Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பரிசுபெற்ற இராணுவக் கேள்வியும் சிறீலங்கா இராணுவ போக்கும்..

Featured Replies

பரிசுபெற்ற இராணுவக் கேள்வியும் சிறீலங்கா இராணுவ போக்கும்..

டென்மார்க்கில் இருந்து வெளிவரும் வரலாறு என்ற டேனிஸ் சஞ்சிகை ஒவ்வொரு மாதமும் சிறந்த வரலாற்றுக் கேள்விக்கு பரிசளித்து வருகிறது. அந்தவகையில் இந்த மாதம் கேட்கப்பட்ட கேள்வியும், பதிலும் இராணுவ சக்தியை தப்பாக பயன்படுத்தும் நாடுகளுக்கு பயன்படக் கூடிய வகையில் எழுதப்பட்டுள்ளது. இதோ அந்தக் கேள்வியும் பதிலும் :

கேள்வி : இரண்டாம் உலக யுத்தம் நடைபெற்றபோது ஜேர்மனிய சர்வாதிகாரி ஹிட்லர் பிரான்சை கைப்பற்றினான். 1940 ம் ஆண்டு கோடைகாலத்தில் பிரான்ஸ் முழுவதுமே அவனால் வெற்றி கொள்ளப்பட்டு, கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. ஆனால் பிரான்சை முழுமையாகக் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதை ஹிட்லர் விரும்பவில்லை. அதற்கான காரணத்தை சொல்லாமலே படைகளை விலகச் சொன்னான்.. அன்று ஹிட்லர் ஏன் அப்படி ஒரு முடிவை எடுத்தான் ?

பதில் : பிரான்சை இலகுவாகவே ஹிட்லர் கைப்பற்றிவிட்டாலும் அவனுடைய மூளையில் வேறு திட்டங்கள் இருந்தன. அடுத்து இங்கிலாந்தின் மீதும், வேறுபல நாடுகளின் மீதும் அவனது படைகள் பாய வேண்டி இருந்தது. பிரான்சை கட்டுப்பாட்டில் கொண்டு வருவது அவனுடைய இலட்சியமல்ல, அதைச் செய்தால் அவனுடைய இராணுவ சக்தி முழுவதும் அங்கேயே கரைந்துவிடும். இராணுவத்தின் மூலம் ஒரு நாட்டையோ இனத்தையோ கட்டுப்பாட்டில் வைத்திருக்க நினைத்தால் இறுதியில் தோல்வியே ஏற்படும். ஆகவேதான் சில முக்கிய இடங்களில் தனது இராணுவ மையங்களை வைத்துக் கொண்டு மற்ற விடயங்களை பிரான்சியர் கைகளிலேயே விட்டுவிட்டான். இராணுவம் என்ற சக்தியை மண்ணாக்கக் கூடாது என்பதற்காகவே ஹிட்லர் அந்த முடிவை எடுத்தான். அதுவரை அவன் வென்றான்.

இன்று ஆப்கானிலும், ஈராக்கிலும் நிலை கொண்டிருக்கும் டேனிஸ் படைகள் அந்த நாடுகளின் உள் விவகாரங்களில் மூக்கை நுழைத்து காலத்தை விரயம் செய்யக்கூடாது. அந்தந்தந்த நாட்டு மக்கள் பிரச்சனைகளை அவர்களிடமே விட்டுவிட்டு விலகிவிட வேண்டும் என்ற எண்ணத்தை அரசியல் தலைவர்களிடையே வளர்ப்பதற்காகவே இந்தக் கேள்விக்குப் அந்தச் சஞ்சிகை பரிசு கொடுத்துள்ளது.

இனி -

இந்தப் பதிலை சிறீலங்கா இராணுவத்தின் மீது வைத்துப் பார்க்க வேண்டும். இலங்கையின் தமிழர் வாழிடங்களை முழுமையான இராணுவக்கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டுமென அந்த இராணுவம் விரும்புகிறது. வடக்கிலும் கிழக்கிலும் வாழும் மக்களிடம் அவர்களின் வாழ்வைத் தீர்மானிக்கும் உரிமையைக் கொடுக்காது இராணுவத்தை குவித்து வைத்திருந்தால் சிறீலங்காவின் இராணுவ சக்தி வீணாகும். தூரப்பார்வையில் அந்த இராணுவம் கொள்கைகள் குறிக்கோளற்று நீர்த்துப் போகும்.

