Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிறிஸ்மஸ் தீவிற்கு 70 அகதிகளுடன் பயணித்த கப்பல் கடலில் விபத்து

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிறிஸ்மஸ் தீவிற்கு 70 அகதிகளுடன் பயணித்த கப்பல் கடலில் விபத்து

* Wednesday, December 15, 2010, 5:52

கிறிஸ்மஸ் தீவிற்கு சுமார் 70 அகதிகளுடன் பயணித்த இந்தோனேசிய நாட்டைச்சேர்ந்த மீன்பிடிப்படகொன்று பாறைகளில் மோதி கடலில் மூழ்கியதில் அதில் பயணித்த பலர் உரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது,

புகலிடம் கோரிச் சென்ற இப்பயணிகளில் சிறுகுழந்தைகள் முதல் பெண்களும் அடக்கம்.

இந்தப் படகானது கடும் அலைகள் மற்றும் காற்றின் காரணமாக பாறைகளுடன் மோதியுள்ளது. இதனைத் தொடர்ந்து படகு கட்டுப்பாட்டை இழந்துள்ளதுடன் கடுமையான சேதத்திற்கும் உள்ளாகியுள்ளது.

அந் நாட்டு கடற்படையினர் மீட்புபணிகளில் ஈடுபட்டுள்ளனர். எனினும் சீரற்ற காலநிலை காரணமாக அவர்கள் பெரும் சிரமத்திற்கு முகங்கொடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரை 15 பேர் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் சுமார் 30 பேர் வரையிலானோர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

படகில் இருந்தவர்களில் அநேகமானோர் ஈராக் மற்றும் ஈரான் நாட்டைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.

tamilthai.com

அகதித் தஞ்சம் கோருவதற்காக அவுஸ்திரேலியா நோக்கிப் பயணித்த கப்பல் கிறிஸ்மஸ் தீவுக்கருகில் மூழ்கியதில் பலர் பலி என அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் எந்த நாட்டவர் என்ற தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

http://www.bbc.co.uk/news/world-asia-pacific-11997231

http://www.guardian.co.uk/world/2010/dec/15/asylum-seeker-boats-capsizes-australia-christmas-island

அவுஸ்திரேலியா, கிறிஸ்மஸ் தீவுக்கு சட்டவிரோத குடியேற்ற வாசிகளை ஏற்றிச் சென்ற படகு பாறையொன்றுடன் மோதியதில் அப்படகில் பயணித்த 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்துச் சம்பவம் இன்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. 41 பேர் நடுக்கடலில் ஆபத்தான கடல் பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும்  ஒருவர் நீந்திக் கரை சேர்ந்திருப்பதாகவும் அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இப்படகில் ஈராக், ஈரான், ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களே பெரும்பாலாகக் காணப்படுவதுடன், சிறுவர்களும் பெண்களும் இருப்பதாக நம்பப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அந்தப் படகில் பயணித்தவர்களில் இலங்கையர்கள் எவரும் இல்லையென்று ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக அவுஸ்திரேலியாவிலுள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

http://www.tamil.dailymirror.lk/index.php/2010-07-14-09-13-23/2010-07-14-09-13-37/13062--27-.html

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

^_^ அவுஸ்த்திரேலிய கிறிஸ்த்துமஸ் தீவுக்கருகில் நடந்த படகு விபத்தில் 30 இற்கும் மேற்பட்ட அகதிகள் நீரில் மூழ்கி மரணம்

நேற்றுக்காலை அவுஸ்த்திரேலியாவுக்குச் சொந்தமான கிறிஸ்த்துமஸ் தீவுக்கருகில் நடந்த அகதிகள் படகு விபத்தொன்றில் 30 இற்கும் மேற்பட்ட அகதிகள் நீர்ல் மூழ்கிப் பலியாகியுள்ளனர்.ஈரான், ஈராக் நாடுகளிலிருந்து சுமார் 80 அகதிகளை ஏற்றிக்கொண்டு அவுஸ்த்திரேலிய நோக்கி வரும்போதே இந்த கோரச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. கிறிஸ்த்துமஸ் தீவை நெருங்கிவிட்ட நிலையில் கடும் கடல்க் கொந்தளிப்புக் காரணமாக படகு பாறைகளுடன் மோதியதில் அது சிதறுண்டு அகதிகள் அனைவரும் கடலினுள் விழ்ந்ததாகவும் குழந்தைகள் பெண்கள் உற்பட 30 இற்கும் மேற்பட்டவர்கள் கடலில் மூழ்கிப் பரிதாபமாக உயிரிழக்க ஏனையோரை அவுஸ்த்திரேலியக் கடற்படை காப்பாற்றியுள்ளது. படகிலிருந்த குழந்தைகள் அனைவரும் நீரில் மூழ்கிப் பலியாகியிருக்கிறார்கள்.

இச்சம்பவம் நடைபெற்ற வேளையில் எத்தேச்சையாக அப்பகுதியில் தனது விவரணப் படமொன்றை எடுத்துக்கொண்டிருந்த அவுஸ்த்திரேலியப் பத்திரிக்கையாளர் ஒருவர் இந்த அவலத்தை முழுவதுமாக தனது வீடியோவில் பதிவுசெய்துள்ளார். கண்ணுக்கெட்டிய தூரத்தில் இந்த அவலம் நடைபெற்றபோதும் கடும் கடல்க் கொந்தளிப்புக் காரணமாக பாறைகள் நிறைந்த அந்த ஆழ்கடல்ப் பகுதியை யாராலும் நெருங்கமுடியவில்லை. இறுதியில் அவுஸ்த்திரேலியக் கடற்படை சிறிய தரையிறங்குப் படகுகளில் அவ்விடத்தை அடைந்து நீரில் தத்தளித்தோரைக் காப்பாற்றியது.

தற்போதைய அரசின் கடுமையான அகதிகள் கொள்கையினால்த்தான் இந்த அவலம் ஏற்பட்டதாக அகதிகளுக்காக குரல் கொடுத்துவரும் பல அமைப்புக்கள் அரசைக் குற்றம் சாட்டியுள்ளன. ஆசிப் பிரதமரும் தனது வெளிநாட்டுப்பயணத்தை இடைநடுவே முறித்துக்கொண்டு அவசரமாக நாடு திரும்பியுள்ளார். வழக்கமாக அரசை அகதிகள் பிரச்சனையில் பிளந்து கட்டும் எதிர்க்கட்சியும் தற்போது அடக்கி வாசிப்பதோடு, விவாதம் செய்வதற்கு இது தருணம் அல்ல என்றும் சொல்லியிருக்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.