Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நீங்கள் எல்லோரும் புலிகளுக்குப் பின்னால் திரிந்தவர்கள். எனக்கு அனைத்தும் தெரியும். நான் நினைத்தால்"... ‐ இராணுவ உடைகளைந்து வெள்ளை உடை போரத்தியுள்ள சந்திரசிறீ குமுறுகிறார்‐ யாழ்ப்பாணத்தாண்டி,,,

Featured Replies

நீங்கள் எல்லோரும் புலிகளுக்குப் பின்னால் திரிந்தவர்கள். எனக்கு அனைத்தும் தெரியும். நான் நினைத்தால்...." மூடிய அறைக்குள் வைத்து வெடித்துக் கொண்டிருந்தார் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி. வடக்கு மாகாண ஆளுநரான அவர் முன்னாள் யாழ். மாவட்ட இராணுவத்தளபதியும் கூட. நடுவிலேயே கலைந்துபோன இராணுவத்தளபதி கனவுகளும் அவரிடம் இப்போதும் எஞ்சியுள்ளது.

எந்தவித முகாந்தரமும் இன்றி கிளிநொச்சி வலய கல்விப் பணிப்பாளர் திடீரென தண்டனை இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார். ஆணைப் பெண்ணாக்கும் அல்லது பெண்ணை ஆணாக்கும் மகிமை தவிர்ந்த எல்லா அதிகாரமும் கொண்டவர். சிலவேளை வானளாவிய அதிகாரமும் கொண்டவரென கூறிக்கொள்ளும் சந்திரசிறியே இவ்விடமாற்றத்தை செய்திருந்தார்.

ஆனாலும் அவருக்கும் எதிர்வினை இருந்தது. அதை அவரால் ஜீரணிக்கவும் முடியாமலும் இருந்தது. வழமையாக கல்லால் அடிக்க, கால்களுக்குள் வாலை சுருட்டி ஓடும் உயிரினமாகவே வடபகுதி அரச அதிகாரிகள் இருந்து வருகின்றனர். குருகுலராஜா விடயத்தில் பெரும்பாலானவர்கள் அவ்வாறு போக தயாராகவில்லை. ஏனெனில் நாளை தமக்கும் இது நேரலாமென அவர்களும் நம்புகின்றனர். எல்லாவற்றிற்கும் அப்பால் வன்னி இறுதி யுத்தம் வரை அவர் மக்களுடனேயே வாழ்ந்திருந்தார். மீண்டும் கிளிநொச்சியை கட்டியெழுப்ப அவர் தன்னை அர்ப்பணித்திருந்தார்.

குருகுலராஜாவின் இடமாற்றத்தை கண்டித்து சக பணியாளர்கள் மற்றும் அதிபர்கள் முதலில் பணிப்புறக்கணிப்பில் குதித்திருந்தனர். அடுத்தடுத்த நாட்களில் பாடசாலை மாணவர்களும் போராட்டத்தில் குதிக்கப்போவதாக எச்சரித்தனர். குதிரைகள் திரும்பி உதைக்கத் தொடங்கியதையடுத்து மந்திரி சந்திரசிறி விழித்துக் கொண்டார்.

அவசர அவசரமாக அனைவரும் வவுனியாவுக்கு அழைக்கப்பட்டனர். அழைக்கப்பட்டவர்களுக்கு சந்திரசிறி விடுத்த எச்சரிக்கையே நீங்கள் முதல் பந்தியில் வாசித்தவை. மூடிய அறைக்குள் வைத்து ஆளுனரால் குருகுலராஜாவிற்கு சொல்லப்பட்ட உபதேசங்கள் வெளியே தெரியவராதவை. ஆனாலும் அவருக்கு வன்னியிலிருந்து திரும்பிக்கிடைத்த முதல் அடி அது.

