Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தனித் தமிழ்நாடுதான் இனித் தீர்வு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Friday, January 14th, 2011 | Posted by admin

தனித் தமிழ்நாடுதான் இனித் தீர்வு!

மீண்டும் கடலில் ஒரு படுகொலை!

தனித் தமிழ்நாடுதான் இனித் தீர்வு!

தமிழர்களம் அரிமாவளவன் அறைகூவல்!

விழுகிற பிணங்களை எண்ணிக் கொண்டிருப்பதுதான் நமது வேலையா? கூலிக்கு மாறடிக்கிறவனுக்குக்கூட குருதி கொப்பளிக்குமே! என் சொந்த மக்களின் 535ஆவது உடல் துடிதுடித்து விழுகிறது! 1947ல் என்னைப் பாதுகாப்பதாக வாக்குறுதி கொடுத்து அதிகாரத்தைக் கைப்பற்றிய தில்லி அரசோ எள்ளளவும் கவலை கொள்ளவில்லை! “பார்த்துச் சுடு” என்று பக்குவமாகச் சொல்கிறது!

தமிழ்நாட்டு அரசு வழக்கம்போல மனு, எச்சரிக்கை என்று ஓரம் கட்டிக் கொள்கிறது! தேர்தல் நெருங்கிவிட்டதால் இழப்பீட்டுத் தொகையை சற்று உயர்த்தி ஐந்து லட்சமாக அறிவிக்கிறது!

தில்லி தமிழர்களை தனி ஒரு தேசிய இனமாக மட்டும் பார்க்கவில்லை! தனி ஒரு நாடு என்பது போலவும் அதற்கும் தனக்கும் எந்தப் பொறுப்பும் இல்லை என்பது போலவும்தான் நடந்து கொள்கிறது!

தில்லியை நம்புவதாலோ அதன் கொத்தடிமையாக இருக்கும் தமிழ்நாட்டு அரசை நம்புவதாலோ இனி நமக்கு எள்ளளவும் பயன் கிடைக்கப் போவதில்லை!

இந்திய அரசின் உதவியால்தான் ஈழம் கிடைக்கும் என்றோ தொடர்ந்து இந்திய அரசுக்கு மனு போடுவதால் தமிழ்நாட்டுத் தமிழர்களின் படுகொலைகளை சிங்கள அரசு நிறுத்திவிடும் என்றோ இனியும் எண்ணிக் கொண்டு இருப்பது அடி முட்டாள்தனமான சிந்தனையாகிவிட்டது!

சிங்களர்களுக்கு எதிராக ஒரு போராட்டத்தையோ எதிர்ப்பையோ அறிக்கையையோ கடுப்புடனும் துடிப்புடனும் உடனடியாகத் தாவித் தடுக்கிற இந்திய, தமிழக அரசுகள் சொந்த நாட்டு மக்களைக் காக்கைக் குருவிபோல சுட்டுத் தள்ளும்போது எருமை மாட்டில் மழை பெய்ததுபோல சொரணையற்று இருப்பது வெட்கக் கேடில்லையா?

இந்த எருமைப்பாட்டை “ஒருமைப்பாடு, ஒருமைப்பாடு” என்று எத்தனைநாட்கள்தான் கட்டியழுவது?

இந்திய அரசு நமக்கானது அல்ல என்பதைத் தில்லி ஆட்சியாளர்கள் மேலும் மேலும் நமக்கு மெய்ப்பித்துக் கொண்டிருக்கும்போது தமிழ்நாட்டு மக்களும் எதிர்வரும் சந்ததியினரும் சரியான மாற்றுக்களைத் தேடுவதே இனி சரித்திரம் நமக்கு விடுகிற சவால்!

போர்க்குற்றவாளியான ராசபக்சேவின் படத்தை இந்திய அரசின் சைனிக் பள்ளிகளின் நாட்காட்டியில் போட்டு விளம்பரப்படுத்துகிறார்கள். அவனுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு வழங்குகிறார்கள்! மறுபக்கம் தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கைக் காடைப்படை சுட்டுக் கொல்வதை வேடிக்கை பார்க்கிறார்கள்! இந்திய ஒருமைப்பாட்டிற்கு யார் வேட்டு வைப்பது என்பது இதிலிருந்து தெளிவாகத் தெரிகிறதே!

இந்தியா ஈழத் தமிழர்களுக்கு எதிராக மட்டும் சிங்கள இனவெறி அரசோடு கைகோர்க்கவில்லை! தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு எதிராகவும் சிங்களனோடு அது கைகோர்த்து நிற்கிறது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி!

தமிழ்நாடு தனியொரு நாடாக மாறி தனக்கென ஒரு படை, அதிகாரம், கொடி ஆகியவற்றோடு இருந்தால் மட்டுமே இனி தமிழர்களை மாற்றானிடமிருந்து காப்பாற்ற இயலும் என்பதை நாம் அறிவித்தே ஆக வேண்டும்! சமநிலையோடு சிந்திக்கிற எவரும் இனி தமிழ்நாட்டுக்குத் தனிநாட்டு உரிமையன்றி வேறேதும் சிந்திக்க மறுப்பர்!

தமிழ்நாடு தமிழருக்கே என்று முழங்குவோம்!

Short URL: http://thaynilam.com/tamil/?p=1866

ஜயோ உண்மையே கேட்க நல்லாய் இருக்கு. போர்குணம் கொள்ளுங்கள்.

காலம் தாழ்த்தினாலும் இன்ன்மு தமிழினம் அழிய வில்லை என்றது போல் உணர்த்துகிறீர்கள்.

எங்க பார்ப்பம். ஈழத்தமிழன் ரத்தம் காய முந்தி அடுத்த நகர்வுக்கு தமிழன் வர வேண்டும். இல்லையேல் தமிழினம் அழிந்து விடும்

சீனா - பாகிஸ்தான் இந்தியா பிரிவதை விரும்புகின்றன.

வரும் 30-50 வருடங்களில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ( இன்றைய முதன்மை நாடான அமெரிக்காவை 2050 அளவில் தாண்டும் என சொல்லப்படுகின்றது) மிக பலமானதாக இருக்கும்.

இந்த பொருளாதார வளர்ச்சி அதிகம் தென் மாநில பிரதேசங்களில் அதிகளவு காணப்படும். அதாவது, வட மாநிலங்களுக்கு தென் மாநிலங்களில் இருந்து பணம் அனுப்பப்படும். இது தென் மாநிலங்கள் பிரிந்து செல்ல நினைப்பதை இன்னும் அதிகரிக்கும்.

இராமேஸ்வரத்தில் தமிழீழ விமானப்படை அமையவேண்டும்,

  • கருத்துக்கள உறவுகள்

இராமேஸ்வரத்து தொகுதி மக்கள் ஹசன் அலி என்னும் காங்கிரஸ் உறுப்பினரை தமது நாடளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்து கொண்டமைக்கு கிடைத்த பரிசு தான்.... அந்த அப்பாவி மீனவர்களின் படு கொலைகள். இதற்கு கூட்டணி அமைத்த தி.மு.க. வும் பொறுப்பேற்க வேண்டும். சும்மா நெடுகவும் தந்தி அடித்துக்கொண்டிருக்கப் படாது.

ரோச நரம்பு அறுந்தவன் தான்.... தந்தி அடிப்பான்.

யாழில் ஊடுருவியிருக்கும் சீனர்களின் உதவியைப் பெற்றால் இது விரைவில் சாத்தியமாகும்.

தனித் தமிழ்நாடுதான் இனித் தீர்வு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.