமலை மாவட்டத் தளபதியாக இருந்த எழிலனின் மனைவி துணிந்து சாட்சியமளித்திருந்தார். தன் கண்முன்னாலேயே கணவரை இராணுவத்தினர் அழைத்துச் சென்றனர் என அவர் தனது சாட்சியத்தில் தெரிவித்திருந்தார். அவருடைய இந்த முன்முயற்சி மேலும் பலரை சாட்சியமளிக்கத் தூண்டியுள்ளது.

தற்போது கிழக்கு மாகாணத்தில் கற்றுக் கொண்ட பாடங்கள் தொடர்பான ஆணைக்குழு சாட்சியங்களைப் பதிவு செய்து வருகிறது.

அதன் போது விடுதலைப் புலிகளின் முன்னாள் இராணுவப் பேச்சாளர் இளந்திரையனின் மனைவி, மட்டு புலனாய்வுப் பொறுப்பாளருடைய மனைவி உட்படப் பலர் சாட்சியமளித்துள்ளனர். அவர்கள் அளித்த சாட்சியம் வருமாறு:

எனது கணவரை காண்பிப்பதற்கு அழைத்துச் செல்வதாக குற்றப்புலனாய்வு பிரிவினர்(சி.ஐ.டி.யினர்) என்னிடம் தெரிவித்தனர்.

முதலில் மறுப்பு தெரிவித்த நான் பின்னர் ஆடைகளை அணிந்து கொண்டு காத்திருந்தேன். ஆனால், இன்றுவரையிலும் அவரை காட்டவில்லை என்று புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா சிவரூபனின் (இளந்திரயனின்) மனைவி சாட்சியமளித்த போது தெரிவித்தார். சிறு காயத்துடன் 2009 மே மாதம் 16ஆம் திகதி அவர் வந்தபோது மருந்து போடுவதற்காக அழைத்து செல்வதாகவே என்னிடம் படையினர் தெரிவித்தனர் என்றும் அவர் சொன்னார்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் வைத்து, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவின் முன்னிலையில் கடந்த சனிக்கிழமை சாட்சியமளிக்கையிலேயே இளந்திரையனின் மனைவி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து சாட்சியமளிக்கையில், வன்னியிலிருந்து 15 மே 2009ஆம் திகதியன்று இடம்பெயர்ந்து சென்றபோது, படையினர் எங்களை ஏற்றிக்கொண்டு சென்றனர். எனது கணவர் சிறு காயங்களுடன் எங்களுடன் வந்தார். கைகளிலேயே அவருக்கு காயம் ஏற்பட்டிருந்தது. ஓமந்தையில் வைத்து எனது கணவரை படையினர் அழைத்துச் சென்றனர். 15நாட்கள் அவரைப்பற்றி எந்தவிதமான தகவலும் கிடைக்கவில்லை. அதன் பின்னர் நான் பிள்ளையுடன் முகாமிற்கு சென்று விட்டேன்.

15 நாட்களுக்கு பின்னர் வருகை தந்தோர் தாங்கள் சி.ஐ.டி.யினர் என்றும் கணவரை காண்பிப்பதற்கு அழைத்துச் செல்வதாகவும் அவர் வைத்தியசாலையிலேயே சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறினர். உங்களை எவ்வாறு நம்புவது எனக் கேட்டேன். உடனே அவர்கள் சி.ஐ.டி.யினர் என்பதை உறுதிப்படுத்தினர்.

உங்களுடன் வருவதற்கு பயமாக இருக்கின்றது என்றேன். ஆடைகளை அணிந்து கொண்டு தயாராக இருக்குமாறு அவர்கள் என்னிடம் கேட்டுக் கொண்டனர். அதன்படி நான் தயாராக இருந்தேன். எனினும் என்னை அழைத்துச் செல்வதற்கு அவர்கள் வரவில்லை.

