Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

லண்டனில் தமிழ் வாலிபர் கொலை

Featured Replies

  • தொடங்கியவர்

எல்லாவற்றையும் மறைக்கிறதாலதான்

உண்மைகள் பலருக்கு தெரியாமல் போய்விடுகிறது.

அதுவே தவறுகள் தொடர வழி செய்கிறது.

  • Replies 116
  • Views 19.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எல்லாவற்றையும் மறைக்கிறதாலதான்

உண்மைகள் பலருக்கு தெரியாமல் போய்விடுகிறது.

அதுவே தவறுகள் தொடர வழி செய்கிறது.

எப்படியானவற்றை அறிந்து கொள்ளச்சொல்லுறீங்க அஜீவன்?? அந்த வேடர்கள் செய்த செய்கின்ற திருவிளையாடல்களையா? இப்பொழுதுதான் இந்த இனையத்தளத்தினை அறிந்தேன்,, அதன் மூலம், அந்த வேடர்களின் பிறப்புகளை அறிந்தேன்,, ஏதோ தாய் நாட்டுக்கு செய்யும் தொண்டாக நினைத்து செய்கின்றார்களோ என்னமோ??

அந்த இனையத்தள முகவரியை பார்த்திருக்காவிட்டால் நான் என்பாட்டில் இருந்திப்பேனே? இதை அறிந்து வைத்திருத்தால் தான் என்ன நன்மை வரப்போகிறது? :roll: :?

  • தொடங்கியவர்

டண்

அம்பலப்படுத்துவதே கடினமானது.

பார்த்தாவது மகாஜனங்கள் முடிவெடுக்கட்டுமே?

இந்த கோஸ்டிச்சண்டையில் இறந்த "டக்லஸ்" தொடர்பாக இன்றொரு செய்தி கேள்விப்பட்டேன். ......

...... மாவீரர் நாள் லண்டனில் நடந்துகொண்டிருந்த ஒரு மண்டபத்திலிருந்து இதே டக்லஸ்ஸும் அவனது கும்பலும், இன்னுமோர் கோஸ்டிக்கும்பலுக்கு தொலைபேசி அழைப்பு விடுத்திருந்தார்களாம்! .."நாங்கள் இந்த குறிப்பிட்ட மண்டபத்தில் நிற்கின்றோம்!!!!! இயலுமாயின் வாருங்கள் பார்க்கலாம்" என்று!!!!!!! .......

....... அதுவும் மாவீரர் நாள் நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது!!! அம்மண்டபத்தில் கோஸ்டிச்சண்டை?????? .....

ஆழ்ந்து யோசித்துப் பாருங்கள்!! இந்த நாய் கோஸ்டிச்சண்டைக்கா?? மற்றைய எதிர்க் குறூப்பை அழைத்ததென்று???? அதுவும் மாவீரர் நாள் நிகழ்வு நடக்கும் மண்டபத்துக்கு!!!!!!!!!!!!!! ........ அங்கு கோஸ்டிச்சண்டை மூள்வதன் மூலம் நிகழ்வைக் குழப்பலாம்!!!!!!! அல்லது அம்மண்டபத்திலேயே ஒரு இரத்தக்களறியை ஏற்படுத்துவதன் மூலம் லண்டனிலில் இனி தேசியத்திற்கான நிகழ்வுகளை தடுக்கலாம்!!!!!!! ....

..... நிச்சயமாக இது ஒரு பாரிய பின்புலத்தின் திட்டமிட்ட சூழ்ச்சியே!!!!!!!!!!!!!!!!!!!!! ஒரு காலத்தில் பெண்களுக்காக/போட்டிகளுக்காக/... வளர்ந்த இந்தக் கோஸ்டிகள், இன்று புலத்தில் எம் எதிரிகள்/கூலிகளுக்கான மிகப்பெரிய ஆயுதமாக மாறுயுள்ளது!!!!!!!!!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்குள்ள குழுக்களுக்கு இலங்கை தூதரகத்தால் பணம் வழங்கப்பட்டு நினைவெழுச்சி நாளை குழப்புவதற்கான திட்டம் முறியடிக்கப்பட்டது. இந்த குழுக்களுக்கும் இ...கை தூதரகத்திற்குமான தொடர்பு சம்பத்தப்பட்டவர்களிடம் நிருபிக்கப்பட்டது.......

