Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழம் நோக்கிய பயணத்தில் நாடுகடந்த தமிழீழ அரசு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எம் பூர்வீகத் தொடர்பைப் பிரதிபலிக்கும், எமது வரலாற்று நாயகர்களை நினைவு கூறும், எம் உறவுகளின் தொடர்பை எடுத்துக் காட்டும், ஈடில்லா ஈழத்தை எம்முடன் இணைக்கும் ஆவணம் தானே இந்தத் தேசிய அடையாள அட்டை.

தலைமுறை, தலைமுறையாக நாமும் எமது சந்ததியும் பெருமையுடன் பேணிக்காக்க வேண்டிய அளப்பரிய சொத்தல்லவா இந்தச் சர்வதேச சாதனம்.

எமது வாழ்க்கை பூராவும் பாவிக்கவல்ல இந்த அத்தாட்சிப் பத்திரத்தை குழந்தைகள் உட்பட ஒவ்வொரு ஈழத்தமிழரும் தவறாமலும், தாமதியாமலும் பெற்றுக்கொள்ள வேண்டும். இந்த ஆவணத்தைப் பெறுவோரின் எண்ணிக்கை கண்டு மகிந்தாவும் மருளவேண்டும், உலகமும் விழிப்படைய வேண்டும்

அதேவேளை, உலகம் பூராவும், பல முனைகளில் இராஜதந்திர உறவுகளை உருவாக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். இதில் ஒன்றுதான் எம் உறவுகளான உலகத்தமிழரை எம்முடன் இறுக இணைப்பதற்கான எமது முயற்சிகள்.

இதன் விளைவுதானே தமிழ்நாட்டில் பேராசிரியர் சரஸ்வதி தலைமையிலான நாடு கடந்த தமிழீழ அரசின் தோழமை மையமும், கோலாலம்பூர், மலேசியாவில் இரண்டு வாரத்துக்குமுன் பேராசிரியர் இராமசாமியின் பங்களிப்புடனான எமது கருததரங்குகளும், பொதுக் கூட்டமும்.

அடுத்து, ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையின் 16 வது கூட்டத் தொடரில், நாடுகடந்த தமிழீழ அரசின் இளைய பிரதிநிதிகளான சுகிந்தன் முருகையா, ஜனர்தனன் புலேந்திரன்(சந்தோஸ்), சிறிசஜீதா சிவராஜா ஆகியோரின் நாடு கடந்த தமிழீழ அரசிற்கான பங்களிப்பும் பிரதிநிதுத்துவமும்.

சுவிஸ் நாட்டில் பிறந்து, வளர்ந்த செல்வி சிறிசஜீதா சிவராஜாவின் சூளுரை அங்கு சமூகமளித்த பிரதிநிதிகளுக்கும், உலகிற்கும் எம்மினத்தின் இன்றைய நிலையையும், தேவையையும் உணர வைத்து எம் இனத்திற்கும், எமது இளைய தலைமுறைக்கும் பெருமையைத் தேடித் தந்தார் எங்கள் நாடு கடந்த தமிழீழ அரசின் இளைய பிரதிநிதி.

எமது அடுத்தகட்ட நிகழ்வாக அமையவிருப்பது வரலாற்றுப் பெருமைமிக்க தென் சுடானில் வரலாறு படைக்கவிருக்கும் நாடுகடந்த தமிழிழீழ அரசுக்கான உலகின் முதலாவது தூதரகம்.

உலகில் இதுவரை நடந்த விடுதலைப் போராட்டங்களுடன் ஒத்துப் பார்க்கையில் எமது போராட்டத்துடன் மிக நெருங்கிய தொடர்பைக் கொண்ட தென் சுடானின் விடுதலை , அவர்களின் வெற்றி எமக்கெல்லாம் ஓர் புத்துணர்வையும், புதிய தென்பையும் தருவதோடு அதற்கான பாதைகளையும் திறக்க வழிகோலியுள்ளது.

இவ்வாண்டு ஆடி மாதம் சுதந்திர நாடாகும் தென் சுடானில், இருபது ஆண்டுகளாக தொடர்ந்து நடந்த ஆயுதப்போரில் இருபது லட்சம் மக்களைப் பலிகொடுத்து, வரலாறு படைக்கும் இந்நாட்டில் எமது முதலாவது தூதரகத்தை அமைப்பது தமிழீழத்திற்க்கான பயணத்தில் நாம் கடக்கும் இன்னொரு படிக்கல்லல்லவா.

