Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைத் தமிழர்களுக்காக நேரடியாக தலையிடப் போகிறேன். ராகுல்காந்தி

Featured Replies

இலங்கைப் பிரச்னையில் தான் மிக விரைவில் நேரடியாகத் தலையிடவுள்ளதாக நிருபர்களிடம் தெரிவித்த ராகுல் காந்தி, இலங்கைத் தமிழர்களின் நலன் கருதி இந்தியா ஏராளமான பங்களிப்பை வழங்கியுள்ளதாகவும், எதிர்காலத்திலும் அவ்வாறான நடவடிக்கைகள் தொடரும் என்றும் கூறியுள்ளார்.மேலும், இலங்கையில் போரினால் இடம்பெயர்ந்த தமிழர்களுக்கு அந்நாட்டு அரசு போதிய வசதிகளை செய்து தராதது கவலையளிப்பதாகவும் கூறியுள்ளார்.

இளைஞர் காங்கிரஸைச் சேர்ந்தவரே, எதிர்காலத்தில் தமிழக முதல்வராகப் போகிறார் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்தார்.

வருகின்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, தமிழக காங்கிரஸை பலப்படுத்தும் நோக்கில், தமிழகத்தில் ராகுல் காந்தி இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ளார்.

தனி விமானம் மூலம் இன்று சென்னை வந்த அவரை, தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் வரவேற்றனர்.

இதையடுத்து சென்னை - வானகரத்தில் நடைபெற்ற இளைஞர் காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொண்டு ராகுல் காந்தி பேசுகையில், "காங்கிரஸ் கட்சியில் இளைஞர் காங்கிரஸ் தற்போது முக்கிய பங்கு வகிக்கிறது. இளைஞர்கள் பஞ்சாயத்து அளவில் சிறப்பாக பணியாற்ற வேண்டும். கட்சியில் இளைஞர்களை சேர்த்துக் கொண்டால் மட்டும் போதாது. அவர்களை வரவேற்று, மதிப்பளித்து, உரிய வாய்ப்பளிக்கப்பட வேண்டும். அவர்களின் கருத்துக்களை கேட்க வேண்டும்.

பஞ்சாயத்து அளவில் இளைஞர்களும், பெண்களும் தலைவர்களாக உருவாக வேண்டும் என்பது எனது எண்ணமாகும். அதுதான் உண்மையான ஜனநாயகமாக இருக்கும்.

இங்கு பெருமளவில் பெண்கள் வந்திருக்கிறார்கள். இதை நான் வரவேற்கிறேன். இளைஞர் காங்கிரசை தமிழகத்தில் மேலும் வலுப்படுத்த வேண்டும். கிராமப்புற, நகர்ப்புற பகுதிகளில் கட்சியை பலப்படுத்த வேண்டும்.

இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. அதை தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலும் நடைபெற உள்ளது. இந்த இரு தேர்தல்களிலும் இளைஞர் காங்கிரஸாருக்கு அதிக வாய்ப்பளிக்கப்படும்.

பஞ்சாயத்து அளவில் அதிக அளவில் இளைஞர் காங்கிரஸார் வெற்றி பெற்றால்தான் மக்களுக்கு சிறப்பாக பணியாற்ற முடியும். அடுத்த 20 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியை மேலும் பலம் உள்ளதாக ஆக்க முடியும்.

நான் அரசியலுக்கு வந்து 6 ஆண்டுகள் ஆகிறது. இதுவரை எந்த பொறுப்பையும் எதிர்பார்க்கவில்லை. மக்கள் பிரச்னையில்தான் நான் கவனம் செலுத்துகிறேன். இதே போல நீங்களும் மக்கள் பிரச்னையில் கவனம் செலுத்தினால் கட்சியை வலுப்படுத்த முடியும்.

தமிழகத்தில் கடந்த 40 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் இல்லை. வருங்காலத்தில் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைய அதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கு கடும் சவால்களை நீங்கள் எதிர்கொள்ள நேரிடும். உங்களில் ஒருவர் தமிழக முதலமைச்சராக வருவதற்கு நிச்சயம் வாய்ப்பு இருக்கிறது," என்றார் ராகுல் காந்தி.

இதைத் தொடர்ந்து, இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்களிடம் ராகுல் கருத்துகளைக் கேட்டறிந்தார்.

அப்போது, 'வெங்காயம் கிலோ ரூ.100 வரை விற்கிறது. வெங்காய விலை உயர்வு பிஜேபியை ஒரு தேர்தலில் தோற்கடித்தது. ஆகவே இதை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்று இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் கேட்டார்.

அதற்கு, "விலைவாசி உயர்வு பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். பிரதமர் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறார். நீங்கள் கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கையை உடனே துவக்குங்கள்," என்றார் ராகுல்.

