Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வருவேன் மீண்டும் வருவேன் இறைவா வரமொன்று தாராயோ?!!!

Featured Replies

எம் தேசம், இன்று இடிவிழுந்ததுபோன்றாகிவிட்டது. என்ன செய்குவேன் இறையே! கட்டி எழுப்பிய தேசம், கலாச்சாரத்தைப் பின்னி நின்ற எம் மக்கள். எம்மதம், எம்குலம் என்று வாழ்ந்த எம் தேச மக்களிடையே இன்று சுதந்திர தாகம் குன்றியது என்னவோ? விடுதலைப்புலிகள் என்ற அமைப்பு, இல்லையில்லை, தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் இன்று ஆயுதத்தை மௌனித்திருக்கின்றார்கள் என்றால் அது புலம்பெயர் சமுதாயத்திடையே கொடுக்கப்பட்ட பொறுப்பென்றெண்ணாது, நமக்குள் மாறிமாறித் துரோகிப் பட்டம், 4 பேர் சேர்ந்தவுடன் ஒரு அமைப்பு, அறிக்கை...

இவை எல்லாம் பார்க்கும்போது முள்ளிவாய்க்காலில் பட்டுப்போன எம் உறவுகளின் குருதியிலே ஓவியம் வரைவது போன்றுள்ளது.

தமிழனே! நீ இவ்வுலகில் வாழ, உனக்கென்றொரு சமுதாயம் இருந்தது என வருங்காலச் சமுதாயத்திற்கு நீ கூற ஆசைப்படுவாயானால், உன் போராட்டமே உனக்குவழி....

நின்றெரித்திரும் சேனையிலே, அன்புப் பாச மழையிலே மூழ்கித்திளைத்தவர் நாமல்லோ?

கொன்றழித்திடும் போதினிலே புலம்பெயர் தேசத்திலே பொங்கி எழுந்தவர் நாமல்லோ?

அன்பு மனம் பேசி, சிங்கள அரசினாட்கள் புகுகின்றனர்.

தங்கத் தமிழீழ மண்ணின் பெருமையை பொங்கிப்பொங்கித் தருகின்றனர்.

அன்பென்று நீ நினைத்து மாண்டிடலாமோ?

அரிவருடிகளுடன் சேர்ந்திடலாமோ?

பொங்கிடு தமிழா! புறப்படு என்றே ஈழமண் சொல்லுது.

வென்றிட வேண்டும், எம் இனத்தின் தேசமதை என்று மனதுகள் துடிக்குது.

வழிகாட்ட ஆளில்லையா உனக்கு? வழியேதும் தெரியலையா உனக்கு?

பொங்கிக் கடலென எழுந்தாயே!

புலத்தின் அரசின் மனதைத் திறந்தாயே!

வென்றிங்கு வரும் வேளை வேதனைகள் மிஞ்சுதையா...

உன்னுரிமை கேட்கும் உரிமை உன்னிடம் இன்னமும் இருக்கிறது. சொந்தமென நம்பிவந்த எம்முறவுகள் உதிரம் இன்னமும் வழிகிறது. உதரத்தாய்வழி வந்தவனே... உன்னுள் ஓடும் இரத்தம் ஒன்றும் கலப்படமற்றதுதானே!

ஓ தமிழனே! உனக்கு என்ன இன்னமும் வலிக்கிறதா? புலிகள் நிலத்திலே, எம் களத்திலே இல்லையென்று? ஆயுதம் ஏந்தியது மட்டும் தான் புலிகளின் போராட்டம் என்று நினைத்தால் அது அன்றே அழிந்திருக்கும். அரசியற் சூழ்ச்சிக்குள் சிக்காதிருந்த புலிகள் ஆயுதம் மௌனிக்கவில்லையாயின் இன்றே அது முழுதுமாய் அழிந்திருக்கும். இப்போது புலிகளாய், ஆயுதம் ஏந்திய போராளியாய் நீயிருக்கின்றாய் என்றா துணிவிற்தானே கையிற் கிடந்த குண்டினைக்கூட கழற்றிவைத்தார்கள். நெஞ்சிலே சுமந்த விடுதலை வேட்கையைக்கூட மறைத்து நின்றார்கள்.

இடிவிழுந்த எம் தேசத்தின் நயகர்களின் கனவதை மெய்யாக்க தனிக்களம் புகுவாயா? இன்னமும் ஏன் உனக்கான உத்தரவு? இன்னமும் உனக்கேன் ஒரு மனிதன் வழிகாட்டி? வாழ்ந்து காட்டினார்களைய்யா. அதன் படி நீ செல்லு. அரசியற்களம், உன் மனிதநேயப்போராட்டக்களம். உன்கையில் இருக்கிறது.

