Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கிழக்கில் 53 பாடசாலைகள் இயங்கவில்லை

Featured Replies

கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளம், தொடர் மழை ஆகியவற்றின் காரணமாக கடந்த மூன்று தினங்கள் மூடப்பட்டிருந்த பாடசாலைகள் நேற்று கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்பட இருந்த போதிலும் 53 பாடசாலைகள் இயங்கவில்லை என கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஸாம் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் உள்ள 1020 பாடசாலைகளுள் 967 பாடசாலைகளில் மட்டுமே நேற்று கல்வி நடவடிக்கை இடம்பெற்றது. நலன்புரி நிலையங்களாக செயற்பட்டு வந்த பாடசாலைகளை கல்வி நடவடிக்கைகளுக்காக வழங்கும் படி கோரியிருந்த போதிலும், 24 பாடசாலைகளில் இன்னும் மக்கள் தங்க வைக்கப்பட்டு நலன்புரி நிலையங்களாகவே செயற்பட்டு வருன்றன. திருகோணமலை மாவட்டத்தில் 21 பாடசாலைகளும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 02 பாடசாலைகளும், அம்பாறை மாவட்டத்தில் ஒரு பாடசாலையும் இவ்வாறாக நலன்புரி நிலையங்களாக செயற்பட்டு வருகின்றன.

வெள்ள நீர் தேங்கி வடிந்து செல்லாத நிலையில் 25 பாடசாலைகள் கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்படவில்லை. இதற்கமைவாக திருகோணமலை மாவட்டத்தில் 14 பாடசாலைகளும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 09 பாடசாலைகளும், அம்பாறை மாவட்டத்தில் 02 பாடசாலைகளும் திறக்கப்படவில்லை.

இதேவேளை அசாதாரண காரணமாக எவ்வித பிரச்சினைகளுமில்லாத 04 பாடசாலைகள் மாணவர் வரவின்மையால் திறக்கப்படவில்லை. திருக்கோவில் கல்வி வலயத்தில் உள்ள சென் ஜோன்ஸ் வித்தியாலயம் மற்றும் கள்ளியன்தீவு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை ஆகியனவும் மூதூர் கல்வி வலயத்தில் உள்ள ஆலிம்சேனை கலவன் பாடசாலை மற்றும் கிண்ணியா கல்வி வலயத்தில் உள்ள உப்பாறு ஹிதாயா வித்தியாலயம் ஆகியவற்றில் ஒரு மாணவரேனும் சமுகமளிக்காத காரணத்தினால் பாடசாலைகள் மூடப்பட்டிருந்தன.

இவ்வாறாக கிழக்கு மாகாணத்தில் கல்வி நடவடிக்கைகள் இடம்பெறாமல் மூடப்பட்டுள்ள 53 பாடசாலைகளையும் எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் மாணவர்கள் கல்வி கற்பதற்கு ஏதுவான வகையில் துப்புரவு செய்யப்பட்டு மீண்டும் கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் 14ம் திகதி திங்கட்கிழமை திறக்கப்படும் என மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ. நிஸாம் மேலும் தெரிவித்தார்.

http://meenakam.com/newsnet/2011/02/11/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-53-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF.html

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு உதவி வழங்க உலக நாடுகள் பின்னடிப்பு! ஐ.நா. சபை அறிவிப்பு

இலங்கையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரின் உடனடித் தேவை களை நிறைவேற்ற மனிதாபிமான உதவிகளை வழங்குமாறு ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச சமூகத்திடம் வேண்டுகோள் விடுத்திருந்த போதிலும் அவற்றை வழங்குவதில் உலக நாடுகள் அவசரம் காட்டாத தன்மை காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு, மத்தி, வடக்குப் பிராந்தியங்களில் ஏற்பட்டுள்ள மோசமான வெள்ள அனர்த் தத்தினால் பாதிக்கப்பட்டோ ரின் உடனடி மனிதாபிமான தேவைகளை நிறைவேற்ற 51 மில்லியன் டொலர் நிதி யை வழங்குமாறு ஐக்கிய நாடு கள் சபை கோரிக்கை விடுத் திருந்தது.ஆயினும் கடந்த செவ்வாய்க்கிழமை வரை 8.4 மில் லியன் டொலர்களையே பெற்றிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் இந்தப் புள்ளிவிபரங்கள் சர்வதேச சமூகம் உதவி வழங்குவதில் வேகம் காட்டாத தன்மையைக் கொண்டிருப்பதை வெளிப்படுத்துகின்றது.ஏற்கெனவே 12இலட்சம் மக்கள் மழை, வெள்ளம், மண் சரிவினால் பாதிக்கப்பட்டு பின்னர் தமது வாழ்க்கை யைக் கட்டியயழுப்ப முயற்சித்துக் கொண்டிருந்த நிலையில் மீண்டும் மோசமான வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இந்த அனர்த்தத்திலும் 11 இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சமூகம் அதிகளவு உதவவேண்டிய தேவையுள்ளதாக ஒக்ஸ்பாமின் இலங்கைக்கான முகாமையாளர் துசித சிறிவர்தன கூறியுள்ளார். பிந்திய வெள்ளப்பெருக்கினால் குறைந்தது 21 மரணங்கள் சம்பவித்திருப்பதாக உத்தியோகபூர்வ புள்ளி விபரங்கள் சுட்டிக் காட்டுகின்றன. கடந்த மாதம் இடம்பெற்ற வெள்ள அனர்த்தத்தினால் 43 பேர் பலியாகியிருந்தனர். தற்போது வெள்ளம் வடிந்து வருகின்ற போதிலும் நேற்று முன்தினம் புதன்கிழமை வரை ஒரு இலட்சத்து 70ஆயிரம் மக் கள் தற்போதும் நலன்புரி நிலையங்களில் தங்கியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இலங்கையின் வீதி அபிவிருத்தி அதிகாரசபையானது 11ஆயிரத்து 900 கிலோமீற் றர் வீதிகளை முகாமைத்துவம் செய்கின்றது. இதில் 2ஆயிரத்து 500 கிலோமீற்றர் வீதிகள் வெள்ளத்தினால் பாதிக் கப்பட்டுள்ளன. இவற்றை அவசரமாகத் திருத்துவதற்கு இலங்கை ரூபாயில் 560கோடி ரூபாய் தேவைப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

http://www.valampurii.com/online/viewnews.php?ID=16056

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.