யாழ் மாவட்டத்தில் இடம்பெற்ற ஆயிரத்திற்கும் அதிகமான காணாமல் போதல் மற்றும் படுகொலைகள் தொடர்பில் சந்திரசிறி மீதே கடும் குற்றச்சாட்டுக்கள் உள்ளன. அவரது வழிநடத்தலிலேயே இவை இடம் பெற்றதாகவும், சர்வதேச ரீதியிலும் விசாரணைகள் கோரப்படுகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக, சரத்பொன்சேகாவிற்கு பின்னராக, இராணுவத்தளபதி பதவியை அப்போது அவர் எதிர்பார்த்துமேயிருந்தார். ஆனாலும் சரத்பொன்சேகாவின் சேவை நீடிப்புக்களால் சோர்வுற்று ஓய்வு பெற்ற சந்திரசிறிக்கு அப்போது கிடைத்த ஆறுதல் பரிசே ஆளுனர் பதவி.

அரச நிர்வாகத்தையும், இராணுவ நிர்வாகம் போல நடத்துவதாகவே சந்திரசிறி மீது

குற்றச்சாட்டு. எடுத்ததற்கெல்லாம் வீட்டிற்கு அனுப்பி வைப்பதோ, தண்ணியில்லா காட்டிற்கோ மாற்றுவது அவர் பாணி. அதுவும் தேர்ந்ததோர் அரசியல்வாதிபோன்று.

வடக்கு மாகாண சபையின் முக்கிய பதவிகளில், தனக்கு இசைவான, வாயில்லா பூச்சிகளை முதலில் நியமித்துக் கொண்டார். ஒருமுறை இப்போதய பிரதம செயலாளர் இது பற்றி கூறுகையில், நாங்கள் வெறுமனே கதிரைகளை அலங்கரிக்கும் பொம்மைகளாக இருக்கின்றோம் என்றார். உண்மையில் பெரும்பாலானவர்கள் அவ்வாறே இருக்கின்றனர்.

ஏனெனில் திருகோணமலை முன்னணிப்பாடசாலைகளில் கல்வி கற்கும் தமது பிள்ளைகளின் எதிர்காலம் அவர்களுக்கு முக்கியமானதாகவும் இருந்தது.

உண்மையில் கிளிநொச்சியில் நடந்ததென்ன. வன்னிக்கு அடிக்கடி இப்போது விஜயம்

செய்யும் இளவரசர் நாமல் ‐ மின்னல் ரங்கா கும்பல், அரசியல்வாதிகளென்ற வகையினில் உறுதிமொழிகளை மக்களுக்கு அள்ளி வாரி வழங்கி வருகின்றது. அதுவும் ஜனாதிபதி மகிந்த பாணியில். வன்னி யுத்த நடவடிக்கையின்போது முற்றாக இடிந்து தரைமட்டமாக்கப்பட்ட இரு பாடசாலைகளை கட்டியெழுப்ப அவ்வாறே உறுதி வழங்கப்பட்டது. அத்துடன் அவசர அவசரமாக நாமல் ‐ சந்திரசிறி கூட்டு அப் பாடசாலைக்கான அடிக்கல்லையும் நாட்டி விட்டு சென்றது.

ஆனால் பிரச்சினை கட்டப்படப்போவதாக உறுதி கூறப்பட்ட பள்ளிக்கூட கட்டிட வேலைக்கு ஒரு சதம் தானும் பணம் வழங்கப்பட்டிருக்கவில்லை. நிதியே வழங்கப்படாத நிலையில் கட்டிடங்களை கட்டுவது எப்படியென்ற கேள்வி கல்வித்திணைக்கள அதிகாரிகளுக்கு. திருகோணமலையிலுள்ள வடக்கு மாகாணசபை அதிகாரிகளுக்கோ, நிதியை தேடுவதிலேயே நீண்ட நாட்கள் கடந்தது.

மீண்டும் திக்விஜயம் வந்த இளவரசர் நாட்டப்பட்ட அடிக்கல்லுடனேயே பாடசாலைகளை கண்டு சீற்றமுற்றார். மந்திரியை கூப்பிட்டு மங்களம் வாசிக்க, அவருக்கு தான் தப்பிக்க அகப்பட்டவரே குருகுலராஜா. அரசனதும் இளவரசரிடமிருந்தும் தன் கதிரை காப்பாற்ற வேண்டிய தேவை மந்திரிக்கு.

