Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளை ஒழித்த முப்படையினரால் எலிகளை ஒழிக்க முடியாது திண்டாட்டம்: பலம்வாய்ந்த செயலணி முக்கியம் என்கிறது அரச தமிழ்ப் பத்திரிகை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளை ஒழித்த முப்படையினரால் எலிகளை ஒழிக்க முடியாது திண்டாட்டம்: பலம்வாய்ந்த செயலணி முக்கியம் என்கிறது அரச தமிழ்ப் பத்திரிகை

[Wednesday, 2011-04-20 03:35:54]

புலிகளை ஒழித்த இலங்கையின் முப்படையினரால் இலங்கையில் தற்போது ஏற்பட்டிருக்கும் எலிகளின் பயங்கரவாதத்தை ஒழிக்க முடியாதுள்ளதாகவும் இதன் காரணமாக நாட்டின் தேசிய பொருளாதாரத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்றும் இலங்கையின் அரச தமிழ் பத்திரிகையான தினகரன் இன்று கவலை தெரிவித்துச் செய்தி வெளியிட்டுள்ளது.அது மேலும் தெரிவித்துள்ளதாவது,

கடந்த காலத்தில் பயங்கரவாதிகள் நாட்டில் உயிர்ச்சேதத்தையும் பொருள் சேதத்தையும் ஏற்படுத்தி, எமது தேசிய பொருளாதாரத்தை சின்னாபின்னப்படுத்துவ தற்கு எடுத்த முயற்சிகளைப் போன்று, இன்று எங்கள் தேசிய பொருளாதாரத்தை சீர்குலைப்பதற்கு எலிகளின் உருவில் இன்னுமொரு பயங்கரவாதம் உருவாகி இருக்கிறது.

எலிகள் நெல் சந்தைப்படுத்தும் சபையின் களஞ்சிய சாலைகளிலும், துறைமுகங்களின் களஞ்சியசாலைகளிலும் ஆயிரக் கணக்கில் தங்கள் இனத்தைப் பெருக்கிக் கொண்டு, பலகோடி ரூபாவை செலவு செய்து, இந்நாட்டு மக்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்வதற்காக, அரசாங்கம் கொள்வனவு செய்யும் நெல்லையும் பருப்பு வகைகளையும், கிழங்கு, வெங்காயம் போன்ற உபஉணவுப் பொருட்களையும் அழித்து வருகின்றன.

பயங்கரவாதிகளை ஒழித்துக் கட்டுவதற்கு எங்கள் நாட்டில் வீரமிக்க முப்படையினர் தங்கள் உயிரையும் துச்சமாக மதித்து, அவர்களை எதிர்த்துப் போராடி இறுதியில் வெற்றியும் கண்டார்கள்.

ஆனால், இன்று எலிகளின் உருவில் தோன்றியுள்ள பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டுவதற்கு அத்தகைய பலம்வாய்ந்த செயலணி எவையும் இதுவரையில் உருவாக்கப்படவில்லை. இதனால், எவ்வித அச்சுறுத்தலும் இன்றி, எலிகள் எமது நாட்டின் தேசிய பொருளாதாரத்தை சீர்குலைக்கும் நாச வேலைகளை எவ்வித எதிர்ப்பும் இன்றி, கச்சிதமாக நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றன.

கொழும்பு மாநகர சபையின் சுகாதாரப் பிரிவும், ஏனைய உள்ளூராட்சி மன்றங்களின் சுகாதாரப் பிரிவுகளும் எலிகளை ஒழிப்பதற்காக சிறிதளவு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற போதிலும், அவற்றிற்கு இருக்கும் நிதியின்மை காரணமாக இந்த எலி ஒழிப்பு செயற்பாடுகள் எதிர்பார்க்கும் அளவுக்கு வெற்றியளிப்பதில்லை.

எலிகள் களஞ்சிய சாலைகளில் மட்டுமன்றி, ஹோட்டல்களின் சமையல் அறைகளையும் முற்றுகையிட்டு, அங்கு தயாரிக்கும் உணவுப் பொருட்களிலும் அவற்றின் கழிவுகள் சேர்ந்துவிடக் கூடியளவுக்கு மக்களின் சுகாதாரத்திற்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்திய வண்ணம் இருக்கின்றன.

சில வீடுகளில் கூட எலிகளின் அட்டகாசம் கட்டுக்கடங்காமல் இருக்கின்றது. சுமார் 50 வருடங்களுக்கு முன்னர் கொழும்பு மாநகர சபை வீடு வீடாக எலிகளை பிடிப்பதற்கான பொறிகளை வந்து கொடுப்பார்கள். அந்தப் பொறிகளில் அவர்கள் சுட்ட தேங்காய் துண்டுகளை போட்டு, எலிகளை பிடிக்கும் யுத்தியை கையாண்டார்கள்.

இரு தினங்களுக்கு பின்னர் மாநகர சபை பணியாளர்கள் வீடுகளுக்கு வந்து, பிடிபட்ட எலிகள் இருக்கும் பொறிகளை எடுத்துச் சென்று எலிகளை அழித்துவிடுவார்கள். அந்த நடைமுறையினால் அன்று கொழும்பு மாநகரம் மட்டுமன்றி நாட்டின் பல பிரதான நகரங்களில் எலித்தொல்லை கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது.

எலிகளை அழிப்பதற்கான எவ்வித திட்டமிட்ட நடைமுறையும் இன்று அமுலில் இல்லாத காரணத்தினால் எலிகளினால் பரவும் எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

அரசாங்கமும் உள்ளூராட்சி மன்றங்களும் நாட்டையும் நாட்டின் தேசிய பொருளாதாரத்தையும் அபிவிருத்தி செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அதேவேளையில் எலிகளினால் ஏற்படும் அச்சுறுத்தலையும், அழிவையும் ஒழித்துக் கட்டுவதிலும் தங்கள் அவதானத்தை செலுத்துவது அவசியமாகும்

seithy.com

  • கருத்துக்கள உறவுகள்

எலிகளை அழிப்பதற்கான எவ்வித திட்டமிட்ட நடைமுறையும் இன்று அமுலில் இல்லாத காரணத்தினால் எலிகளினால் பரவும் எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

சர்வதேசத்திடமும்,இந்தியாவிடமும் உதவி கேட்டுப்பார்களாம் ....புலிகளை அழிக்க அவர்கள் உதவினவர்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.