Jump to content

சித்திரவதை


Recommended Posts

உடலுக்கோ மனதுக்கோ கடும் வலி அல்லது தாக்கம் ஏற்படுத்துகின்ற செயலை, அவரிடமிருந்தோ அல்லாது மூன்றாம் மனிதரிடமிருந்தோ ஏதேனும் தகவலைப் பெறவோ அல்லது ஒப்புமை பெறவோ நடத்தப்படின், அவரோ அல்லாது மூன்றாமவரோ செய்த அல்லது செய்ததாகக் கருதப்படும் செயலுக்கு தண்டனையாக வழங்கப்படின், அவரை அல்லது மூன்றாமவரை அடிபணிய வைக்க அல்லது அவமதிக்க அல்லது வேறு ஏதேனும் பாகுபாட்டினுற்காக செய்யப்படின், அதற்கு அரசின் அனுமதியோ ஆணையோ அல்லது அரசு அதிகாரியின் நேரடி அல்லது மறைமுக ஈடுபாடோ இருப்பின் சித்திரவதையாகக் கொள்ளப்படும். சட்டப்படி நிறைவேற்றப்படும் செய்கைகளிலாலான வலியோ துன்பமோ கருத்தில் கொள்ளப்படாது.

அரசு அனுமதிபெற்ற சித்திரவதை தவிர, தனிநபர்களும் கூட்டங்களும் கூட மேற்கண்ட காரணங்களை ஒத்தவற்றிற்காக சித்திரவதையில் ஈடுபடலாம். தவிர பிறரின் துன்பங்களை கண்டு மகிழும் மனவக்கிரங்களுக்காக ஒருவரை சித்திரவதை செய்வதும் உண்டு.

பெரும்பாலான நாடுகளில் பன்னாட்டு சட்டம் மற்றும் உள்நாட்டுச் சட்டங்களால் சித்திரவதை தடை செய்யப்பட்டுள்ளது. பன்னாட்டு மன்னிப்பு அவையின் கூற்றுப்படி 81 உலகநாடுகளில், சிலவற்றில் நேர்முகமாகவே, சித்திரவதை கடைபிடிக்கப்படுகிறது.

வரலாற்றில், அடிபணிய வைக்கவும் மூளைச்சலவை செய்யவும் சித்திரவதை பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. 21ஆம் நூற்றாண்டில் ஐ. நா உலக மனித உரிமைகள் சாற்றுரை விதி 5இன் படி மனித உரிமைகளை மீறியதாகக் கருதப்படுகிறது. மூன்றாவது செனீவாச் சாசனம் மற்றும் நான்காவது செனீவாச் சாசனம் ஒப்பிட்ட அனைத்து நாடுகளும் போர்க்கைதிகளை சித்திரவதை செய்வதில்லை என உடன்பட்டுள்ளன. 145 நாடுகள் உடன்பட்டுள்ள சித்திரவதைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சாசனத்திலும் சித்திரவதை தடை செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறான வதைக்கு எதிரான தேசிய, பன்னாட்டு சட்டப்பாதுகாப்பு அவை அறமுறைகளுக்குப் புறம்பானதென்பதாலும் நடைமுறைப்படுத்த வியலாது என்பதாலும் எழுந்தன. இத்துணை பன்னாட்டுச் சட்டங்கள் இருப்பினும் பல நடுநிலை அமைப்புகள் உலகின் பல பகுதிகளில் நடைபெறும் சித்திரவதைகளைக் குறித்து அறிக்கைகள் வெளியிட்ட வண்ணம் உள்ளன.

இந்தப்பதிவின் உள்ளுடன் எங்கள் எல்லோரது மனதிலும் ஆறாத வடுக்களாக போயிருக்கன்றது. ஒரு இனமாகப் பிறந்த குற்றத்திற்காக 60களுக்குப் பிந்திய தலைமுறையனால் இதன் தாக்கம் துல்லியமாக உணரப்பட்டுள்ளது. நம்மில் பலர் இதன் பாதிப்பில் இருந்து விடுபட முடியாத சூழலிலேயே மிகுதி நாட்களை ஓட்டுகின்றோம். ஒரு காலகட்டத்தில் ஆள்பவர்கள் இதை செய்தார்கள் என்றால் நாங்களும் அவர்களுக்குச் சளைத்தவர்கள் இல்லை என்பதையும் நிரூபித்துள்ளோம் என்பதும் கசப்பான உண்மை. இது பற்றிய உங்கள் கருத்துகளையும் எதிர்பார்க்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு விவாதத்துக்கு உரிய ஒரு பதிவு, கோமகன்,

