Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சூறையாடப்படும் தமிழீழ வளம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சூறையாடப்படும் தமிழீழ வளம்

சிங்களர் கொள்ளையில் இந்தியா, சீனா பங்கு

வடகிழக்கில் சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்தி இம்மாகாணங்களில் இனவிகிதாசாரத்தில் மாற்றம் ஏற்படுத்துவதற்கு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வரும் சிங்கள அரசு வடகிழக்கின் வளங் களைச் சூறையாடி தென்னிலங்கைக்கு எடுத்துச் செல்லும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருக்கிறது. சிங்களதேசம் மட்டுமன்றி இந்திய தேசமும் தமிழர் பிரதேசங்களின் வளங்களைக் கொள்ளைய டிப்பதில் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறது.

கனிம வளங்கள் நிறைந்திருக்கும் வடக்கு கிழக்கிலிருந்து இந்த வளங்களைச் சுரண்டும் நடவடிக்கைகள் அண்மைகாலமாக அதிகரித்திருக்கிறது.

சுண்ணாம்புக்கல் வளம்

இலங்கையில் சுண்ணாம்புக்கல் வளம் யாழ்ப்பாணத்திலேயே அதிகம் காணப்படுகிறது. குறிப்பாக பருத்தித் துறையிலிருந்து காங்கேசன்துறை வரையான கரையோரப் பிரதேசம் சுண்ணாம்புக்கல் வளம் உள்ள பகுதியாகும். இதனால்தான் சிமெந்து உற்பத்தியின் முக்கிய மூலப்பொருளாக இருக்கும் சுண்ணாம்புக்கல் அதிகம் உள்ள காங்கேசன்துறையில் சிமெந்து தொழிற்சாலை அமைக்கப்பட்டது.

போர் உக்கிரம் அடைந்ததைத் தொடர்ந்து காங்கேசன்துறை சிமெந்து தொழிற்சாலையை மூடிய அரசாங்கம் காங்கேசன்துறை, மயிலிட்டி, பலாலி ஆகிய பகுதிகளை அதியுயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தி அங்கிருந்த மக்களை வெளியேற்றியது.

அப்பிரதேசங்களிலிருந்து தற்போது சுண்ணாம்புக்கற்கள் தென்னிலங்கைக்குக் கப்பல் மூலம் கொண்டு செல்லப்படுவதாகத் தெரியவந்துள்ளது. தென்னிலங்கைக்கு மட்டுமல்ல இந்தியா, சீனா ஆகிய நாடுகளுக்கும் சுண்ணாம் புக்கல் காங்கேசன்துறையிலிருந்து கப்பல்களில் கொண்டு செல்லப்படு வதாகத் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக மாவை சேனாதி ராசா நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய போது அரசாங்கம் அதை மறுக்கவும் இல்லை பதிலளிக்கவும் இல்லை. ஆனால் தொடர்ந்து சுண்ணாம் புக்கல் காங்கேசன்துறை துறைமுகத்திலிருந்து கப்பல் மூலம் எடுத்துச் செல்லப் படுவதாகத் தெரியவந்திருக்கிறது.

சுண்ணாம்புக்கல் வளம் என்பது மட்டுப்படுத்தப்பட்ட வளமாகும். அது திடீரென பல்கிப் பெருகும் வளம் அல்ல. அங்கிருக்கின்ற சுண்ணாம்புக்கல் முற்றாக எடுக்கப்படுவதாக இருந்தால் எதிர்காலத்தில் யாழ் மாவட்டத்தின் சுண் ணாம்புக்கல் தேவைக்குப் பல சிரமங்களை எதிர்நோக்க வேண்டி ஏற்படும் என்பதையும் சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

மணல் வளம்

கட்டிட வேலைகளுக்குப் பயன் படுத்தப்படும் குருகுமணல் என அழைக்கப்படும் சுத்தமான மணல் வடகிழக்குக் கடற்கரையை அண்டிய பிரதேசங்களிலேயே அதிகம் காணப்படுகிறது. போர் முடிவடைந்ததைத் தொடர்ந்து வட கிழக்கில் இந்த மணல் கொள்ளை மிக வேகமாக நடைபெற்று வருகிறது.

யாழ் மாவட்டத்தில் நாகர் கோவிலிலிருந்து சுண்டிக்குளம் வரையும் முல்லைத்தீவு மாவட்டத்தில் சுண்டிக்குளத்திலிருந்து கொக்குளாய் வரையான பிரதேசங்களிலும் இந்த குருகு மணல் அதிகமாகக் காணப்படுகிறது.

