Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடுகடந்த அரசாங்கத்தை குழப்ப முயலும் கோடரிக்காம்புகளின் பின்னணியில் யார்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Tuesday, 08 March 2011 04:03

நாடுகடந்த அரசாங்கத்தை குழப்ப முயலும் கோடரிக்காம்புகளின் பின்னணியில் யார்?

முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் தமிழர்களுடைய வரலாறு முடிக்கப்பட்டதென சிங்களம் கொக்கரித்தபோது உலகத் தமிழர்கள் இதயங்களில் நம்பிக்கை ஒளியை ஏற்றியது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உருவாக்கம். அதுமட்டுமல்லாது சிங்களத்துக்கு ஒரு பேரிடியாகவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அமைந்திருக்கின்றது என்பதே உண்மை. எவ்வாறாவது இந்த நாடுகடந்த அரசாங்கத்தை தடைசெய்ய வேண்டும் என்று சிறிலங்காப் பேரினவாத அரசாங்கம் பல்வேறு வழிகளிலே நகர்வுகளை மேற்கொண்டிருக்கின்ற இன்றைய சூழலில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தில் குழப்பத்தை விளைவிக்க முயலும் ஒரு சில ஜனநாயக விரோதிகள் ”நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஜனநாயக அணி” என்ற பெயரில் ஒரு குழுவை அமைத்து அறிக்கையும் விடுத்து எம் மக்களைக் குழப்ப முயல்கிறார்கள். இவர்களைப் போன்ற ஒரு சிலர் உள்ளக குழப்பங்களை உருவாக்கி தமிழர்களுடைய இலட்சிய விடுதலைப் போராட்டத்தை சிதறடிப்பதற்கு கோடரிக் காம்பாக செயற்படுகிறார்கள் என்பது இவர்கள் அறியாதது ஒன்றுமல்ல.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தில் 100க்கு மேற்பட்ட அங்கத்தவர்கள் இருக்கும்போது 30பேர் தங்களுடைய முடிவை ஏற்றுக்கொள்ளும்படி கேட்பது எந்தவகையில் ஜனநாயகமாகும். ஜனநாயகத்தின் அடிப்படைக்கோட்பாடே பெரும்பான்மையான அங்கத்தவர்களால் நிறைவேற்றப்படுகின்ற தீர்மானங்களை மதித்து நடப்பதே. இந்த 30பேரும் தனிப்பட்ட ஒரு சிலரின் வழிகாட்டலில் ஒரு போட்டி மனப்பான்மையோடு, தங்களுடைய தீர்மானங்களை நாடுகடந்த அரசில் திணிக்க முற்படுகிறார்கள் என்பதே மறுக்கவோ மறைக்கவோ முடியாத உண்மையாகும்.

மக்களே ! நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை, எத்தகைய இடர்கள் வரினும் எத்தகைய எதிர்ப்புக்கள் வரினும் அவற்றையெல்லாம் தாங்கி முன்னகர்த்துகின்ற ஒரு உறுதியான சக்தியாக நாங்கள் அனைவரும் கைகோர்த்து அணிதிரள வேண்டும். இத்தகைய செயற்பாடே எங்கள் தேசியத் தலைவர் ”புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்திடம் இந்தப் போராட்டத்தை ஒப்படைக்கின்றேன்” என்ற வாக்கியத்திற்கு நாங்கள் அனைவரும் வலுச்சேர்ப்பதாக அமையும்.

sankathi

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதில் சிந்திக்க வேண்டிய விடயம் என்னவென்றால், கேபி கைது செய்யப்பட்டாரா? அல்லது சரனடைந்தாரா? என்பதே, ஏனென்றால் உருத்திரகுமாரனை ஒருதலைபட்சமாக நியமித்தவர் கேபியே, கேபி தானாக சரனடைந்து இருந்தால், அவர் தனக்கு சாதகமான, தான் நினைப்பதை செய்யகூடியவரை, அதாவது தனக்கு சாதகமான ஒருவரையே நியமித்து இருப்பார், கைது செய்யப்பட்டு இருந்தால் அவரது தற்போதய செயல்களுக்கும், முன்பு அவர் எடுத்த முடிவுகளுக்கும் சமந்தம் இருக்க வாய்பில்லை, அந்த நிலையில் உருத்திரகுமாரன் தமிழர் நலன் சார்ந்து செயற்பட கூடியவராக இருப்பார், இதில் இவர் எதற்குள் வருகிறார் என்பது, உருத்திர குமாருக்கும், கேபிக்கும் மட்டுமே தெரிந்த விடயம், இந்த விடயத்தில் மக்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும்,

ஒருவரை நம்பி முழு விடயத்தையும் விட்டு விட முடியாது, ஒருபாதை அடைபட்டாலும் தமிழர்களின் செயற்பாடுகள் தொடர்ந்து நடைபெறவேண்டும், எம்மிடம் இருக்கும் அனைத்து அமைப்புகளையும் பலப்படுத்த வேண்டும், தமிழர் நலன்சார்ந்து நடப்பவர்கள் அனைவரையும், பலப்படுத்த வேண்டும். விலை போகிறவர்கள் ஒதுக்கபட வேண்டும், உண்மையாக பாடுபடுபவர் கைகளை இறுகபற்றி எமது செயற்பாடுகளை முன்நகர்த்துதல் வேண்டும்.