அது தான் மிகப் பெரிய பாதுகாப்பு ஒழுங்குகளை மேற்கொண்டிருந்தார்கள்.....

லண்டனோ அல்லது வேறேந்த நாடுகளில் குடியேறுபவர்கள் வன்முறையில் குழு மேதல்கள் ஈடுபடுவது உள்ளூர்வாசிகளை பெரும் சினத்தை உண்டு பண்ணுவது.

இது வரைகாலமும் லண்டனில் நடந்த சச்சரவுகளை விவரிக்கும் போது ஊடகங்கள் வஞ்சகம் இன்றி புலிச்சாயம் பூசுவதில் பின்னிப்பதில்லை. இதற்கு BBC கூட விதிவிலக்கில்லை. ஒளிவீச்சில வரும் சண்டைகாட்சியையும் போட்டு ஆயுதக்கலாச்சாரத்தில் வளர்ந்தவர்கள் இங்குவந்து தொடர்கிறார்கள் என்று கூறி திருப்திப்பட்டுக் கொண்டனர். இது சிங்கள இனவாத அரசுக்கு பழம்நழுவி பாலில் விழுந்தமாதிரி ஓசியிலை கிடைச்ச பிரச்சாரம்.

ஆனால் இன்று நிலமை மாறி இலங்கை தூதரகங்களின் புலநாய்வுப்பிரிவினர் புலம்பெயர் தமிழ்ச்சமூகங்களில் குழப்பங்களை உருவாக்க குழுமோதல்களை தூண்டும் நிலைக்கு வந்துவிட்டார்கள். இதை உள்ளூர் ஊடகங்களின் துணையுடன் அம்பலப்படுத்த வேண்டி தேவையும் கடமையும் புலம் பெயர் தமிழ்ச்சமூகங்களிற்கு உண்டு. இதுவரை காலமும் நீங்கள் சுமந்த களங்கத்தை நீக்கிக் கொள்ள ஒரு சந்தர்ப்பம். ஒரு நாட்டில் இன்னொரு நாட்டின் தூதரகத்தின் துணையுடன் நடக்கும் வன்முறை என்பது பாரிய பின்விளைவுகள் ஏற்படுத்தக் கூடியது. Investigative Journalists இன் துணையுடன் இதை வெளிக்கொண்டுவருவதற்கு முயற்சிக்க வேண்டும்.

இந்த டக்லஸ்ஸைப்போல் புலத்திலுள்ள பல இளைஜர் குழுக்களின் பின்னனியில் இ*ங்கை அரசாங்க தூதரகங்களே இருப்பதாக நான் முன்பொருமுறை கருத்தெழுதியதற்கு, களத்திலுள்ள சில அதிபுத்திசாலிகள் ஏழனம் செய்து எழுதினார்கள்!!!!! ஆனால் இன்றோ இந்த டக்லஸின் பின்னனி பலரால் அறியப்பட்டுள்ளது. இவனைப்போல் பல குழுத்தலைவர்களுக்கு பணம், ஆலோசனகள் குறிப்பிட்ட தூதர புலான்வாவு அதிகாரிகள் மூலம் வழங்கப்படுகிறதாம். இவ்வதிகாரிகளில் பலர் மு*லீங்களாம்!!!!!!! இவர்கள் இக்குழுக்களின் தலைவர்களை லண்டனின் "Hendon" பகுதியிலுள்ள "சிலோனின் இளவரசன்" பெயர் கொண்ட உணவகத்தில் சந்திப்பார்களாம்!!!!