அதற்கு சில உதாரணங்கள். அமரர். பார்வதிப்பிள்ளை வேலுப்பிள்ளையின் இறுதிக்கிரியைகளுக்கு போன கிழவிகளை எங்கே போகிறீர்கள் என்று இராணுவம் தெருத்தெருவாக நின்று விசாரித்துள்ளது. நாளைக்கு சாமத்திய வீட்டுக்கு போகாமல் தடுக்கவும் இராணுவம் முற்படலாம்.

கள்ளு விற்பது, காய்கறி விற்பது, ஆங்காங்கு பெண்களை பாலியலுக்கு பயன்படுத்துவது, விபச்சாரத்தை ஊக்குவிப்பது, மக்களை பீதியில் வைத்திருக்க யாரையாவது கொன்று கிணற்றில் வீசி கிலியயை உண்டு பண்ணுவது போன்ற காரியங்களை அது செய்ய முற்படும். இராணுவத்தால் ஒரு நாட்டை முழுமையாக கட்டுப்பாட்டில் வைக்க முயன்றால் அதன் சக்தி இப்படித்தான் விரயமாகும். இதனால்தான் ஹிட்லர் பிரான்சையே வேண்டாமென்று கைவிட்டான். அந்தத் தெளிவு இருக்கும்வரை அவனுடைய இராணுவம் உலகில் முன்னிலையில் நின்றது. என்று அவனுடைய இராணுவம் ஓரிடத்தில் நிலை கொண்டு அப்பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருக்க எண்ணியதோ அன்று அவனுடைய தோல்வி ஆரம்பித்தது.

விடுதலைப் புலிகளும் இதற்குப் புறநடையல்ல :

அவர்களும் தமது இராணுவத்தைக் கெரில்லாப் படையாக வைத்திருந்தபோது அவர்களுக்கு வெற்றி மேல் வெற்றி குவிந்தது. என்று யாழ்ப்பாணத்தையும், வன்னியையும், கிழக்கு மாகாணத்தையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முற்பட்டார்களோ அன்று அவர்களின் தோல்வி ஆரம்பமானது. புலிகளின் தோல்வி புதுமாத்தளனில் ஆரம்பிக்கவில்லை, பெரு நிலப்பரப்புக்களையும், வெகு ஜனத்தையும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முற்பட்டபோதுதான் அவர்களின் சக்தி பரவலாக்கப்பட்டு வீழ்ச்சி ஆரம்பித்தது.

புலிகளை பக்கத்தில் இருந்து பார்த்தும் சிங்கள இராணுவத்திற்கு இந்த உண்மை புரியவில்லை..

இருந்தாலும் புலிகளை முற்றும் குறைகூற முடியாது. பிரபாகரன் எடுத்த கடைசி முடிவு பாராட்டப்பட வேண்டிய முடிவே.

புயல் வருகிறதென்று பறவை சாய்ந்து பறந்தால் காலப்புயலில் அது அடிபட்டுப் போய்விடும். பின் அது எங்கு பறந்தது ஏன் பறந்தது என்பதே தெரியாமல் போய்விடும். ஆகவே அவர் உலக நாடுகளுக்கும், எரிக் சோல்கெயம் போன்றவர்களுக்கும் பணிந்து போகாமல் கடைசிவரை உறுதியாக நின்றார், அழிவுகளை சந்தித்தார்.

அவரின் முடிவால் இன்று வன்னியே சாம்பலாகக் கிடப்பதாக பலர் கூறுகிறார்கள்.

தவறு…

சாம்பலை விட்டுவிடு நெருப்பில் தங்கம்தான் மிஞ்சுகிறது என்பதுகூட ஓர் இராணுவப் பழமொழிதான்.

வாய்ப்பு இரண்டாவது தடவை வரலாம், இல்லை பத்தாவது தடவை வரலாம். கடைசி மூச்சு இருக்கும்வரை நம்பிக்கைக் இழக்கக் கூடாது என்ற அவருடைய ஒரேயொரு கொள்கை இன்று வெற்றி பெற்றிருக்கிறது.

உலக நாடுகளுக்கு அடி பணிந்து பெற்றிருக்கக் கூடிய ஒரு நாற்றமடிக்கும் குப்பை மூட்டையைவிட தோல்வி சிறந்தது என்ற அவருடைய முடிவு வரவேற்கப்பட வேண்டியதே.

தமிழ் மக்கள் இதயத்தில் விடுதலை உணர்வு என்ற தங்கத்தை தங்கமாகவே பேணி வைத்திருப்பதில் அவர் வெற்றி பெற்றிருக்கிறார். ஓர் இராணுவம் வெற்றியாலோ தோல்வியாலோ அளக்கப்படுவதில்லை, அதன் நடத்தையால்தான் அளக்கப்படுகிறது என்பதை தன் வாழ்வாலும் நடத்தையாலும் அவர் விளக்கியுள்ளார்.

