Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்னும் விடுதலைப்புலிகளை வைத்து அரசியல் செய்யும் றோ - காங்கிரஸ் - திமுக க்கள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சட்டசபை தேர்தல்: முக்கிய தலைவர்களுக்கு விடுதலைப் புலிகள் குறி-மத்திய உளவுப் பிரிவினர் எச்சரிக்கை

ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 13, 2011, 14:27[iST]

சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின்போது முக்கிய தலைவர்களை விடுதலைப் புலிகள் குறி வைத்து தாக்குதல் நடத்தலாம் என மத்திய உளவுப் பிரிவினர் எச்சரித்துள்ளனர்.

இது தொடர்பாக மாநில அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள எச்சரிக்கையில், சில விடுதலைப் புலிகள் தமிழகத்துக்குள் ஊடுருவி உள்ளதாகவும், தலைவர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக ஆயுதங்கள், வெடி மருந்துகள் வாங்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ள அவர்களுக்கு ரகசிய இடத்தில் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருவதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதில் பெரும்பாலான பணிகள் கடந்த டிசம்பரிலேயே முடிந்திருக்கலாம் என்றும் இந்த தாக்குதல் பணிகளை ஒருங்கிணைக்க புலிகளின் நிதிப் பிரிவைச் சேர்ந்த முக்கிய நபர்களும் விமானப் படைப் பிரிவைச் சேர்ந்த சிலரும் தமிழகத்துக்குள் ஊடுருவியுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இப்போது இலங்கை ராணுவத்திடம் சிக்கியுள்ள புலிகள் தந்துள்ள தகவலின்படி சென்னை வளசரவாக்கத்தில் எல்டிடிஈயினர் நீண்ட காலமாகவே தங்கியிருப்பதாகவும், இப்போது நடத்த திட்டமிடப்பட்டுள்ள தாக்குதலுக்கு இவர்கள் உதவலாம் என்றும் மத்திய உளவுப் பிரிவினர் எச்சரித்துள்ளதாக உள்துறை அமைச்சகம் மாநில அரசுக்குத் தகவல் தந்துள்ளது.

மேலும் புலிகளின் தற்கொலைப் படையினரில் ஒரு பிரிவினர் நாகர்கோவிலுக்குள் அகதிகள் என்ற பெயரில் ஊடுருவியுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக இயக்கப்படும் தோணிகள் மூலம் இவர்கள் தமிழகத்துக்குள் ஊடுருவுவது சாதாரணமாகிவிட்டதாகவும், இதனால் தமிழக கடலோரப் பகுதியின் பாதுகாப்பு அபாயகரமானதாகி வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக பிரதமர், தேசிய பாதுகாப்புத்துறைச் செயலாளர், தமிழக முதல்வர் ஆகியோர் புலிகளின் முக்கிய குறிகளாக இருக்கலாம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், தமிழகத்தில் விடுதலைப் புலிகள் நடமாட்டமே இல்லை என்று போலீஸ் டி.ஜி.பி. லத்திகா சரண் மறுத்துள்ளார். அவர் கூறுகையில், தமிழகத்தில் விடுதலைப் புலிகள் நடமாட்டம் இல்லை. அவர்களது ஊடுருவலைத் தடுக்க கடலோர பகுதிகள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. கடலோரப் பாதுகாப்புப் பிரிவு போலீசார் தொடர்ந்து கடலோர கிராம மக்கள் நுண்ணரிவுப் பிரிவினருடன் தொடர்பில் இருக்கிறார்கள். எந்தப் பகுதியிலும் அன்னியர்கள் வந்திறங்கினாலும் தகவல் வந்துவிடும்.

முக்கிய பிரமுகர்கள் தமிழ் நாட்டுக்கு வரும் நேரங்களில் எல்லாம் மத்திய உளவு பிரிவு அதிகாரிகள் உஷாராக இருக்குமாறு எச்சரிக்கை தகவல்களை அனுப்புவார்கள். இது வழக்கமானது தான். அதே நேரத்தில் எந்த எச்சரிக்கையையும் காவல்துறை சாதாரணமாக எடுத்துக் கொள்வது இல்லை. அதை மிகக் கவனமாக பரிசீலித்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறோம். இலங்கை அகதிகள் முகாம்களும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன என்றார்.

http://thatstamil.oneindia.in/news/2011/02/13/ltte-plans-attacks-on-vvips-during-sssembly-polls-aid0090.html

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவிலோ, தமிழ்நாட்டிலோ... விடுதலைப் புலிகள் இல்லாமல் அரசியல் செய்ய முடியாது என்பது இவர்களின் வங்குரோத்து தன்மையைத் தான் காட்டுகின்றது. முதலமைச்சர்களாக இருந்த ஜெயலலிதாவும், கருணாநிதியும் விடுதலைப் புலிகளால் தமக்கு ஆபத்து என்று மக்களை திசை திருப்பி அரசியல் செய்ததை இலகுவில் மறந்து விட முடியாது. இன்னும் இந்தியாவை சுற்றி சீனர், பாகிஸ்தானின் அச்சுறுத்தல் இருக்கும் போது.... அதனைப் பற்றி றோ வாய் திறந்தால்... அவர்கள் சரியான பதிலடி கொடுப்பார்கள் என்ற பயமே... காரணம். ஊருக்கு இளைத்தவனில் தான் இந்தியர்கள் தங்கள் வாய்ச்சவடாலை காட்டுவார்கள். :(

பங்குச்சந்தையில் ஒரு நிறுவனத்தின் விலை சரியும் பொழுது அதை நிவர்த்தி செய்ய அந்த நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி (Chief Executing Officer) )உட்பட பலர் முயலுவார்கள். அதை வைத்தே அவர்கள் தொழிலும், நிறுவனத்தின் சார்பில் மேற்கொள்ளக்கூடிய பணம் சேர்த்தாலும் (generate funds) சாத்தியமாகின்றது.

இந்தியாவை பொறுத்தவரை அதை விடுதலைப்புலிகளை வளர்த்து, தடை செய்து பின்னர் அழித்து வரை தனது அரசியலில் ஒரு "பங்கு" ஆகவே பார்க்கின்றது. அந்த பங்கின் விலையை உயரத்தில் வைத்திருப்பதன் மூலம் தனக்கு தேவையான சில அரசியல் நகர்வுகளை மேற்கொண்டுவருகின்றது.

இந்திய பயங்கரவாதிகளின் ஆட்டத்துக்கு பின்னால் சிங்களம் வீசும் எலும்புத்துண்டுகள் வேலை செய்கின்றது.

சிங்கள பொம்பிளைப் பொறுக்கி, லங்காரத்னா புகழ் காடுமிராண்டி ராமின் இந்து பத்திரிக்கை மீண்டும் சிங்கள பயங்கரவாதிகளுக்கு தனது சேவைகளை ஆரம்பித்துள்ளது.

முதலில் தமிழகத்தில் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்த திட்டம் என்ற கட்டுக்கதையை அவிழ்த்துவிட்டுள்ளது. இதன் பின்னணியில் சிங்கள எலும்புத்துண்டை நக்கி வாழும் இந்திய ரோ பயங்கரவாதிகளும் இருக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.