Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

லங்கா ஈநியூஸ் அலவலகம் தீக்கிரை –

Featured Replies

லங்கா ஈநியூஸ் அலவலகம் தீக்கிரை –

31 ஜனவரி 2011

அலுவலக்தின் உள்ளே இருந்த அனைத்துப் பொருட்களும் எரித்து அழிக்கப்பட்டு விட்டன'

லங்கா ஈநியூஸ் அலவலகம் தீக்கிரை –

கொழும்பு ராஜகிரியவிலுள்ள லங்கா ஈநியூஸ் அலவலகம் இலங்கை நேரம் இன்று (31.01.2011) அதிகாலை இரண்டு மணியளவில் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. லங்கா நியூஸ் இணையத்தளத்தில் இது குறித்த ஒரு சிறுகுறிப்பு அவசரஅவசரமாக இடப்பட்டிருக்கிறது.

'அதிகாலை இரண்டு மணியளவில் இனந்தெரியாத நபர்கள் அலுவலகத்தை உடைத்து உள்ளே சென்று தீ மூட்டியுள்ளனர். அலுவலக்தின் உள்ளே இருந்த அனைத்துப் பொருட்களும் எரித்து அழிக்கப்பட்டு விட்டன' என அது தனது குறிப்பில் தெரிவித்துள்ளது.

ஊடகங்களுக்கான வலையமைப்பின் தகவல் வட்டாரங்கள் இச்செய்தியை ஊர்ஜிதம் செய்துள்ளன.

லங்கா ஈ நியூஸ் அலுவலகத்திற்கு செல்வது பாதுகாப்பற்றது என்பதால் அலுவலகத்தை நோக்கி எவரும் செல்லவில்லை.

சிங்கள மொழிமூலமாக வெளிவரும் இணையத்தளங்களுள் முன்னணியில் உள்ள லங்கா ஈநியூஸ் இணையத்தளம் கடந்த 2010 ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் சரத் பொன்சேகாவை ஆதரித்ததன் காரணமாக பல்வேறு நெருக்கடிகளையும் அச்சுறுத்தல்களையும் எதிர் கொண்டு வந்தது.

அதனுடைய ஆசிரியர் சந்துரவன் சேனாதீரவுக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் காரணமாக அவர் நாட்டை விட்டு வெளியேற நேர்ந்தது. ஆனால், லங்கா ஈநியூஸ் இணையத்தளம் கொழும்பிலிருந்த அர்ப்பணிப்புள்ள ஒரு குழுவினரால் தொடர்ந்து நடாத்தப்பட்டு வந்தது.

அண்மைக்காலங்களில் அதில் பணியாற்றி வந்த பல ஊடகவியலாளர்கள் தொடர்ந்து அச்சுறுத்தலுக்காளாகி வந்தனர். இந்த இணையத்தளத்தில் எழுதி வந்த பிரகீத் எக்னெலியகொட கடந்த 2010 ஜனவரி 24ஆம் திகதி காணாமல் போனார்.

கொழும்பின் அதிஉயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்திருந்த சியத்த வானொலி மற்றும் தொலைக்காட்சியின் அலுவலகம் 30 ஜுலை 2010 அதிகாலை ஒன்றரை மணியளவில் தீக்கிரையாக்கப்பட்டது. இதன்காரணமாக மில்லியன் கணக்கான ரூபாய்கள் அதற்கு இழப்பு ஏற்பட்டது. உரிமையாளர்கள் கூறுவதன்படி 12க்கு மேற்பட்டவர்களைக் கொண்ட ஒரு குழு அதற்கு தீயிட்டது. இது தொடர்பாக இதவரை எவரும் கைது செய்யப்படவுமில்லை. இச்சம்பவம் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கை எதுவும் பகிரங்கமாக்கப்படவுமில்லை.

இலங்கையில் ஊடக சுதந்திரத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட இந்த அநாகரீகமான செயலை ஊடகங்களுக்கான வலையமைப்பு கண்டிக்கிறது. அத்தோடு இதற்குக காரணமானவர்களை சட்டத்தின்முன் கொண்டு வந்து நிறுத்தும் பொறுப்பு இலங்கை அரசாங்கத்துக்கு உரியது என்றும் அது சுட்டிக்காட்டுகிறது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/57244/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவ ஆட்சிக்கும் மகிந்த ஆட்சிக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாக தெரியவில்லை.

நேற்றுத்தான் கேஹலிய "ஊடகவியலாளர்கள் தமக்குத்தான் எல்லாம் தெரியும் என நினைக்கக்கூடாது" என்று சொல்லியிருந்தார். சொன்னதை செயலிலும் காட்டியுள்ள "வீரர்கள்" (மேர்வின் சில்வா உட்பட) . :D

காலியில் பங்குபெறும் சர்வதேச இலக்கிய எழுத்தாளர்கள் கூட நேரடியாக சென்று இந்த "வீரச்செயலை" கண்ணால் கண்டு மகிழலாம். :)

  • கருத்துக்கள உறவுகள்

காலியில் பங்குபெறும் சர்வதேச இலக்கிய எழுத்தாளர்கள் கூட நேரடியாக சென்று இந்த "வீரச்செயலை" கண்ணால் கண்டு மகிழலாம். :)

அவர்களின் பேச்சு மூச்சையே காணவில்லை.ஆரம்பத்தில் இருந்த தடல்புடல் இறுதியில் புஸ்வாணமாகி போய்விட்டது போல. :mellow:

ஊடகவியலாளர்கள் இன்று ஆர்ப்பாட்டம்

லங்கா ஈ நியூஸ் இணையத்தளம் தாக்கப்பட்டமையை கண்டித்து இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணியளவில் லிப்டன் சுற்றுவட்டத்தில் ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தை ஐந்து ஊடக அமைப்புக்கள் ஏற்பாடு செய்துள்ளன.

