Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முன்னாள் புலிகள் சமூகத்தில் கலப்பதில் 'சிக்கல்'

Featured Replies

முன்னாள் விடுதலைப் புலிகள் சமூகத்தில் மீண்டும் கலப்பதில் தாம் சில பிரச்சனைகளை சந்தித்து வருவதாக இலங்கை அதிகாரிகள் கூறுகின்றனர்.

புனர்வாழ்வு நடவடிக்கைக்குப் பிறகு விடுவிக்கப்பட்ட போராளிகள் சிலர் காவல் துறையினரால் விசாரணைக்காக கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

ஆனால் அதேநேரம் இவ்வாறு திரும்ப கைதுசெய்யப்படும் நபர்களின் எண்ணிக்கை மிகவும் சொற்பமானது என்றும் முன்னாள் போராளிகள் விடுவிக்கப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அரசு கூறுகிறது.

இலங்கையில் நடைபெற்ற போரின் இறுதி கட்டத்தில் 11 ஆயிரம் விடுதலைப் புலிகள் சரணடைந்ததாக இலங்கை இராணுவம் கூறுகிறது. ஆனால் இவர்களின் நிலை குறித்த சர்ச்சை நீடிக்கிறது.

மனித உரிமை அமைப்புகள் கவலை

இந்தப் போராளிகள் வைக்கப்பட்டிருக்கும் முகாம்களுக்கு சென்று பார்வையிட சர்வதேச செஞ்சிலுவை சங்கத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வருவதாக இராணுவம் கூறுகிறது.

கடந்த ஆண்டின் துவக்கத்தில் இருந்து இதுவரை சுமார் 5600 பேர் தொகுதி தொகுதியாக விடுவிக்கப்பட்டுவிட்டதாக புனர்வாழ்வு நடவடிக்கைக்கு பொறுப்பான இராணுவ அதிகாரியான பிரிகேடியர் சுதாந்த ரணசிங்கே பிபிசியின் தெரிவித்தார்.

ஆனால் முன்னாள் போராளிகளின் விடுவிப்பு நிகழ்வுகள் எப்போதும் சுமூகமாக நடந்து முடிவதில்லை என்ற பேச்சும் இருந்து வருகிறது.

விடுவிக்கப்பட்டவர்கள் அடிக்கடி எவ்வித காரணமும் இன்றி விசாரிக்கப்படுவது தொடர்பாக தமக்கு கவலையளிக்கும் செய்திகள் கிடைத்துள்ளதாக பிரஸ்ஸல்ஸைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இன்டர்னேஷனல் கிரைசிஸ் குருப் என்ற சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு கூறியுள்ளது.

இராணுவம் விளக்கம்

முன்னாள் புலிகள் பலர் காவல் துறையினரால் சில சமயம் விசாரிக்கப்பட்டுள்ளனர் என்பதை ஒத்துக் கொள்ளும் பிரிகேடியர் ரனசிங்கே ஆனால் இவர்களது கடந்தகால செயல்களுக்காக இவர்கள் விசாரிக்கப்படவில்லை என்கிறார்.

திருடுவது, சட்ட விரோதமாக சாரயம் காய்ச்சுவது போன்ற செயல்களில் முன்னாள் புலி போராளிகள் ஈடுபடுவதாக கிராமவாசிகளிடமிருந்து புகார் வந்ததன் அடிப்படையிலேயே அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறியுள்ளார் பிரிகேடியர்

பிரிகேடியர்

ஆனால் இது குறித்து மேலதிக விபரங்களை அவரால் தர முடியவில்லை.

இப்படி விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவர்கள் அதிக காலம் தடுத்துவைக்கப்பட்டிருக்க மாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.

தற்போது அரசு தரும் புனர்வாழ்வுப் பயிற்சியில் மன நலம் சார்ந்த பயிற்சிகளை அளிக்க உளவியல் நிபணர்களும் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.

பிபிசி

திருடுவது, சட்ட விரோதமாக சாரயம் காய்ச்சுவது போன்ற செயல்களில் முன்னாள் புலி போராளிகள் ஈடுபடுவதாக கிராமவாசிகளிடமிருந்து புகார் வந்ததன் அடிப்படையிலேயே அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறியுள்ளார் பிரிகேடியர்

பிறகு?

