Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆஸிக்கு அரசியல் தஞ்சம் தேடி வந்த தமிழ் குடும்பத்தின் அவல நிலை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆஸிக்கு அரசியல் தஞ்சம் தேடி வந்த தமிழ் குடும்பத்தின் அவல நிலை!

திங்கட்கிழமை, 22 நவம்பர் 2010 07:00

ஆஸ்திரேலியாவில் அரசியல் தஞ்சம் பெறவும் முடியாமல், இலங்கைக்கு திரும்பவும் செல்லவும் முடியாமல் இக்கட்டில் மாட்டுப்பட்டு இருக்கின்றது ஒரு தமிழ் குடும்பம். பிள்ளைகளான அற்புதா இராகவன் ( வயது-06), அபிநயன் இராகவன் ( வயது-03) ஆகியோருடன் கடந்த வருடம் ஆஸிக்கு படகு மூலம் புறப்பட்டு வந்தவர் சுமதி இராகவன்.

ஆஸியின் சுங்கக் கப்பலான ஓசியானிக் வைக்கிங் ஆல் இடைமறிக்கப்பட்ட அகதிகள் குழுவைச் சேர்ந்தவர். இவரை தொடர்ந்து சுமார் மூன்று மாதங்களுக்கு பின் படகு ஒன்றில் கணவன் யோகச்சந்திரா இராகவனும் வந்து சேர்ந்தார். ஓசியானிக் வைக்கிங் கப்பலால் இடைமறிக்கப்பட்ட அகதிகளுக்கு விசேட ஏற்பாட்டின் கீழ் அரசியல் தஞ்சம் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் சுமதிக்கோ, பிள்ளைகளுக்கோ அரசியல் தஞ்சம் கிடைக்கவில்லை. சுமதி கிளிநொச்சியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நீதிமன்றத்தில் எழுதுவினைஞராக கடமையாற்றி இருக்கின்றார். இந்நிலையில் ஆஸியின் ஆஸ்திரேலிய பாதுகாப்பு புலனாய்வு ஸ்தாபனம் சுமதி அந்நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்தானவர் என்று பிரகடனப்படுத்தி உள்ளது.

கணவன் இராகவனும் அந்நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஆனவர் என இப்புலனாய்வு ஸ்தாபனத்தால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளார். ஆரம்பத்தில் கிறிஸ்மஸ்தீவில் அடைத்து வைக்கப்பட்டு இருந்தனர். சுமதி கர்ப்பவதி. கிறிஸ்மஸ் தீவில் பிரசவ வசதிகள் போதாது. எனவே தலைநகர் சிட்னிக்கு கொண்டு வரப்பட்டு Villawood பிரதேசத்தில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குழந்தை பிறந்து விட்டது. இங்கு 24 மணிநேரமும் கண்காணிக்கப்படுகின்றனர். எந்நேரமும் இரு உத்தியோகத்தர்கள் இவ்வீட்டில் கண்காணிப்புப் பணியில். மின்னஞ்சல் பயன்படுத்தத் தடை. மட்டுப்படுத்தப்பட்ட தொலைபேசி உரையாடல். அனுமதிக்கப்பட்டவர்களுடன் மாத்திரம் தொலைபேசியால் பேசலாம். எந்நேரமும் வீட்டுக்கு வெளியில் ஒரு வாகனம் காத்திருக்கின்றது.

அதில் ஒரு உத்தியோகத்தர். வீட்டில் என்ன நடக்கின்றது? என்பதை யன்னல் ஊடாக கண்காணித்துக் கொண்டிருக்கின்றார். வெளியில் புறப்பட்டுச் சென்று வருகின்றமையிலும் மட்டுப்பாடுகள். புதிய குழந்தையின் ஆரோக்கியம் நல்ல நிலையில் உள்ளது என்று மருத்துவ நிபுணர்களால் சிபாரிசு செய்யப்பட்டால் ஆஸி. அரசு இவர்களை மீண்டும் கிறிஸ்தீவுக்கு அனுப்பி வைக்கும்.

”இலங்கைக்கு திரும்பிச் சென்றால் உடல் ரீதியான சித்திரவதை. ஆஸியில் இங்கு உள ரீதியான சித்திரவதை. மிகவும் மனம் உடைந்து போய் உள்ளோம்.” இவ்வாறு கூறினார் இராகவன். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு வைத்திருக்கவில்லை என்கிறார் இராகவன். கிளிநொச்சியில் கோழிப்பண்ணை வைத்திருந்தார் என்கிறார்.

மனைவி புலிகளின் நீதிமன்றத்தில் கடமையாற்றியமையை ஒப்புக் கொண்டார். இறுதி யுத்தத்தில் இடம்பெயர்ந்து வவுனியா- மனிக் பாம் முகாமில் தங்கி இருந்தனர் என்றும் மனிக் பாம் முகாமில் தங்க வைக்கப்பட்டு இருந்தவர்கள் அடிக்கடி காணாமல் போனார்கள் என்றும் இருவர் இராகவனை தேடி வந்து விசாரித்தமையை அடுத்தே நாட்டை விட்டு தப்பி வந்தனர் என்றும் கூறுகின்றார்.

இலங்கைக்கு திரும்பவும் செல்லவோ, ஆஸியில் அகதி அந்தஸ்து பெற்று வாழவோ முடியாத நிலை என்று வருத்தத்துடன் கூறுகின்றார். "எமது வாழ் நாளில் அரைவாசி இலங்கையில் வீணாகி விட்டது. எனவே மிகுதி வாழ் நாளையும் வீணாக்க விரும்பவில்லை.

எமது வாழ் நாள் வீணானது போன்று பிள்ளைகளின் வாழ் நாளும் வீணாகி விடக் கூடாது. ஆஸ்திரேலியா அரசியல் தர வேண்டும். பிள்ளைகள் ஆஸியில் வாழ வேண்டும்." இவ்வாறு இராகவன் தெரிவித்தார்.

tamilcnn

எமது வாழ் நாளில் அரைவாசி இலங்கையில் வீணாகி விட்டது. எனவே மிகுதி வாழ் நாளையும் வீணாக்க விரும்பவில்லை. எமது வாழ் நாள் வீணானது போன்று பிள்ளைகளின் வாழ் நாளும் வீணாகி விடக் கூடாது. ஆஸ்திரேலியா அரசியல் தர வேண்டும். பிள்ளைகள் ஆஸியில் வாழ வேண்டும். இவ்வாறு இராகவன் தெரிவித்தார்.

:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

விலாவூட்டில் இருக்கும் தமிழர்கள் ஒருவரையும் அவுஸ்திரெலியா அரசு சிறிலங்காவுக்கு இதுவரை அனுப்பி வைக்கவில்லை. வேறு நாட்டவர்களையும் ,சிங்களவர்களையும் தான் திருப்பி அனுப்பியிருக்கிறது. சிறிலங்கா அரசு சிலரின் பெயர்களை அவுஸ்திரெலியா அரசுக்கு அனுப்பி இருக்கிறது. இவர்கள் விடுதலைப்புலிகளைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லி அனுப்பியிருக்கிறது. இதனால் தான் இவர்கள் காவலில் இருக்கிறார்கள். ஆனால் இப்படிக் காவலில் இருந்த பலருக்கு பிறகு அவுஸ்திரெலியாவில் நிரந்தர தஞ்சம் அவுஸ்திரெலியா அரசு வழங்கியிருக்கிறது. நல்ல முடிவு இவர்களுக்கு வரலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.