Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கூட்டமைப்பு-தமிழ்க்கட்சி அரங்கம் அரசியல் தீர்வுக்காக ஒன்றிணைவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு-தமிழ்க்கட்சி அரங்கம் அரசியல் தீர்வுக்காக ஒன்றிணைவு - நேற்றைய சந்திப்பில் இணக்கம்

[செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-12-12 09:36:20| யாழ்ப்பாணம்]

arankam_01தமிழ் மக்களுக்கான காத்திரமான அரசியல் தீர்வைப் பெற் றுக்கொள்வது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் கட்சிகளின் அரங்கமும் இணைந்து செயற்படுவது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப் புக்கும் தமிழ்க் கட்சிகளின் அரங்கத்துக்குமிடையில் நேற்று மாலை இடம்பெற்ற சந்திப்பின்போதே இத் தீர்மானம் எடுக் கப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ்க் கட்சிகளின் அரங்கமும் நேற்று சந்தித்துப் பேச்சு நடத்தின.

இனப் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் தமிழ் மக்களின் அனை த்துக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து தமது கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்தச் சந்திப்பில் கருத்துக்கள் பரி மாறப்பட்டது.இது குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கருத்துத் தெரிவிக்கையில்,

தமிழ்க் கட்சிகளாகிய நாம் எல் லோரும் நேற்றுக் கொழும்பிலுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அலுவலகத்தில் ஒன்றுகூடி எமது மக்களின் அரசியற் பிரச்சினைக்கு ரிய தீர்வு பற்றிக் கலந்துரையாடினோம்.அதற்கான தீர்வுத் திட்டங்களை தமிழ்க் கட்சிகளாகிய நாம் எந்த வகையில் முன்வைத்துப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அதற்காக அனைத்துக் கட்சிகளும் ஒன்று கூடி ஒருமித்த கருத்தினை வெளிப்படுத்த வேண்டும் என்ற கருப்பொருளில் எமது சந்திப்புக்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அந்தவகையில் தமிழர்களின் தற்போதைய மிக முக்கியமான பிரச்சினைகளான அரசியற் தீர்வு, மீள் குடியேற்றம், இராணுவ ஆக்கி ரமிப்புக்கள், உயர் பாதுகாப்பு வல யங்கள், இனவாதக் கொடூரங்கள், சிங்களக் குடியேற்றம் என்பன குறித்து மிகவும் தெளிவுபட்ட கருத் தை முன்வைத்து ஆராய்ந்தோம்.தனிப்பட்ட ரீதியில் ஒவ்வொரு கட்சிகளும் ஒவ்வொரு கொள்கை களைக் கொண்டிருந்தாலும் தமிழ் மக்களின் எதிர்காலமான அரசியற் தீர்வுப் பிரச்சினையில் ஒன்றுபட்ட கருத்து வெளிப்பாடே எமது நோக் கமாக இருக்கும்.

இச்சந்திப்பானது மிகவும் ஆரோக்கியமான எழுச்சியையே எமக்கு வழங்கியிருந்தது.இதேவேளை எமது கட்சியினால் முன் வைக்கப்பட்ட தீர்வுத் திட்ட யோசனை தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

அதேபோன்று தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தினாலும் திட்ட யோச னைகள் முன்வைக்கபட்டது. இச்சந் தர்ப்பத்தில் இரண்டு கட்சிகளிலிரு ந்தும் மூன்று பேர் கொண்டதாக ஒரு குழு அமைக்கப்பட்டு ஒருமித்த திட்ட ஆராய்வுகள் மேற்கொள்ளப்பட வுள்ளது என்றார்.இக்கலந்துரையாடல் குறித்து ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா கருத்துத் தெரிவிக்கையில்,

ஊர் கூடி தேர் இழுக்க வேண் டும் என்ற பழமைக்கு இணங்க அனைத்துக் கட்சிகளும் ஒன்று கூடி ஒரு சந்திப்பினை மேற்கொண் டுள்ளோம்.இச்சந்திப்பின் போது பொது வான எமது எதிர்பார்ப்புக்குள்ளான விடயங்கள் பற்றிக் கலந்துரையா டினோம். இச்சந்திப்பின் மூலம் எமது மக்களின் பிரச்சினைகளை ஒன்றுசேர ஒரு கருத்து வெளிப் பாடாக எமது அரசாங்கத்திடம் சமர்ப்பிக்க உள்ளோம். தற்போ தைய அரசாங்கம் இலங்கையை ஒரு வல்லரசான நிலைக்கு தக்க வைத்துள்ளது.