மணல் ஏற்றுவதாக இருந்தால் பிரதேசச் செயலாளரிடம் அனுமதிப் பத்திரம் பெற வேண்டும் என்பது கனிமவள பயன்பாட்டுச் சட்டத்தின் கீழ் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் வடகிழக்கில் இது தலைகீழாகத்தான் நடைபெறுகிறது.

யாழ்குடா நாட்டில் தற்போது மணல்காடு, நாகர்கோவில் தொடக்கம் - வடமராட்சி கிழக்கு கிராமங்களிலிருந்து மணல் ஏற்றப்படுகிறது. அங்கிருந்து மணலைப் பெறுவதற்கான அனுமதியை ஈ.பி.டி.பி.யினரே வழங்கி வருகின்றனர். மகேஸ்வரி அறக்கட்டளை நிதியம் என்ற பெயரில் இயங்கும் அமைப்பே இதற்கான அனுமதியை வழங்கி வருகிறது.

சட்டத்திற்குப் புறம்பான இந்நடவடிக்கை பற்றி அரசாங்க அதிபரிடம் கேட்டால் இது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும் கொழும்பில் உள்ள மேலிடத்தின் உத்தரவின் பேரிலேயே இது நடைபெறுவதாகவும் அவர் கூறுகிறார்.

நாகர்கோவில், மணல்காட்டுப் பகுதியிலிருந்து தினசரி 50க்கு மேற்பட்ட பாரஊர்திகளில் மணல் ஏற்றப்பட்டு யாழ்குடா நாட்டின் ஏனைய பகுதி களுக்கு மட்டுமல்ல தென்னிலங்கைக் கும் கொண்டு செல்லப்படுகிறது. அந்த பிரதேசச் செயலாளரின் அனுமதியின்றி ஈ.பி.டி.பி.யினர் இந்த மண்கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோன்று மட்டக்களப்பில் கல்லடி, செங்கலடி உட்பட்ட பகுதிகளில் மணல் ஏற்றப்படுகிறது. இந்த பிரதேசங் களிலிருந்து மணல் எடுக்கும் அனுமதி சிங்கள ஒப்பந்தக்காரர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.

மணல் ஏற்றுவதற்கான அனுமதி பிரதேசச் செயலகத்தில் வழங்கப்பட வேண்டும் என்ற நியதிக்கு மாறாக மட் டக்களப்பிலிருந்து மணல் ஏற்றுவ தற்கான அனுமதி கொழும்பில் உள்ள பசில் இராசபக்சேவின் பொருளாதார அமைச்சிலேயே வழங்கப்படுகிறது. அதுவும் கொழும்பில் உள்ள சிங்கள கட்டிட ஒப்பந்தக்காரர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.

மட்டக்களப்பில் உள்ள ஒரு தமி ழர் கட்டிடம் ஒன்றைக் கட்டவேண்டுமாக இருந்தால் இந்த சிங்கள ஒப்பந்தக்காரரி டம் இருந்துதான் மணலைப் பெற முடியும். இதனால் மட்டக்களப்பில் உள்ள மக்கள் மட்டுமல்ல அங்குள்ள தமிழ் ஒப் பந்தக்காரர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பின் வளத்தைச் சிங்களவன் எடுத்துத் தமிழனுக்கு அதிக விலைக்கு விற்கும் அவலம்தான் அங்கு நடைபெறுகிறது. இதை மட்டக்களப்பில் உள்ள அரசாங்க அதிபராலோ பிரதேசச் செயலாளராலோ தடுக்க முடியாமல் இருக்கிறது.

கருங்கல் வளம்

யாழ்ப்பாணத்தில் சுண்ணாம்புக் கல் அதிகம் காணப்படுவது போல கட்டி டங்களுக்கும் வீதிகளுக்கும் பயன்படுத் தப்படும் கருங்கல் மட்டக்களப்பிலேயே அதிகம் காணப்படுகிறது. புல்லுமலை அதன் தெற்கு மற்றும் மேற்கு பக்கமாக அமைந்திருக்கும் பிரதேசங்களிலேயே கட்டிடங்களுக்குப் பயன்படுத்தப்படும் தரமான கருங்கல் காணப்படுகிறது. இங்கி ருந்தே தற்போது தென்னிலங்கையின் பல பாகங்களுக்குமான கட்டிட மற்றும் வீதி அபிவிருத்தி வேலைகளுக்கு கருங்கல் எடுத்துச் செல்லப்படுகிறது.

