Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டும் டும் டும்முக்கு முன் ஒரு நிமிஷம்!

Featured Replies

டும் டும் டும்முக்கு முன் ஒரு நிமிஷம்!

சில நாட்களுக்கு முன் வேலூர் தண்டபாணி திருமண மண்டபத்தில் ஒரு வரவேற்பு நிகழ்ச்சி... மாலையும் கழுத்துமாக நிற்க வேண்டிய மணமக்கள் படுக்கையில் படுத்து ரத்த தானம் செய்துகொண்டு இருந்தார்கள். தொடர்ந்து திருமண வரவேற்புக்கு வந்தவர்களில் சிலரும் ரத்த தானம் செய்தார்கள். இது தவிர, 150-க்கும் மேற்பட்டவர்களுக்கு என்ன வகை ரத்தம் என்பதை அறியும் பரிசோதனையும் நடந்துகொண்டு இருந்தது.

விழாவுக்கு வந்திருந்த வேலூர் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திரன் இந்த வித்தியாசத் திருமண வரவேற்பு

நிகழ்ச்சியை மனமாரப் பாராட்டிப் பேசினார். ரத்த தானம், ரத்தப் பரிசோதனை என மணவிழாவில் ரத்த மேளா ஏன்?

இதற்கு மூலவர், மணமகள் திருமாதுவின் தந்தை இரா.சந்திரசேகரன்.

வேலூர் வட்டாரத்தில் 'ரத்த தானம்’ சந்திரசேகரன் என்றால்தான் இவரைத் தெரியும். வேலூரில் உள்ள 'உதவும் உள்ளங்கள்’ அமைப்பின் தலைவரான சந்திரசேகரனின் கையில் எப்போதும் ஒரு பை இருக்கும். அதில், ரத்த தானம் செய்யத் தயாராக உள்ளவர்களின் முகவரி, தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்கள் இருக்கும். யாருக்கு ரத்தம் தேவை என்றாலும், சம்பந்தப்பட்ட கொடையாளியுடன் தொடர்புகொண்டு தானம் வழங்க ஏற்பாடு செய்வது சந்திரசேகரனின் வழக்கம்!

''திருமணத்துக்கு ஜாதகப் பொருத்தம் பார்க்கிறோமோ இல்லையோ... ரத்தப் பொருத்தம் பார்ப்பது அவசியம்!'' எனப் பேச்சை ஆரம்பித்தார் சந்திரசேகரன்.

''கடந்த 1976-ம் ஆண்டு என் நண்பரின் திருமணம் நடந்தது. ரத்தப் பொருத்தம் பார்த்து திருமணம் செய்வது குறித்த விழிப்பு உணர்வு ஏற்படாத காலம் அது. என் நண்பரின் மனைவிக்குக் குழந்தை பிறந்தபோது, அது குறைப் பிரசவமாகவும், மஞ்சள் காமாலை நோய்த் தொற்றுடன் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது குழந்தையின் உடலில் இருந்து ஒரு பகுதி ரத்தத்தை மாற்றவும் செய்தனர். 'ரத்தத்தில் rh என்று ஒரு பொருள்இருக்கிறது. rh உள்ள ஆணுக்கும் rh இல்லாத பெண்ணுக்கும் பிறக்கும் குழந்தையின் ரத்தம் போதுமான அளவுக்கு வலிமையுடன் அமைவது இல்லை. பெற்றோரின் பொருந்தாத ரத்தத்தின் விளைவால், குழந்தை பிறக்கும் முன் கருப்பையிலேயே இறந்துவிடுகிறது, அல்லது பிறக்கும்போதே மஞ்சள் காமாலையுடன் பிறக்கிறது. இதுபோன்று பாதிப்புடன் பிறக்கும் குழந்தைகளுக்கு ரத்த மாற்றம் செய்து குணப்படுத்துகின்றனர். பொருந்தாத ரத்தம் உடைய பெற்றோருக்குப் பிறக்கும் குழந்தைகளில் 25-ல் ஒன்று பாதிக்கப்படுகிறது. அதனால், திருமணத்துக்கு முன்னரே ரத்தத்தில் rh பரிசோதனை செய்துகொள்வது அவசியம். முடியாவிட்டால், திருமணம் முடித்தவர்கள் ரத்தத்தை ஆய்வு செய்து, பொருந்தாது எனத் தெரிந்தால் மருத்துவமனையை நாடவேண்டும்!'' என்றவர் அவருடைய திருமண நிகழ்வு குறித்தும் பேசினார்.