இந்தக் குழுக்களில் கீழிருக்கும் பலர் மண்டைக்குள் இல்லாததுகள். எதோ புரட்சி செய்கிறோம்?? என்று பின்னுக்குத் திரியுதுகள்!!! ஓசித்தண்ணி, ஓசிச்சாப்பாடு, குளிர்காயப் பெண்கள், சுற்றுவதற்கு சொகுசு வாகனங்கள், போதைப்பொருருட்கள் எனத் திரியும் அதுகளுக்கு வேறென்ன வேன்டும் என நினைக்குதுகள்!!! அளவிற்கு அதிகமான பெற்றோரின் கட்டுப்பாடுகளிலிருந்து ஓடியதுகளும், பெற்றோரின் கட்டுப்பாடேயற்று றோட்டிலேயே நிற்பதுகளுமே இக்குழுக்களில்!!!!! இவர்களை போட்டி போட்டு இக்குழுத் தலைவர்கள் இணைக்கிறார்களாம்!!!!!! இறுதியில் அக்குழுக்களே உலகமென திரிகிறார்கள்!!!!

இக்குழுக்களின் ஆடம்பர வாழ்க்கை, ஆயுதங்கள் வாங்குதல், கைது செய்யப்பட்டால் ஏற்படும் சட்டப்பிரட்சனகளுக்கு ஏற்படும் செலவீனங்கள், ... போன்ற இன்னாரன்னவற்றிற்கு பணத்தேவை கணக்கிலடங்காதவை!!!!!!!! இதை ஈடுசெய்வதற்கு களவுகள், கிரடிட்காட் மோசடிகலில் ஈடுபட்ட இவர்களுக்கு ஒரு மாற்று பணம் தேடும் வழியை இந்த தூதரகம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இந்தத் தூதரகத்திற்கு "இறாலை எறிந்து சுறப்பிடிப்பது" போல, கொஞ்சப்பணத்திற்காக அவர்களின் தேவைகளை இவர்கள் பூர்த்தி செய்கிறார்கள்.

ஆனால், விரைவில் இக்கோஸ்டிகளின் அட்டகாஸங்கள் இங்கு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்டுமென மக்கள் நம்புகிறார்கள்???????!!!!!!!!

நண்பரின் வேண்டுகோளுக்கிணங்க இணைய தொடர் நீக்கப்பட்டுள்ளது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நண்பரின் வேண்டுகோளுக்கிணங்க இணைய தொடர் நீக்கப்பட்டுள்ளது

நல்ல காரியம் செய்தீர்கள் நன்பரே... ஆம் அவ்விணைப்பு கட்டாயம் யாழ் இணையம் போன்ற தரமான இணையங்களில் இணைப்பு கொடுப்பதற்கு தகுதியற்ற இணையம் என்பது என்னுடைய கருத்து.

புலத்தில் இருக்கும் சில குடும்பங்கள் அப்படியான இணையங்களை கட்டாயம் பார்வையிடவேண்டும் என்பதும் என்னுடைய கருத்து ஏன் என்றால் புலத்தில் இருக்கும் பல குடும்ப பெரியவர்கள் கூட தங்கள் பிள்ளைகளை வளர்க்கத்தெரியாத முறையில் வளர்க்கிறார்கள்... அதை நான் நேரில் பர்த்தும் இருக்கிறேன் .......