சாத்தியமான நடைமுறைகள் பற்றி ன்றுமே சிந்திக்க தெரியாதவரென சந்திரசிறி மீது

விமர்சனம் உண்டு அது பணியிலிருந்த இராணுவ கட்டமைப்பு காரணமாக இருக்கலாம். அங்கு பிறப்பிக்கப்படும் உத்தரவுக்காக உயிர் கொடுக்கப்போவது சாதாரண சிப்பாய்களே

இருந்தனர்.

வடக்கு மாகாண சபையின் செயலர் ஒருவரும் இவ்வாறு தன் கீழ்நிலை அதிகாரிகளுக்கு கூறினாராம். ஆளுனர் எந்த உத்தரவை போட்டாலும் மறுதலிக்க வேண்டாம். முதலில் ஆம் என கூறுங்கள். பின்னர் அமுல்படுத்துவது பற்றி பார்க்கலாம். இவை ஆளுனர் தொடர்பில் சக அதிகாரிகளிடையே உள்ள அச்சங்கலந்த நிலையை வெளிப்படுத்தும் சில வரிகளே.அரச நிர்வாகத்தையும், இராணுவ நிர்வாகம் போல நடத்துவதாகவே சந்திரசிறி மீது

குற்றச்சாட்டு. எடுத்ததற்கெல்லாம் வீட்டிற்கு அனுப்பி வைப்பதோ, தண்ணியில்லா காட்டிற்கோ மாற்றுவது அவர் பாணி. அதுவும் தேர்ந்ததோர் அரசியல்வாதிபோன்று.

வடக்கு மாகாண சபையின் முக்கிய பதவிகளில், தனக்கு இசைவான, வாயில்லா பூச்சிகளை முதலில் நியமித்துக் கொண்டார். ஒருமுறை இப்போதய பிரதம செயலாளர் இது பற்றி கூறுகையில், நாங்கள் வெறுமனே கதிரைகளை அலங்கரிக்கும் பொம்மைகளாக இருக்கின்றோம் என்றார். உண்மையில் பெரும்பாலானவர்கள் அவ்வாறே இருக்கின்றனர்.

ஏனெனில் திருகோணமலை முன்னணிப்பாடசாலைகளில் கல்வி கற்கும் தமது பிள்ளைகளின் எதிர்காலம் அவர்களுக்கு முக்கியமானதாகவும் இருந்தது.

உண்மையில் கிளிநொச்சியில் நடந்ததென்ன. வன்னிக்கு அடிக்கடி இப்போது விஜயம்

செய்யும் இளவரசர் நாமல் ‐ மின்னல் ரங்கா கும்பல், அரசியல்வாதிகளென்ற வகையினில் உறுதிமொழிகளை மக்களுக்கு அள்ளி வாரி வழங்கி வருகின்றது. அதுவும் ஜனாதிபதி மகிந்த பாணியில். வன்னி யுத்த நடவடிக்கையின்போது முற்றாக இடிந்து தரைமட்டமாக்கப்பட்ட இரு பாடசாலைகளை கட்டியெழுப்ப அவ்வாறே உறுதி வழங்கப்பட்டது. அத்துடன் அவசர அவசரமாக நாமல் ‐ சந்திரசிறி கூட்டு அப் பாடசாலைக்கான அடிக்கல்லையும் நாட்டி விட்டு சென்றது.

ஆனால் பிரச்சினை கட்டப்படப்போவதாக உறுதி கூறப்பட்ட பள்ளிக்கூட கட்டிட வேலைக்கு ஒரு சதம் தானும் பணம் வழங்கப்பட்டிருக்கவில்லை. நிதியே வழங்கப்படாத நிலையில் கட்டிடங்களை கட்டுவது எப்படியென்ற கேள்வி கல்வித்திணைக்கள அதிகாரிகளுக்கு. திருகோணமலையிலுள்ள வடக்கு மாகாணசபை அதிகாரிகளுக்கோ, நிதியை தேடுவதிலேயே நீண்ட நாட்கள் கடந்தது.