விடுவிக்கப்பட்ட நான் 2009 ஓகஸ்ட் 08ஆம் திகதி மட்டக்களப்பிற்கு வந்து விட்டேன். படையினர் வாகனத்திலேயே எங்களை அழைத்து வந்து விட்டனர். பிள்ளைகள் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளனர். புலமைப் பரிசில் பட்சையில் எனது மகள் 130 புள்ளிகளை பெற்றுள்ளார். அவர்களுக்காகவது எனது கணவரைக் காட்டுங்கள் என ஆணைக்குழுவினரிடம் கோரி நின்றார்.

இறுதி யுத்தம் இடம்பெற்று கொண்டிருந்தவேளை இடம்பெயர்ந்து வந்து கொண்டிருந்த போது "வட்டுவால்" என்னுமிடத்தில் இராணுவத்தினரால் ஒன்று திரட்டப்பட்டோம் அன்று ஆயிரக்கணக்கான பொது மக்களின் முன்னிலையில் கைது செய்யப்பட்ட எனது கணவனை காண்பியுங்கள் என முன்னாள் புலி உறுப்பினரின் மனைவி ஆணைக்குழுவிடம் கோரி நின்றார்.

அவர் விடுதலைப் புலிகள் அமைப்பின் பழைய உறுப்பினர். அதனால் அவரை விடுவிப்பதற்கு காலதாமதம் எடுக்கும் என்றும் கூறுகின்றனர் என்றும் அவர் சொன்னார்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் வைத்து ஜனாதிபதி ஆணைக் குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்கையிலேயே விடுதலைப் புலிகளின் இராணுவ புலனாய்வு மட்டு. பொறுப்பாளராக செயற்பட்ட கிரு ஷ்ணபிள்ளை பிரபாகரனின் மனைவி சாட்சியமளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து சாட்சியமளிக்கையில், வன்னியில் இறுதிக் கட்ட யுத்தம் தீவிரமடைந்திருந்த நிலையில் பொதுமக்களுடன் மக்களாக நானும் எனது கணவரும் பிள்ளைகளுடன் இடம்பெயர்ந்தோம்.

2004 ஆம் ஆண்டு முதல், வட்டுவாளில் வைத்து இராணுவத்தினரால் கைது செய்யப்படும் வரை விடுதலைப் புலிகளின் மட்டு.இராணுவ பொறுப்பாளராக கடமையாற்றியவர். மிக பழைய உறுப்பினரும் கூட. 2009 மே 17 ஆம் திகதியே அவர் படையினரால் கைது செய்யப்பட்டார்.

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வட்டுவாள் முகாமில் குழுமியிருந்த வேளை எனது கணவரை படையினர் இனங்கண்டு கொண்டு அவரை பொது மக்கள் முன்னிலையிலேயே விசாரணைக்கு என அழைத்துச் சென்றனர்.

ஓவென மரண ஓலமிட்ட நான் என்னையும் பிள்ளைகளையும் கணவருடன் அழைத்துச் செல்லுமாறு கோரினேன். அதற்கு மறுதலித்த இராணுவத்தினர் எங்களை முகாமுக்கு செல்லுமாறு கூறிவிட்டனர். அவரை இன்று வரையிலும் காணவே கிடைக்கவில்லை. அழைத்து சென்று காட்டவும் இல்லை. தற்போது அம்மா வீட்டில் நிர்க்கதியாய் நிற்கின்றேன்.

2009 மே 17 ஆம் திகதி மாலை 4.30 மணி க்கு அழைத்து செல்லப்பட்ட எனது கணவர் தொடர்பில் முகாமில் இருந்த இராணுவம், பொலிஸார், குற்ற புலனாய்வு பிரிவினரிடம் மட்டுமின்றி படைத்தரப்பு முக்கியஸ்தர்களிடம் கேட்டேன். எதனையுமே கூற மறுத்த அவர்கள் கணவர் தொடர்பில் இன்றுவரையில் எதனையும் கூறவில்லை.