நண்பர்களே நான் ஏன் இந்த குப்பைக்குழிக்குச் செல்லும் இணைப்பை இங்கு பிரசுரித்தேன் என்றால் தற்போதய தாய் தந்தையர்களும் எதிகால தாய் தந்தையரும் இது போன்ற இணையங்களை கருத்திலெடுக்கவேண்டும். அண்மையில் எமது நகரத்தில் சில குடும்பங்கள் தங்கள் பிள்ளைகளின் படிப்பு தேவைக்கென இணைய நுளைவு வசதியை புதிகாக தங்களுக்கு பெற்றுக்கொண்டனர். ஓரிடத்தில் ஒரு சிறிய பெண்பிள்ளை இணைய தொடர்பு கிடைத்தவுடன் அண்ணா சற்று பொறுங்கள் என்று எனக்கு கூறிவிட்டு இந்த இணைய குப்பைக்குள் சடுதியாகச் சென்றார். அதனை அவருடடைய தாய் தந்தையர்களும் வேடிக்கை பார்த்தனர். தமது பிள்ளைக்கும் குறிப்பிடத்தக்க கணனி அறிவு இருக்கிறது என்று பிள்ளையை புகழ்ந்தாரே தவிர அது எந்த பக்கத்தை பார்த்தது என கவனிக்க தவறி விட்டனர். இதேபோல் இன்னொரு குடும்பத்தில் இவ்வாறு செயும் போது தந்தையார் சொன்னார் தம்பி மகளுக்கு படிப்பு தேவைக்கு MSN Mseesger தேவைப்படுகுதாம் அதனைவும் போட்டுவிடும் என்று எனக்குச் சொன்னார். நானும் வியப்புடன் போட்டு விட்டேன். பின்னர் 3 மாதம் கழித்து கணனியில் ஏற்பட்ட தவறை சரிசெய்ய சென்ற போது சொன்னால் நம்பமாட்டீர்கள் 185 சினேகிதருடைய பெயர்களை அந்த சிறுமி தனது நண்பர்கள் பட்டியலில் இணைத்துள்ளார். இதில் குறிப்பிடக்கூடியது என்னவென்றால் அந்த 185 பெயரில் யாரும் பெண்பிள்ளைகள் கிடையாது.இது ஒருபுறமிருக்க தன்னை அரை / முழு நிர்வாணமாக ஜேர்மன்-தமிழ் தோழியருடன் சேர்ந்து ஒளிப்படம் பிடித்து அதனை மின்னஞ்சல் மூலமாக தனது நண்பர்கள் சிலருக்கு அனுப்பியுள்ளார். இதனை நான் குறித்த பிள்ளையின் தந்தைக்கு காண்பித்தேன். அவர் தான் பிழை விட்டுவிட்டேன் என தனது தலையில் அடித்து அழுதார்.

அதைவிட MSN தூதுவரில் தனது நண்பர்கள் சிலருடன் காம வார்த்தைகள் ததும்ப அரட்டையடித்துள்ளார். அவர்களில் வயதுக்கு வந்த தமிழ் இளைஞர்களே அதிகம் அவர்கள் தங்கள் படங்களையும் MSN மூலம் இவருக்கு அனுப்பி வைத்துள்ளனர். அவருடைய MSN தூதுவரில் நோர்வேயில் வசிக்கும் பிரபல ஊடகவிலயாளர் (யார் என்று தெரியும் தானே) ஒருவரது மின்னஞ்சல் முகவரியும் இருக்கிறது. அவரும் மிக கேவலமாக அரட்டையடித்துள்ளார். தனக்கு 20 வயது எனவும் தான் பிரித்தானியாவில் இருக்கிறேன் என்றும் தனது வழமையான படத்தையும் அனுப்பியிருக்கிறார்.