மீண்டும் திக்விஜயம் வந்த இளவரசர் நாட்டப்பட்ட அடிக்கல்லுடனேயே பாடசாலைகளை கண்டு சீற்றமுற்றார். மந்திரியை கூப்பிட்டு மங்களம் வாசிக்க, அவருக்கு தான் தப்பிக்க அகப்பட்டவரே குருகுலராஜா. அரசனதும் இளவரசரிடமிருந்தும் தன் கதிரை காப்பாற்ற வேண்டிய தேவை மந்திரிக்கு.

சாத்தியமான நடைமுறைகள் பற்றி ன்றுமே சிந்திக்க தெரியாதவரென சந்திரசிறி மீது

விமர்சனம் உண்டு அது பணியிலிருந்த இராணுவ கட்டமைப்பு காரணமாக இருக்கலாம். அங்கு பிறப்பிக்கப்படும் உத்தரவுக்காக உயிர் கொடுக்கப்போவது சாதாரண சிப்பாய்களே

இருந்தனர்.

வடக்கு மாகாண சபையின் செயலர் ஒருவரும் இவ்வாறு தன் கீழ்நிலை அதிகாரிகளுக்கு கூறினாராம். ஆளுனர் எந்த உத்தரவை போட்டாலும் மறுதலிக்க வேண்டாம். முதலில் ஆம் என கூறுங்கள். பின்னர் அமுல்படுத்துவது பற்றி பார்க்கலாம். இவை ஆளுனர் தொடர்பில் சக அதிகாரிகளிடையே உள்ள அச்சங்கலந்த நிலையை வெளிப்படுத்தும் சில வரிகளே.

உண்மையில் வடக்கு மாகாண அரச அதிகாரிகள் எல்லோருமே நடுங்கிக்கொண்டே

இருக்கின்றார்கள். எவ்வேளையும் வீட்டுக்கு அனுப்பப்படலாம் அல்லது கதிரைகள்

பறிக்கப்படலாமென்ற நிலை. அண்மை காலங்களில் சாவகச்சேரி நகர சபை செயலர்,

கரைச்சி பிரதேச சபை செயலாளரென பலர் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு கல்விப்பணிப்பாளர், கிளிநொச்சி உள் ஊராட்சி உதவி ஆணையாளரென பலர் மாற்றியடிக்கப்பட்டுள்ளனர். இவை உதாரணமேயன்றி, பட்டியல் பெரிது.

தமிழீழ நாயக கோட்பாட்டின் தலைநகரென வர்ணிக்கப்படுவது திருகோணமலை. வடக்கு மாகாண சபையின் தலைமையும் மாகாண சபைகள் உருவான காலம் முதல் அங்கேயே செயல்பட்டு வந்தது. தமிழீழ தாயக கோட்பாடு சிதைக்கப்படுவது போன்றே, திருகோணமலை தலை நகர் கனவும் அரசால் சிதைக்கப்பட்டு வருகின்றது. அவ்வகையில் வடக்கு, கிழக்கு மாகாண சபைகளது தலைநகரங்களை திருமலையிலிருந்து மாற்றியடிப்பதில் அரச உயர் மட்டம் முனைப்புக்காட்டி வருகின்றது.

அரசின் இம்முனைப்பை அமுல்படுத்துவதில் சந்திரசிறி தற்போது முனைப்புக் காட்டி

வருகின்றார். அவ்வகையில் வடக்கு மாகாண சபையினை யாழ்ப்பாணத்திற்கு மாற்ற

தற்போது முடுக்கிவிடப்பட்டுள்ளது. தனியார் கட்டிடங்களும் வாடகைக்கு பெறப்பட்டுள்ளன. சில இடங்களில் அரைகுறை கட்டிடங்கள் அவசர அவசரமாக

பூரணப்படுத்தப்பட்டும் வருகின்றது.