எமது அரசியற் போராட்டம் குறுகிய காலத்தில் வெற்றிபெற, எமது குறிக்கோளை நாம் விரைவில் சென்றடைய எமது நகர்வுகள் பலமுனைகளில் முன்னெடுக்கப்பட வேண்டும். ஒவ்வொரு தமிழரும் தமது பணியைத் தவறாமலும், தாமதியாமலும், தாமாகவே வழங்க முன்வரவேண்டும்.

ஓர் இனத்தின் விடுதலைக்கு முக்கிய பங்கை வகுக்கவேண்டியோர் வரிசையில் முன்நிலையில் நிற்கவேண்டியவர்கள் ஊடகங்களே. மக்கள் நலன் கருதி, எம் இனத்துக்கு நன்மைதரும் கருத்துக்களைத் தெளிவாகவும் கடமையுணர்வுடனும் எடுத்துச் சென்று, மக்களை முறையான வழியில், சரியான பாதையில் கொண்டுசெல்ல வேண்டியது இவர்கள் கடமையல்லவா?

ஊடகங்கள் ஊடாகத்தானே நாம் எமது கருத்துக்களை, தேவைகளை, செயற்பாடுகளை எம் மக்களிடம் எடுத்துச் செல்லவும் அவர்கள் பங்களிப்பைத் தாமதியாமலும், தவறாமலும் பெற்றுக்கொள்ளவும் முடியும். இதுவரை மௌனம் சாதித்த ஊடகங்களும் இன்று தொட்டு தம் பணியை உணர்ந்து எம் இனத்தின் நன்மை கருதி எமக்கு உதவ முன்வரவேண்டும்.

எமது விடுதலைப்போர் மக்கள் போராட்டமாக மாறவேண்டும். ஈழத்தமிழ் மக்களுக்காக உருவாக்கப் பட்டதுதான் நாடுகடந்த தமிழீழ அரசு .என்று சொன்னால் மட்டும் போதாது. நாம் எல்லோரும் பங்காளிகளாக மாறி எமது பங்கைத் தாமதியாது தாமாகவே வழங்க முன்வர வேண்டும். எமது தேவைகளைக் கவனிக்க, வேலைகளைச் செய்ய நாம் எல்லோரும் சேர்ந்து செயற்படவேண்டியது அவசியமல்லவா?

ஓர் இனத்தின், ஒரு சமுதாயத்தின் வளர்ச்சி, முன்னேற்றம், எதிகாலம் எல்லாமே அதன் இளைய தலைமுறையிற்தானே தங்கியிருக்கிறது. எமது ஆயுதப்போரின் வெற்றியின் பின்னணியில் நின்றவர்கள் யாரப்பா? விந்தைகள் பல படைத்து வீரத்துக்கு விளக்கம் தந்தவர்கள் எம் இளைய சமுதாயம் தானே.

இளைய சமுதாயத்தின் ஒத்துழைப்பும், செயற்திறனும் எமக்கு இன்றியமையாதது. எமது கருத்துக்களை மக்களிடையே பரப்புவது தொடக்கம் ஈழத்தில் உள்ள எம் சிறார்களுக்கு பாடம் கற்பிக்கும் புனித பணியும் இவர்கள் கையில்த்தானே இருக்கிறது.

நாடுகடந்த தமிழீழ அரசின் தனித்துவமான அரசியல் முன்னெடுப்பில் மாணவ சமுதாயத்தின் பங்கு அளவற்றது, மதிப்பில் அடங்காதது. நாம் காணும் உலகத்தை, நாம் அடையவுள்ள இறைமையும், சுதந்திரமும் கொண்ட தனிநாடாம் தமிழீழத்தை பெற்றுத்தர வேண்டியதில் இவர்களுக்கும் முக்கிய பங்குண்டல்லவா.

எமது நாடுகடந்த தமிழீழ அரசின் அரசியல் தத்துவத்தை, அதன் தேவையை, அதன் மகிமையை உலகுக்கு விளக்க, அதன் பெருமையை எடுத்து இயம்பவல்ல ஆதாரங்களை ஆய்வு மூலம் திரட்டி மாற்றாருக்கும் விளக்க வேண்டியவர்கள் இவர்களே. எமக்கு உகந்த தலைப்புகளில் ஆய்வுகளை மேற்கொள்ள மாணவ சமுதாயத்தின் பங்களிப்பும், தேர்வு பெற்ற ஆராச்சியாளர்களின் ஒத்துழைப்பும் இன்றியமையாதது.