இவற்றைப்பறி தாய் தந்தையருக்கு விளங்கப்படித்தினேன். அவர்கள் உடனடியாக தங்கள் இணைய இணைப்பை துண்டித்துவிடுமாறு கூறிவிட்டனர். ஆனால் இணைய வழங்குனர் 2 வருட உடன்பாட்டில் இணைய நுளைவு வழங்கப்பட்டபடியால் இரண்டு வருடம் கழித்து தான் அவர்கள் நிற்பாட்டுவார்கள் என கூறிவிட்டனர். ஒருவர் பிள்ளைக்குப் பயந்து Modem மில் இணைப்பை ஏற்படுத்தும் இடத்தில் பொலுத்தீன் பையை சிறிதாக நுளைத்து தொடர்பு இலாதபடி செய்துள்ளார். ஏனெனில் நேரடியாக நிறுத்தினால் பிள்ளை தம்முடன் கோபித்துக்கொண்டு வீட்டைவிட்டுப் போய்விடும் என்ற பயத்தினால் இப்படி பயந்து வாழ்கின்றனர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆம் இப்படித்தான் ஐரோப்பாவில் பல பெற்றோர் கனணி அறிவில்லாமல் பணம் சேர்ப்பதில் மட்டும் குறியாக இருக்கிறார்கள் அத்துடன் வீட்டில் கனணி 1 இருந்தால் தான் கவுரவம் எனவும் அதில் முக்கியமாக இணைய இணைப்பு இருக்கவேண்டும் என நினைத்து தொடர்பு எடுத்துக்கொடுக்கிறார்கள் ஆனால் அதை தன்னுடைய பிள்ளை எதற்கு பயன்படுத்துகிறது என பார்க்கமாட்டார்கள். எங்காவது விசேடங்கள் நடக்கும் இடங்களில் கூடி இருந்து கதைக்கும் போது தன்னுடையவீட்டிலும் கணனி ூ இணையத்தொடர்பு இருக்கிறது என பெருமையாக சில பெற்றோர் இப்போது கூட கதைக்கிறார்கள் என்பது தான் வேதனையான விடயம்

முதலில் நான் இந்த செய்தியை இங்கு இணைத்ததற்குக் காரணம் இங்கு(லண்டனில்) பல மர்ம செயற்பாடுகள் தொடர்ந்து நடைபெறுவதாக வதந்திகள் உலாவுகின்றன? இவற்றின் உண்மை தன்மைகளை, இங்குள்ள நடைமுறைச் சிக்கல் காரணமாக பிரித்தறியமுடியாதுள்ளது! இச்செய்தி இவ்விணையத்தில் வருவதற்கு முன்னமே இதே போன்ற செய்திகள் பலர் வாய்வழி வரக் கேட்டுள்ளேன்!! .....

...... * இங்குள்ள இரு தமிழ் ஊத்தைகளின் கும்பல் சண்டை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதாம், ஒரிரு மர்ம மனிதர்கள் ஒரு கும்பலை அணுகி அவர்களுக்கு பயங்கர ஆயுதங்களை வாங்கித்தருவதாக கூறியதாம்!!! அக்கும்பலோ, அவர்கள் லண்டன் பொலிசாராக இருப்பார்களென்று மறுத்து விட்டதாம்!!!!!!! யார் இந்த கும்பலை அணுகிய மர்ம மனிதர்கள்????? ஏன் இவர்களுக்கு ஆயுதம் வாங்கி கொடுக்க முற்பட்டார்கள்???? ....*

..... *கரோ பகுதியிலுள்ள ஒரு சுப்பமாக்கற், ஒரு பெற்றோல் நிலையத்தில் சில முஸ்லீம் இளையர்கள் வேலைக்கு வந்துள்ளார்களாம்??? அவர்கள் அங்கு செல்லும் எம்மவர்களை அனுகி நீங்கள் இலங்கையா? இங்கு எங்கிருக்கிறீர்கள்? ... இப்படி பலவகையான கேள்விகளை கேட்டு நட்பு கொண்டாட முற்படுகிறார்களாம்??? .... எனது நண்பரொருவர் அக்குறிப்பிட்ட பெற்றோல் நிலையத்துக்கு சென்றிருந்தாராம்! அக்கேள்விகளைக் கேட்ட அம்முஸ்லீம் இளையனிடம் தம்பி நீங்கள் இலங்கையில் எவ்விடமென்று கேடிருக்கிறார்!! நான் கிழக்கைச் சேர்ந்தவன் என்று பதில் வந்ததாம்!! என் நண்பரோ கிழக்கில் எவ்விடமென்று கேட்டிருக்கிறார்!! அம்முஸ்லீம் இளையனோ மட்டக்களப்பு என்றிருக்கிறான்!! என் நண்பரும் நானும் மட்டக்களப்புத்தான்! நீர் மட்டக்களப்பில் எவ்விடமென்று மேலும் கேட்டிருக்கிறார்!! அம்முஸ்லீம் இளையன் முளித்துக் கொண்டு பதில் கூறாமல் தடுமாறிக்கொண்டிருந்தானாம்!!! ஒன்றில் அம்முஸ்லீம் இளையன் இங்கு யாரோ கிழக்கு மட்டக்களப்பைச் சேர்ந்தவன் எனும் பெயரில் இங்கிருக்கவேணும்? இல்லையேல் ஒரு இங்குலாவும் மர்மத்தலைகளில் ஒருவனாக இருக்க வேண்டும்???