மிருகங்கள் எங்களிலும் பார்க்க ஓரறிவு குறைந்தவை என்பது பலரது கருத்து.ஆனால் மிருகங்கள் தங்கள் தேவைக்காக மற்றைய மிருகங்களைக் கொல்வதுண்டு.அது அவற்றின் ஜீவாதாரம்.ஆனாலும் கொல்லப் படும் மிருகங்கள் குட்டிகளாகவோ, நோய் பட்டவையாகவோ அல்லது காயப் பட்டவையாகவோ இருக்கும்.நல்ல ஆரோக்கியமான, வலிமையான விலங்குகள் கொல்லப் படுவது மிகவும் குறைவு.அத்துடன் அவை சித்திரவதை செய்யப் பட்டுக் கொல்லப் படுவதில்லை.உதாரணமாக ஒரு புலியோ சிங்கமோ தங்கள் வயிறு நிரம்பிய பின், தங்கள் வாலை மேலே உயர்த்தியபடி நடந்து திரியும். இதன் கருத்து என்னவெனில் நான் உங்களைக் கொல்லப் போவதில்லை என மற்ற விலங்குகளுக்குத் தெரியப் படுத்தவே.இதை நீங்கள் உங்கள் வீட்டுப் பூனைக் குட்டியில் கூட அவதானிக்கலாம்.நன்றாக அதன் வயிற்றை நிரப்பி விடுங்கள்.அது தனது வாலைத் தூக்கிய படியே தனக்கு மீண்டும் பசியெடுக்கும் வரை திரியும்.

ஆனால் நாகரீகம் அடைந்த மனிதர்களில், மற்றவரை இம்சைப் படுத்துவது ஒரு விதமான மன வியாதி. இவர்கள் பொதுவாகத் தன்னம்பிக்கை இல்லாதவர்கள்.இவர்களை ஆங்கிலத்தில் sadist என்று கூறுவார்கள்.இவர்களது 'ego' இந்தச் செயல்களைச் செய்வதில் ஒரு திருப்தி அடைகின்றது.அது போல பாலியல் வன்முறைகளிலும் மிருகங்கள் ஈடுபடுவது மிகவும் அரிது.இப்படியான செயல்களில் ஈடுபடுபவர்களும் மேற்கண்ட வகையில் அடங்குவர்.இலங்கை இராணுவத்தினர் இதற்கு நல்ல உதாரணம்.இதன் விளைவே பழிவாங்கும் மனோ பாவமும் ஆகும்.இஸ்லாம் மதத்தவரிடமும், இந்திய ஆளும் வர்க்கத்திடமும் இந்தக் குணம் அதிகம் உண்டு.இதன் விளைவுகள் எங்கள் எல்லோருக்கும் நன்றாகத் தெரியும்.

ஒவ்வொருவரும் கண்ணுக்குக் கண் (eye for an eye ) என்று போனால் உலகத்தில் எல்லோருமே குருடர்களாக இருப்பார்கள்' -மகாத்மா காந்தி.

