Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொருளாதாரத்தில் அமெரிக்காவை முந்தப் போகும் இந்தியா!

Featured Replies

2050 ஆம் ஆண்டு வாக்கில், அமெரிக்காவை பின்னுக்கு தள்ளிவிட்டுவிட்டு, வாங்கும் சக்தி அடிப்படையில், உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும் சாத்தியம் உள்ளதோடு, சீனாவையும் முந்தக் கூடிய வாய்ப்பு உள்ளதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மேலும் வருகிற 2020 ஆம் ஆண்டு வாக்கில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளிவிட்டு சீனா, உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்கும் சாத்தியம் உள்ளதாகவும், "2050ல் உலகம்" என்ற தலைப்பில், சந்தைகள் மற்றும் தொழில்கள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளும் நிறுவனம் ஒன்று மேற்கொண்ட ஆய்வு தெரிவிக்கிறது.

சமச்சீரான வாங்கும் திறன் அடிப்படையிலான பொருளாதார அளவீடுகளின் அடிப்படையிலேயே, ஒரு நாட்டின் ஜிடிபி (GDP) எனப்படும் பொருளாதார வளர்ச்சி விகிதம் கணக்கிடப்படுகிறது.

அதன்படி, சமச்சீரான வாங்கும் சக்தி அடிப்படையில், 2009 ஆம் ஆண்டு உலகிலேயே நான்காவது சக்தியாக திகழ்ந்த இந்தியா, 2050 ஆம் ஆண்டு வாக்கில் சீனாவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தை பிடிக்கும் என்றும், அமெரிக்கா அப்போது மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுவிடும் என்றும் அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

மேலும் எதிர்காலத்தில் இந்தியா பொருளாதார வளர்ச்சியில் சீனாவை முந்தக்கூடும் என்பதற்கான காரணம், இந்தியா இளைய தலைமுறையினரை அதிகமாக கொண்டிருப்பதும், சீனாவைவிட வேலை செய்யக்கூடிய வயதுடைய மக்கள் தொகை அதிகரித்துவருவதும்தான் என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

வேகமாக வளரக்கூடிய பொருளாதார சக்தியை இந்தியா கொண்டிருப்பதால், 2050 வாக்கில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் (ஜிடிபி) 83 விழுக்காடாகவோ அல்லது அமெரிக்காவின் வாங்கும் சக்தியைக் காட்டிலும் 14 விழுக்காடு அதிகமாகவோ இருக்கும் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

அண்மையில் ஏற்பட்ட உலகளாவிய பொருளாதார நெருக்கடி, பொருளாதாரத்தில் வளர்ந்துவரும் நாடுகளுக்கு பொருளாதார சக்தியை இடமாற்ற்றிவிட்டது.

அடுத்து வருகிற பத்தாண்டுகளில் 'அவுட் சோர்சிங்' போன்றவற்றை இந்தியா மிகக்குறைந்த அளவே சார்ந்திருப்பதோடு, ஏற்றுமதியில் அதிக கவனம் செலுத்தி, தனது கட்டுமான திறன்களை மேலும் அதிகரித்து தனது மக்களின் கல்வித்தரங்களையும் உயர்த்தும் என்றும் அந்த ஆய்வறிக்கை மேலும் தெரிவிக்கிறது.

http://tamil.webdunia.com/newsworld/news/currentaffairs/1101/08/1110108030_1.htm

  • கருத்துக்கள உறவுகள்

2050க்குள் யாரிடமாவது இந்தியா வாங்காமல் இருக்குமென நான் நம்பவில்லை. :lol::lol:

2050க்குள் யாரிடமாவது இந்தியா வாங்காமல் இருக்குமென நான் நம்பவில்லை. :lol::lol:

நான் நினைக்கவில்லை இந்தியா சண்டைக்கு போகும் என்று ஆனால் ரஸ்யா செய்தது போல ஜோர்ஜியாக்கு அடி மாதிரி பங்காளதேசத்துக்கு அல்லது இலங்ககைக்கு விழுந்தாலும் விழும்.

  • கருத்துக்கள உறவுகள்

2050ல் இந்தியா வல்லராசாக மாறும் என்று இந்தியர்கள் சிலரின் கனவு.

ஆனால் ஊழலில் தொடர்ந்து முதல் இடத்தில் இந்தியா இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய மக்கள்தொகை 2050ல் 170 கோடியாகும்: அமெரிக்க ஆய்வு அமைப்பு

ஜூலை30,2010: உலக மக்கள்தொகை வரும் 2050ஆம் ஆண்டில் 940 கோடியைத் தொட்டுவிடும் என்று கூறப்படும் அதேவேளை, அப்போது இந்தியாவின் மக்கள்தொகை 170 கோடியாக அதிகரிக்கும் என அமெரிக்க மக்கள்தொகை ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

இப்போது உலக மக்கள்தொகை 680 கோடியாக உள்ளது. இந்த எண்ணிக்கை 2025ஆம் ஆண்டுவாக்கில் 800 கோடியை எட்டும். உலக மக்கள்தொகையில் சீனா 130 கோடியுடன் முதலிடத்தை வகிக்கிறது. 2-வது இடத்தில் இந்தியா உள்ளது. இந்தியாவின் மக்கள்தொகை 120 கோடியாகும்.

இதே விகிதத்தில் மக்கள்தொகை வளர்ச்சி இருக்குமானால் 2050-ல் உலக மக்கள்தொகை 940 கோடியாக அதிகரிக்கும். இதில் ஆசியக் கண்டத்தில் மட்டும் மக்கள்தொகை 550 கோடியாக இருக்கும். இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் மக்கள்தொகை பெருக்கத்தைப் பொருத்து இந்த எண்ணிக்கை மாறுபடலாம் என்றும் அம்மையம் கூறியுள்ளது.

ஆப்பிரிக்கக் கண்டத்தில் 2050-ல் மக்கள்தொகை 210 கோடியாக அதிகரிக்கும். அமெரிக்காவிலும் மக்கள்தொகை அதிகரித்து வருகிறது. இப்போது 31 கோடியாக உள்ள அமெரிக்க மக்கள்தொகை, 2050-ல் 39.9 கோடி அல்லது 45.8 கோடி அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. இருப்பினும், ஐரோப்பிய நாடுகள் மற்றும் இரஷியாவில் மக்கள்தொகை 2050 இல் குறையக் கூடும் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

http://storico.radiovaticana.org/in3/storico/2010-07/412081_2050_170.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.