Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய ஐ.டி. நிறுவனங்கள்!

Featured Replies

சீனாவுக்கு நகரும் இந்திய ஐ.டி. நிறுவனங்கள்!

சீனாவில் தகவல் தொழில்நுட்பம் எனப்படும் ஐ.டி. சேவை நிறுவனங்களுக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், அந்த சந்தையில் தங்களுக்கான இடத்தை பெரிய அளவில் வளைத்துப்போட, டிசிஎஸ் (டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்) , விப்ரோ, இன்ஃபோசிஸ் போன்ற இந்தியாவின் மாபெரும் ஐ.டி. நிறுவனங்கள் படு தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளன.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு சீனா அச்சுறுத்தலாக விளங்கிய நிலையில், அதன் பின்னர் தற்போதுதான் முதல்முறையாக, சீனாவில் இந்திய நிறுவனங்கள் கால் பதித்துள்ளன.

சீனாவின் செங்டு மற்றும் தலியான் ஆகிய நகரங்களில் டிசிஎஸ், விப்ரோ மற்றும் இன்ஃபோசிஸ் போன்ற இந்திய ஐ.டி. நிறுவனங்கள் தங்களது 10 விழுக்காடு புதிய அவுட் சோர்சிங் பணிகளை அலுவலகம் அமைத்து செய்ய தொடங்கியுள்ளன.

பூகோள - அரசியல் அச்சுறுத்தல் இல்லாத மற்றும் வேலை இல்லா திண்டாட்டம் உள்ள இடங்கள் ஆகியவற்றை கருத்தில்கொண்டு இந்தியாவுக்கு வெளியே உள்ள சில இடங்களிலும், தங்களது சேவைகளை செய்து வாங்க வேண்டும் என்று ஜிஇ மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் போன்ற முன்னணி வாடிக்கையாளர்கள் நிறுவனங்கள், இந்திய ஐடி நிறுவனங்களை வலியுறுத்தி வருகின்றன.

மேலும் சீனாவில் உள்ளூர் வேலை வாய்ப்புகளை அதிகரித்ததால், ட்ராகனால்டின் - Dragonland - 10 பில்லியனுக்கு அதிகமான மதிப்புடைய அவுட்சோர்சிங் சந்தையை கைப்பற்றிவிடலாம் என்றும் இந்திய நிறுவனங்கள் உணர்ந்துள்ளதால்தான், அவை சீனாவில் கடை விரிக்க தொடங்கியுள்ளன.

டிசிஎஸ் தற்போதுள்ள தனது பணியாளர்களின் எண்ணிக்கையான 1,200 ஐ, அடுத்த ஐந்தாண்டுகளில் ஐந்து மடங்காக அதிகரிக்க தீர்மானித்துள்ளது.அதேப்போன்று இன்ஃபோசிஸ் 4,000 திறமை வாய்ந்த பணியாளர்கள் குழு ஒன்றை உருவாக்குவதற்காக 100 மில்லியன் டாலர்களை முதலீடு செய்ய உள்ளது.

இந்தியாவின் மூன்றாவது பெரிய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான விப்ரோ, அடுத்த ஓர் ஆண்டுக்குள் சுமார் 1,000 பணியாளர்களை அமர்த்த திட்டமிட்டுள்ளது.

இவ்வாறு பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்போது, அவர்களுக்கு வேலை கொடுக்க வேலைகளும் தேவை என்பதால்தான், ஜிஇ போன்ற வாடிக்கையாளர்களின் கோரிக்கையை ஏற்று, இந்தியா தவிர்த்த வெளிநாடுகளிலும் தங்களது கிளைகளை திறந்து, அந்நாட்டு பிரஜைகளுக்கு வேலைவாய்ப்பை அளித்து, அவர்களை தங்களது நிறுவன பணியாளர்கள் குழுவில் சேர்த்துக்கொள்கின்றன இந்த நிறுவனங்கள்!

மேலும் கடந்த சில மாதங்களாகவே வாடிக்கையாளர்களை ஏற்றுக்கொள்ளும் போக்கு சீனாவிடம் ஏற்பட்டுள்ளது. சீனாவிடம் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தினால், ஒரு சில சிக்கல்கள் ஏற்படலாம் என்ற சூழ்நிலைக்கிடையேயும், சீனாவில் தாங்கள் தடம் பதித்துள்ளதாக கூறுகிறார் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சிபுலால்.

http://tamil.webdunia.com/newsworld/news/currentaffairs/1011/03/1101103043_1.htm

  • தொடங்கியவர்

ஐ.டி. நிறுவனங்கள்: வளர்ச்சியும்... வீழ்ச்சியும்!

டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ போன்ற ஐ.டி. பெரு நிறுவனங்களின் கிடு கிடு வளர்ச்சியால், தங்களிடம் உள்ள பணியாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவதாக சிறிய மற்றும் நடுத்தர ஐ.டி. நிறுவனங்கள் மிகுந்த கவலையடைந்துள்ளன.

மந்தமாகி கிடந்த தகவல் தொழில் நுட்பத் துறை, மீண்டும் பழைய வேகத்துடன் வளர்ச்சியடைந்து வருகிற நிலையில் டிசிஎஸ், விப்ரோ, இன்ஃபோசிஸ், ஹெச்சிஎல் மற்றும் ஐபிஎம் போன்ற ஐடி பெரு நிறுவனங்களுக்கு அயல்நாடுகளிலிருந்து பெரிய 'புராஜக்ட்'கள் (வேலைகள்) ஏராளமாக வந்து குவியத் தொடங்கிவிட்டன.

இதனால் கூடுதலான பணியாளர்கள் தேவைப்படும் நிலை ஏற்பட்டதால், கல்லூரிகளில் கடைசி ஆண்டு பயிலும் மாணவர்களை 'கேம்பஸ் இண்டர்வியூ' மூலம் பணியில் அமர்த்த தொடங்கியுள்ளன இந்நிறுவனங்கள்.

அதே சமயம் இவர்களை பயிற்சியாளர்களாக மட்டுமே முதலில் பயன்படுத்த முடியும் என்பதால், சிறு மற்றும் நடுத்தர ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரியும் அனுபவம் உள்ள பணியாளர்களை அதிக சம்பள ஆசை காட்டி இழுக்கத் தொடங்கியுள்ளன டிசிஎஸ் போன்ற ஐ.டி. ஜாம்பவான் நிறுவனங்கள்!

இதனால் கடந்த 6 மாத காலங்களில் சிறு மற்றும் நடுத்தர ஐ.டி. நிறுவனங்களிலிருந்து பெரிய நிறுவனங்களுக்கு தாவும் பணியாளர்களின் எண்ணிக்கை கிடு கிடுவென அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக சிறிய மற்றும் நடுத்தர ஐ.டி. நிறுவனங்களின் 25 முதல் 30 விழுக்காடு வரை தேய்வு விகிதத்தை எதிர்கொண்டுள்ளதாகவும், இது குறித்து அந்நிறுவனங்கள் கடும் பீதியடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

வழக்கமாக பெரிய நிறுவனங்கள் வளர்ச்சியை நோக்கி செல்லும்போது, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களின் தேய்மான விகிதம், சமாளிக்கத்தக்க வகையில், சராசரியாக 14 முதல் 17 விழுக்காடாகத்தான் இருக்கும்.

ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள தேய்மான விகிதம் அதைக்காட்டிலும் அதிகமாக உள்ளதால்தான், சிறிய, நடுத்தர ஐ.டி. நிறுவனங்கள் அச்சத்திற்கு ஆளாகி உள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது சர்வதேச அளவில் ஐ.டி. துறை பீடு நடைபோடத் தொடங்கியுள்ள நிலையில், இந்த வளர்ச்சியை தங்களுக்கு சாதமாக்கிக் கொள்ள இந்திய பெரு ஐ.டி. நிறுவனங்கள் துடிதுடியாய் துடிக்கின்றன.

இதன் காரணமாகத்தான் கிடைத்திருக்கும் மிகப்பெரிய 'புராஜக்ட்'களை செய்து முடிக்க சிறிய ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களை அதிக சம்பளம், இதர படிகள், ஊக்கத்தொகை, எதிர்காலத்தில் சிறப்பான வளர்ச்சி என்றெல்லாம் ஆசை காட்டி தங்கள் பக்கம் ஏகமாய் இழுத்துபோட்டுக்கொண்டிருக்கின்றன.

"பெரிய கம்பெனியில் வேலை, வளமான எதிர்காலம், கை நிறைய சம்பளம்..." என்று கண்முன்னே வாய்ப்பு வெற்றிலை பாக்கு வைத்து அழைக்காத குறையாக கூப்பிடும்போது, எந்த ஊழியர்தான் தாவாமல் இருப்பார்? அதுதான் தாவி விடுகின்றனர்" என்கிறார் தனியார் கன்சல்டண்ட் நிறுவனம் ஒன்றின் தலைமை அதிகாரி ரமேஷ்.

