Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜேர்மன் யாழ்ப்பாணத்து மாப்பிளைக்கு வந்த வினை - மாப்பிளையின் தாயாரை தாக்கிய மனைவி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மன் யாழ்ப்பாணத்து மாப்பிளைக்கு வந்த வினை - மாப்பிளையின் தாயாரை தாக்கிய மனைவி

2011-02-01 04:44:57

ஜேர்மனில் உள்ள தனது கணவருக்கு தொலைபேசி எடுத்த சமயம் பெண் ஒருவரின் குரல் தொலைபேசியில் கேட்கவே பத்திரகாளி வேடம் பூண்டு மாமியாரை தாக்கியுள்ளார் மனைவி. இச் சம்பவம் புத்தூரில் இடம்பெற்றுள்ளது.

அண்மையில் ஜேர்மன் நாட்டில் இருந்து வந்து யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் திருமணம் முடித்துவிட்டு சென்றுள்ளார் இளைஞர் ஒருவர். தனது மனைவியை அங்கு எடுப்பதற்காக அது தொடர்பான நடவடிக்கையில் மும்முரமாக இறங்கிய அவ் இளைஞன் தற்போது சோர்ந்து போய் உள்ளதாக தெரியவருகின்றது. இதற்குக் காரணம் ஒரு பெண்ணின் குரல் என்பதுதான்.

தனது கைத்தொலைபேசி இலக்கத்தை தனது மனைவியிடம் கொடுத்திருந்தார் மாப்பிளை. ஆனால் அவர் தனது கைத் தொலைபேசியில் இருந்து மணப்பெண்ணுடன் கதைக்காது 'காட்' இலக்கத்தினை தொலைபேசியில் பதிந்து அதன் மூலமே பெண்ணுடன் கதைத்துள்ளார். இந் நிலையில் தனது கணவர் 6 நாட்களாக கதைக்காத சந்தேகத்தில் மனைவி கணவரின் கைத் தொலைபேசிக்கு 'கோல்' எடுத்துள்ளார். அத் தொலைபேசியில் ஒரு பெண் இவருடன் கதைத்துள்ளார். உடனே இன்னும் சந்தேகமடைந்த மனைவி நீங்கள் யார், எங்கே எனது கணவர் என பல கேள்விகள் அப் பெண்ணிடம் கேட்டதாக தெரியவருகின்றது. அப் பெண் பதிலளிக்கும் முன்னமே தொலைபேசி மனைவியால் கட் ஆக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் மனைவியும் அவளது தாயாரும் உடனடியாக தனது கணவரின் தாய் வீட்டுக்கு சென்று தகராறு செய்துள்ளார். வாக்குவாதம் முற்றிக் கைகலப்பாக மாறியது. மாப்பிளையின் தாயாரை மனைவியும் அவரது தாயரும் சேர்ந்து தாக்கியதாக தெரியவருகின்றது. இவ் வேளை ஜேர்மனியில் இருந்து மாப்பிளை மனைவிக்கு 'கோல்' எடுத்துள்ளார். உடனே மாப்பிளையின் தாயார் பாய்ந்து சென்று அதனைப் பறித்து தனது நிலமையைக் கூறியுள்ளார்.

தான் தனது ஒன்றுவிட்ட அக்கா வீட்டில் இருப்பதாகவும் அதை தவறாக நினைத்து இவ்வாறு சண்டை போட்டது பிழை எனவும் கூறி கணவனால் தொலைபேசி உரையாடல் நிறுத்தப்பட்டது. தற்போது கணவன் மனைவி இடையே இச் சம்பவம் பிளவை ஏற்படுத்தி உள்ளதாகவும் அயலவர்கள் இரு குடும்பத்தினரையும் சாந்தப்படுத்தி வருவதாகவும் தெரியவருகின்றது.

newjaffna.com

:) :)

குடும்ப பிரச்சனைகள் செய்தியாக வருவதென்றால் அது பொலிஸ் நிலையத்தில் சம்பந்தப்பட்ட யாரும் முறையிட்டால் தான் offcial செய்திக்காக வரும். மற்றப் படி இதை போன்ற கதைகளில் அதிகமான சோடிப்புகள் தான் இருக்கும். NewsJaffna சமூகத்தில் பொது வாழ்வில் இல்லாத தனி நபர்களின் அந்தரங்களை செய்திகளாக்கி தம் பிழைப்பை நடத்துகின்றது என்பதை அதன் அண்மைய செய்திகள் பல உணர்த்துகின்றது

ஊடகம் என்ற பெயரில் இருந்து, செய்திகள் என்று நினைத்து குடும்ப பிரச்சனைகளை அம்பலப் படுத்துகிறார்கள். உது தான் new jaffna போல... நல்ல பரந்த மனப்பான்மையோட/ சமூக சிந்தனையோட யோசிக்கினம்.... (ஒரு கேமரா போனும், ஒரு கணணியும் கிடைச்சால் காணுமே :rolleyes: உடனே ஊடகம் என்று பெயர் வைச்சிடுவினம்.) கொஞ்ச நாட்களில அங்க இருக்கிற சனமே அடிச்சுக் கலைக்கும்... அதுவரைக்கும் உதுகளின்ர இம்சை தொடரும் போலதான் தெரியுது... <_< .

'new jaffna' வில் வரும் செய்திகள் முன்பு இலங்கையிலிருந்து வரும் 'மித்திரன்' எனும் பத்திரிகை, இங்கிலாந்திலிருந்து வரும் சன் பத்திரிகை செய்திகளை வாசிப்பது போல் உள்ளது. சனரஞ்சகமாக, வியாபார ரீதியான முயற்சி. :lol: விடுதலையை நோக்கியல்ல. :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்பவெல்லாம் ஒரு சின்னவிசயத்துக்கும் கை,கண்,மூக்கு,காது எல்லாம் தாங்களாவே வைச்சு ..........விசயத்தை பெருப்பிக்கிறாங்கள் போலை கிடக்கு :D

'new jaffna' வில் வரும் செய்திகள் முன்பு இலங்கையிலிருந்து வரும் 'மித்திரன்' எனும் பத்திரிகை, இங்கிலாந்திலிருந்து வரும் சன் பத்திரிகை செய்திகளை வாசிப்பது போல் உள்ளது. சனரஞ்சகமாக, வியாபார ரீதியான முயற்சி. :lol: விடுதலையை நோக்கியல்ல. :(

விடுதலை நோக்கிய என்னத்தை திசை திருப்பவே கிடந்தது மாய்ந்து தள்ளுகிறார்கள்...கோழிக் குஞ்சின் இறகைக் கிளப்பிப் பார்த்து கீழ நாய்க்குட்டி இருக்கு என்று 'செய்தி' என்ற பெயரில் வெளியிட ஆட்கள் அல்லவா இவையள்... :lol: அவர்களின் சிந்தனை பிறகு எப்படி இருக்கும்? விடுதலை நோக்கியா இருக்கும்? :D:lol::rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.