பதிவுக்கு நன்றிகள்!!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அனைவரும் ஒரு மாதிரி இல்லை. உண்மையில் தம்மை தமிழர் என உணர்வோர் சொற்பமாக இருக்கத்தான் செய்கிறனர். ஆனால் இவர் அணுகிய சூழமைவை வைத்து பார்த்தால் - காரியம் நடக்க கதை விட்டுள்ளார் என்றே நினைக்கிறேன்.
    • என்னது படம் இல்லாமலா🤣. படம் கதே பசுபிக்கில் ஏறும் போதே ஆரம்பித்து விட்டதே🤣. சுவாரசியமாக உள்ளது தொடருங்கள். அநேகமாக உங்கள் மூலம் டியூட்டி ப்ரீ விலையில் வாங்கி, வெளியில் விற்பார் என நினைக்கிறேன்.
    • எமது பக்கத்திலும்(பொதுமக்கள் தரப்பில்) யுத்தத்திற்கு கொடுத்த முன்னுரிமையை சமாதானத்திற்குக்/பேச்சுவார்த்தைக்குக் கொடுக்கவில்லை எனத் தோன்றுகிறது.  2005 பேச்சுவார்த்தை முறிவடைந்த சந்தர்ப்பத்தில் சமாதானத்திற்கு முன்னுரிமை கொடுக்கும்படி இருபகுதிப்  பொதுமக்களும் போராடியிருந்தால் நாட்டின் நிலை வேறுவிதமாக இருந்திருக்கலாம்.  🥲😥😥
    • Published By: RAJEEBAN 11 MAY, 2024 | 10:59 AM   தமிழ்நாட்காட்டியின் மிகவும் துயரமான நாட்களை முள்ளிவாய்க்கால் குறிக்கின்றது என தெரிவித்துள்ள அவர் முள்ளிவாய்க்காலின்  இறுதி இராணுவ நடவடிக்கையின் போது 169000 தமிழர்கள் கொல்லப்பட்டனர் என மதிப்பிடப்படுகின்றது இது ஒரு இனப்படுகொலை என பலர் கருதுகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார். இலங்கை இராணுவம் யுத்தசூன்யவலயத்தில் கண்மூடித்தனமான குண்டுவீச்சினை மேற்கொண்டது படுகொலைகள் வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் போன்றவற்றில் ஈடுபட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார். தமிழர்தாயகப்பகுதிகளான வடக்குகிழக்கில் நினைவேந்தல் நிகழ்வுகளிற்கு எதிரான இலங்கை இராணுவத்தின் தொடரும் ஒடுக்குமுறைகளை குறித்து கவலை வெளியிட்டுள்ள அவர் இந்த நினைவேந்தல் நிகழ்வுகளிற்கு எதிரான ஒடுக்குமுறைகள் குறித்து பிரிட்டன் தெளிவான எச்சரிக்கைகளை விடுக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். சுதந்திரமான வெளிப்படையான ஜனநாயக சமூகத்தில் மக்கள் நினைவேந்தலில் ஈடுபடுவதற்கு எதிராக அடக்குமுறையில் ஈடுபடமுடியாது சுதந்திரமான நியாயமான ஜனநாயகத்தில் நீங்க்ள இதனை செய்யவேண்டும் என கொல்பேர்ன் தெரிவித்துள்ளார். ஓவ்வொருவருடமும் நாங்கள் இதனை கேள்விப்படுகின்றோம் நினைவேந்தல் குழப்ப்படுவது குறித்த கதைகளை கேட்கின்றோம் மக்கள் காரணமில்லாமல் கைதுசெய்யப்படுகின்றனர் இதன் காரணமாக இதனை நிறுத்தவேண்டும் என்ற வலுவான செய்தியை பிரிட்டன் தெரிவிக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். 2009 இல் இடம்பெற்ற சம்பவங்களை இனப்படுகொலை என பிரிட்டன் பிரகடனம் செய்வதற்கான தேவை குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் இதற்கான முயற்சிகளில்  தானும் தமிழர்களிற்கான அனைத்து கட்சி நாடாளுமன்ற குழுவினரும் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். tamil guardian https://www.virakesari.lk/article/183220
    • கொக்கட்டிச்சோலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரம் ஆரம்பம்   11 MAY, 2024 | 06:56 PM   கிழக்கில் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரத்தை முன்னிட்டு  தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியினரால் இன்று சனிக்கிழமை (11) கஞ்சி வழங்கும் நிகழ்வு ஆரம்பித்துவைக்கப்பட்டது. 2009 மே 18 முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற இனப்படுகொலையை முன்னிட்டு மே 11ஆம் திகதி தொடக்கம் 18ஆம் திகதி வரை கஞ்சி வாரம் அனுஷ்டிக்கப்படுகிறது.  வருடாவருடம் கஞ்சி வாரம் இடம்பெற்றுவரும் நிலையில், இம்முறை தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியினர், கிழக்கில் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை மகிழடித்தீவில் 1990ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட 152 பொதுக்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுத்தூபியருகில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் வாரத்தை கட்சியின் தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் தலைமையில் ஆரம்பித்துவைத்தனர். இதன்போது கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு கஞ்சி வழங்கப்பட்டது.  https://www.virakesari.lk/article/183271
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.