Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வற்றாப்பளை அம்மன் ஆலய நிர்வாகத்தினரை கொழும்பிற்கு அழைத்து அவமானப்படுத்தி அனுப்பினார் மஹிந்த! ஏற்பாடு செய்தார் ஸ்ரீ ரங்கா!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வற்றாப்பளை அம்மன் ஆலய நிர்வாகத்தினரை கொழும்பிற்கு அழைத்து அவமானப்படுத்தி அனுப்பினார் மஹிந்த! ஏற்பாடு செய்தார் ஸ்ரீ ரங்கா!

Posted by admin On March 7th, 2011 at 10:53 pm

முல்லைத்தீவில் அரசியல் செய்யத் தலைப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சிறீரங்கா முல்லைத்தீவினைச் சேர்ந்த மக்களை அழைத்துச் சென்று ஜனாதிபதி மஹிந்தராஜபக்சவைச் சந்திக்க ஏற்பாடு செய்து அவர்களை அவமானப்படுத்தி அனுப்பியிருக்கின்றார்.

கொழும்பில் கடந்த 3ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்தராஜபக்சவின் கலந்துரையாடல் ஒன்று இருப்பதாக முல்லைத்தீவில் உள்ள பொது அமைப்புக்களைச் சேர்ந்த தலா இருவரை பங்கெடுக்க வருமாறு ஸ்ரீரங்கா அழைப்பு விடுத்திருக்கின்றார்.

இதற்கமைய வற்றாப்பளை அம்மன் ஆலய தலைவர் குகதாஸன், கரைதுறைபற்று பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் முன்னாள் தலைவர், வற்றாப்பளையில் வசிக்கும் கிராம அலுவலர், மற்றும் ரங்காவின் கட்சியில் போட்டியிடுகின்ற வற்றாப்பளை அம்மன் ஆலயப் பூசகரின் நெருங்கிய உறவினர் ஒருவர் வற்றாப்பளை மகாவித்தியாலய ஆசிரியர் உட்பட்டவர்கள் ஜனாதிபதியைச் சந்திக்கச் சென்றிருக்கின்றனர்.

கலந்துரையாடலின் தொடக்கத்தில் வற்றாப்பளை அம்மன் ஆலயத்தின் தலைவர் கருத்துத் தெரிவிக்கையில்,

வற்றாப்பளை அம்மன் ஆலயத்தின் கிணற்றில் இருந்து இராணுவத்தினர் பாரிய நீர்த்தாங்கிகளில் நாள் தோறும் தண்ணீர் எடுப்பதாகவும், ஆலயச் சூழலில் சில கிணறுகள் மாத்திரமே நன்னீர்க்கிணறுகளாக உள்ளன என்றும் இவ்வாறு தொடர்ந்து நீர் எடுப்பதால் நன்நீர்க் கிணறுகள் காலப் போக்கில் உவர் நீராக மாறும் ஆபத்து உள்ளதாகவும் தெரிவித்ததுடன், இது தொடர்பில் ஜனாதிபதி கவனத்தில் எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருக்கின்றார்.

இந்தக் கோரிக்கையினை அடுத்து ஆத்திரமடைந் மஹிந்தராஜபக்ச,

நீங்கள் குடிப்பதும் தண்ணீர் தான், எருமை மாடுகள் குடிப்பதும் தண்ணீர் தான். இந்தத் தண்ணீரை போரை வென்று தந்த படை வீரர்கள் குடிப்பதற்கு தடைவிதிக்குமாறு நீங்கள் எவ்வாறு கோரிக்கை விடுப்பீர்கள், மாவிலாறில் தண்ணீரைத் தடுத்து நிறுத்தியதும் நீங்கள் தான் என்று உரத்த குரலில் சிங்களத்தில் கத்தியிருக்கின்றார்.

அதன் பின்னர் தனக்கு வேறு கலந்துரையாடல் இருப்பதாகத் தெரிவித்துவிட்டு எழுந்து சென்றிருக்கின்றார். சம்பவத்தினை அடுத்து ஆத்திரமடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீரங்கா வற்றாப்பளை அம்மன் ஆலயத் தலைவரைப் பார்த்து,

நீங்கள் இந்தவிடயத்தினை ஏன் கதைத்தீர்கள்? முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்றுப் பிரதேசத்திலேயே வற்றாப்பளைக் கிராமம் தான் முதலில் மீள்குடியமர அரசினால் அனுமதிக்கப்பட்ட பிரதேசமாகும். இதற்கு மக்கள் சார்பில் நன்றி தெரிவித்திருக்க வேண்டும். வடக்கில் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்திகளுக்கு நன்றி சொல்லியிருக்க வேண்டும் என்று உரத்த தொனியில் தெரிவித்திருக்கின்றார்.

இதேவேளை வற்றாப்பளை ஆலய பூசகரின் உறவினரான ஸ்ரீரங்காவின் வேட்பாளரும் ஆலயத் தலைவர் இவ்வாறு நடந்து கொண்டிருக்கக் கூடாது என்று தமக்கு நெருக்கமானவர்களிடம் விசனம் வெளியிட்டிருப்பதாக நம்பகரமான தகவல்கள் சரிதம் இணையத்தளத்திற்குக் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதேவேளை நேற்று வற்றாப்பளை அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற நிர்வாகக் கூட்டத்திலும் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

saritham.com

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வற்றாப்பளை அம்மனும் மகிந்தவின் கோபத்திற்கு ஆளாகிவிட்டார். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவைச் சந்திக்கமுன்னர் எப்படிக் "கதைக்க" வேண்டும் என்று மற்றைய ஊடகவியலாளர்களுக்குப் பாடம் எடுக்கும் ஸ்ரீ ரங்கா சொல்லாமல் விட்டது அவரது அசட்டைத்தனம்.

இந்திய - சிங்கள பயங்கரவாதிகளின் கைக்கூலியான பச்சோந்தி (கு)ரங்காவை பாலா அண்ணா பல வருடங்களின் முன்பே (2003 இல்) அடையாளம் கண்டிருந்தார்.

ஆனால் தமிழினத்தின் சீரழிவுக்கு வழிவகுக்கும் "சக்தி" தொலைக்காட்சியின் சினிமா, குறுந்தொடர்களில் மூழ்கியிருந்த சினிமாப் பைத்திய தமிழர், "மின்னல்" அரசியல் தொடரை நடத்திய (கு)ரங்காவின் பச்சோந்தித் தனத்தை அறியாது விட்டுவிட்டனர்.

இந்த (கு)ரங்கா சக்தி தொலைக்காட்சியில் வேலைசெய்யும் பல பெண்களின் பின்னால் அலைந்து செருப்படியும் வாங்கியவன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.