எனது கணவர் எங்கிருக்கின்றார் என்று எனக்கு தெரியாது. விடுதலைப் புலிகளின் பழைய உறுப்பினர் என்பதனால் சில காலம் எடுக்கும் என்று பலரும்கூறுகின்றனர். அந்த வசனத்தை நம்பிக் கொண்டிருக்கின்றேன்.

களுவாஞ்சிக்குடியில் எனது அம்மாவின் வீட்டிலேயே இருக்கின்றேன். அங்கு வந்த விசேட முகமூடி படையினரே எனது அம்மாவிடம் இந்த தகவலை தெரிவித்து சென்றுள்ளனர். என்னிடம் எதனையுமே கூற வில்லை. அவர் எங்கிருக்கின்றார் என்பதே எனக்குள்ள பெரும் பிரச்சினையாகும்.

எனக்கு மூன்று பிள்ளைகள். மூன்றாவது பிள்ளை இறுதி யுத்த காலத்திலேயே பிறந்தது. முதல் பிள்ளை ஹெலிகொப்டர் சத்தம் கேட்டாலும் கிபீர் கிபீர் விமானம் எனக் கூறி ஓடி ஒளிந்து கொள்கின்றார்.இரண்டாவது மகள் இருதய நோயினால் பீடிக்கப்பட்டுள்ளார்.

பிள்ளைகளின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டும் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் நல்லதொரு முடிவினை எடுக்க வேண்டும். வட்டுவாளில் பொதுமக்கள் முன்னிலையில் கைது செய்து விசாரணைக்கென அழைத்து செல்லப்பட்ட கணவனை காண்பியுங்கள் என தேம்பி தேம்பி அழுதார்.

இதேவேளை கற்றுக்கொண்ட பாடங்களுக்கும் நல்லிணக்கத்திற்குமான ஜனாதிபதியின் ஆணைக்குழு முன்னிலையில் நான்கு சாட்சிகள் மூடிய அறைக்குள் இரகசியமாக நேற்று ஞாயிற்றுக்கிழமை சாட்சியமளித்தனர். ஜனாதிபதி ஆணைக்குழு ஓட்டமாவடி கோரளைபற்று மேற்கு பிரதேச செயலகத்தில் வைத்து நேற்றுக் காலை 9 மணி முதல் பன்னிரண்டரை வரை சாட்சிகளை பதிவு செய்து கொண்டது. சாட்சியங்களை வழங்குவதற்காக தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களும் வருகை தந்திருந்தனர்.

சாட்சியமளிக்க வருகை தந்தவர்களில் பலர் தங்களுடைய பிரச்சினைகளை வழங்கப்பட்ட படிவத்தில் நிரப்பி கொடுத்து விட்டு சென்று விட்டனர். குறிப்பிட்ட மூன்றரை மணி நேரத்திற்குள் இரண்டொருவர் மட்டுமே வாய் மூலமாக சாட்சியமளித்தனர்.

சாட்சியமளித்தவர்களில் பலர் காணாமல் போனமை, கடத்தப்பட்டமை மற்றும் விசாரணைக்கென தடுத்து வைக்கப்பட்டமை மட்டுமன்றி காணிப் பிரச்சினைகள் தொடர்பில் சாட்சியத்தில் குறிப்பிட்டனர்.

படையினர், பொலிஸ் சீருடையை ஒத்த சீருடையை அணிந்தவர்கள் மட்டுமன்றி புலிகள், கருணா மற்றும் பிள்ளையான் தரப்பினால் கடத்தப்பட்டமை தொடர்பிலும் தங்களுடைய சாட்சியத்தில் குறிப்பிட்டனர்.

விடுதலைப் புலிகள் மேற்கொண்டதாக கூறப்படும் விடயங்களை கேட்டறிந்து கொண்ட ஆணைக்குழு கருணா மற்றும் பிள்ளையான் குழுவினரால் தமது உறவினர்கள் கடத்தப்பட்டதாக சாட்சியமளித்தவர்களை தனியாக சாட்சியமளிக்க முடியுமா எனக் கேட்டனர்.