இப்படி பல கதைகள்...... ஒன்று மட்டும் உண்மை! லண்டனில் முடக்கிப் போயிருக்கும் தேசியத்திற்கான செயற்பாடுகளை முற்றாக முடக்குவதற்கு சிலரல்ல! பலர்!! எம்மிடையேயுள்ள எச்சிலிலைகளின் உதவியுடன் களமிறங்கியிருக்கிறார்கள்!!!

_________________

"வலிமையே வாழ்வு"

http://www.yarl.com/forum/viewtopic.php?t=6284&start=0

இப்படி பல கதைகள்...... ஒன்று மட்டும் உண்மை! லண்டனில் முடக்கிப் போயிருக்கும் தேசியத்திற்கான செயற்பாடுகளை முற்றாக முடக்குவதற்கு சிலரல்ல! பலர்!! எம்மிடையேயுள்ள எச்சிலிலைகளின் உதவியுடன் களமிறங்கியிருக்கிறார்கள்!!!

http://www.yarl.com/forum/viewtopic.php?t=6284&start=0

போராட்டத்தின் பால் மக்களுக்கு இருக்கும் ஆர்வத்தை திசை திருப்ப குழுமோதல்கள் தவிர வேறு எதையும் இலகுவில் கையாள்வது கடினம்.. ஒரே ஊர்மக்களைக்கூட இலகுவில் பிரித்துவைக்க முடியும்...

இது காலம் காலமாய் இந்தியாவில் கைகொள்ளும் தந்திரம்தான். மக்கள் ஒரே இனமக்கள் எப்போதும் ஒற்றுமையாய் இருக்க விடமாட்டார்கள்.. சாதி எண்டும் சமயம் எண்டும், அரசியல் கட்ச்சி எண்டும், போதாதுக்கு குண்டர்கள் எண்டும் பிரித்து வைப்பார்கள், அதுக்கு உதவியும் செய்வார்கள்..... இல்லாவிடால் அம்மக்கள் ஓண்றாகச் சேர்ந்து எதாவது செய்யப் புறப்பட்டு மாநில வாரியக அடித்துக் கொள்ள ஆரம்பித்திவிடுவார்கள்.......! பிறகு எப்படி பலநாடு சேர்ந்த இந்தியா..? எப்படி ஒண்றாய் இருக்கும்....????

இது சாணக்கியர் சொல்லிக் குடுத்த பிரித்தாளும் தத்துவமுங்கோ.....!

இந்த கொல்லப்பட்ட கும்பலின் தலைவன் பற்றிய கேள்விப்பட்ட செய்தியொன்றை ....