"இதுபோன்ற ஆட்களை அள்ளிக்கொண்டு போவதெல்லாம் பெரும்பாலும் நடுத்தர ரக நிறுவனங்களிலிருந்துதான்.அங்குதான் பெரிய ஐ.டி. நிறுவனங்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப, 4 முதல் 8 ஆண்டுகள் வரை பணி அனுபவமும், தாவுவதற்கு சரியான சந்தர்ப்பத்தை எதிர்நோக்கியும் இருக்கிற பணியாளர்கள் கிடைப்பார்கள்.

எனவேதான் இவ்வாறு ஊழியர்கள் 'ஜம்ப்' ஆகும்போது நடுத்தர நிறுவனங்கள் சில மாதங்களுக்கு தடுமாறி போய்விடுகின்றன" என்கிறார் பணியாளர்களை அமர்த்திக்கொடுக்கும் அடோகோ இந்தியா நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சுதாகர்.

நிறுவனங்கள் தங்களுக்கேற்ற பணியாளர்களை தேடுவது எவ்வளவு நியாயமானதோ, அதே அளவு நியாயம் அதிக சம்பளத்திற்கு பணியாளர்கள் தாவுவதிலும் உள்ளது.

எனவே எத்தகைய நிலையையும் எதிர்கொள்ள அல்லது சமாளிக்கும் திறன்கொண்ட நிறுவனங்களாக நடுத்தர மற்றும் சிறிய நிறுவனங்கள் தங்களை தயார்படுத்திக்கொண்டால்தானே, நாளை அவர்களும் இதே பெரு நிறுவனங்களின் பட்டியலில் இடம்பெற முடியும்!

http://tamil.webdunia.com/newsworld/news/currentaffairs/1012/16/1101216041_1.htm

  • கருத்துக்கள உறவுகள்

ar117228698176572.jpg

இந்த தொல்லையெல்லாம் இல்லாம இருக்கத்தான் நானும் ஐரோப்பாவில் செட்டில் ஆகலாமுனு இருக்கேன் :)

  • தொடங்கியவர்

இந்த தொல்லையெல்லாம் இல்லாம இருக்கத்தான் நானும் ஐரோப்பாவில் செட்டில் ஆகலாமுனு இருக்கேன் :)

ஐரோப்பா கடன் நெருக்கடி: தவிக்கும் இந்திய ஐடி நிறுவனங்கள்

தென்னை மரத்தில் தேள் கொட்டினால்,பனை மரத்தில் நெறிகட்டுவதாக கூறுவது வேறு எதற்கும் பொருந்துகிறதோ இல்லையோ இந்திய தகவல் தொழில் நுட்ப (ஐடி) நிறுவனங்களுக்கு நன்றாகவே பொருந்தும் போல!

ஐரோப்பா கடன் நெருக்கடியில் சிக்கி தவிக்கும் நிலையில், டாடா கன்சல்டன்சி(டிசிஎஸ்), இன்ஃபோசிஸ்,விப்ரோ போன்ற இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்கள் அதுகுறித்து மிகவும் கவலையடைந்துள்ளன.

ஐரோப்பாவில் தடம் பதித்து சமீப ஆண்டுகளாக வெகுவாக வருவாயை ஈட்டி வந்த இந்த நிறுவனங்களுக்கு,அந்த நாட்டில் ஏற்பட்டுள்ள கடன் நெருக்கடி மற்றும் பணவீக்கம் அதிகரிப்பு போன்ற காரணங்களால்,அவர்களுக்கு கிடைத்துவந்த வருவாயில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலைகளுக்கு இடையே சுவிட்சர்லாந்தின் தேவாஸ் நகரில் உலக பொருளாதார அமைப்பின் வருடாந்திர கூட்டம் நடைபெற்று வருகிறது.

இதில் இந்திய ஐடி நிறுவனங்கள் உள்பட உலகம் முழுவதுமிருந்து முன்னணி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர்.

இதில் கலந்துகொள்ள வந்த, இந்தியாவின் மென்பொருள் ஏற்றுமதியில் இரண்டாம் இடத்தில் இருக்கும் இன்ஃபோசிஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி கிருஷ் கோபால கிருஷ்ணன், ராய்ட்டர் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ஐரோப்பாவில் ஏற்பட்டுள்ள கடன் நெருக்கடிதான் தங்களுக்கு மிகப்பெரிய கவலையாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

http://tamil.webdunia.com/newsworld/news/currentaffairs/1101/29/1110129038_1.htm

  • கருத்துக்கள உறவுகள்

தோழர் அகூதாவிற்கு நான் வெளிநாடு வந்து செட்டில் ஆவது பிடிக்கல போல் உள்ளது. :)

  • தொடங்கியவர்

தோழர் அகூதாவிற்கு நான் வெளிநாடு வந்து செட்டில் ஆவது பிடிக்கல போல் உள்ளது. :)

"யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.