Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கை கிரிக்கட் அணி தோல்வியின் எதிரொலி: தமிழர்கள் மீது சிங்களக் கும்பல் தாக்குதல்: பலர் வைத்தியசாலையில் அனுமதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை கிரிக்கட் அணி தோல்வியின் எதிரொலி: தமிழர்கள் மீது சிங்களக் கும்பல் தாக்குதல்: பலர் வைத்தியசாலையில் அனுமதி

[sunday, 2011-04-03 11:22:06]

உலகக் கோப்பை கிரிக்கட் போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்ததனையடுத்து இலங்கையின் யாழ்.குடா மற்றும் மலையகத்தைச் சேர்ந்த தமிழ் மக்கள் மீது தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

சிறிலங்கா கிரிக்கற் அணி தோல்வியடைந்ததையடுத்து ஹற்றன் நகரில் தமிழ் தோட்டதொழிலாளர்கள் மீது சிங்கள குழு ஒன்று தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதில் காயமடைந்த தமிழர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிறிலங்கா கிரிக்கட் அணி தோல்வியடைந்த உடன் கத்திகள் வாள்கள், தடிகளுடன் புறப்பட்ட சிங்களவர்கள் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் ஏதும் அறியாத அப்பாவி தமிழ் தோட்டதொழிலாளர்கள் தங்களுடைய லயன்களுக்குள் ஓடி ஒளிந்த போதும் வீடுகளுக்குள் புகுந்தும் சிங்கள குழுக்கள் தாக்குதல் நடத்தியதாக மலையக மக்கள் தெரிவித்துள்ளனர்.

இத்தாக்குதல் இரவு 10மணிமுதல் நள்ளிரவுக்கு பின்னரும் தொடர்ந்ததாக அப்பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். தாக்குதல் நடந்த பின்னரே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்ததாகவும், தாக்குதல் நடத்தியவர்கள் கத்திகள், பொல்லுகளுடன் காணப்பட்ட போதிலும் காவல்துறையினர் அவர்களை கைது செய்யவில்லை என்றும் மலையக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தமிழர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதேவேளை நேற்றிரவு யாழ் குடாநாட்டின் பல இடங்களில் வெள்ளைவானிலும் மோட்டார் சைக்கிளிலும் வந்தவர்கள் வீதிகளில் நின்ற பொதுமக்கள் மீது தாக்குதல்களை நடத்தியதாகவும் அவர்கள் வீடுகளுக்குள் அடைக்கலம் தேடி ஒடியபோது அங்கும் புகுந்து தாக்குதல் நடத்தியதாகவும் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் வலம்புரி நாளிதழ் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நடைபெற்ற உலகக்கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதையடுத்து யாழ். குடாநாட்டில் பரவலாக சிலர் வெடி கொளுத்திக் கொண்டாடினர். யாழ்ப்பாணம், வடமராட்சி, தென்மராட்சி என பரவலாக கொண்டாட்டங்கள் இடம் பெற்றன. இதனைப் பொறுத்துக்கொள்ளாத இராணுவத்தினர் வெள்ளைவான் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் சென்று வெற்றியைக் கொண்டாடியவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

நேற்றிரவு பரவலாக இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது. இத் தாக்குதல்காரர்களிடமிருந்து தப்பித்துக்கொள்வதற்காக மக்கள் சிதறியோடி அருகிலிருந்த வீடுகளில் அடைக்கலம் புகுந்து கொண்டதாகவும் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்களும் தாக்குதல்களுக்கு உள்ளானதாக வலம்புரி பத்திரிகை தெரிவித்துள்ளது.

seithy.com

சிங்களவனுக்கு விளையாட்டு, விளையாட்டு கலந்த அரசியல். அதில் என்றும் பலிக்கடா தமிழன் தான்.

விளையாட்டு அரசியலிலும் அரசியல் விளையாட்டிலும், இறுதி வினையாக தமிழேனே உள்ளான்.

நாம் எல்லோரும் மீண்டும் இந்த "வினையின்" பெயரால் ஒன்றுபட்டு மக்கள் விடிவுக்காக உழைப்போம் !!

  • கருத்துக்கள உறவுகள்

இச்செய்தி தமிழர் பகுதியில் தேனும் பாலும் ஓடுவதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. :D

  • கருத்துக்கள உறவுகள்

இது போன்ற செய்திகளைப் பார்த்து "உண்மையான" விளையாட்டு ரசிகர்களாக (தற்செயலாக சிறி லங்கா ரசிகர்களாகவும்!) இருக்கும் தமிழர்கள் நிதானம் இழக்கக் கூடாது. இந்த மாதிரியான செய்திகளை வடி கட்டி விட்டு "விளையாட்டை விளையாட்டாகப்" பார்க்க தொடர்ந்தும் முயல வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்! :rolleyes:

ஒரு முத்தையா முரளி இருந்துமே இப்படித்தான் எனது நிலமை :blink:

ஹர்த்தால் மூலம் எதுவுமே செய்யமுடியாது. இப்படியான நிகழ்வுகளை சர்வதேசத்திற்கு தெரியப்படுத்த வேண்டும்.

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப தமிழக வீரர் அஸ்வின் விளையாடி அவர் 4விக்கட் எடுத்திருந்தால் ---நிலமை யோசிக்கவே குலை நடுங்குது.நான் இலங்கை வெல்ல வேன்னும் என்றுதான் நினைத்து இருந்தேன்.காரனம் அந்த நாட்டின் மீது உள்ள காதல் அல்ல.மாறாக இதுதான் சாதாரன இந்திய மக்களையும் இலங்கை மீது வெறுப்பை கொன்டுவரும் என்பதற்க்காகவே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.