பலமான ஒரு எதிர்க் கட்சியின்றி பெரும் பலத்துடன் அரசாங்கம் காணப்படுகின்றது. எனவே இந்நி லையில் நாம் அரசாங்கத்தை எதிர் த்து ஒருபோதும் எதையும் சாதித்து விட முடியாது.ஆகையால் எமது ஒன்றிணைவு தமிழர்களின் முன்னடைவாக இருக் கட்டும். எமது கட்சியானது எப்போ தும் ஒரே கொள்கைகளில் மாறுப டாது செயற்பட்டு வருகின்றது. ஜன நாயக ரீதியாகச் செயற்பட்டாலன்றி இல்லையேல் எதையும் சாதித்து விட முடியாது என்று குறிப்பிட்டார்.

valampurii.com

இனப்பிரச்சினைக்குப் பொருத்தமான ஒரு தீர்வுத் திட்டத்தை முன் வைக்கும் வகையில் இணைந்து செயல்பட தமிழ்க் கட்சிகள் அனைத்தும் இணங்கி உள்ளன. பொதுத் தீர்வுத் திட்டம் ஒன்றை எட்டும் வகையில் அடிப்படைக் கொள்கைகளில் இணக்கப்பாட்டை எட்டுவது தொடர்பில் ஆராய்வதற்காக 6 பேர் கொண்ட குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்த அழைப்பை ஏற்று தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் நேற்று கூட்டமைப்புத் தலைவர் களைச் சந்தித்துப் பேசினராம். எதனையோ சாதித்து திளைத்த மகிழ்ச்சியில் இவர்களின் சிரிப்போலி....

Tamils%20political%20parties%20meet.jpg

ஈழ நாதம்

முதற்கட்ட தீர்வை நோக்கி ஒன்றிணைந்து செயற்படும் முடிவு சந்தோசமான செய்தி.

வாழ்த்துக்கள்.

ஆனால், தமிழின விரோத அரசில் அமைச்சு பதவியை தக்க வைத்துக்கொண்டு நேர்மையாக நடப்பது அதுவும் காட்டிகொடுத்து பிழைப்பு நடத்திய டக்ளசுக்கு, கருணாவுக்கு சாத்தியமாகாது போகலாம். இது பாரிய பிரச்சனைகளை, பலவீனங்களை ஏற்படுத்தலாம்.

"அரங்கத்திலிருக்கும்" கடத்தல், கப்பம், கொலை சூரர்களான டக்ளசும், சித்தார்த்தனும், கிழக்கு கருநாய்களும், ஏனைய இந்திய அடிவருடி ஆயுதக் கும்பல்களும் தமது போக்கை மாற்றாவிட்டால் அதுவும் பாரிய பிரச்சனைகளை, பலவீனங்களை ஏற்படுத்தலாம்.

பல தசாப்தங்களாக தமிழின படுகொலைகளை அரங்கேற்றவும், போர்க்குற்றங்களை மறைக்கவும் துணைபோன இந்திய அரச பயங்கரவாதிகளின், இந்திய அரச ஆதரவு பயங்கரவாத குழுக்களுடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருக்கும்

அரங்கக் கோமாளிகளும், சம்பந்தன் + சுரேஷ் போன்றவர்களும்

இந்திய தமிழினப் படுகொலையாளர்களின் அடிவருடிகளாக செயற்படுவதை முற்றிலும் நிறுத்தாவிட்டால் அதுவும் பாரிய பிரச்சனைகளை, பலவீனங்களை ஏற்படுத்தலாம்.

எல்லாவற்றிலும் முக்கியமாக,

இவர்கள் தாங்கள் தங்கள் வேலையை பார்க்க வேண்டுமே ஒழிய,

தமிழின விரோதிகளின் தாளங்களுக்கு ஏற்ப,

நாடு கடந்த தமிழீழ அரசின் செயற்பாடுகளுக்கு எந்த வகையிலும் குந்தகமாக இருப்பதை,

வெளிநாட்டு ஈழத் தமிழ் அமைப்புக்களின் செயற்பாடுகளுக்கு எந்த வகையிலும் குந்தகமாக இருப்பதை,

எந்தவொரு மானம் ரோஷமுள்ள நேர்மையான ஈழத் தமிழனும் ஏற்றுக் கொள்ளமாட்டான் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.

... நேற்று 18வதி திருத்தச்சட்டமூலம் ... எனும் சிறுபான்மையினத்துக்கு இருக்கும், ஏதோ எச்ச சொச்ச் மாகாணசபை அதிகாரங்களை கூட பறித்தெடுக்கையில் ... ஆதரவளித்து/வாக்களித்த ... அத்தியடிக்குத்தியும் தமிழரங்கத்தில்!!!!!!!!!!!!!!!!! ... நிச்சயம் தமிழரங்கம், தமிழ் மக்களின் ஒரேஅடியான சிங்களம் விரும்பும் தீர்வுக்காக உழைக்கும்!!!!!!!!!!!!!!!!!!!!

