Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னனும், துறவியும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சலில் வந்தவை, ரசித்தவை...

முட்டாள் மன்னன்:

ஓர் அரசன், ஜென் கற்றுக்கொள்ள விரும்பினான். ஆனால் யாரிடம் படிப்பது என்று தெரியவில்லை. அமைச்சர்களைக் கேட்டால் இரண்டு துறவிகளை அடையாளம் காட்டினார்கள். இருவருமே பெரிய மகான்கள்தான். ஆனால் அதற்காக, இரண்டு குருக்களிடம் பாடம் படிக்கமுடியுமா? இவர்களில் யாரேனும் ஒருவரைத் தேர்ந்தெடுக்கவேண்டும். எப்படி?

அரசன் அந்த இரு துறவிகளையும் அழைத்தான். தன்னுடைய குழப்பத்தைச் சொன்னான்.

முதல் துறவி மலர்ச்சியாகச் சிரித்தார். "அரசனே, நீ பெரிய புத்திசாலி, உனக்கு ஜென் கற்றுத்தருவதில் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி!" என்றார்.

இரண்டாவது துறவி அவரை வெறுப்போடு பார்த்தார். "யோவ், நீயெல்லாம் ஜென் படிச்சவனா?’ என்றார். ‘ராஜா-ங்கறதுக்காக அந்தாளை இஷ்டப்படி புகழறதா? இவன் ஒரு முட்டாள். இவனுக்கு ஜென் கத்துத்தரணும்ன்னா பல வருஷம் தலைகீழா நின்னு தண்ணி குடிக்கவேண்டியிருக்கும்!"

அவர் இப்படிச் சொன்னதும் அமைச்சர்களெல்லாம் பயத்தோடு அரசரைப் பார்த்தார்கள். ராஜாவை இப்படிப் பேசியதற்காக அந்த இரண்டாவது துறவியின் தலை தரையில் உருளப்போகிறது என்பது அவர்களுடைய எண்ணம்!

ஆனால், அரசன் அப்படிச் செய்யவில்லை. அந்த இரண்டாவது துறவியிடமே சீடனாகச் சேரத் தீர்மானித்தான்.

"என்னைப் புத்திசாலி என்று நினைப்பவரிடம் நான் எப்படிப் பாடம் படிக்கமுடியும்? அதற்குப் பதிலாக என்னை முட்டாளாகக் கருதுகிறவரிடம் என்னை முழுமையாக ஒப்படைத்துக்கொண்டுவிடுவதுதான் என்னுடைய புத்திக்கு நல்லது!"

நம்பிக்கை:

ஓர் ஊரின் வெளிப்புறப் பகுதியில் ஜென் துறவி ஒருவர் தன் குடிலில் இருந்தபடி பொதுமக்களுக்கு நல்லன சொல்லி வந்தார். அவருடைய குடிலில் வேலை பார்த்த ஒரு பெண் திடீரென்று கர்ப்பமாகி விட்டாள். அவளுடைய அப்பா கோபமாகி, அவளை அடித்து “உன்னுடைய கர்ப்பத்துக்கு யார் காரணம்?” என்று கேட்க, அவள் அந்த ஜென் துறவி தான் காரணம் என்று கைகாட்டினாள்.

ஊரே திரண்டு “அடப்பாவி! நீ இவ்வளவு கேவலமானவனா? போலி சாமியாரே! இப்படி நீ செய்யலாமா?” என்று காறி உமிழ அவர் சாதாரணமாக “அப்படியா?” என்றார்.

ஊரே அவரை ஒதுக்கி விட்டது. புதிதாக ஊருக்கு வருபவர்கள் அந்தத் துறவியைப் பார்க்க வரும் போது, “என்னய்யா, உங்களைப் பற்றி ஊரில் இப்படி எல்லாம் பேசுகிறார்களே” என்று கேட்க, அவர், சாதாரணமாக “அப்படியா?” என்றார்.

அந்த வேலைக்காரிக்கு தான் சொன்ன பச்சைப் பொய் உறுத்திக் கொண்டே தூங்கவிடாமல் செய்ய, ரகசியமாக துறவியைச் சந்தித்து சந்தர்ப்பவசத்தால் தான் பொய் சொல்ல நேர்ந்ததைச் சொல்லி அழுதாள். அந்தத் துறவி, “அப்படியா?” என்பதற்கு மேல் ஒருவார்த்தை பேசவில்லை.

நாட்கள் நகர அந்த வேலைக்காரிக்குக் குழந்தை பிறந்தது. குழந்தை அவளுடைய அத்தைமகன் ஜாடையில் இருக்க, ஊராருக்கு உண்மை தெரிந்து, "அடடா, அந்த நல்லவரை அப்படிப் பேசி விட்டோமே!" என்று வருந்தி அவரிடம் வந்து மன்னிப்பு கேட்டார்கள். அவர் அதற்கும் “அப்படியா?” என்றார் சாதாரணமாக.

பலசமயங்களில் சத்தியம் என்பது முட்டைக்குள் இருக்கும் கரு போன்றது. அதனைப் பொறுமையுடன் அடை காத்தால் அன்றி அதற்கு உயிர் கொடுக்க முடியாது.

நம் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்களுக்கு ஆதாரம் தேவை இல்லை; நம்பிக்கை இழந்தவர்களிடம் காட்டப்படும் ஆதாரம் மட்டும் எப்படி நம்பகமாகக் கருதப்படும்?

பேசுபவரின் குரல் எவ்வளவுக்கு உயருகிறதோ அவ்வளவுக்கு கேட்பவருக்கு நம்பகத் தன்மை குறையும் என்பது பொது நீதி.

.

Edited by ராஜவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

பலசமயங்களில் சத்தியம் என்பது முட்டைக்குள் இருக்கும் கரு போன்றது. அதனைப் பொறுமையுடன் அடை காத்தால் அன்றி அதற்கு உயிர் கொடுக்க முடியாது.

நம் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்களுக்கு ஆதாரம் தேவை இல்லை; நம்பிக்கை இழந்தவர்களிடம் காட்டப்படும் ஆதாரம் மட்டும் எப்படி நம்பகமாகக் கருதப்படும்?

பேசுபவரின் குரல் எவ்வளவுக்கு உயருகிறதோ அவ்வளவுக்கு கேட்பவருக்கு நம்பகத் தன்மை குறையும் என்பது பொது நீதி.

.

gif-Thumbs-up.gif

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.