சாட்சிகளின் விருப்பத்தின் பேரிலேயே மூடிய கதவிற்குள் மிக இரகசியமாக சாட்சிகள் பதிவு செய்து கொள்ளப்பட்டன. இரகசியமான சாட்சி பிற்பகல் 12.30 மணி முதல் 2 மணி வரை நால்வரிடம் பெற்றுக் கொள்ளப்பட்டது.

இதனிடையே அங்கிருந்த சிலர் நாங்கள் சாட்சியமளிக்கவே நீண்ட தூரத்திலிருந்து வருகை தந்தோம். எனினும் சாட்சியமளிக்க முடியவில்லை என முணுணுத்துக் கொண்டே மண்டபத்தை விட்டு வெளியேறி சென்றனர்.

அங்கிருந்த ஊடகவியலாளர்கள், ஆணைக் குழுவின் உறுப்பினர்களை தவிர ஏனைய அதிகாரிகள் என சகலரும் மண்டபத்தை விட்டு வெளியேற்றப்பட்டு மூடிய அறைக்குள் தனித் தனியாகவே சாட்சியங்கள் நால்வரிடம் பெற்றுக் கொள்ளப்பட்டன.

இறுதி யுத்தம் உக்கிரமடைந்திருந்த வேளையில் அங்கிருந்து தப்பித்து வந்து படையினடம் சரணடைந்த புலிகள் கொலை செய்யப்படவில்லை என்பது உண்மையா என்று நல்லிணக்க ஆணைக் குழு முன்னிலையில் சாட்சியமளித்த விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவரின் மனைவி கேள்வி எழுப்பினார்.

ஓமந்தை திறந்த வெளி மைதானத்தில் 2009 மே மாதம் 17ஆம் திகதி 700 பேர் படையினரிடம் சரணடைந்தனர். இன்னும் பலர் படையினரால் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டனர் என்றும் அவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை சாட்சியமளிக்கையில் குறிப்பிட்டார்.

கற்றுக்கொண்ட பாடங்களுக்கும் நல்லிணக்கத்திற்குமான ஆணைக்குழு கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு, ஓட்டமாவடி ஆகிய இரு இடங்களிலும் கடந்த இரண்டு நாட்களாக சாட்சியங்களை பதிவு செய்தது.

முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவரின் மனைவியான புச்சாக்கேணி, கதிரவெளியைச் சேர்ந்த திருமதி நவானந் சுதா கோரளைபற்று மேற்கு பிரதேச செயலகத்தில் வைத்து சாட்சியளிக்கையில், எனது கணவர் விடுதலைப் புலிகளின் உறுப்பினராவார். ஏனைய விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் தடுப்பு முகாம்களில் இருக்கின்றனர். ஆனால் எனது கணவரை காணவில்லை. இறுதி காலகட்ட யுத்தத்தின் போது கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் சரணடைந்த விடுதலைப் புலிகள் பாதுகாப்பாக உள்ளனர். அவர்களுக்கு ஒன்றுமே செய்யப்படவில்லை என்று வடமாகாண ஆளுனர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி தெரிவித்;தார். அந்த செய்தியை ஊடகங்களில் பார்த்தேன். அது உண்மையா?

முல்லைத்தீவிலிருந்து புதுக்குடியிருப்புக்கு வருகை தந்தபோது எங்களுடன் சுமார் 3000 ற்கும் மேற்பட்டோர் வருகை தந்தனர். அவர்களை திறந்த மைதானத்திற்கு அழைத்து சென்ற இராணுவத்தினர் சுமார் 700 பேரை அன்று விசாரணைக்கென அழைத்து சென்றனர்.