தமிழ் மக்களுக்கு உடனடித்தீர்வு தற்போதைக்கு தேவையற்றது! - பேரா.கீத பொன்கலன் வலம்புரிக்கு விசேட செவ்வி

http://www.valampurii.com/online/viewnews.php?ID=13224

  • கருத்துக்கள உறவுகள்

இதோபோன்று தான் எண்பது நடுப்பகுதியில் முன்னை நாள் விடுதலை இயக்கங்களும் தாம் ஒன்றாக சேர்ந்து இயங்கப்போவதாக அறிக்கை விட்டதுமன்றி கைகோர்த்து நின்றெடுத்த படங்களையும் வெளியிட்டார்கள்.

சீக்கிரத்தில் தங்களது சுயரூபத்தையும் காண்பித்தார்கள் பலர்.

  • கருத்துக்கள உறவுகள்

இதோபோன்று தான் எண்பது நடுப்பகுதியில் முன்னை நாள் விடுதலை இயக்கங்களும் தாம் ஒன்றாக சேர்ந்து இயங்கப்போவதாக அறிக்கை விட்டதுமன்றி கைகோர்த்து நின்றெடுத்த படங்களையும் வெளியிட்டார்கள்.

சீக்கிரத்தில் தங்களது சுயரூபத்தையும் காண்பித்தார்கள் பலர்.

அதனால் தானே அன்று நாம் நல்லது எதுவென புரிந்து கொண்டோம்

இன்றும் அது மீண்டும் நிருபிக்கப்படட்டும்

முதற்கட்ட தீர்வை நோக்கி ஒன்றிணைந்து செயற்படும் முடிவு சந்தோசமான செய்தி.

வாழ்த்துக்கள்.

ஆனால், தமிழின விரோத அரசில் அமைச்சு பதவியை தக்க வைத்துக்கொண்டு நேர்மையாக நடப்பது அதுவும் காட்டிகொடுத்து பிழைப்பு நடத்திய டக்ளசுக்கு, கருணாவுக்கு சாத்தியமாகாது போகலாம். இது பாரிய பிரச்சனைகளை, பலவீனங்களை ஏற்படுத்தலாம்.

"அரங்கத்திலிருக்கும்" கடத்தல், கப்பம், கொலை சூரர்களான டக்ளசும், சித்தார்த்தனும், கிழக்கு கருநாய்களும், ஏனைய இந்திய அடிவருடி ஆயுதக் கும்பல்களும் தமது போக்கை மாற்றாவிட்டால் அதுவும் பாரிய பிரச்சனைகளை, பலவீனங்களை ஏற்படுத்தலாம்.

பல தசாப்தங்களாக தமிழின படுகொலைகளை அரங்கேற்றவும், போர்க்குற்றங்களை மறைக்கவும் துணைபோன இந்திய அரச பயங்கரவாதிகளின், இந்திய அரச ஆதரவு பயங்கரவாத குழுக்களுடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருக்கும்

அரங்கக் கோமாளிகளும், சம்பந்தன் + சுரேஷ் போன்றவர்களும்

இந்திய தமிழினப் படுகொலையாளர்களின் அடிவருடிகளாக செயற்படுவதை முற்றிலும் நிறுத்தாவிட்டால் அதுவும் பாரிய பிரச்சனைகளை, பலவீனங்களை ஏற்படுத்தலாம்.

எல்லாவற்றிலும் முக்கியமாக,

இவர்கள் தாங்கள் தங்கள் வேலையை பார்க்க வேண்டுமே ஒழிய,

தமிழின விரோதிகளின் தாளங்களுக்கு ஏற்ப,

நாடு கடந்த தமிழீழ அரசின் செயற்பாடுகளுக்கு எந்த வகையிலும் குந்தகமாக இருப்பதை,

வெளிநாட்டு ஈழத் தமிழ் அமைப்புக்களின் செயற்பாடுகளுக்கு எந்த வகையிலும் குந்தகமாக இருப்பதை,

எந்தவொரு மானம் ரோஷமுள்ள நேர்மையான ஈழத் தமிழனும் ஏற்றுக் கொள்ளமாட்டான் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.

எல்லாவற்றிலும் முக்கியமாக,

இவர்கள் தாங்கள் தங்கள் வேலையை பார்க்க வேண்டுமே ஒழிய,

தமிழின விரோதிகளின் தாளங்களுக்கு ஏற்ப,

நாடு கடந்த தமிழீழ அரசின் செயற்பாடுகளுக்கு எந்த வகையிலும் குந்தகமாக இருப்பதை,

வெளிநாட்டு ஈழத் தமிழ் அமைப்புக்களின் செயற்பாடுகளுக்கு எந்த வகையிலும் குந்தகமாக இருப்பதை,

எந்தவொரு மானம் ரோஷமுள்ள நேர்மையான ஈழத் தமிழனும் ஏற்றுக் கொள்ளமாட்டான் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.