Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழீழ விடுதலைப்புலிகள் மீண்டும் தமது நடவடிக்கைகளை இலங்கைக்குள் ஆரம்பிப்பார்கள் சிவசங்கர் மேனன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப்புலிகள் மீண்டும் தமது நடவடிக்கைகளை இலங்கைக்குள் ஆரம்பிப்பார்கள் சிவசங்கர் மேனன்

ஞாயிற்றுக்கிழமை, 12 டிசம்பர் 2010 06:43

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு உள்நாட்டில் உருவாக்கப்படும் தீர்வு காணப்பட வேண்டும் என இந்திய பாதுகாப்பு செயலாளர் சிவசங்கர் மேனன் தெரிவித்துள்ளார். இலங்கை மக்கள் சந்தோஷமாக இருப்பதையிட்டு தமிழக மக்கள் ஏன் கவலைக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வினவியுள்ளார்.

இலங்கையின் ஊடக பிரதானிகள் புதுடில்லியில் சிவசங்கர் மேனனை சந்தித்த போதே இந்த கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வுக்கு இந்தியா நடுவராக செயற்படப்போவதில்லை எனினும் உதவிகளை வழங்கும். இந்தநிலையில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து உரிய தீர்வை இலங்கையே தீர்மானிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இனரீதியானது மட்டுமன்றி, சமய கலாசார ரீதியான உறவுகளும் உள்ளன.

இந்தியாவில் முதன்மை அரசியல் கட்சிகள் எவையும் தமிழீழ விடுதலைப்புலிகளை ஆதரிக்கவில்லை என்றும் சிவ்சங்கர் மேனன் குறிப்பிட்டுள்ளார்.

புலம்பெயர்ந்த தமிழர்கள் தமது போராட்டங்களை நடத்துகின்ற போதும் மீண்டும் இலங்கைக்கு திரும்புகின்ற தமிழகத்தில் உள்ள புலம்பெயர்ந்த தமிழர்களை போன்றோர் இலங்கையில் சமாதானம் நிலவுவதை நிராகரிக்க மாட்டார்கள்.

இலங்கையில் பயங்கரவாத்தை ஒழிப்பதில் இந்தியாவின் பங்கு குறித்து சிவ்சங்கர் மேனனிடம் வினவப்பட்ட போது, இலங்கை முன்னெடுத்த பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் அனைவரும் பங்கேற்றதாக அவர் பதிலளித்துள்ளார்.

இலங்கையின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை பொறுத்தே தமிழீழ விடுதலைப்புலிகள் மீண்டும் தமது நடவடிக்கைகளை ஆரம்பிப்பார்கள் என்பதை கூறமுடியும் என தெரிவித்துள்ள அவர், அது வேறெங்கும் இருந்தல்ல இலங்கைக்குள் இருந்தே வரமுடியும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

சங்கமம்

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா.. இப்பவே பிட்டைப் போட்டுட்டான்யா..! :lol:

இனி தங்கட ஆக்களைக்கொண்டு குண்டு வைப்பினம்..! புலி மேலை பழியைப் போடுவினம்..! :blink:

வட இந்தியர், அவன் வால்கள் = பயங்கரவாதிகள், காட்டுமிராண்டிகள், பொய்யர், தமிழின விரோதிகள், தமிழின கொலைகாரர்கள், போர்க் குற்றவாளிகள், கீழ்த்தரமானவர்கள், நாகரீகமற்றவர்கள், பண்பற்றவர்கள், ……, ஹிந்தி வெறியர்கள் - வந்தேறு குடிகள், ஊழல் பேர்வழிகள், ....., ......

இலங்கையில் பயங்கரவாத்தை ஒழிப்பதில் இந்தியாவின் பங்கு குறித்து சிவ்சங்கர் மேனனிடம் வினவப்பட்ட போது, இலங்கை முன்னெடுத்த பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் அனைவரும் பங்கேற்றதாக அவர் பதிலளித்துள்ளார்.

அனைவரும் எண்டால் காங்கிரஸ் திமுக அனைவருமா....??? :lol:

தமிழீழ விடுதலைப்புலிகள் மீண்டும் தமது நடவடிக்கைகளை இலங்கைக்குள் ஆரம்பிப்பார்கள் சிவசங்கர் மேனன்

ஞாயிற்றுக்கிழமை, 12 டிசம்பர் 2010 06:43

1. இந்தியாவில் முதன்மை அரசியல் கட்சிகள் எவையும் தமிழீழ விடுதலைப்புலிகளை ஆதரிக்கவில்லை என்றும் சிவ்சங்கர் மேனன் குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் ஆதரவு உள்ளது. அதை தனிப்பட்ட நோக்கங்களுக்காக, பணத்திற்காக, தமிழர் வெறுப்பு காரணமாக தலைவர்கள் மறுக்கிறார்கள்.

2. புலம்பெயர்ந்த தமிழர்கள் தமது போராட்டங்களை நடத்துகின்ற போதும் மீண்டும் இலங்கைக்கு திரும்புகின்ற தமிழகத்தில் உள்ள புலம்பெயர்ந்த தமிழர்களை போன்றோர் இலங்கையில் சமாதானம் நிலவுவதை நிராகரிக்க மாட்டார்கள்.

நிச்சயமாக ஒரு துப்பாக்கி முனையில், பொம்மை அரசியல் வாதிகள் மூலம் முன்வைக்கப்படும் "சமாதனம்" நீண்ட நாள் நிலைக்காது.

3. இலங்கையின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை பொறுத்தே தமிழீழ விடுதலைப்புலிகள் மீண்டும் தமது நடவடிக்கைகளை ஆரம்பிப்பார்கள் என்பதை கூறமுடியும் என தெரிவித்துள்ள அவர், அது வேறெங்கும் இருந்தல்ல இலங்கைக்குள் இருந்தே வரமுடியும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

இப்படித்தான் ஏற்கனேவே நடந்தது. மீண்டும் சிங்களம் தமிழருக்கு உரிமைகளை மறுக்க வேண்டும் என்பதும் அதன் மூலம் மீண்டும் ஒரு ஆயுத போராட்டம் வெடிக்க வேண்டும் என்பதும் அதன் மூலம் மிகுதி தமிழர்களையும் அழிக்க இது ஒரு யுத்தி போலவும் இவரின் கருத்து அமைந்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

கிந்தியா மீண்டும் இலங்கையில் தனது பிடிமானத்தினை ஏற்படுத்த தமிழீழ இளைஞ்சர்களை அழைத்து கொம்பு சீவி மோதவிடுவார்களோ என்று அச்சமாக உள்ளது. எம்முடைய வழியை நாங்கள் பார்த்து கொள்ளுவம். பசி பட்டினி காசுமீரு அருணாச்சல் குருணாச்சல் போன்ற விவகரங்களில் கவனம் செலுத்துவது உலக அமைதிக்கு நல்லது.. உலக நாடுகள் இலங்கை விவகாரத்தில் மீண்டும் தலையிட்டு கிந்தியா மீண்டும் குழப்பாத வண்ணம் கண்காணிக்க வேண்டும்

இப்படிக்கு

நாடு கடந்த தமிழீழ அரசு..

டிஸ்கி:

நோஸ்கட் இப்படித்தான் குடுக்கணும்... :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.