''கடந்த 1977-ம் ஆண்டு எனக்குத் திருமணம் நடந்தது. எனது ரத்தத்தில் பி பிரிவில் rh இருந்தது. என் மனைவி மலர்விழியின் ரத்தம் எ பிரிவில் rh இருந்தது. என் மகன், மகள் ஆகியோருக்கும் ரத்தப் பொருத்தம் பார்த்தே திருமணம் செய்துவைத்தேன்.

துருக்கியின் முன்னாள் அதிபர் கமால் பாட்ஷா, 'திருமணம் செய்பவர்கள் ரத்தப் பொருத்தம் பார்க்காவிட்டால் அந்தத் திருமணமே செல்லுபடி ஆகாது!’ என சட்டமே கொண்டுவந்தார்.

ஓர் ஆணுக்கு ரத்தத்தில் பாசிட்டிவ்வும், பெண் ரத்தத்தில் நெகடிவ்வும் இருந்தால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைக்கு ரத்தம் பாசிட்டிவ்வாக அமையும் பட்சத்தில், 72 மணி நேரத்துக்குள் பெண்ணுக்கு இம்முனோகுளோபின் இன்ஜெக்ஷன் போட வேண்டும். இல்லையெனில், அந்தப் பெண்ணுக்கும், அடுத்த குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படும். இத்தகைய விழிப்பு உணர்வு மக்களிடத்தில் இன்னமும் ஏற்படவில்லை. அதனால்தான் எங்கள் இல்ல விழாக்கள் எதுவாக இருந்தாலும், அதில் ரத்தம் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்தி வருகிறோம். எங்கள் மகன் திருமணத்தில் பங்கேற்ற பார்வையற்ற ஆண், பெண் இருவர் என்னிடம் வந்து, 'நாங்களும் ரத்தப் பொருத்தம் பார்த்துதான் திருமணம் செய்வோம்’ எனக் கூறினர். அதுபோலவே அவர்கள் ரத்தப் பொருத்தம் பார்த்து திருமணம் செய்துகொண்டனர். இப்போது அவர்களுக்கு அழகான ஆண் குழந்தை இருக்கிறது. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அவர்கள் வந்து ரத்த தானம் செய்கின்றனர். ரத்தப் பொருத்தம் பார்ப்பதை அரசு சட்டமாக அறிவிக்க வேண்டும். வருங்கால சந்ததி வளமானதாக அமைய, அதுதான் வழிசெய்யும்!'' என்றார் அக்கறையோடு.

- ஜே.வி.என்.,சசிகுமார்,

ரத்த தானம் யார் செய்யலாம்?

18 வயது முடிந்தவர்கள், 45 கிலோ எடைக்குக் குறையாதவர்கள், 60 வயது வரை உள்ள ஆண், பெண் இருபாலரும் ரத்தம் தரலாம். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ரத்த தானம் செய்யலாம்.

யார் ரத்த தானம் செய்யக்கூடாது?

ரத்த அழுத்தம் சீராக இல்லாதவர்கள், சளி, ஜுரம், இருமல் உள்ளவர்கள், ஆறாத புண் உள்ளவர்கள் ரத்த தானம் செய்யக்கூடாது. மது அருந்திய 24 மணி நேரத்துக்குள் தானம் செய்யக்கூடாது. சிகரெட் பிடிப்பவர்கள், புகைத்த ஒரு மணி நேரம் கழித்தே ரத்தம் தர முடியும். ரத்தம் கொடுத்து இரண்டு மணிநேரத்துக்கு மீண்டும் சிகரெட் பிடிக்கக்கூடாது. சிறிய அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள் ஆறு மாதங்களுக்குப் பிறகே ரத்தம் தரலாம். பெரிய அறுவைச் சிகிச்சை செய்தவர்கள் என்றால் ஒரு வருடம் கழித்தே தர முடியும். கருவுற்ற பெண்கள், தாய்ப்பால் தரும் பெண்கள் ரத்தம் தர முடியாது. உடலில் உள்ள ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு 12.5-க்குக் குறைந்தால் ரத்தம் தர முடியாது.

Vikatan.com

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் உபயோகமான் தகவல் .எனக்கு மிக நெருக்க்மனவ்ருக்கு இந்த பிரச்சினை வந்தது 72 மணிக்குள் இல் ஊசி போட்டு ,இப்பொது அவர் இரு குழந்தை களின் தாய்.

Edited by நிலாமதி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.