... லண்டன் கிங்ஸ்பரி பகுதியில் இரவு 10 மணியளவில் தனது வேலையை முடித்து விட்டு வந்த எம்மவர் ஒருவர், தனது வாகனத்தை கடைத்தெருவில் நிறுத்தி வைத்தி விட்டு ஏதோ பொருட்களை வாங்க கடையொன்றுக்கு சென்று, வாங்கிய பின் தனது வாகனத்துக்கு திரும்பி, வாகனக் கதைவை திறந்தவுடன், இந்த டக்லஸ்ஸுடன் இன்னும் ஓரிருவராம் அந்த வாகன பின் கதவு வழியே உடன் காரினுள் ஏறி, துப்பாக்கியை வைத்து, மிரட்டி, அவரிடம் உள்ள வங்கி அட்டைகள் மூலம் எடுக்கக்கூடிய அதிகூடிய பணத்தை எடுத்துவரக் கூறி மிரட்டி, எடுத்தது மட்டுமல்லாமல் அவரிடமிருந்த வங்கி அட்டைகள்/கிரடிட் காட்டுகளைப் பறித்து, அவரை ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு பொலீஸுக்கு அறிக்க கூடாதென மிரட்டி, அப்படி பொலீஸுக்கு தகவல் கொடுக்கப்பட்டால் குடும்பத்தையும் கொன்று விடுவதாகவும் மிரட்டியுள்ளார்களாம்!! பாவம் அந்த சிறு உழைப்புத் தொழிலாளி, மிகப்பெரிய பணத்தை இழந்ததுமல்லாமல் தேவையற்ற சட்டப் பிரட்சனைகளையும் எதிர் கொண்டுள்ளார்!!!!!!

இப்படியானவர்கள் திருந்தியும் பாதிக்கப்பட்டவர்களின் நிலை???????????? இவர்கள் தங்களுக்குள் அடிபட்டு இறப்பதே மேல்!!!!!!!!!

சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டவர்களை பற்றிய எல்லா விபரங்களும் அக்குவேற ஆணிவேறயா சொல்லுறீங்க சரி.அது ஏன் அவர்களை போட்டு தள்ளினா போல இதெல்லாம்?

அதனால் என்ன பிரயோசனம்? இப்பிடியான சமூகவிரோத செயலில் ஈடுபடுபவர்கள் பற்றிய தகவல்களை காவல்துறைக்கு வழங்கி எம்மவர்களின் இயல்பு வாழ்க்கையயும் கெளரவத்தயும் காப்பத்தலாம் தானே?

கனடாவில் அப்பிடி நடந்து இருக்கிறது.

ஒரு சிலர் இன்னமும் வாலாட்டிகொண்டு திரிஞ்சாலும்

நிறையபேர் அடங்கிட்டினம் என்பது உண்மை! 8)

  • 2 weeks later...

07.01.06

கரவெட்டி வாசி லண்டனில் கத்தியால் குத்திக்கொலை!

யாழ்ப்பாணம் கரவெட்டியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் லண்டனில் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார். லண்டன் விம்பிள்டன் பகுதியில் நீண்ட காலமாக வசித்துவந்த சுப்பிரமணியம் சிவ குமார்(வயது 38 ) என்பவரே கொலையுண்ட வராவார். கடந்த வியாழனன்று இனந்தெரியாத நபர்களால் இவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டிருக்கின்றார் என்று இங்குள்ள அவரது உறவினருக்கு அறிவிக்கப்பட்டிருக் கிறது.கரணவாய் கிழக்கு, செம்பாடு தூதாவளை யைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந் தையே கொலையுண்டவராவார்.

இவர் விம்பிள்டன் பகுதியில் வர்த்தக நிலையம் ஒன்றை நடத்திவந்தார் என்று கூறப்படுகிறது. இந்தக் கொலை தொடர்பாக லண்டன் பொலீஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

உதயன்

சனி 07-01-2006 06:27 மணி தமிழீழம் [நிருபர் மாறன்]

லண்டனில் விம்பில்டனில் ஒருவர் படுகொலை செய்யப்பட்டதாக அறிவிப்பு.