17. 05 . 2009 ஆம் திகதியன்று ஓமந்தையிலுள்ள திறந்த வெளியான மைதானத்தில் வைத்து ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு விடுத்தனர். அவ்வறிப்பானது விடுதலைப் புலிகளில் அங்கத்துவமான உறுப்பினர்கள் சரணடைய வேண்டும் என்பதாகும்.

இதனால் எனது கணவரும் சரணடைந்தார். அவருடன் சேர்த்து சுமார் 700 புலி உறுப்பினர்களும் சரணடைந்தனர்.

எனது கணவர் பெயர் நவரெட்ணசிங்கம் நவானந் இவர் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினராவார். இவருடன் கைது செய்யப்பட்டவர்கள் தடுப்பு முகாமில் உள்ளனர். ஆனால், எனது கணவரை காணவில்லை. அகதிமுகாமில் இருந்து 2009.10.23இல் எனது சொந்த இடமான மட்டக்களப்பிற்கு வந்தேன்.

எனது அப்பாவும் 1993இல் விடுதலைப் புலிகளினால் கொலை செய்யப்பட்டார். எனக்கு இரு பிள்ளைகள் உண்டு. எனது கணவர் எங்கிருக்கின்றார் என்று அறிந்துதர வேண்டும் என்றார்.

வாழைச்சேனையைச் சேர்ந்த புவனேஸ்வரன் ஈஸ்வரி என்பவர் சாட்சியமளிக்கையில், எனது கணவர் வெளிநாடு செல்வதற்காக கொழும்பு சென்றிருந்தார். அவர் கொழும்பு சவுத் ஆசியா ஹோட்டலில் வைத்து 2007.1.12 ஆம் திகதியன்று வெள்ளை வானில் வந்தோர்களால் கடத்தி செல்லப்பட்டதாக ஹோட்டல் முகாமையாளர் எனக்குத் தெரிவித்தார்.

எனது கணவருடன் சேர்த்து 4 பேரை ஹோட்டல் அறையில் வைத்து கடத்திச் சென்றுள்ளார்கள். வெளிநாட்டிற்கு அனுப்ப சென்ற முகவரையும் சேர்த்து கடத்திச் சென்றுள்ளார்கள். இதனால் யார் கடத்தினார்கள் என்று அறிய முடியாத நிலையில் உள்ளேன்.

மட்டக்களப்பு, செங்கலடி, கிண்ணையடி போன்ற ஊர்களைச் சேர்ந்த 4 பேருமே வெளிநாடு செல்ல கொழும்பு சென்றிருந்தனர்.

வெளிநாடு செல்லும் காலம் தாமதித்ததினால் புதுவருட தினத்திற்காக வீடு வருவதற்கு உடுப்புக்களை ஆயத்தம் செய்த வேளை வெள்ளை வானில் வந்தவர்கள் யாரோ மட்டக்களப்பிலிருந்து ஆட்கள் வந்துள்ளார்களாம் எனக்கேட்டு ஹோட்டல் அறையில் இருந்தவர்களை அழைத்துச் சென்றதாக ஹோட்டல் முகாமையாளர் என்னிடம் தெரிவித்தார்.

நான் உங்களைப் போன்ற பல அமைப்புக்களிடம் முறையிட்டும் இதுவரை எவரும் கண்டு பிடித்து தரவில்லை. நான் மிக வும் கஷ்ப்பட்டு வாழ்கின்றேன். எனது கணவரை கண்டு பிடித்து தாருங்கள் என்று உருக்கமாக கேட்டுக் கொண்டார்.

