Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பீரிஸ் லண்டன் வருகை (பட இணைப்பு)

Featured Replies

லண்டனில் நேற்று செவ்வாய்க்கிழமை மதியம் 12:30 மணிமுதல் மாலை 3:30 மணிவரை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அவர் கலந்துகொள்ளும் மாநாட்டைக் கண்டித்தும் நூற்றுக்கணக்கான லண்டன் வாழ் தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரித்தானிய தலைநகர் லண்டனில் உள்ள டெம்பிள் (TEMPLE) பகுதியில் அமைந்துள்ள மாநாடு நடைபெறும் அருண்டேல் ஹவுஸ் (ARUNDEL HOUSE) மண்டபத்திற்கு முன்பாகக் கூடிய நூற்றுக்கணக்கான தமிழர்கள், ஜி.எல்.பீரிசின் மாநாட்டை எதிர்த்துக் கோஷமிட்டனர்.

காலநிலை ஒத்துழைக்காது மழை பொழிந்தபோதும் அங்குகூடிய மக்களில் ஒருவர் கூட விலகிச் செல்லாது அங்கேயே கூடிநின்று தமது எதிர்ப்பைத் தெரிவித்திருந்தனர்.

அத்தோடு அவ்வழியாக சென்ற வேற்றின மக்களுக்குத் துண்டுப் பிரசுரங்களும் வழங்கப்பட்டன. அதில் இலங்கை அரசின் போர்க் குற்றங்கள், மற்றும் இலங்கையில் தொடர்ந்தும் தமிழர்கள் அடக்கப்பட்டும், படுகொலைசெய்யப்பட்டும் வருவது போன்ற விபரங்கள் அடங்கியிருந்தன.

பிரித்தானிய தமிழர் பேரவையால் குறுகியகால அவகாசத்தில் ஒழுங்குசெய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், வேலை நாளாக இருந்தும் கொட்டும் மழையிலும் கூட நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=27958

தொடர்பு பட்ட செய்தி

ஜி.எல்.பீரிஸ் பிரித்தானியா வருகை – எதிர்ப்புத் தெரிவிக்குமாறு தமிழர் பேரவை அழைப்பு

http://www.yarl.com/forum3/index.php?showtopic=76453

இலண்டன் வரும் பீரிசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=76432

லண்டனில் பீரிஸிற்கு எதிரான போராட்டம் - தமிழர் பேரவை நன்றி தெரிவிப்பு

சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் பிரித்தானியாவிற்குப் பயணம் மேற்கொண்டிருந்தபோது அவரது பயணத்திற்கும், சிறீலங்கா அரசின் பரப்புரை இயந்திரத்திற்கும் ஆயிரக் கணக்கில் தமிழ் மக்கள் ஒன்று திரண்டு தமது எதிர்ப்பைத் தெரிவித்திருந்தனர்.

பிரித்தானிய தமிழர் பேரவை விடுத்த அழைப்பிற்கு இணங்க லண்டனிலுள்ள ஏனைய தமிழ் அமைப்புக்களும் இணைந்து குறுகிய காலத்தில் இந்த எதிர்ப்பு நடவடிக்கையை ஏற்பாடு செய்திருந்த நிலையில், வேலை நாளாக இருந்தும் கடும் குளிர், மழையின் மத்தியில் மக்கள் ஆயிரக் கணக்கில் திரண்டு தமது எதிர்ப்பைத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் கலந்துகொண்ட மக்களிற்கும், ஒழுங்கமைப்பில் இணைந்து பணியாற்றிய ஏனைய தமிழ் அமைப்புக்களிற்கும், ஊடகங்களிற்கும் பிரித்தானிய தமிழர் பேரவை தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகின்றது.

International Institute for Strategic Studies (IISS) என்ற அமைப்பு நேற்று (செவ்வாய்க்கிழமை) லண்டனில் நடத்திய மாநாட்டில் சிறப்புரை ஆற்றுவதற்காக பீரிஸ் பிரித்தானியா வந்திருந்தார். பயங்கரவாதத்தை முறியடித்தல், நாடுகடந்த பயகரவாத முன்னணி அமைப்புக்கள், இலங்கையில் இனப் பிரச்சினைக்குப் பின்னரான அபிவிருத்திச் செயற்பாடுகள், மற்றும் இலங்கை – பிரித்தானிய உறவு போன்ற விடயங்கள் இந்த மாநாட்டில் ஆராயப்பட்டிருந்தன.

பீரிஸ் மாநாட்டில் கலந்து கொண்டிருந்த ஏக காலத்தில் மாநாட்டு மண்டபத்திற்கு வெளியே திரண்ட தமிழ் மக்கள், சிறீலங்கா அரசின் தமிழ் மக்கள் மீதான இனப் படுகொலையை தெளிவுபடுத்தும் பதாகைகள், நிழற்படங்களைத் தாங்கியவாறு, அனைத்துலக சுயாதீன போர்க் குற்ற விசாரணையை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பியிருந்தனர். அத்துடன், துண்டுப் பிரசுரங்களையும் வழங்கினர்.

பீரிஸ் தனது அரசுக்கான பரப்பரையில் ஈடுபட்டிருந்தபோது நண்பகல் 12:00 மணி முதல் பிற்பகல் 3:30 மணிவரை தமிழ் மக்கள் அணி திரண்டு தமது எதிர்ப்பைத் தெரிவித்தமை, மற்றும் இறுதிப் போரின்போது கொல்லப்பட்டவர்கள் என கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டுள்ள நிழற்படங்கள் என்பவற்றை அவதானித்த வெளிநாட்டு ஊடகவியலாளர் ஒருவர், சிறீலங்கா அரசின் உண்மைத் தன்மை பற்றிய கேள்வி எழுவதாகச் சுட்டிக்காட்டினார்.

போர்க் குற்றங்களை எடுத்துக்காட்டும் வகையிலான, இறுதிப் போரில் கொல்லப்பட்டவர்களில் மேலும் சிலரின் நிழற்படங்களை கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரித்தானிய ஊடகங்கள் வெளியிட்டிருந்தன.

Protest_aginst_srilankan_gov191010London1.jpg

Protest_aginst_srilankan_gov191010London2.jpg

Protest_aginst_srilankan_gov191010London3.jpg

Protest_aginst_srilankan_gov191010London4.jpg

Protest_aginst_srilankan_gov191010London5.jpg

Protest_aginst_srilankan_gov191010London6.jpg

Protest_aginst_srilankan_gov191010London7.jpg

Protest_aginst_srilankan_gov191010London8.jpg

Protest_aginst_srilankan_gov191010London9.jpg

Protest_aginst_srilankan_gov191010London10.jpg

Protest_aginst_srilankan_gov191010London11.jpg

Protest_aginst_srilankan_gov191010London12.jpg

Protest_aginst_srilankan_gov191010London13.jpg

Protest_aginst_srilankan_gov191010London14.jpg

Protest_aginst_srilankan_gov191010London15.jpg

Protest_aginst_srilankan_gov191010London16.jpg

Protest_aginst_srilankan_gov191010London17.jpg

Protest_aginst_srilankan_gov191010London18.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.