Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக மீனவர்களை பிடித்தமை புத்திசாலித்தனமான செயல் அல்ல

Featured Replies

வடமராட்சி கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த தமிழகத்து மீனவர்கள் 112 பேரை வடமராட்சி கடற்றொழிலாளர்கள் வளைத்துப்பிடித்து பருத்தித்துறைக்குக் கொண்டு வந்துள்ளனர். நேற்று முன்தினம் நடந்த இச்சம்பவம் மனதிற்கு திருப்தி தருவதாக இல்லை.

ஏதோ ஒரு தவறு நடந்துவிட்டதான மனநிலை உள்ளது. அதேசமயம் 18 இழுவைப் படகுகளையும் தமிழகத்தின் 112 மீனவர்களையும் வளைத் துப்பிடித்து பருத்தித்துறைக்குக் கொண்டுவருவது என்பது சாதாரணமான விடயமன்று. ஆயுதங்கள் எதுவும் இல்லாமல் வடமராட்சி மீனவர்கள் தனித்து இவ்வாறு செய்வதென்பதும் முடியாத காரியம்.

எனவே இந் நடவடிக்கைக்கான பின்னணி வேறு என்பது புரிகின்றது. எதுவாயினும் தற்போது இருக்கக் கூடிய சூழமைவில் தமிழகத்து மீனவர்களை வடமராட்சி மீனவர்கள் பிடித்துக் கொண்டு வந்தமை, அல்லது அத்துமீறி நுழையும் தமிழக மீனவர்களை பிடித்துக்கொண்டு வருவது களநிலை மாற்றத்திற்கு உதவுமெனத் திட்டம் தீட்டியவர்களுக்கு உதவியமை என்ற இருநெறிகளில் இச் சம்பவத் தில் ஈடுபட்டவர்கள் மகா தவறு இழைத்துவிட்டனர்.

வடமராட்சிக் கடற்பரப்பில் அத்துமீறி நுழையும் தமிழக மீனவர்களால் எங்கள் கடற்றொழிலாளர்கள் பெரும் கஷ்டங்களை அனுபவிக்கின்றனர் என்பது உண்மை.ஆனால் அதற்காக தமிழக மீனவர்களை பிடித்துக்கொண்டுவருவது தகுந்த நடவடிக்கையல்ல. இத்தகைய நடவடிக்கை அத்துமீறல்களை தடுக்கப்போவதில்லை என்பதுடன், எம் தமிழினத்தின் கையறுநிலையை மேலும் பலவீன மாக்கிவிடும் என்பதே நிஜமாகும்.

தமிழக மீனவர்கள் அத்துமீறி நுழைவதை நியாயமென்று நீங்கள் கருதுகிறீர்களா? என்ற கேள்வியை நீங்கள் எழுப்பினால், அது நியாய மில்லை என்பதே எமது பதிலாக இருக்கும். அதேநேரத்தில் கடல் வலயப் பாதுகாப்புச் சட்டத் தின்போது கடற்கரைப் பக்கமே போக முடியாத நிலைமை எமக்கு இருந்ததையும் நாம் மறந்து விடக் கூடாது.

ஆக, தமிழக மீனவர்கள் எங்களுடைய வலைகளை அறுத்துவிட்டனர் என்ற குற்றச்சாட்டுகளுக்கு அப்பால் தமிழகத்தாலும் இந்திய மத்திய அரசாலும் எங்களுக்காக ஆகவேண்டிய காரியங்கள் நிறையவே உள்ளன. அதற்கான வழிவகைகளை எங்கள் மீது விசுவாசம் கொண்டு இந்திய மத்திய அரசு செய்யா விடினும், தமிழகத்து மீனவர்களுக்கு இலங்கைக் கடற் படையால் ஏற்படும் விபரீதங்களை கருத்தில் எடுத்து இந்திய மத்திய அரசு அதைச் செய்யும் என்ற நம்பிக்கையிருந்தது.

அந்த நம்பிக்கை நிஜமானதா என்பதை அறு தியிட்டு சொல்ல முடியாத போதிலும் நாங்கள் செய்த வேலையால் எல்லாம் கெட்டுப் போய்விட்டது என்று கூறும் அளவிற்கு நேற்று முன்தினம் நடந்த சம் பவம் காரணமாயிற்று. என்ன செய்வது! எங்களை வழிப்படுத்த யாருமே இல்லை. அந்தக் கும்பிடுவான்களை தேர்தல் காலங்களில்தானே காணலாம்.

நெய்திரண்டு வரும் வேளையில் தாழி உடைந்து போகின்ற எங்கள் தலைவிதி எப்போதுதான் மாறுமோ தெரியவில்லை.

http://www.valampurii.com/online/viewnews.php?ID=16298

  • கருத்துக்கள உறவுகள்

<_< இதைச் செய்தவர்கள் யாழ் மீனவர்களா என்று தெரியவில்லை. ஆனால் நன்கு திட்டமிட்டு, தமிழகத்து உறவுகளையும் ஈழத் தமிழர்களையும் மோதவிட்டு பிரிக்கும் சதி இதன் பின்னாலிருப்பது தெரிகிறது.

இது செய்யப்பட்டது ஈழத் தமிழ் மீனவர்களால்த்தான் என்றால் அது மிகவும் வெட்கப்பட வேண்டிய செயல். ஆனால் செய்தது சிங்களக் கூலிகள் என்றால் அதைத் தெளிவுபடுத்தவேண்டியது கட்டாய உடனடிக் கடமை.

சிங்கள ஆக்கிரமிப்பு தமிழர் தாயகத்தில் மூளை முடுக்கெல்லாம் வியாப்பித்துப் பரவும்போது வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த யாழ்ச் சமூகம் கடலில் மீன்பிடித்தார்கள் என்று சகோதரத் தமிழனையே சுற்றி வளைத்துப் பிடித்தார்கள் என்றால் அதை விடக் கேவலமான விடயம் ஒன்று இருக்கப்போவதில்லை.

ஈழத்தமிழ் மீனவர்களால் இது நடந்திருப்பதற்கு சரியான வலுவில்லை. இத்தனை படகுகளையும் சுற்றிவளைத்துப் பிடிப்பதற்கான பலமும் அவர்களிடம் கிடையாது. மீனவர்கள்தான் மீனவர்களையே சுற்றிவளைத்துப் பிடித்திருந்தால் அங்கு கைகலப்புகள் நடந்திருக்க வாய்ப்புண்டு. இதில் நிச்சயமாக ஆயுதங்கள் சம்பந்தப்படுத்தப்பட்டிருக்கும். கைதானவர்கள் விடுவிக்கப்பட்ட பின்புதான் சரியான உண்மைகள் வெளிவரும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.