வாழைச்சேனையைச் சேர்ந்த பொன்னையா கணபதிப்பிள்ளை, சாட்சியமளிக்கையில், நான் வாழைச்சேனை பிரதேச சபையில் காவலாளியாக கடமை பார்த்து வந்தேன். எனது மகன் கணபதிப்பிள்ளை வசந்தகுமார் (வயது 28) என்பவர் கல்மடு வீதி, வினாயகபுரத்தில் வைத்து 28.08.2008ஆம் ஆண்டு இரவு 8 மணியளவில் வெள்ளை வேனில் வந்தவர்களால் அவரது வீட்டுக் கதவினை உடைத்து கடத்திச் செல்லப்பட்டுள்ளார். இன்று வரைக்கும் அவர் பற்றி ஒரு தகவலும் கிடைக்கவில்லை. கல்குடா பொலிஸ் மற்றும் மனித உரிமைகள் அமைப்புக்களில் முறையிட்டும் இதுவரைக்கும் அவர் பற்றிய தகவல் கிடைக்கவில்லை.

இங்கு பல சோதனைச்சாவடிகள் இருந்தும் எவ்வாறு எனது மகனை கடத்திச் சென்றார்கள்? யார் கடத்திச் சென்றார்கள் என்று கூறுவதற்கு பயமாகவுள்ளது. யார் கடத்திச் சென்றார்கள் என்பது பற்றி அவரது மனைவிக்கு தெரியும். இதனைப் பற்றி யாரிடமா வது கூறினால் கொலை செய்யப்படுவீர்கள் என அவர் பயமுறுத்தப்பட்டுள்ளார்.

இந்தப் பயத்தில் அவர் வெளிநாடு சென்றுள்ளார். எனவே, எனது மகனை எப்படி யாவது கண்டு பிடித்து தாருங்கள் என்று கேட்டுக் கொண்டார்.

உசனார் றெஸ்சினா எல்லை வீதி, ஓட்டமாவடி 3 ஐச் சேர்ந்த உசனார் றெஸ்சினா சாட்சியமளிக்கையில், எனது கணவன் பெயர் அபுபக்கர் இல்லியாஸ் வாழைச்சேனை பொலிஸில் புலனாய்வு பிரிவில் கடமையாற்றி வந்தார்.

2007.7.10ஆம் திகதியன்று நாவலடி வாழைச்சேனையில் வைத்து கருணா குழுவினரால் சுடப்பட்டு காயமடைந்தார். இது தொடர்பாக அவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

பின்பு உடல் சுகவீனமுற்றதினால் வைத்தியசாலையில் இருந்து வீடு வந்து 15 நாட்களின் பின்பு காணாமல் போயுள்ளார்.

இது விடயமாக வாழைச்சேனை பொலிஸில் முறைப்பாடு செய்தேன். இதுவரைக்கும் எனது கணவர் கண்டு பிடிக்கப்படவில்லை. எனவே, எனது கணவரை எங்கிருக்கிறார் என்று கண்டு பிடித்து தாருங்கள் என்று கேட்டுக் கொண்டார்.

globaltamilnews

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கெல்லாம் சரத் பொன்னர்தான் காரணம் எண்டு சொல்லி அவரை இன்னும் சில வருடங்கள் உள்ளே போடலாம்..!

  • கருத்துக்கள உறவுகள்

மே மாதம் இறுதி கட்ட போரில் இளந்திரையன் புலிகளின் புலனாய்வினரால் இளந்திரையன் கொல்லப்பட்டார் என (யாழ் களத்திலும் சிலர்) மக்கள் பேசிக்கொண்ட போது திடீரென வானொலி பேட்டி ஒன்றை கொடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தார். பின்னர் அதே நாளில் ஸெல் இளந்திரையன் தாக்குதலில் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டதே?? <_<:)

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை நுணா

அவர் காயப்பட்டதாகத்தான் தகவல் வந்தது

ஆனால் காயப்பட்டது என்று சொன்னாலே போதும் தானே

மிச்சம் எல்லாம் செய்து அடக்கம் பண்ண தமிழரிடம் ஆட்கள் உண்டல்லவா.........???

Edited by விசுகு

இளந்திரையனுக்கு துரோகி பட்டம் குடுத்த கனபேர் இஞ்சை இருக்கினம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.