Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தீர்வை ஏற்படுத்துவது உடனடிச் சாத்தியம் இல்லை: அலரி மாளிகையில் பத்திரிகையாளரது கேள்விக்கு மஹிந்த ராஜபக்ஷ பதில்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தீர்வை ஏற்படுத்துவது உடனடிச் சாத்தியம் இல்லை: அலரி மாளிகையில் பத்திரிகையாளரது கேள்விக்கு மஹிந்த ராஜபக்ஷ பதில்.

[saturday, 2011-03-26 05:25:48]

60 ஆண்டுகால இனப்பிரச்சினைக்கு சகல தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிரந்தர தீர்வு அவசியம். எனினும் இந்த நாட்டில் புரையோடிக்கிடக்கும் இனப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தரமான எல்லோராலும், ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தீர்வை உடனடியாக ஏற்படுத்துவது சாத்தியமற்ற செயல் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுக்காலை அலரி மாளிகையில் பத்திரிகை ஆசிரியர்களையும், இலத்திரனியல் ஊடகங்களின் பொறுப்பதிகாரிகளையும் சந்தித்து உரையாடினார். இச்சந்தர்ப்பத்தில் பத்திரிகை ஆசிரியர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவுகளின் படி மக்கள் உங்களுக்கு இன்னுமொரு மகத்தான ஆணையை கொடுத்துள்ளார்கள். எனவே, நீங்கள் நாட்டின் இனப்பிரச்சினைக்கு உடனடித்தீர்வை ஏற்படுத்துவதை ஏன் காலதாமதப்படுத்துகிறீர்கள் என்ற கேள்வியையே பத்திரிகை ஆசிரியர் ஜனாதிபதியிடம் கேட்டார்.

இந்த கேள்வி தொடர்பாக மேலும் கூறிய ஜனாதிபதி;

இனப்பிரச்சினைக்கான தீர்வை நாட்டிலுள்ள சகல தரப்பினரின் உடன்பாட்டுடன் ஏற்படுத்தினால் தான் அது நிரந்தரத் தீர்வாக அமைய முடியும். எனவே, எல்லோருடைய கருத்துக்கள், அபிப்பிராயங்களை கேட்டறியும் செயற்பாட்டில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக கூறினார்.

இதனைச் செய்வதற்காக நான் சகல பிரிவினரையும் தனித்தனியாக அழைத்து அவர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகிறேன். தமிழ் தேசிய கூட்டமைப்பின் தூதுக் குழுவினரை நான் விரைவில் சந்திக்கவிருக்கிறேன்.

அவர்கள் தீர்விற்கான தங்கள் யோசனைகளை இதுவரையில் முன் வைக்கவில்லை. பின்னர் அதனடிப்படையில் நாம் சுமுகமான பேச்சுவார்த்தைகளை நடத்து வோம் என்றும் ஜனாதிபதி கூறினார்.

இனப்பிரச்சினை தொடர்பான சமரச பேச்சுவார்த்தைகள் பற்றி இன்னுமொரு கேள்வி எழுப்பப்பட்டபோது பதிலளித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எல்.ரி.ரி.ஈக்கு ஜனாதிபதி ஆர். பிரேமதாஸ பெருமளவு உதவிகளையும், பென்ஸ் கார் போன்ற வசதிகளையும் பெற்றுக் கொடுத்தார்.

அதனால் அவர்கள் வெளிநாடுகளில் நடத்தப்பட்ட சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு ஆடம்பரமான முறையில் சென்று கலந்து கொண்ட போதும் தானும் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவும் வாடகை வண்டியில் கூட செல்லாமல் நடந்தே சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.

செய்தி.கொம்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரைத் இலங்கைத் தீவிலிருந்து தீர்ப்பதே நோக்கமாக இருக்கும்போது, இனப்பிரச்சினைக்குத் தீர்வு ஏது? அவர்களிடம்(சிங்கள அரசுகளிடம்) இருக்கும் ஒரே தீர்வு தமிழரை அழித்தல். நிலங்களைப் பறித்தல். எஞ்சியோரை அடிமைகளாக்குதல்.

:blink: :blink:

"வெளிநாடுகளில் இலங்கை அரசுக்கு எதிராக அடிப்படை மனித உரிமை மீறல், யுத்தக்குற்றச்சாட்டுகள் போன்றவை வேண்டுமென்றே சுமத்தப்படுகின்றன என்றும் அதன் மூலம் தாய்நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தப்படுகிறது என்றும் ஜனாதிபதி கண்டனம் தெரிவித்தார்.இந்தத் தேசத்துரோகச் செயலுக்கு எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் துணை போகின்றனர் என்றும், இது வேதனைக்கு உரிய செயல் என்றும் ஜனாதிபதி கூறினார்.யுத்தக்குற்றமோ, மனித உரிமை மீறலோ நடைபெற்றிருந்தால் இங்கே நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழு வுக்கு முறைப்பாடு செய்துகொள்ளலாம். குற்றச் செயல்கள் உண்மையில் நடைபெற்றன என்று கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் நிச்சயம் சட்டபூர்வமாகத் தண்டிக்கப்படுவர் என்று ஜனாதிபதி சொன்னார்."

http://onlineuthayan.com/News_More.php?id=1311

இந்திய அரச பயங்கரவாதிகளின் பின்னால் உள்ள விலைக்குப் போகும் சோனியாவால் வழங்கப்படும் தைரியத்தால் மகிந்த தீர்வு பற்றி பேசுகிறார்?

  • கருத்துக்கள உறவுகள்

தீர்வை ஏற்படுத்துவது உடனடிச் சாத்தியம் இல்லை: அலரி மாளிகையில் பத்திரிகையாளரது கேள்விக்கு மஹிந்த ராஜபக்ஷ பதில்.

http://www.youtube.com/watch?v=vyLY6d-x0d8

வருடம் 3050.

நமல் ராஜபக்சேவின்ட கொள்ளு பேரன் கோமல் ராஜபக்சே..

தீர்வை ஏற்படுத்துவது உடனடிச் சாத்தியம் இல்லை: அலரி மாளிகையில் பத்திரிகையாளரது கேள்விக்கு கோமல் ராஜபக்சே பதில்.

டிஸ்கி:

ராஜபக்சேவினட உடலை மம்மி போல செய்து வைத்தாலும் அது அந்த காலத்திலும் இப்படித்தான் சொல்லும்

இவனுங்களுக்கு ஆப்பு சொருக.. இந்த தோழரின் வழிமுறைகளை பாலோ செய்யணும்.. :(

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.