'அறிவுஜீவிகள்' கூட்டம்...

பின்னர் ஹெலிகாப்டர் மூலம் சென்னை விமான நிலையத்துக்கு புறப்பட்டுச் சென்ற ராகுல், அங்கிருந்து சென்னை அண்ணாசாலையில் உள்ள கன்னிமாரா ஓட்டலுக்கு சென்றார்.

அங்கு நடைபெற்ற 'அறிவு ஜீவிகள்' பங்கேற்ற கூட்டத்தில் ராகுல் காந்தி பேசினார்.

அப்போது பேசிய அவர், "சமூக அக்கறையுள்ளவர்கள் அரசியலுக்கு வர வேண்டும், இல்லாவிட்டால் மோசமானவர்கள் அரசியலில் தொடர்ந்து இருப்பதைத் தடுக்க முடியாது.

நல்லவர்கள் அரசியலில் ஈடுபடாவிட்டால் இந்தியாவை வல்லரசாக்க இன்னும் 20 ஆண்டுகள் ஆகிவிடும்," என்றார் ராகுல் காந்தி.

இந்த கூட்டத்தில் வழக்கறிஞர்கள், திரையுலகை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டார்கள். திரையுலகை சேர்ந்த ராமநாராயணன், ஆர்.கே.செல்வமணி, நாசர், ஜெயம் ரவி, நடிகை ராதாவின் மகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The video and photos of Rahul Gandhi's Tamilnadu visit,,,,,,

http://www.thedipaar.com/news/news.php?id=22321

Edited by easyjobs

  • கருத்துக்கள உறவுகள்

தந்தையாரின் புத்திமதிகளைக் கேட்காமல் வளர்ந்திருப்பாரோ? :D

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் கடந்த 40 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் இல்லை. வருங்காலத்தில் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைய அதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கு கடும் சவால்களை நீங்கள் எதிர்கொள்ள நேரிடும். உங்களில் ஒருவர் தமிழக முதலமைச்சராக வருவதற்கு நிச்சயம் வாய்ப்பு இருக்கிறது," என்றார் ராகுல் காந்தி.

வைக்கிறேன் கருணாநிதிக்கு ஆப்பு என்கிறாரா?? :D:D

  • கருத்துக்கள உறவுகள்

ராகுல் காந்தியே முள்ளிவாய்கால் அவலத்திற்கு சிங்களம் எனும் அம்பை ஏவிய இரட்டை வில் நீயும் உனது அம்மாவும்தான் என்பது அனைத்துலகத்திற்கும் தெரியும். இந்திய அரசியலில் உங்கள் அஸ்தமனம் ஸபெக்ரத்தில் ஆரம்பித்துள்ளது. போகப்போக அது உன்னையும் உன் தாயையும் வளைக்கும் தூக்குக் கயிறாக. நீயும் உனது அம்மாவும் எப்படி நிம்மதியாகத் தூங்குகிறீர்கள்.

ஒரு தொண்டர், "ராஜிவைப் பார்த்து நாங்கள் அரசியலுக்கு வந்தோம். அவரது கொலை வழக்கில் தொடர்புடையவர்களை தூக்கிலிட வேண்டும். இதுகுறித்து உங்களுக்கு கடிதம் எழுதியுள்ளோம். அதற்கு நீங்கள் பதில்தரவேண்டும்,' என்றார்.

மற்றொரு தொண்டர் தமிழகத்தில் 40ஆண்டுகளாக தி.மு.க., அ.தி.மு.க., ஆட்சி காமராஜ் ஆட்சியாக நடக்கிறது என்கின்றனர். எனவே நாமும் காமராஜர் ஆட்சியை முன்வைக்க வேண்டும். நீங்கள் தமிழகத்தின் முதல்வராக வேண்டும். அதற்கு தமிழை கற்க வேண்டும் என்றார். இவற்றிற்கு ராகுல் பதிலேதும் கூறவில்லை.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=151342

இலங்கைத் தமிழ் மக்கள் மீது ராகுல் காந்திக்கு காலம் கடந்த ஞானம் ஏற்பட்டுள்ளதாக இடதுசாரி விடுதலை முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தியின் கூற்று மாதன முத்தாவின் கதையையே நினைவுக்கு கொண்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பயங்கரவாதி ராஜீவின் அடியை ஒற்றி பயங்கரவாதத்திலும், தமிழின அழிப்பிலும் ஈடுபட்டுவரும் காங்கிரெஸ் பயங்கரவாதி ராகுல் சிங்கள பயங்கரவாதிகளின் நாயகனான மாதன முத்தாவுடன் ஒப்பிட்டது ஓரளவு பொருத்தம் தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.