இனி மக்களுக்கு வருவோம்.

முட்டாள்களிடமிருந்து தம்மைப் பிரித்துக் கொள்ளும் தெய்வீகப் பொறி தனி மனித ஒழுக்கத்தில் இருந்துதான் பிறக்கிறது. தமிழ் முட்டாள்களிடமிருந்தும், சிங்கள முட்டாள்களிடமிருந்தும் பிரிந்திருக்கும் பொறி மானமுள்ள தமிழ் மக்கள் மனங்களில் நெருப்பாக இருக்கிறது. சிறீலங்கா தேர்தலில் வாக்களிக்காத 80 வீதமான தமிழ் மக்களின் நெஞ்சங்களில் அதைக் கண்டோம்.

பிச்சை எடுத்தாலும் சுதந்திர வாழ்வை நேசித்துள்ள ஒருவனே உயர்ந்தவன். அப்படிப்பட்ட மக்கள் ஆயுதமின்றி, யாருடைய அணியிலும் இல்லாமல், தமிழர் கூட்டமைப்பு உட்பட எந்தவொரு கட்சியிலும் இடம் பெறாது ஈழத்தின் ஏழை மக்களாக நிற்கிறார்கள்.

தூய சுதந்திர வாழ்வு மனித உரிமை !

இராணுவம் அவர்களுக்கு வழி விடவேண்டும்.

போத்துக்கேயர்..

ஒல்லாந்தர்…

ஆங்கிலேயர்..

சிங்களவர்..

இவர்களின் இராணுவத்தை தமிழ் மக்கள் ஏற்றதாக தகவல்கள் இல்லை..

இவர்களுடன் தமிழன் சேர்ந்தால் அவனையும் ஏற்றதாக தெரியவில்லை..

முட்டாள்களிடமிருந்து தம்மைப் பிரித்துக் கொள்ளும் தெய்வீகப் பொறி தனி மனித ஒழுக்கத்தில் இருந்துதான் பிறக்கிறது.

இதுதான் ஈழத்தமிழனின் பிரிவினைக்கான அடிப்படை..

தமிழீழம் கேட்கவில்லை நமது மக்கள் முட்டாள்களிடமிருந்து பிரிந்து வாழும் உரிமையையே கேட்கிறார்கள்.. ஒரு முட்டாள் கணவனிடமிருந்து பிரிந்து வாழத் துடிக்கும் அபலையின் குரலை மதிப்பது அனைவரதும் கடமை.

இம்மாத வரலாறு என்ற சஞ்சிகைக்குள்ளால் ஒளிகாட்டும் வாராந்தப் படிப்பினை இதுதான்.

http://www.alaikal.com/news/?p=59501

.

உண்மையில் ஹிட்லர் தோற்றதற்கான காரணங்களில் முக்கியமான ஒன்றாகச் சொல்லப் படுவது அவன் பிரான்ஸை தனது முழுக் கட்டுப் பாட்டிற்குள் கொண்டுவராமையே.

பிரான்ஸின் டன்கேர்க் கரையில் சிறிய பிரதேசத்தில் 338,000 நேசநாட்டுப் படைகளை நாஸிப்படைகள் சுற்றி வளைத்திருந்தன. இலகுவாக இவர்கள் அனைவரையும் கொல்லவோ கைப்பற்றுவதற்கோ அவர்களால் முடிந்திருக்கும்.

ஆனால் ஏதோ ஒரு காரணத்திற்காக ஹிட்லர் தாக்குதல் நிறுத்தக் கட்டளையைப் பிறப்பித்திருந்தான்.

இதனால் 338,000 நேசநாட்டுப் படைகள் தப்பிப் பிழைத்தன. அடுத்த 10 நாட்களில் அவர்கள் அகப்பட்ட வள்ளங்களில் ஏறி இங்கிலாந்திற்கு தப்பி ஓடினார்கள்.

டன்கேர்க் முற்றுகை இரண்டாம் உலகப் போரின் திருப்புமுனையாக அமைந்தது.

ஹிட்லர் விட்ட மாபெருந் தவறாகவும் முடிந்தது. இவ்வளவு வீரர்களையும் அவன் கொன்று அல்லது கைப்பற்றி இருந்தால் இரண்டாம் உலகப் போரில் அவனே வெற்றியீட்டியிருப்பான்.

dunkirk1.jpg

na002061-sm.jpg

Dunkirk Evacutation

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.