  • கருத்துக்கள உறவுகள்

திருடுவது, சட்ட விரோதமாக சாரயம் காய்ச்சுவது போன்ற செயல்களில் முன்னாள் புலி போராளிகள் ஈடுபடுவதாக கிராமவாசிகளிடமிருந்து புகார் வந்ததன் அடிப்படையிலேயே அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறியுள்ளார் பிரிகேடியர்

சொந்தமாக தொழில் செய்தவரை (கார் வாங்கி விற்றல்) கடத்தி கொன்று விட்டு வீசி எறிந்தது உங்களது இரத்தம் படிந்த கைதானே.

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் புலி உறுப்பினர்கள் சமூகத்தில் இணைவதால் சிக்கல்

அரச அதிகாரிகள் தெரிவிப்பு

[செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-01-04 08:50:46| யாழ்ப்பாணம்]

முன்னாள் விடுதலைப்புலிப் போராளிகள் சமூகத்தில் இணைந்து கொள்வதால் தாம் சில பிரச்சினைகளைச் சந்தித்து வருவதாக அரச அதிகாரிகள் தெரிவித்ததாக இலண்டன் பி.பி.சி. செய்தி சேவை தகவல் வெளியிட்டுள்ளது.

புனர்வாழ்வு நடவடிக்கைக்குப் பின்னர் விடுவிக்கப்பட்ட போராளிகள் சிலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்ததாகக் குறிப்பிட்டுள்ள பி.பி.சி. செய்திச் சேவையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளில் இவ்வாறு திரும்பக் கைது செய்யப்படும் நபர்களின் எண்ணிக்கை மிகவும் சொற்பமானது என்றும் முன்னாள் போராளிகள் விடுவிக்கப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அரசு கூறுகிறது.

இலங்கையில் நடைபெற்ற போரின் இறுதிக்கட்டத்தில் 11 ஆயிரம் விடுதலைப்புலிகள் சரணடைந்ததாக இலங்கை இராணுவம் கூறுகின்ற போதிலும் இவர்களின் நிலை குறித்த சர்ச்சை நீடிக்கிறது. இவர்களுக்குப் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வருவதாக இராணுவம் கூறுகின்ற போதிலும் இந்தப் போராளிகள் வைக்கப்பட்டிருக்கும் முகாம்களுக்குச் சென்று பார்வையிட சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

விடுவிக்கப்பட்டவர்கள் அடிக்கடி எவ்வித காரணமும் இன்றி விசாரிக்கப்படுவது தொடர்பாகத் தமக்கு கவலையளிக்கும் செய்திகள் கிடைத்துள்ளதாக பிரஸ்ஸல்ஸை தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் இன்டர்நேஷனல் கிரைசிஸ் குரூப் என்ற சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக் கூறியுள்ளது.

முன்னாள் புலிகள் பலர் பொலிஸாரால் சில சமயம் விசாரிக்கப்பட்டுள்ளனர் என்பதை ஒத்துக்கொள்ளும் பிரிகேடியர் ரணசிங்கே இவர்களது கடந்தகாலச் செயல்களுக்காக இவர்கள் விசாரிக்கப்படவில்லை என்கிறார்.

திருடுவது, சட்டவிரோதமாகச் சாராயம் காய்ச்சுவது போன்ற செயல்களில் முன்னாள் புலிப் போராளிகள் ஈடுபடுவதாகப் புகார் வந்ததன் அடிப்படையிலேயே அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக பிரிகேடியர் கூறியுள்ளார். ஆனால் இது குறித்து மேலதிக விபரங்களை அவரால் தரமுடியவில்லை.

இப்படி விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவர்கள் அதிக காலம் தடுத்து வைக்கப்பட்டிருக்க மாட்டார்கள் என்றும் தற்போது அரசு தரும் புனர்வாழ்வுப் பயிற்சியில் மனநலம் சார்ந்த பயிற்சிகளை அளிக்க உளவியல் நிபுணர்களும் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.

valampurii.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.