ஒரு தலைமை, ஒருஇயக்கம் என்பது எமது தேசிய தலைவருடன் முடிந்து விட்டது, ஏன் என்றால் அவர் அப்படியே இருந்தார் ,அப்படியேயே வாழ்ந்து காட்டினார், தனது ஒட்டுமொத்த குடுப்பத்தையும் அதற்காகவே இழந்தார், அவர்தன் குடும்பத்தை இழந்து வளர்த்த இந்த போராட்டதை நாம் எவருக்காகவும் முடக்கி விடுதலகாது.

  • கருத்துக்கள உறவுகள்

30 பேர் என்பது எண்ணிக்கையில் குறைந்ததாக இருந்தாலும், கணிசமானவர்கள் என்று தெரிகின்றது.

தமிழர்கள் ஜனநாயக வேடம் பூண்டு தங்களுக்குள் குடுமிபிடி சண்டைபிடிக்கத்தான் லாயக்கானவர்கள் என்று தெரிந்ததை மீண்டும் நிரூபிக்கின்றார்கள். இதற்குள் கேபி என்று சாயம்பூசி தமது "அலுவலை"க் கொண்டுபோகின்றார்கள். தமிழர்களின் ஏகபிரதிநிதிகள் தாம்தான் என்று குழுச்சண்டையில் இவர்கள் ஈடுபட தாயகத்தில் தமிழர்களின் இருப்பு கேள்விக்குறியாகப் போகும்வண்ணம் இலங்கை அரசு தனது வேலைத்திட்டத்தை துரிதகதியில் நடைமுறைப்படுத்துகின்றது. எனவே எதிர்காலத்தில் இவர்கள் அரசியல் செய்வதற்கு ஒரு "பிடி" கூட இல்லாமல் போகப்போகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

நாடு கடந்த அரசாங்கம் சார்ந்து நியாய பூர்வமான குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்படும் போது அவை குறித்து சம்பந்தப்பட்டவர்களோடு இதர உறுப்பினர்கள் கலந்துரையாடி அவர்களின் நோக்கங்களில் நியாயத்தன்மை இருப்பின் அதனை ஏற்றுக் கொண்டும் அல்லது ஏற்றுக் கொள்ள முடியாத விடயங்கள் குறித்து அது குறித்து விளக்கம் அளித்தும் நாடு கடந்த அரசை பலப்படுத்த வேண்டுமே தவிர கருத்து வேறுபாடுகள் தொடர்ந்து வலுப்பெறுவதை அனுமதிப்பது அந்த அமைப்புக்கு நன்றல்ல.

இதனை நாடு கடந்த அரசின் பிரதமர் உட்பட அனைவரும் உடனடியாக கருத்தில் எடுத்து தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாக இதனைக் கொண்டு செயற்பட முன் வருதலே நாடு கடந்த அரசின் மீதான நம்பிக்கையை மேன் மேலும் வளர்ப்பதோடு அதனை பலப்படுத்தி நிற்கும்.

====================================================

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=33651

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாடு கடந்த அரசாங்கம் சார்ந்து நியாய பூர்வமான குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்படும் போது அவை குறித்து சம்பந்தப்பட்டவர்களோடு இதர உறுப்பினர்கள் கலந்துரையாடி அவர்களின் நோக்கங்களில் நியாயத்தன்மை இருப்பின் அதனை ஏற்றுக் கொண்டும் அல்லது ஏற்றுக் கொள்ள முடியாத விடயங்கள் குறித்து அது குறித்து விளக்கம் அளித்தும் நாடு கடந்த அரசை பலப்படுத்த வேண்டுமே தவிர கருத்து வேறுபாடுகள் தொடர்ந்து வலுப்பெறுவதை அனுமதிப்பது அந்த அமைப்புக்கு நன்றல்ல.

இதனை நாடு கடந்த அரசின் பிரதமர் உட்பட அனைவரும் உடனடியாக கருத்தில் எடுத்து தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாக இதனைக் கொண்டு செயற்பட முன் வருதலே நாடு கடந்த அரசின் மீதான நம்பிக்கையை மேன் மேலும் வளர்ப்பதோடு அதனை பலப்படுத்தி நிற்கும்.

====================================================

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=33651

வீணேகாலத்தை வீணடிப்பதை விடுத்து செயலில் இறங்குபவர் பின்னால் மக்கள் ஒன்றுதிரள்வாழ்கள்.

"சொல்லுக்கு முன் எப்போதும் செயல் இருக்க வேணும்"

Edited by சித்தன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.