இலங்கையில் வீதி அபிவிருத்திப் பணியில் ஈடுபட்டிருக்கும் சீன நிறு வனங்கள்கூட கரடியனாறு, புல்லுமலைப் பகுதியிலேயே கல் உடைக்கும் நிலை யங்களை வைத்திருக்கின்றன. அப்பகுதி யில் கல் உடைப்பதற்காகக் கொண்டு செல்லப்பட்ட வெடிமருந்துகளே அண் மையில் கரடியனாற்று வெடிச்சம்பவத் திற்குக் காரணமாக அமைந்திருந்தன.

சீன நிறுவனங்களும் தென்னி லங்கை சிங்கள கட்டிட ஒப்பந்தக்காரர் களும் இந்த பகுதியிலிருந்தே தினசரி பெருந்தொகையான கருங்கற்களை எடுத்துச் செல்கிறார்கள். மலைப்பாங்கான இடங்களில் வெடிவைத்துத் தகர்த்து அவற்றை முக்கால் அங்குலம் கற்களாக உடைத்து எடுத்து செல்லுகிறார்கள்.

இதற்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரிடமோ அல்லது இப் பகுதியில் அமைந்திருக்கும் செங்கலடிப் பிரதேசச் செயலாளரிடமோ அனுமதி பெறப்படவில்லை. கொழும்பில் உள்ள மேலிடத்து உத்தரவு என கூறி கருங் கற்களை எடுத்துச்செல்லும் சிங்களவர் களுக்கும் சீனர்களுக்கும் இலங்கை இராணுவத்தினரும் காவல்துறையினரும் பாதுகாப்பு வழங்குகின்றனர்.

காட்டு வளம்

வன்னியிலும் மட்டக்களப்பிலும் அதிகம் காணப்படும் காட்டுமரங்களான தேக்கு, பாலை, முதிரை மற்றும் வேப்ப மரங்கள் தறிக்கப்பட்டு தினசரி தென்னி லங்கைக்கு கடத்தப்படுகிறது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தாந் தாமலை, புலிபாய்ந்த கல், தேக்கம் சோலை (தேக்கம்சோலையில் முன்னர் விடுதலைப்புலிகளின் பண்ணை இருந்தது) ஆகிய இடங்களில் உள்ள பெறுமதியான மரங்கள் தறிக்கப்பட்டு தென்னிலங்கைக்குக் கடத்தப்படுகிறது.

இந்த கடத்தல் நடவடிக்கைகளில் சிங்கள வணிகர்கள் ஈடுபட்டுள்ளனர். மரம் எடுத்துச்செல்வதாக இருந்தால் அப்பிரதேசச் செயலாளர், அரசாங்க அதிபர் ஆகியோரின் அனுமதி கட்டா யம் இருக்க வேண்டும் என்பது இலங்கையில் நடைமுறையில் இருக்கும் சட்டம். ஆனால் வடக்கு கிழக்கில் இந்த சட்டம் பற்றி இவர்கள் கவனத்தில் எடுப்பதே இல்லை.

வனவளத் திணைக்களத்தினரும் இது பற்றி எந்த நடவடிக்கைகளும் எடுக்க முடியாதவர்களாகவே இருக் கின்றனர். கொழும்பின் மேல் மட்ட அனுமதியுடன் தாம் இதை எடுத்துச் செல்வதாக சிங்கள வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

மரங்களை வெட்டிவந்து செங்க லடி வாளைக்காலை என்ற இடத்தில் வைத்து இராணுவத்தினரும் வியாபாரி களுக்கு விற்கின்றனர். மரங்கள் தறிக்கப் பட்டு ஏற்றப்படுகின்ற வேகத்தைப் பார்த்தால் இன்னும் ஒரு வருடத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தேக்கு, பாலை, முதிரை, வேப்ப மரங்கள் எதுவும் இருக்காது என அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு காட்டு வளம் அழிக்கப் படுவதால் மட்டக்களப்பில் மழை வீழ்ச்சி யும் குறைந்து விவசாயம் பாதிக்கப்படும் என அப்பிரதேச மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

இதேபோன்று யுத்தம் முடி வடைந்து வன்னிப் பிரதேசம் இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் வந்தபின் கிளி நொச்சி, முல்லைத்தீவு, வவுனியா பகுதி யிலிருந்து குறிப்பாக நெடுங்கேணி, துணுக்காய் பிரதேச செயலகப் பிரிவு களிலிருந்தும் மணலாற்று பிரதேசத்திலிருந்தும் மரங்கள் வெட்டப்பட்டு தென்னி லங்கைக்குக் கொண்டு செல்லப்படு கின்றன. இராணுவத்தினரின் உதவியுட னேயே இந்த மரக்கடத்தல்கள் நடை பெறுகின்றன.