நானடித்து நீயொன்றும் சாகவில்லை என்கிறான் சிங்களவன். நாக்குத் தொங்கப்போட்டுத் திரியுது நம் சொந்தங்கள் சில. பணத்தைக் கொடுத்து பிணங்களாக்குகின்றான். பணத்தை வாங்கி பிணத்தினைப்போடுகின்றான்.

உரிமைக்குரலை நீ கையிலெடு. உன் குரல் ஏன் இவ்வுலகில் ஒலிக்காதா என்ன? நீ முழங்கினால் முரசு கொட்டாதா என்ன? நீ கேட்டால் நீதி கிடைக்காதா என்ன? நீ கத்தினால் உன் நாட்டின் அரசின் காதில் கேட்காதா என்ன? பின்னர் ஏன் இன்னமும் பொறுமை?

அழித்த அழிவுகளின் வடுக்கள் மறையமுன்பே மையிட்டு மறைக்கிறான் உன் கண்முன்னே. வழித்தல் ஏதுமின்றி வழித்தொழித்தான் எம்மினத்தை. நெளிதல் ஏதுமின்றி களம் புகுவாயா உன் புலத்தில்?

இறையே! மன்றாடுகின்றேன் உன்னை நான், இறைவனே நீ இல்லையென்றாகிவிட்டது, இனியாவது ஒரு முறை ஒரே ஒரு வரம் மட்டுந் தா எனக்கு... பொங்கி எழுந்த எம் தமிழினம் மண்டியிட்டுப்போவதுவா? பொங்கிச் சரிந்த எம் உறவுகள் உடலங்கள் மண்ணோடு மண்ணாகிப்போவதுவா? நீதியின் கண்கள், நீதி தேவதையின் கண்கள் கட்டுண்டு கிடக்கின்றனவே... நீதி தேவதையின் கண்களின் கட்டை அவிழ்ப்பதற்கு தமிழனுக்கு துணைபுரி... சிங்கள அரசின் அரசியல்ச் சூழ்ச்சிக்குள் சிக்குண்ட எம்முறவை மீட்க ஒரு வழி கொடு...

Edited by யாழ்நிலவன்

  • தொடங்கியவர்

கண்கெட்ட பிறகு எதற்கு சூரிய நம்ஸ்காரம் என்றா கேட்கின்றாய்? கண் கெட்டதாய் நீ நினைத்தால் அது கெட்ட கண்ணே... கண்ணில்லாக் குருடரும் வாழவில்லையா? கண்ணிருந்தும் குருடராய் நாம் தான் வாழ்கின்றோம்

  • தொடங்கியவர்

அன்பகலா என் உறவுகள் அனைவருக்கும் சிர்ந்தாழ்த்தி வணக்கம், உங்களிடம் ஓர் கருணை வேண்டுகோள். யாழ் நிலவன் என்றும் ஒரே கொள்கை, ஒரே வழியில் எழுதுபவன். தயவுசெய்து என்னைத் துரோகிப்பட்டம் கட்டி ஒதுக்காதிருங்கள். வெட்டுவது வாளாயினும் வெட்டுபவனும் இருக்கவேண்டுமே... சரிதான். வெட்டும் வாளாக எழுதுவதற்காகக் காத்திருக்கிறேன்... வெட்டுபவனாக இருந்திடாதீர்கள். அதற்காக துரோகிகள் பட்டமோ, பக்கம் மாறியவர்கள் என்ற பக்கமோ சாராமல் என் எழுத்து என்றென்றும் தமிழ், தமிழ் ஈழம், எம் தேசம், விடுதலை என்ற ஓரச்சில் மட்டுமே என் சக்கரம் சுழலும். யார் பெயரொ... யார் ஊரோ அடங்காது எழுத ஆவலுடன் இருக்கின்றேன்... எம் உறவுகள் எனக்குறுதுணைவேண்டும் என்று மன்றாடி நிற்கின்றேன். தாங்கும் சக்தியற்றிருக்கும் எனக்கோ இப் பூமித்தாய் என்னைத் தாங்கும் வரைக்கும் தமிழ் எழுத ஆவலுடன் இருக்கின்றேன். என்றென்றும் உங்கள் பதிலுக்காய் காத்திருக்கும் உங்கள் யாழ் உறவு யாழ் நிலவன்

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் யாழ் நிலவன் ம உங்கள் மீள் வருகைக்கும் பதிவுக்கும் நன்றி ........சோர்ந்த நம் மக்களை மீண்டும் தட்டி எழுப்ப வேண்டும். உங்கள்வரவு யாழுக்கு ஊக்க மருந்தாக் வேண்டும்.