லண்டனில் இலங்கை தமிழர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கரணவாய

அடுத்த கொலையா...என்ன மாதம் ஒரு கொலையா..! வாழ்க வளர்க்க லண்டன் தமிழர் கொலைக் கலாசாரம்..! :shock: :roll: :idea:

  • கருத்துக்கள உறவுகள்

நீங்களும் லண்டன் தமிழர்களுக்குள் தான் அடங்குகிறீர்கள் என்பதை மறந்து விட்டீர்களா....?

  • கருத்துக்கள உறவுகள்

லண்டன் தமிழர்களுக்கும் இந்தக் கொலைக்கும் என்ன தொடர்பு.....?

லண்டன் தமிழர்களுக்கும் இந்தக் கொலைக்கும் என்ன தொடர்பு.....?

கொலை செய்யப்பட்டது..படுவது லண்டன் தமிழர்..!:roll: :shock: :idea:

நீங்களும் லண்டன் தமிழர்களுக்குள் தான் அடங்குகிறீர்கள் என்பதை மறந்து விட்டீர்களா....?

இது எங்களைக் குறித்தால்.. பதில். எமக்கும் லண்டன் தமிழர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை..! :idea:

  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்திலும் கொலை செய்வதும் செய்யப்படுவதும் தமிழர்களே........

இதைப்பற்றி யாரையும் குறை கூறி பிரயோசனம் இல்லை. இதில் முழுத்தவறும் பிரித்தானிய சட்ட இயற்றுனரையும் காவல்துறையினரையும் தான் சாரும். ஏனெனில் அங்கு குண்டர்களுக்கும் தெருச்சண்டியர்களுக்கும் எதிரான சட்டங்கள் அவர்களை சரியாக தண்டித்து சீர்திருத்தவில்லை என்பதையே இவ்வாறான செயற்பாடுகள் தெளிவாக காட்டுகின்றன. மற்றது பிரித்தானியாவில் காவல்துறையினரை உதவி கோரி அழைத்தால் அவர்கள் ஏறக்குறைய 01 மணித்தியாலத்தின் பின்னரே சம்பவ இடத்துக்குச் செல்கின்றனர். இது அவர்களின் அசண்டையீனமோ அல்லது இயல்போ என்பது புரியவில்லை. இங்கு ஜேர்மனியில் கத்திக்குத்தில் கைது செய்யப்பட்ட தமிழர் ஒருவர் (டுஇஸ்பேர்க் Duisburg - Moers மோஎர்ஸ்) சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு 4 வருடங்கள் சிறைத்தண்டனை என்று நீதிமன்றில் தீர்ப்பளிக்கப்பட்டது. அவர் உடனே நான் சிறீலங்கன் எனவே என்னை சிறையில் இடாது சிறீலங்காவுக்கு அனுப்பும் படி நீதிபதியிடம் வேண்டுகோள் ஒன்றைவிடுத்தார். அதற்கு நீதிபதி புன்முறுவல் பூத்தபடி சரி உங்கள் கோரிக்கையை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் ஆனால் ஜேர்மனியில் கொலைமுயற்சியில் ஏடுபட்டமைக்காக எமது நாட்டின் தண்டனையை அனுபவித்த பின்னரே நீங்கள் உங்கள் நாடு சென்று அங்கு மகிழ்ச்சியாக வாழலாம் என தீர்ப்பளித்தார். எனவே அவருக்கு தண்டனை முடிவடைந்தபின்னர் இலங்கை நோக்கி செல்லும் விமானம் ஒன்று அவரையும் அவரது சோகச்சுமையையும் தாங்கிச்செல்லும் என்பது உண்மை :P :P

தாயகத்திலும் கொலை செய்வதும் செய்யப்படுவதும் தமிழர்களே........

அதையே உலகம் பூராவும் செய்து தமிழர்களை அழிக்கப் போறேளா...பல விதத்திலும்..! லண்டன் சிங்களவன் கொலை செய்யுறானா..இல்ல செய்யப்படுறானா..??! தமிழர்கள் மட்டும் ஏன் இப்படி..???! :roll: :idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.