Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அம்பாந்தோட்டை, மொனராகல காடுகளில் சிறிலங்காப் படையினர் பாரிய தேடுதல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Sunday, February 20th, 2011 | Posted by admin

அம்பாந்தோட்டை, மொனராகல காடுகளில் சிறிலங்காப் படையினர் பாரிய தேடுதல்

அம்பாந்தோட்டை, மொனராகல மாவட்ட காடுகளில் போர்க்கால அடிப்படையில் சிறிலங்காப் படையினர் நேற்று பாரிய தேடுதல் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

உலகக்கிண்ண துடுப்பாட்டப் போட்டியின் ஒரு கட்டமாக, சிறிலங்காவில் இன்று முதலாவது ஆட்டம் அம்பாந்தோட்டை சூரியவெவ மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

மொனராகலவுக்கும் கதிர்காமத்துக்கும் இடையில் சிறிலங்கா அரசினால் இந்த மைதானம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மைதானத்தை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இன்று திறந்து வைக்க முதலாவது ஆட்டம் நடைபெறுகிறது.

சிறிலங்கா-கனடா அணிகள் இந்த மைதானத்தில் மோதுகின்றன.

சிறிலங்காவில் 12 உலகக் கிண்ண ஆட்டங்கள் நடைபெறவுள்ள நிலையிலேயே அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று சிறிலங்கா காவல்துறையினரும் படையினரும் இணைந்து சூரியவெவ மைதானத்தைச் சுற்றியுள்ள காடுகளில் பாரிய தேடுதலை மேற்கொண்டனர்.

யால சரணாலயம் உள்ளிட்ட காடுகள் சல்லடை போட்டுத் தேடப்பட்டன.

போர்க்காலத்தில் கூட இதுபோன்ற தேடுதல் இடம்பெறவில்லை என்று பாதுகாப்பு வட்டாரங்கள் கூறியுள்ளன.

முன்னர் மொனராகல – அம்பாந்தோட்டை காட்டுப் பகுதியில் விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் சில இடம்பெற்றிருந்தன.

எனவே பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் இந்தத் தேடுதல் நடத்தப்பட்டதாக படைத்தரப்பு கூறியுள்ளது.

இந்தத் தேடுதலில் காடுகளில் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைளை மேற்கொண்ட ஆழ ஊடுருவும் அணி கொமாண்டோக்களும் ஈடுபடுத்தப்பட்டனர்.

துடுப்பாட்டப் போட்டிகள் முடியும் வரை இவர்கள் தொடர்ந்தும் இந்தப் பகுதிக் காடுகளில் நடவடிக்கைளில் ஈடுபடவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை. சூரியவெவ மைதானத்தில் மட்டும் 1500 காவல்துறையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

சூரியவெவ, பல்லேகல, கொழும்பு ஆகிய மைதானங்களில் நடைபெறவள்ள உலகக்கிண்ண துடுப்பாட்டப் போட்டிகள் அனைத்துக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கவனிக்க சிறப்புக் குழுவொன்று பாதுகாப்பு அமைச்சினால் உருவாக்கப்பட்டுள்ளது.

முப்படைகளினதும் உதவியுடன் இந்தப் பாதுகாப்பு கட்டமைப்பை சிறிலங்கா காவல்துறை மேற்கொண்டுள்ளது.

போட்டிகளுக்காக சிறிலங்கா வரவுள்ள 9 அனைத்துலக துடுப்பாட்ட அணிகள், மற்றும் நடுவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கியது தொடக்கம் இங்கு தங்கியிருந்து, போட்டிகளில் பங்கேற்று, நாட்டை விட்டு வெளியேறும் வரை இந்தக் குழுவே பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கவனிக்கிறது.

முப்படைகள், காவல்துறை ஆகியன தவிர்ந்த சிறப்பு அதிரடிப்படை, அமைச்சர்கள் பாதுகாப்பு பிரிவு, அதிபர் பாதுகாப்புப் பிரிவு, புலனாய்வுச் சேவைகள் ஆகியனவும் இந்தப் பாதுகாப்பு நடவடிக்கைகளில் இணைக்கப்பட்டுள்ளன.

அரசுக்கு எதிரான பரப்புரைகளை மைதானங்களில் சில குழுக்கள் மேற்கொள்ளலாம் என்று புலனாய்வுத் தகவல்கள் கிடைத்துள்ளதால் அதிகபட்ச பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாகவே மைதானத்துக்குள் பதாகைகள், சுலோக அட்டைகள் கொண்டு செல்வதை அரசாங்கம் தடை செய்துள்ளது.

பேனாவைக் கூட மைதானத்துக்குள் அனுமதிக்க வேண்டாம் என்று காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

போட்டிகள் நேரலையாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாவதால் அரசுக்கு எதிரான வாசகங்களை அதன் மூலம் பரப்ப எவரேனும் முயற்சிக்கலாம் என்று அரசாங்கம் அச்சம் கொண்டுள்ளது.

அரசுக்கு எதிரான வாசகங்கள் தொலைக்காட்சிகளில் இடம்பெறுவதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக சிறிலங்காவின் காவல்துறை மா அதிபரும் ஒப்புக்கொண்டுள்ளார்.

அதைவிட உலகக் கிண்ண துடுப்பாட்டப் போட்டிகளை தீவிரவாதிகள் குறிவைக்கலாம் என்று அமெரிக்காவும் எச்சரித்துள்ளது.

தமது குடிமக்களை துடுப்பாட்டப் போட்டிகள் நடைபெறும் சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்லும் போது அவதானமாக இருக்குமாறும் கேட்டுள்ளது.

இதனால் சிறிலங்கா அரசாங்கம் பாதுகாப்பு ஏற்பாடுகளில் தீவிர கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Short URL: http://thaynilam.com/tamil/?p=3006

  • கருத்துக்கள உறவுகள்

அரசுக்கு எதிரான பரப்புரைகளை மைதானங்களில் சில குழுக்கள் மேற்கொள்ளலாம் என்று புலனாய்வுத் தகவல்கள் கிடைத்துள்ளதால் அதிகபட்ச பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாகவே மைதானத்துக்குள் பதாகைகள், சுலோக அட்டைகள் கொண்டு செல்வதை அரசாங்கம் தடை செய்துள்ளது.

பேனாவைக் கூட மைதானத்துக்குள் அனுமதிக்க வேண்டாம் என்று காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

போட்டிகள் நேரலையாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாவதால் அரசுக்கு எதிரான வாசகங்களை அதன் மூலம் பரப்ப எவரேனும் முயற்சிக்கலாம் என்று அரசாங்கம் அச்சம் கொண்டுள்ளது.

தமக்கு எதிரான பரப்புரைக்கே இவ்வளவு பயப்படுகிறார்கள்!! :o

Edited by nunavilan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.