.

Edited by நிலாமதி

கண்கெட்ட பிறகு எதற்கு சூரிய நம்ஸ்காரம் என்றா கேட்கின்றாய்? கண் கெட்டதாய் நீ நினைத்தால் அது கெட்ட கண்ணே... கண்ணில்லாக் குருடரும் வாழவில்லையா? கண்ணிருந்தும் குருடராய் நாம் தான் வாழ்கின்றோம்

முள்ளி வாய்க்காலில் மூழ்கிய தமிழ்க்குடிகள் உதவக்கேட்டு

எழுப்பிய சாக்குரல்களின் எதிரொலிகள் இன்னும் எம்செவிகளில்...

காவல் தெய்வங்களையும் காவுகொடுத்தோம்.

எல்லாம் விதிதானென வாழாதிருப்போமா? இல்லை

ஊமையுலகின் உறக்கம் கலைத்து நீதி கேட்போமா?

ஏழை அழுத கண்ணீர், கூரிய வாளை ஒக்கும்

எம் ஊரை அழித்து உலகை ஏய்த்தவர்கள்

பொல்லாத போர்க்குற்றங்கள் புரிந்தவர்கள்

நிம்மதியாய் இவ்வுலகில் வாழ்வரோ?

வாளை விட எழுத்து வலிமை உடையதாம்,

சொல்லுகிற சொல்லிற்க்கும் மகாசக்தியுண்டாம்.

நீதி கேட்டு பொங்கி எழும் புலத்தின் இளையோருக்கு உரம் சேர்ப்போம்.

அனைவரும் திரண்டு நின்று வடம் பிடிப்போம்!

  • கருத்துக்கள உறவுகள்

..என் எழுத்து என்றென்றும் தமிழ், தமிழ் ஈழம், எம் தேசம், விடுதலை என்ற ஓரச்சில் மட்டுமே என் சக்கரம் சுழலும். யார் பெயரொ... யார் ஊரோ அடங்காது எழுத ஆவலுடன் இருக்கின்றேன்... எம் உறவுகள் எனக்குறுதுணைவேண்டும் என்று மன்றாடி நிற்கின்றேன். தாங்கும் சக்தியற்றிருக்கும் எனக்கோ இப் பூமித்தாய் என்னைத் தாங்கும் வரைக்கும் தமிழ் எழுத ஆவலுடன் இருக்கின்றேன்...

நிச்சயம் உங்கள் நம்பிக்கைக்கும், உழைப்பிற்கும், எண்ணிய பலன் கிட்டும்.. பிறக்கும் எழுத்தினால் புத்துயிருடன் தெளிவடையும்..உரம் சேர்க்கும்.

  • தொடங்கியவர்

வணக்கம் யாழ் நிலவன் ம உங்கள் மீள் வருகைக்கும் பதிவுக்கும் நன்றி ........சோர்ந்த நம் மக்களை மீண்டும் தட்டி எழுப்ப வேண்டும். உங்கள்வரவு யாழுக்கு ஊக்க மருந்தாக் வேண்டும்.

.

நன்றி நிலாமதி

முள்ளி வாய்க்காலில் மூழ்கிய தமிழ்க்குடிகள் உதவக்கேட்டு

எழுப்பிய சாக்குரல்களின் எதிரொலிகள் இன்னும் எம்செவிகளில்...

காவல் தெய்வங்களையும் காவுகொடுத்தோம்.

எல்லாம் விதிதானென வாழாதிருப்போமா? இல்லை

ஊமையுலகின் உறக்கம் கலைத்து நீதி கேட்போமா?

ஏழை அழுத கண்ணீர், கூரிய வாளை ஒக்கும்

எம் ஊரை அழித்து உலகை ஏய்த்தவர்கள்

பொல்லாத போர்க்குற்றங்கள் புரிந்தவர்கள்

நிம்மதியாய் இவ்வுலகில் வாழ்வரோ?

வாளை விட எழுத்து வலிமை உடையதாம்,

சொல்லுகிற சொல்லிற்க்கும் மகாசக்தியுண்டாம்.

நீதி கேட்டு பொங்கி எழும் புலத்தின் இளையோருக்கு உரம் சேர்ப்போம்.

அனைவரும் திரண்டு நின்று வடம் பிடிப்போம்!

பொங்கி எழவேண்டும், புதுயுகம் புகவேண்டும். கண்ணிமைக்கும் நேரத்திலே கொன்றொழிக்கும் பகைவெல்ல தமிழர் நாம் ஓரணியிற் திரளவேண்டும்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.