பலமுனைப்போராட்டமாக மாறிவரும் எமது அரசியற்போர் வெற்றியடைய ஊர்ச்சங்கங்களும், விளையாட்டுக் கழகங்களும் தம்மாலான பங்கினைத் தவறாது தரவேண்டும். எமது பிரச்சார வேலைகளை செவ்வனே செய்ய, எமக்குத் தேவையான நிதிகளைச் சேகரிக்க, இலைமறை காயாக இருக்கும் திறமைசாலிகளை அடையாளம் கண்டு எம்முடன் இணைக்க வேண்டியவர்கள் இவர்களல்லவா.

புண்ணியமும், தர்மமும் நிறைந்த ஆலயங்களின் ஆசீர்வாதம் இல்லாது எப்படி எம்மால் வெற்றிப்பாதையில் பயணிக்கமுடியும். எம் இனத்தின் விடிவுக்கு, எம்மவர் நல்வாழ்வுக்கு முதலில் உதவவேண்டியவர்கள் இவர்கள்தானே. வெள்ள நிவாரணத்திற்கு ஓர் இரு கோவில்கள்தானே மணியடித்ததும் மன்றாடியதும், அன்பளிப்புச் செய்ததும். கோவில்கள் அத்தனையும் தாராள மனத்துடன் தம்பங்கை வழங்க தாமாகவே முன்வரவேண்டும் என்று பிரார்த்திப்போமாக.

எம் இனத்தின் முதுகெலும்பான மருத்துவர்களும், வழக்கறிஞ்ர்களும், கணக்காளர்களும், வீடு விற்பனையாளர்களும், தொழிலதிபர்களும், மற்றும் திறமைசாலிகளும், அறிவாளிகளும் தங்கள் ஒத்துழைப்பையும், பங்களிப்பையும் தாமாகவே தரவேண்டும். நீங்கள்தானே எம் இனத்தின் வழிகாட்டிகள். இது விவாதிப்பதற்கான நேரமோ அல்லது விருப்பு வெறுப்புக்கான காலமோ அல்ல. உங்கள் உறவுகளுக்கு உதவ முன்வாருங்கள்.

எமது வெற்றி, எம்மவர் வருங்காலம் எல்லாமே வெளிநாட்டில் வாழும் எமது கையில்த்தானே தங்கியிருக்கிறது என்பதை மறவாமல் நாமாகவே முன்வந்து எமது பங்கை தாமதியாமல் செலுத்தி ஏழு ஜென்மம் எடுத்தாலும் கிடைக்கமுடியாத புண்ணியத்தை இந்த ஜென்மத்தில் பெறுவோமாக.

கலாநிதி ராம் சிவலிஙகம்

பிரதிப் பிரதமர் – நாடுகடந்த தமிழீழ அரசு

email: r.sivalingam@tgte.org

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓவரா புளுகின்மோ, எப்பவும் யார் வந்தாலும் கலக்ட் பண்ணிறதிலலேயே குறியா நிக்கினம், இதுல ஏழுஜென்ம புண்ணியமுக் கிடைக்குமாம். சொல்லுக்கு முன் எப்போதும் செயல் இருக்க வேணும்,

  • கருத்துக்கள உறவுகள்

புண்ணியமும், தர்மமும் நிறைந்த ஆலயங்களின் ஆசீர்வாதம் இல்லாது எப்படி எம்மால் வெற்றிப்பாதையில் பயணிக்கமுடியும். எம் இனத்தின் விடிவுக்கு, எம்மவர் நல்வாழ்வுக்கு முதலில் உதவவேண்டியவர்கள் இவர்கள்தானே. வெள்ள நிவாரணத்திற்கு ஓர் இரு கோவில்கள்தானே மணியடித்ததும் மன்றாடியதும், அன்பளிப்புச் செய்ததும். கோவில்கள் அத்தனையும் தாராள மனத்துடன் தம்பங்கை வழங்க தாமாகவே முன்வரவேண்டும் என்று பிரார்த்திப்போமாக.

எல்லாம் வல்ல அந்த இறைவன் உங்களை ஆசீர்வதிக்கட்டும்!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாம் வல்ல அந்த இறைவன் உங்களை ஆசீர்வதிக்கட்டும்!!!

முதல் கட்டமா உந்த புலம்பெயர் நாடுகளில இருக்கிற அனைத்து கோயில்களையும் நாடுகடந்த அரசு தத்து எடுத்தால் இன்னமும் சிறப்பாக இருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.