லங்கா ஈ நியூஸ் இணையத்தள அலுவலகம் நேற்று திங்கட்கிழமை அதிகாலை இனந்தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilmirror.lk/index.php/2010-07-14-09-13-23/15787-2011-01-31-16-34-19.html

அரசை கவிழ்க்க வேண்டிய அவசியம் இல்லை:ஊடக இயக்கங்களின் ஒன்றியம்

அனைத்து தரப்பினரதும் உண்மைத் தன்மையை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதே ஊடகங்களின் தொழிற்பாடாகும். இவ்வாறாக செய்திகளை வெளியிடுவதன் மூலம் அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டிய அவசியம் ஊடக அமைப்புக்களுக்கு இல்லை என ஊடக இயக்கங்களின் ஒன்றியம் தெரிவித்தது.

நாட்டின் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டுமாயின் ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

இதிலிருந்து அரசாங்கம் பின்வாங்குமாயின் புதியதொரு ஊடக கலாசாரத்தை நோக்கி அரசாங்கம் பயணிக்கிறது என்றே கொள்ள வேண்டும் என்றும் அந்த ஒன்றியம் குறிப்பிட்டது.

லகா ஈ நியூஸ் அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஊடக இயக்கங்களின் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட செய்தியாளர் மாநாடொன்று இன்று திங்கட்கிழமை மாலை இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தில் நடத்தப்பட்டது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றிய ஊடக இயக்கங்களின் ஒன்றியத்தின் பிரதிநிதிகள் கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தனர். இதன்போது ஊடக அமைப்புக்களின் பிரதிநிதிகள் வெளியிட்ட கருத்துக்கள் பின்வருமாறு:-

ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதத்தில் ஊடக அடக்குமுறைகளுக்கான பிள்ளையார் சுழி போடப்படுகின்றது. லசந்த படுகொலை, எக்னெலிகொட காணாமல் போனமை, சிரச தாக்குதல் பட்டியலில் தற்போது லங்கா ஈ நியூஸ் அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்டதும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

மேற்படி தாக்குதல் சம்பவங்கள் தொடர்பிலான உண்மைத் தன்மையை அரசாங்கம் வெளியிட மறுத்து வருகின்றது. விசாரணைகள் என்ற போர்வையில் மக்களை ஏமாற்றி வருகின்றது. இந்தத் தாக்குதல் சம்பவங்களுடன் அரசாங்கத்துக்கு நேரடியாகத் தொடர்பு உள்ளதாயின் அது நாட்டின் அசாதாரண நிலைமையாகும்.

இல்லாவிடின் இந்த சம்பவங்களுடன் அரசாங்கத்துக்கு மறைமுகவாகவேனும் தொடர்பு இருக்க வேண்டும். அவ்வாறு தொடர்பு இருக்கும் பட்சத்திலேயே ஊடகங்கள், ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களுக்கு காரணமானவர்களைக் கண்டுபிடிக்க அரசாங்கம் தவறுகின்றது.

வடக்கு கிழக்கில் ஆரம்பிக்கப்பட்ட ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் தற்போது தெற்கில் வியாபித்துள்ளன. சுமார் 3 தசாப்த காலங்களாக இடம்பெற்றுவரும் இவ்வாறான தாக்குதல்களைத் தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் வலியுறுத்துகிறோம்.என்றார்.

இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் பதில் தலைவர் ஞானசிறி கொத்திகொட:-

ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களை நடத்திவிட்டு அவற்றைக் கண்டிப்பதாகவும் விசாரணைகளை நடத்த பொலிஸாருக்கு உத்தரவிடுவதன் மூலமும் அரசாங்கம் மாபெரும் கண்துடைப்பு நாடகமொன்றை நடத்தி வருவதுடன் இவ்வாறான தாக்குதல்களை நடத்துபவர்களுக்கு ஆசிர்வாதத்தினையும் வழங்கி வருகின்றது.

இணையத்தளங்கள் அரசாங்கத்தை விமர்சிப்பதாக பிரபல பத்திரிகை ஆசிரியர் ஒருவர் ஜனாதிபதியிடம் அண்மையில் முறைப்பாடு ஒன்றைச் செய்துள்ளார். இதற்கு பதிலளித்துள்ள ஜனாதிபதி இது தொடர்பில் தேடிப்பார்ப்பதாக உறுதியளித்துள்ளார். அவர் உறுதியளித்து இரு வாரங்கள் ஆன நிலையிலேயே லங்கா ஈ நியூஸ் அலுவலகம் இன்று அதிகாலை தீக்கிரையாக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த தாக்குதல் சம்பவங்களின் பின்னால் உள்ளவர்கள் யார் என்பதை அறிய முடிகிறது. இந்த தீ ஊடக நிறுவனத்துக்கு வைக்கப்பட்டது அல்ல. ஒட்டுமொத்த ஊடக சுதந்திரத்துக்கும் வைக்கப்பட்டதாகும். எனவே ஊடக சுதந்திரத்தைப் பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த தயங்க கூடாது என்றார்.

நாட்டில் யுத்தம் நிலவிய காலகட்டத்தில் ஆரம்பமான ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் யுத்தம் முடிவுக்கு கொண்டுவந்த போதிலும் தொடர்ந்த வண்ணம் உள்ளன.

இவ்வாறான சம்பவங்களுக்கு எதிராக அரசாங்கம் மட்டுமன்றி சகல அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊடக அடக்குமுறைகளுக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும்.

http://www.tamilmirror.lk/index.php/2010-07-14-09-13-23/15777-2011-01-31-12-34-42.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.