Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் அகவை திருத்த மாநாடு

Featured Replies

மலேசியத் தமிழர்களாகிய நாங்கள் தமிழ் செம்மொழி மீதிலான எங்கள் கோரிக்கையை இந்திய நடுவண் அரசு, தமிழக அரசு, மலேசியாவில் இந்தியத் தூதரகம், யுனெஸ்கோ ஆகிய அமைப்புகளுக்கு இதன் வழி முன் வைக்கிறோம்.

1. தமிழ் மொழியின் தொன்மை 1,500 ஆண்டுகள் என்று அறிவித்திருக்கும் இந்திய நடுவண் அரசின் அறிவிப்பை மறுக்கின்றோம்.

2. தமிழின் தொன்மை 3,000 ஆண்டுகளுக்கும் முந்தியது என இந்திய நடுவண் அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும்.

3. தமிழின் தொன்மை 1,500 ஆண்டுகள் என்ற இந்திய நடுவண் அரசின் கருத்தை உடனடியாகக் கைவிட வேண்டும்.

எமது கருத்தை உறுதிப்படுத்தும் சான்றுகள் கீழ்வருமாறு:

1. கி.மு. 1,200 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட ஆரிய வேதங்களில் தூய தமிழ்ச் சொற்கள் கலந்துள்ளன.

2. 3,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட எகிப்திய மொழி, பாபிலோனிய மொழி, எபிரேய மொழி, அரபு மொழிகளில் பழந்தமிழ்ச் சொற்கள் கலந்துள்ளன. இவ்வாறு தமிழறிஞர் தேவநேயப் பாவாணர் தமது தமிழ் வரலாறு என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

3. தமிழ்ச் சங்கங்களில் முதற் சங்கம், இடைச்சங்கம் ஆகியன பற்றி அறிவியல் சார்ந்த முடிவுகள் இல்லையென்றாலும் சங்கப் பாடல்கள் கி.மு 500 முதல் கி.பி. 100 வரையிலானது என்று முனைவர் மு. வரதராசனார் தமிழ் இலக்கிய வரலாறு என்னும் நூலில் குறிப்பதைக் கவனத்தில் கொண்டால் இலக்கியப் பொலிவு நிறைந்த சங்கப் பாடல்களின் அகவை 2,500ஐக் கடக்கிறது. இக்காலத்தில் தொல்காப்பியம் என்னும் தெளிந்த தமிழ் இலக்கண நூல் எழுத்துள்ளது. இலக்கணத் தெளிவு அமைவதற்குப் பல ஆயிரம் ஆண்டுகள் முன்னரே மொழி தோன்றி வளர்ந்திருக்க வேண்டும் என்னும் மொழியியல் கொள்கையை உளம் கொண்டால் தமிழின் தொன்மை 3,000 ஆண்டுகளுக்கு அப்பாற்பட்டது என்பது அறிவு சார் முடிவே ஆகும்.

4. திருவள்ளுவர் ஆண்டினைக் கணக்கிட்ட மறைமலை அடிகள் தலைமையிலான தமிழக அறிஞர் குழு திருவள்ளுவர் காலம் இற்றைக்கு 2041 என்று குறித்துள்ளனர்.

5. உலகச் செம்மொழிகள் பற்றிய ஆய்வினை மேற்கொண்ட யுனெஸ்கோ நிறுவனம் தமிழ் 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட செம்மொழி என்று ஒப்புக் கொண்டுள்ளது.

தமிழின் அகவையை 1,500 ஆண்டுகள் என்று குறித்திருக்கும் இந்திய நடுவண் அரசின் முடிவால் தமிழுக்கு

நேரவிருக்கும் கேடுகளைக் கீழ்வருமாறு விளக்குகிறோம்.

1. யுனெஸ்கோ நிறுவனம் அதன் உலகச் செம்மொழி வரிசையிலிருந்து தமிழை நீக்கிவிடுவதோடு தமிழுக்கு வழங்கிய தகுதிப்பாடுகளை மீட்டுக்கொள்ளவும் முடிவு செய்யலாம்.

2. இந்தியச் செம்மொழிகள் நடுவண் அரசின் கல்வி அமைச்சக நிதி உதவிகளைப் பெறும் நிலையில் தமிழ் பண்பாட்டு அமைச்சின் மிகச் சிறிய நிதி ஒதுக்கீட்டையே பெறுகிறது. எடுத்துக்காட்டு: சமற்கிருதம் 1,400 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டைப் பெற்றிருக்கும் வேளையில் தமிழ் 3 கோடி 32 இலட்சம் ரூபாய் மட்டுமே நிதியுதவி பெற்றுள்ளது.

3. தமிழர் புலம் பெயர்ந்த நாடுகளில் தமிழின் நிலை இழியும். ஆங்குள்ள பல்கலைக் கழகங்களில் தமிழ் ஆய்வுகள் நலிவடையும்.

4. தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் தாய் என்ற தகுதியை இழக்கும்.