சமாதான காலத்தில் வடக்கிற்கான நிர்வாக மையமாக மாங்குளத்தையே விடுதலைப்புலிகள் முன்மொழிந்தனர். ஆனால் ஆளுனரது செல்லப்பிள்யாகி இருக்கும் முன்னாள் கிளிநொச்சி அரச அதிபர் இராசநாயகமோ, கிளிநொச்சிக்கு அதனை கொண்டு போக முனைப்பு கொண்டிருந்தார். அரச உயர் மட்டம் அது தொடர்பில் விருப்பம் கொண்டிருக்கவில்லை. இந்நிலையில் யாழ்ப்பாணத்திற்கு மாகாணசபை நகர்கின்றது. ஆனாலும் அதுகூட தற்காலிகமென கூறப்படுகின்றது.

முன்னாள் இராணுவத்தளபதி பொன்சேகாவின் நெருங்கிய நண்பராக ஒரு காலத்தில்

சந்திரசிறியே இருந்தார். தனக்கு பின்னதாக சந்திரசிறியை அப்பதவிக்கு கொண்டு

வருவதிலும் பொன்சேகா ஆர்வம் கொண்டிருந்தார்.

ஜனாதிபதி தேர்தலின் போது நிலைமை தலைகீழாக மாறியிருந்தது. சரத்பொன்சேகாவுடன் ஒரு பகுதி படை அதிகாரிகள் சாய சந்திரசிறியை கோத்தபாய கவனிக்க தொடங்கினார். சந்திரசிறிக்கோ இருதலைக் கொள்ளி எறும்பு நிலை. ஆனாலும் சுதாரித்து அரச பக்கம் சென்றார். நண்பரை கைவிட்டார்.

என்னும் இன்றுவரையும் சந்திரசிறி தொடர்பில் அரச உயர் மட்டம் முழுமையான

நம்பிக்கை கொண்டிருக்கின்றதா என்பது கேள்விக்குறியே. அதனால் எந்நேரமும் பறிபோகலாமென்ற அச்சத்திலேயே அவர் தனது கதிரையில் உட்காந்திருக்கின்றார்.அதனால் தன் கதிரையை காப்பாற்ற எவ்வளவு பலியையும் கொடுக்கவும் அவர் தயாராகவே உள்ளா

GTN

Edited by நிழலி

இப்படித்தான் டக்ள்ஸ் தேவானந்தாவும் அடிக்கடி யாழ் தமிழ் அரச அதிகாரிகளை மிரட்டி கொண்டிருந்தார்/ கொண்டிருக்கிறார்

இதை போல பல தமிழ் அதிகாரிகளும் தமிழ் மக்களை மிரட்டி வருகிறார்கள்

உ+ம்

கிளி அரச அதிபர்

முல்லை புது. உதவி அரசாங்க அதிபர்-தயானந்தா

இப்படியே ......

  • கருத்துக்கள உறவுகள்

போர் முடிந்த பின், தமிழ் பகுதிகளில் சிங்கள ஆளுநரை நியயமிக்காமல் தமிழ் ஆளுநர், மற்றும் தமிழ் உயரதிகாரிகளை அரசு நியமித்திருக்க வேண்டும். ஆனால் சிங்களம் இதனை என்றுமே செய்யப் போவதில்லை. அவர்களின் மொழியில் தமிழர் அடிமைகள், அவர்கள் கொடுப்பதை வாங்கிக் கொண்டு.... வாய் பேசாமல் இருக்க வேண்டும் என்பதையே விரும்புகின்றார்கள்.

புலிகளின் காலத்தில் ஒரு ஆட்ச்சி மட்டும் தான் அங்கு நிகழ்ந்தது... இப்போ அதிகாரம் உள்ளவன் ஆயுதம் வைத்து இருப்பவன் எல்லாம் ஆட்ச்சி நடத்துகிறான் விரும்பியபடி செய்கிறான்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.