கால்நடை வளம்

வன்னிப்பிரதேசம் இராணுவத் தினரின் கட்டுப்பாட்டில் வந்தபின், மக்கள் வவுனியாவில் உள்ள தடுப்பு முகாமில் அடைக்கப்பட்ட பின்னர் சுமார் ஒரு வருடகாலம் வன்னியில் இருந்த கால்நடைகள் அனாதரவாகவே விடப் பட்டிருந்தன. இக்காலப்பகுதியில் அங்கி ருந்த இராணுவத்தினர் தாராளமாக கால் நடைகளை இறைச்சிக்காக அழித்தனர்.

இதுதவிர, தென்னிலங்கையிலிருந்து சென்ற சிங்கள வணிகர்களுக்கும் கால்நடைகளைப் பிடித்து விற்றுவந்தனர். மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பின்னரும் தமது கால்நடைகள் கடத்திச்செல்லப்படுவதாக அப்பிரதேச மக்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

அண்மையில் கூட சிங்கள வணிகர்களால் கிளிநொச்சியில் பசுமாடு கள், கன்றுகள் உட்பட பெருந்தொகை யான மாடுகள் இறைச்சிக்காக வெட்டப் பட்டதாக செய்திகள் வெளிவந்திருந்தன. வன்னி மக்களின் மிகப்பெரிய சொத்தாக இருக்கும் கால்நடை இராணுவத்தினரின் உதவியுடன் சிங்கள வணிகர்களால் திட்டமிட்டு கடத்தப்பட்டு வருகிறது.

எதிர்காலத்தில் வன்னிப்பிரதேசம் கால்நடைகளே இல்லாத பகுதியாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. வன்னியிலிருந்து கடத்தப்படும் கால்நடைகள் மன்னார் ஊடாகவே தென்னிலங்கைக்குக் கொண்டு செல்லப்படுகின்றன.

மட்டக்களப்பு படுவான்கரைப் பிரதேசத்திலும் தமிழ் மக்களின் கால் நடைகள் கடத்தப்படுவதாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

கெவிளியாமடு, தாந்தாமலை, குடும்பிமலை பிரதேசங்களில் மேய்ச் சலுக்காக விடப்படும் மாடுகள் பட்டி பட்டியாகக் கடத்தப்படுவதாக முறைப் பாடு செய்யப்பட்டுள்ளது. பால் உற்பத் திக்காக வளர்க்கப்படும் பசுமாடுகளை கடத்திச் சென்று இறைச்சிக்காக வெட்டு வதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பால் உற்பத்திக்குப் புகழ் பெற்ற மட்டக்களப்பில் கால்நடைகள் கடத்தப் படுவதால் பால் உற்பத்தி வெகுவாகக் குறைந்துள்ளது.

வடகிழக்கில் நில ஆக்கிரமிப்பு மாத்திரமல்ல அனைத்து வளங்களும் சிங்கள தேசத்தாலும் இந்திய தேசத் தாலும் சுரண்டப்பட்டு வருகின்றன. தமிழர்களின் பொருளாதார பலத்தை அழிப்பதே - சிங்கள இந்திய தேசங் களின் நோக்கமாகும்.

http://thenseide.com/cgi-bin/Details.asp?selNum=23&fileName=Dec16-10&newsCount=2

தமிழீழம், இலங்கையில் தமிழரின் கிழக்கு - வடக்கு பிரதேசங்கள், சிங்களவரால் ஒரு ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசமாகவே இன்றும் பார்க்கப்படுகின்றது. இதை இந்த சூறையாடல்கள் தெளிவுபடுத்துகின்றன. இது சிங்களத்தின் மனத்தில் ஆழமாக ஊறிப்போன ஒன்று.

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீலங்கா, தமிழ்ப்பகுதிகளில் கனிமவளங்களை சூறையாடுவதுடன் மட்டும் நின்றுவிடாது.....

வடக்கில் உள்ள தமிழரின் பெரிய வியாபாரஸ்தலங்களை, கைப்பற்றியோ, மாற்று வழிகளில் நெருக்கடி கொடுத்தோ.....

அவைகள் சிங்களவர்களின் கைகளுக்கு போக முயல்வதாக அண்மையில் வந்த செய்தி ஒன்றில் வாசித்தேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.