எமது ஐயம்:

தமிழின் தொன்மையை மிகுதியும் அண்மைப்படுத்திய நடுவண் அரசின் செயல் தமிழின்பால் நடுவண்

அரசு கொண்டிருக்கும் காழ்ப்புணர்ச்சியைப் புலப்படுத்துவதாக ஐயம் கொள்வதற்கு இடம் தருகிறது. சமற்கிருத மொழிக்கு நிகராகவோ மூத்ததாகவோ தமிழை வைத்துவிடக் கூடாது என்ற எண்ணமே தமிழின் தொன்மையைக் குறைத்து மதிப்பிட்டமைக்குக் காரணம் என்ற ஐயத்தையும் நடுவண் அரசின் முடிவு உள்ளடக்கியுள்ளது.

எனவே, நடுநிலை மொழி அறிஞர்களின் கருத்தை ஏற்று தமிழின் தொன்மையை 3,000 ஆண்டுக்கு முந்தியது என்று அறிவிப்பதோடு இந்தியக் கல்வி அமைச்சின் கீழ் செம்மொழித் தமிழை வைத்து செம்மொழி விதிமுறைகளின் கீழ் உள்ள தகுதிப்பாடுகளைத் தமிழுக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

இக்கோரிக்கை மலேசியத் தமிழரது மட்டுமன்று, உலகத் தமிழர் அனைவரும் இதனையே கடந்த காலங்களில் வற்புறுத்தி வந்துள்ளனர். மலேசியத் தமிழர் அமைப்பு முறையில் இந்திய நடுவண் அரசை வற்புறுத்துவது போன்று உலகத் தமிழர் அனைவரும் தத்தம் அமைப்புகள் வழி இந்திய நடுவண் அரசை வற்புறுத்த வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழின் அகவை மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தியது என்று இந்திய நடுவண் அரசு திருத்த அறிக்கை வெளியிடும் வரை இந்தப் போராட்டம் தொடரும். தொடர வேண்டும்.

மலேசியா, அரசு சாரா அமைப்புகளின் தமிழ் செம்மொழி அகவைத் திருத்தக் குழுவின் சார்பில் இவ்வறிக்கை வெளியிடப்படுகிறது.

தமிழ் செம்மொழி அகவை திருத்த மாநாடு

அக்டோபர் 24, 2010

ஈப்போ சாலை, 31/2 கல், டேவான் முத்தியாரா, கோலாலம்பூர்

தமிழ் மொழி போற்றும் அரசு சாரா அமைப்புகளின் ஏற்பாடு

தமிழ் சார் அமைப்புகள் அனைத்தும் கலந்துகொள்ள அழைக்கிறோம்!

முனைவர் நாகப்பன் ஆறுமுகம்

14 அக்டோபர் 2010

மின்னஞ்சல்: arunagappan81@gmail.com

http://www.malaysiaindru.com/?p=54400

  • கருத்துக்கள உறவுகள்

காங்கிரசு ஆட்சி ஒன்னுக்கு குடுத்தால் இன்னுன்னுக்கு தகறாறு வருமென்று 1500 தமிழுக்கு குறைத்து .. அனைத்துக்கும் செம்மொழி அந்தஸ்து குடுத்துவிட்டது ... அதை தெலுங்கு முத்துவடுகரும் மானசீகமாக ஆசிர்வதிர்த்தார்.. போக மலையாளிகளும் இதோ ஆரம்பித்திவிட்டார்கள்..

மலையாளத்தை செம்மொழியாக்க பிரதமரிடம் கேரளா கோரிக்கை

திருவனந்தபுரம்: மலையாளத்தையும் செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்று கேரளா கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக கேரள மாநில கல்வித்துறை அமைச்சர் [^] எம்.ஏ.பேபி தலைமையிலான கேரள அனைத்துக் கட்சிக் குழுவினர் பிரதமர் மன்மோகன் சிங் [^]கை நேரில் சந்தித்துப் பேசினர். பின்னரிடம் கோரிக்கையை வலியுறுத்தி பிரதமரிடம் மனு அளித்தனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேபி கூறுகையில், மலையாள மொழி 1000 ஆண்டு பழமை வாய்ந்த தொன்மையான மொழியாகும். தென் இந்திய மொழிகளிலே செம்மொழியாவதற்கு மலையாளத்துக்கு அனைத்து தகுதியும் இருக்கிறது.

தமிழ், தெலுங்கு [^], கன்னடம் ஆகிய மொழிகளை விட மலையாள மொழி தெய்வீகதன்மை கொண்டது ஆகும். எனவே மலையாளத்தை செம்மொழியாக அறிவிக்குமாறு பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளோம் என்றார்.

http://thatstamil.oneindia.in/news/2010/05/07/malayalam-classical-language-kerala.html

டிஸ்கி :

போக.. தனித்தனியா ஏட்டிக்கு போட்டியாக வெளிநாடுகளில் தமிழ் சார்ந்த மாநாடுகளை நடத்துவதன் மூலம் தமிழுக்கான "இந்திய" மற்றும் "திராவிட" சாயங்களை ஈழத்தோழர்கள் வெளுக்க வைக்கலாம்... கூடுமானவரை தமிழக அரசியல் கைத்தடிகளை அழைப்பதை அந்த மாநாட்டில் தவிர்த்து கொள்ளவேணும்.. இது மறைமுகமாக இந்திய சாயம் பூசவதன் அறிகுறியாகும் :wub:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.